SI DEPT, OPEN QUOTA, TNPSC DAY – 05 CLASS
About Lesson

படைமேகங்கள் (Stratus)

201. படைமேகங்கள் என்பது? 

விடை: மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் படைமேகங்கள் எனப்படும்.

 

202. படைமேகங்கள் தருவது? 

விடை: மழை அல்லது பனிப்பொழிவைத் தரும்

 

திரள் மேகங்கள் (Cumulus) 

203. திரள் மேகங்கள் எந்த வடிவத்துடன் காணப்படுகிறது?

விடை: தட்டையான அடிபாகமும், குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு “காலிபிளவர்” போன்ற வடிவத்துடனும் காணப்படும்

 

204. திரள் மேகங்கள் எதனோடு தொடர்புடைய மேகமாகும்?

விடை: தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகமாகும்.

 

கார்திரள் மேகங்கள் (Cumulo – Nimbus)

205. கார்திரள் மேகங்கள் என்றால் என்ன? 

விடை: மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன், இடியுடன் கூடிய மழைதரும் மேகங்கள் கார்திரள் மேகங்கள் எனப்படும். 

 

206. கார்திரள் மேகங்கள் தருபவை? 

விடை: பொதுவாக கனமழையையும் அதிக பனிப்பொழிவையும் சில நேரங்களில் கல்மாரி மழை மற்றும் சுழற்காற்றுடன் கூடிய மழையிலும் தருகின்றன.

 

பொழிவு (Precipitation) 

207. பொழிவு என்றால் என்ன? 

விடை: சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது.  

 

208. புவியின் மீது மழை எப்படி பொழிகிறது?

விடை: மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் பனி விழு நிலையை அடையும் பொழுது பூரித நிலைக்கு வந்துவிடுகிறது. பின்பு புவியின் மீது மழையாகப் பொழிகிறது.

 

209. பொழிவினை நிர்ணயிக்கும் காரணிகள் (Factors of Precipitation) எவை?

விடை: 

வெப்பநிலை (Temparature)

உயரம் (Altitude)

மேகத்தின் வகை (Clouds Type)

வளிமண்டல நிலைபாடுகள் (Atmospheric Conditions)

பொழிவு செயல்முறை (Precipitation Process)

 

210. பொழிவின் பல்வேறு விதங்கள் எவை? 

விடை: சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை போன்றவை பொழிவின் பல்வேறு விதங்கள் ஆகும்.

 

சாரல் (Drizzle) 

211. சாரல் என்றால் என்ன? 

விடை: 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும் பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம். 

 

212. சில நேரங்களில் சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைவதால் உண்டாகும் நிலை?

விடை: எதிரில் உள்ள பொருட்களை காணமுடியாத நிலையை உண்டாக்குகிறது.

 

மழை (Rain)

213. மழை எப்போது பொழிகிறது? 

விடை: உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது.

 

214. புவியின் மிக அதிகமான இடங்களில் கிடைக்கும் பொழிவு எது? 

விடை: மழைப்பொழிவு

 

215. மழைப்பொழிவு ஏற்படுவதற்கான காரணம்? 

விடை: காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

 

216. மழைத்துளியின் விட்டம்?

விடை: 5 மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்.

 

ஆலங்கட்டி மழை (Sleet)

217. ஆலங்கட்டி மழை என்றால் என்ன? 

விடை: முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் (Pellets) கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

 

பனி (Snow)

218. பனிப்பொழிவு எப்போது ஏற்படுகிறது?

விடை: உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும் போது பனிப்பொழிவு ஏற்படுகிறது. 

 

219. பனி என்றால் என்ன? 

விடை: பகுதியாகவோ, முழுமையாகவோ ஒளி புகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம். 

 

220. பனிச்சீவல்கள் (Snowflakes) எப்படி உருப்பெருகின்றன?

விடை: பனிப்படிகங்கள் ஒன்றோடொன்று மோதிப் பனிச்சீவல்களாக (Snowflakes) உருப்பெருகின்றன.

 

கல்மாரி மழை (Hail)

221. கல்மாரி மழை (Hail) என்றால் என்ன?

விடை: இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின்போது 2 செ.மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளே கல்மாரி மழை (Hail) என்று அழைக்கப்படுகிறது.

 

222. கல்மாரி மழை எந்த நிலையில் காணப்படும் மழைப்பொழிவு?

விடை: திடநிலையில் காணப்படும் மழைப்பொழிவாகும். 

 

223. கல்மாரி மழை பொழிவின் போது விழுபவை?

விடை: சிறிய கட்டிகள் போன்ற பனித்துண்டுகள் விழுகின்றன.

 

224. கல்மாரி மழையின் வேறு பெயர்? 

விடை: கல்மாரிக்கட்டிகள் (hailstones) 

 

225. கல்மாரி மழையால் பாதிக்கப்படுபவை? 

விடை: கல்மாரி மழை , வேளாண் பயிர்களையும் மனித உயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது.

 

3.6 மழைப்பொழிவு (Rainfall)

226. மழைப் பொழிவு என்பது?

விடை: பொழிவின் மிக முக்கிய வகை மழைப் பொழிவாகும்.   

 

227. நீர்த் துளிகள் எப்படி புவியை வந்து அடைகின்றன? 

விடை: ஈரப்பதம் கொண்ட காற்றுத் திரள்கள் மேலே உயர்த்தப்பட்டு மேகங்களாக உருவாகி பின்பு நீர்த்துளிகளாக புவியை வந்தடைகின்றன.

 

228. மழைப்பொழிவின் பல்வேறு வகைகள் எவை? 

விடை: 

வெப்பச் சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)

புயல்/சூறாவளி மழைப்பொழிவு (or) வளிமுக மழைப்பொழிவு (Cyclonic Rainfall (or) Frontal Rain fall)

மலைத்தடுப்பு மழைப் பொழிவு (Orographic Rainfall)

 

வெப்பச்சலன மழைப்பொழிவு (Convectional Rainfall) (அ) 4 ‘மணி’ மழைப்பொழிவு

229. வெப்பச்சலன மழை எப்படி உருவாகிறது?

விடை : பகல் பொழுதின் போது சூரியக் கதிர்வீச்சினால் புவியின் மேற்பகுதி அதிகமாக வெப்பப்படுத்தப்படுகிறது. புவி மேற்பரப்பில் உள்ள காற்று வெப்பமடைவதால் விரிவடைந்து மேலெழும்புகிறது. அங்கு வெப்பசலனக் காற்றோட்டம் உருவாகிறது. மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து, சுருங்கி, மேகங்களாக உருவெடுத்து மழையாக பொழிகிறது. இது வெப்பச்சலன மழை எனப்படுகிறது.

 

230. வெப்பச்சலனமழை புவியின் எந்த பகுதிகளில் மாலை வேளைகளில் அடிக்கடி நிகழ்கிறது?

விடை: நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் மாலை வேளைகளில் அடிக்கடி நிகழ்கிறது. 

 

231. கோடை காலங்களில் வெப்பச்சலன மழை எந்த மண்டலங்களில் பொழிகின்றது?

விடை: வெப்ப மண்டலம், துணை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலங்களில் பொழிகின்றது.

  

2.சூறாவளி மழைப்பொழிவு (அ) வளிமுக மழை (Cyclonic Rain fall or Frontal Rain fall) 

232. சூறாவளி மழைப்பொழிவு என்றால் என்ன? 

விடை: அடர்த்தியான காற்றுத்திரள்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு பின்பு மேல்நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சியடைந்து பொழியும் மழை சூறாவளி மழைப்பொழிவு எனப்படுகிறது.

 

233. எந்த மண்டலங்களில் சூறாவளி மழைப்பொழிவு கிடைக்கின்றது?

விடை: வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் சூறாவளி மழைப்பொழிவு கிடைக்கின்றது.

 

234. சூறாவளி மழைப்பொழிவு எப்படி மழை பொழிவை தருகிறது?

விடை: வெப்பக்காற்றும், குளிர்க்காற்றும் சந்திக்கும் எல்லையில் நீராவி சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது.

 

235. சூறாவளி மழைப்பொழிவு மிதவெப்ப பகுதிகளில் எப்படி அழைக்கப்படுகிறது? 

விடை: வளிமுக மழை எனப்படுகிறது.

 

மலைத் தடுப்பு மழைப்பொழிவு (Orographic Rainfall) 

236. மலைத் தடுப்பு மழையின் வேறு பெயர்? 

விடை: நிலத்தோற்ற மழை

 

237. மலைத்தடுப்பு மழைப் பொழிவு (Orographic Rainfall) என்பது?

விடை: ஈரப்பதம் மிகுந்து வீசும் காற்று மலைச்சரிவால் தடுக்கப்பட்டு மேல்நோக்கி எழுகிறது. இவ்வாறு எழுந்த காற்று பின்னர் குளிர்விக்கப்பட்டு சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது. இவ்வாறு பெறப்படுகின்ற மழைப்பொழிவு மலைத்தடுப்பு மழைப் பொழிவு (Orographic Rainfall) என்று அழைக்கப்படுகின்றது.

 

238. காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ‘காற்று மோதும் பக்கம்’ (Windward’ side) 

 

239. காற்று மோதும் பக்கம் எவ்வளவு மழைப்பொழிவை பெறுகிறது?

விடை: அதிக மழைப்பொழிவை பெறுகிறது.

 

240. காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

விடை: ‘காற்று மோதாப் பக்கம்’ (Leeward side) 

 

241. காற்று மோதாப் பக்கம் எவ்வளவு மழையைப் பெறுகிறது?

விடை: மிகக் குறைந்த அளவே மழையைப் பெறுகிறது.

 

242. காற்று மோதாப் பக்கத்தில் வேறு பெயர்? 

விடை: ‘மழை மறைவு’ பிரதேசம் 

 

ஈரப்பதம் (Humidity) 

243. வளிமண்டலத்தில் வானிலையையும் காலநிலையையும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணி எது? 

விடை: ஈரப்பதம்

 

244. ஈரப்பதம் என்றால் என்ன? விடை: வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் ஆகும். 

 

245. ஈரப்பதத்தின் அளவு எப்போது அதிகரிக்கும்?

விடை: வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரித்தால் ஈரப்பதத்தின் அளவும் அதிகரிக்கும்.

 

246. முழுமையான ஈரப்பதம் (absolute humidity) என்றால் என்ன?

விடை: வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீராவியின் அளவு எனப்படும்.

 

247. ‘ஒப்பு ஈரப்பதம்’ (Relative humidity) என்றால் என்ன? 

விடை: வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்தக் கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ’ஒப்பு ஈரப்பதம்’ (Relative humidity) எனப்படும்.

 

BOX INFORMATION 

248. வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்? 

விடை: டேனியல் ரூதர்ஃபோர்டு 

 

249. வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளது என்பதை டேனியல் ரூதர்ஃபோர்டு எந்த ஆண்டு கண்டறிந்தார்? 

விடை: பொ.ஆ. 1772 ஆம் ஆண்டு

 

250. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் உள்ளது என்பதை கண்டறிந்தவர் யார்?

விடை: ஜோசப் பிரிஸ்ட்லி

 

251. வளிமண்டத்தில் ஆக்ஸிஜன் உள்ளது என்பதை ஜோசப் பிரிஸ்ட்லி எந்த ஆண்டு கண்டறிந்தார்?

விடை: பொ.ஆ. 1774

 

252. காந்தக்கோளம் எங்கு அமைந்துள்ளது?

விடை: வெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு காந்தக்கோளமாகும்.

 

253. காந்த கோளம் என்பது?

விடை: புவியின் காந்த மண்டலமாகும். 

 

254. காந்த மண்டலம் தக்க வைத்துக் கொள்வது?

விடை: சூரியனிடமிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது.

 

255. காந்த வயலின் பரவல்? 

விடை: புவியின் மேல்பரப்பிலிருந்து சுமார் 64000 கி.மீட்டர் வரை காந்த வயல் பரவியுள்ளது.

 

256. ‘அரோராஸ்’ எப்படி தோன்றுகிறது? 

விடை: சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில் நள்ளிரவு வானத்தில் வான வேடிக்கையின் போது உருவாகும் பலவண்ண ஒளிச்சிதறல் போன்றக் காட்சி தோன்றுகின்றது. இதுவே ‘அரோராஸ்’ எனப்படுகின்றது.

 

257. கடற்காற்று (Sea breeze) எப்படி உருவாகிறது? 

விடை: பகல் வேளைகளில், கடலை விட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல்நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் கடலிலிருந்து காற்று மதிய வேலைகளில் நிலத்தை நோக்கி வீசுகின்றது. இது ‘கடற்காற்று’(Sea breeze) என்று அழைக்கப்படுகிறது.

 

258. கடற்காற்றுகள் எதற்கு காரணமாக உள்ளது?

விடை: கோடைக் காலங்களில் நிலப்பகுதிகளில் வெப்பம் குறைவதற்கு காரணமாக உள்ளது. 

 

259. நிலக்காற்று (Land breeze) எப்படி உருவாகிறது? 

விடை: இரவு வேளைகளில் கடலை விட நிலம் விரைவாக குளிர்ந்து விடுகிறது. இக்குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இறங்கி அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் நிலத்திலிருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது. இதுவே நிலக்காற்று (Land breeze) என அழைக்கப்படுகிறது.

 

260. காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுவதற்கு காரணம்? 

விடை: புவியின் சுழற்சி 

 

261. கொரியாவிஸ் விளைவு என்பது? 

விடை: காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை கொரியாவிஸ் விளைவு என்கிறோம்.  

 

262. காற்று வட அரைக்கோளத்தில் எந்த புறமாக விலகி வீசுகின்றன? 

விடை: வலப்புறமாக விலகி வீசுகின்றன.

 

263. காற்று தென் அரைக்கோளத்தில் எந்த புறமாக விலகி வீசுகின்றன?

விடை: இடப்புறமாக விலகி வீசுகின்றன.

 

264. ‘ஃபெரல்ஸ் விதி’ என்றால் என்ன? 

விடை: காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுகின்றன. இதுவே ‘ஃபெரல்ஸ் விதி’ எனப்படுகிறது.

 

265. ஃபெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர் யார்?

விடை: வில்லியம் பெரல் 

 

266. வில்லியம் பெரல் பெரல்ஸ் விதியை எப்படி நிரூபித்தார்? 

விடை: G.G.கொரியாலிசின், கொரியாலிஸ் விசையை பயன்படுத்தி பெரல்ஸ் விதியை நிரூபித்தார்.

 

267. சூப்பர் சைக்ளோன் எப்போது தாக்கியது? 

விடை: 1999ம் வருடம் அக்டோபர் 29ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று 

 

268. சூப்பர் சைக்ளோன் இந்தியாவின் எந்த பகுதிகளை தாக்கியது? 

விடை: இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளை 

 

269. சூப்பர் சைக்ளோன் என்பது? 

விடை: இந்திய வரலாற்றிலேயே அதிக வலுவுடன் வீசி மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி ஆகும். 

 

270. சூப்பர் சைக்ளோனில் காற்றின் வேகம்?

விடை: 260 கி.மீ வேகத்தில் வீசியது. 

 

271. சூப்பர் சைக்ளோனில் கடல் அலை எத்தனை மீட்டர் உயரத்திற்கு எழும்பியது? 

விடை: 7 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. 

 

272. சூப்பர் சைக்ளோனால் சேதத்தை ஏற்படுத்திய பகுதிகள்? 

விடை: கடற்கரையிலிருந்து 20 கி.மீ தூரம் வரை உள்ளப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியது.

 

273. சூப்பர் சைக்ளோனால் பாதிக்கப்பட்ட மக்கள்? 

விடை: ஒடிஷாவின் 12 கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

 

274. சூப்பர் சைக்ளோனால் உயிரிழந்த மக்கள்? 

விடை: 10,000 பேர் உயிரிழந்தனர்.

 

275. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் எவை? 

விடை: வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து

 

276. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?

விடை: பொ.ஆ. 2000

 

277. ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்த ஆண்டு? 

விடை: 2004 ஆம் ஆண்டு

 

278. வளிமுகம் (Front) என்பது?

விடை: வெப்பக்காற்றுத் திரளையும், குளிர்க்காற்றுத் திரளையும் பிரிக்கும் எல்லையாகும்.

 

279. காற்றுத் திரள்கள் எப்படி காணப்படும்? 

விடை: ஒன்றுக்கு ஒன்று அடர்த்தியிலும், வெப்பத்திலும் ஈரப்பதத்திலும் வேறுபட்டுக் காணப்படும். 

 

280. காற்று சந்திக்கும் பகுதிகளில் அக்காற்றின் தன்மையைப் பொறுத்து உருவாகுபவை எவை? 

விடை: மழைப்பொழிவு, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, இடி, மின்னல் கூடிய மழை உருவாகும்.

 

281. சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: “பெண்குதிரை வால்கள்” (Mare’s Tals)

 

282. அனைத்து வகையான மேகங்களும் காணப்படும் புவியின் வளிமண்டல அடுக்கு எது? 

விடை: வளிமண்டலக் கீழ் அடுக்கு (Troposphere) 

 

283. இடியுடன் கூடிய கல்மாரி மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: கல்மாரி புயல் என அழைக்கப்படுகிறது. 

 

284. எந்த மழை வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்தக்கதாகும்?

விடை: கல்மாரி மழை

 

285. கல்மாரி மழை எத்தகைய இயற்கை சீற்றத்தை தருபவை? 

விடை: தாவரங்கள், மரங்கள் வேளாண் பயிர்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களை பறிக்கும் ஒரு பலத்த இயற்கை சீற்றத்தை தருபவை ஆகும்.

 

286. இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம் எது?

விடை : மௌசின்ராம்

 

287. மௌசின்ராம் எந்த மலையில் அமைந்துள்ளது?

விடை: பூர்வாச்சல் மலையின் காற்று மோதும் பக்கம் அமைந்துள்ளது. 

 

288. பூர்வாச்சல் மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள ‘ஷில்லாங்’ பகுதி பெறும் மழை அளவு?

விடை: மிக குறைந்த அளவே மழையைப் பெறுகிறது. 

 

289. மௌசின்ராம் மற்றும் ஷில்லாங் போன்றே அமைந்துள்ளவை எவை?

விடை: மும்பையும், பூனாவும் அமைந்துள்ளன.

 

290. “பனிவிழுநிலை’ (Dew point) என்றால் என்ன? 

விடை: காற்றின் ஒப்பு ஈரப்பதம் நூறு சதவிகிதமாக இருக்கும்போது காற்று பூரித நிலையை அடைகிறது. இந்நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது. இந்தப் பூரிதநிலையை “பனிவிழுநிலை’ (Dew point) எனப்படுகிறது.

 

291. ஈரப்பதத்தை அளப்பதற்கு பயன்படும் கருவிகள் எவை? 

விடை: ஈரப்பதமானி (Hygrometer) அல்லது ஈர உலர்க்குமிழ் வெப்பமானி (Wet and dry bulb) 

 

292. முழுமையான ஈரப்பதம் (Absolute humidity) என்பது?

விடை: ஒவ்வொரு கனமீட்டர் காற்றிலும் எத்தனை கிராம் நீராவி உள்ளது என்பதாகும். 

 

293. ஒப்பு ஈரப்பதம் என்பது எந்த அளவில் கணக்கிடப்படுகிறது?

விடை : சதவிகிதத்தில் கணக்கிடப்படுகிறது.

 

பயிற்சி

சரியான விடையைத் தேர்வு செய்க.

1. _______________உயிர் வாழ இன்றியமையாத வாயுவாகும்.

அ) ஹீலியம்  

ஆ) கார்பன் டை ஆக்சைடு

இ) ஆக்சிஜன்

ஈ) மீத்தேன் 

விடை: இ) ஆக்சிஜன்

 

2. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.

அ) கீழடுக்கு

ஆ) மீள் அடுக்கு

இ) வெளியடுக்கு

ஈ) இடையடுக்கு

விடை: அ) கீழடுக்கு

 

3. _______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

அ) வெளியடுக்கு 

ஆ) அயன அடுக்கு

இ) இடையடுக்கு 

ஈ) மீள் அடுக்கு

விடை: இ) இடையடுக்கு

 

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.

அ) பொழிவு

ஆ) ஆவியாதல்

இ) நீராவிப்போக்கு

ஈ) சுருங்குதல் 

விடை: ஈ) சுருங்குதல்

 

5. _________புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

அ) சூரியன்

ஆ) சந்திரன்

இ) நட்சத்திரங்கள்

ஈ) மேகங்கள்

விடை: அ) சூரியன்

 

6. அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது.

அ) கீழடுக்கு

ஆ) அயன அடுக்கு

இ) இடையடுக்கு

ஈ) மேலடுக்கு 

விடை: அ) கீழடுக்கு

 

Book Page Number: 204

7. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்

இ) கார்படை மேகங்கள்

ஈ) கீற்றுப்படை மேகங்கள்

விடை: அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

 

8. பருவக்காற்று என்பது _______________

அ) நிலவும் காற்று

ஆ) காலமுறைக் காற்றுகள்

இ) தலக்காற்று

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: ஆ) காலமுறைக் காற்றுகள்

 

9. பனித்துளி பனிப்படிகமாக இருந்ததால் ______________ என்று அழைக்கின்றோம்.

அ) உறைபனி

ஆ) மூடுபனி

இ) பனி

ஈ) ஆலங்கட்டி

விடை: அ) உறைபனி

 

10. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

அ) அழுத்தம்

ஆ) காற்று

இ) சூறாவளி

ஈ) பனி

விடை: இ) சூறாவளி

 

11. காற்றின் செங்குத்து அசைவினை ___________ என்று அழைக்கின்றோம்.

அ) காற்று

ஆ) புயல்

இ) காற்றோட்டம்

ஈ) நகர்வு

விடை: இ) காற்றோட்டம்

 

II. பொருத்துக.

வானிலையியல் – காற்றின் வேகம்

காலநிலையியல் – காற்றின் திசை

காற்று வேகமானி – கீற்று மேகம்

காற்று திசைமானி – காலநிலைபற்றிய படிப்பு

பெண் குதிரை வால் – வானிலை பற்றிய படிப்பு

காற்று மோதாப்பக்கம் – ஆஸ்திரேலியா

வில்லி வில்லி – மழை மறைவுப் பகுதி

விடை: 3 4 5 2 1 7 6

 

III. சுருக்கமான விடையளி.

வளிமண்டலம் – வரையறு?

காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

வெப்பத் தலைகீழ் மாற்றம் – சிறுகுறிப்பு வரைக.

வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக.

கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?

சிறு குறிப்பு வரைக. 

அ) வியாபாரக்காற்றுகள்

ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்

மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

மழைப்பொழிவின் வகைகள் யாவை?

சிறு குறிப்பு வரைக- 

அ) சாரல்

ஆ) மழை

இ) பனி 

ஈ) ஆலங்கட்டி

உ) வெப்பமாதல்

 

IV. காரணம் கூறுக

நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.

மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.

மூடு பனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.

வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது. 

துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.

 

V. வேறுபடுத்துக

வானிலை மற்றும் காலநிலை

நிலக்காற்று மற்றும் கடற்காற்று

காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப் பக்கம்

வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி

 

VI. விரிவான விடையளி

வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக?

நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக.

மேகங்களின் வகைகளை விவரி.

சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.

பொழிவின் வகைகளை விவரி.

 

VII. செயல்பாடு

1. வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்களைப் படம் வரைக.

2. மேகங்கள் மற்றும் மழைக்குத் தொடர்புடைய பழமொழிகளைச் சேகரிக்கவும்.

3. “மேகங்கள்” மற்றும் “மழை” பற்றி கவிதை எழுதுக.

4. தங்கள் பகுதியில் ஒருவார காலத்திற்கு வானத்தில் உள்ள மேகங்களின் வடிவம் மற்றும் வண்ணங்களை உற்று நோக்கி அறிக்கை தயார் செய்க.

 

Book Page Number: 205

5. மழை மானி, காற்று திசை மானி இயங்கும் மாதிரிகளை உருவாக்குக.

6. பட்டை விளக்கப்படம் வரைக

அ) கன்னியாகுமரி, புதுடெல்லி, அலகாபாத் மற்றும் இட்டாநகர் இடங்களின் ஒரு நாள் வெப்ப அளவை சேகரிக்கவும்.

ஆ) ஜெய் சல்மர் (இராஜஸ்தான்), மௌசின்ராம் (மேகாலயா), நாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகியவற்றின் ஒரு நாள் மழை அளவின் தரவுகளைச் சேகரிக்கவும்.

7. அரும்பும் வானவியலாளராக ஆகுக.

தங்கள் பகுதியின் ஒருவார காலத்தில் நிகழும் வானிலை நிகழ்வுகளை பதிவு செய்க.

Join the conversation