Protected: 0.1 ALL DAY REVISION
About Lesson

TAMIL DAY 1 SPEED REVISION AND SPEED TEST 

TEST 1/10

1.“தொட்டு” – வேர்ச்சொல்லைத்       

2.வேர்ச்சொல்: பயின்றாள்  

3. வருக’ – வேர்ச்சொல்  

4. ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உரைப்பது, _____ விடை ஆகும். 

5. தாவரத்தின் பிஞ்சு வகைகளுள் இடம்பெறாத சொல் தேர்க.           A) வடு         B) மூசு           C) கவ்வை        D) தாறு         

6. ஒரு பொருள் தரும் பல சொற்கள். கடி  

7. குரங்கு – குறங்கு – ஒலி மற்றும் பொருள் வேறுபாடடு       

8. ஒலி மற்றும் பொருள் வேறுபாடடு   கூரை- கூறை –       

9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
சரியான இணையைத் தேர்க.
A) ஈ-காமர்ஸ். – மின்னணு மயம்
B) ஆன்லைன் ஷாப்பிங்மின்னணு வணிகம்
C) டிமாண்ட்டிராஃப்ட் – வரைவோலை
D) டிஜிட்டல் – இணையத்தள வணிகம்

10. ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்: Tempest – 

REVISION 1/10 

1.“தொட்டு” – வேர்ச்சொல்லைத்        –  தொடு

2.வேர்ச்சொல்: பயின்றாள்  –  பயில்

3. வருக’ – வேர்ச்சொல்  –   வா

4. ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உரைப்பது, _____ விடை ஆகும்.  விடை: C) உறுவது கூறல் விடை

5. தாவரத்தின் பிஞ்சு வகைகளுள் இடம்பெறாத சொல் தேர்க.           A) வடு         B) மூசு           C) கவ்வை        D) தாறு          விடை: D) தாறு

6. ஒரு பொருள் தரும் பல சொற்கள். கடி  –  விடை: B) காவல், விரைவாக

7. குரங்கு – குறங்கு – ஒலி மற்றும் பொருள் வேறுபாடடு       விடை:  வானரம் – தொடை

8. ஒலி மற்றும் பொருள் வேறுபாடடு   கூரை- கூறை –        விடை: வீட்டின் கூரை – புடவை

9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
சரியான இணையைத் தேர்க.
விடை: C) டிமாண்ட்டிராஃப்ட். – வரைவோலை

10. ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்: Tempest –  விடை: பெருங்காற்று

TEST 11/20

11. Revivalism – ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்: 

12. பிழையான தொடரைக் கண்டறிக.
A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
B) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

13. பிழை நீக்கி எழுதுக.
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
A) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திக் கொண்டுதான் தௌலீஸ்வரம் ஆணையைக் கட்டினார்.
B) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தியால் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
C) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
D) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திக்கு தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

14. சரியான ஒலி மரபு கண்டறிக. சிங்கம் 

15.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
கவிஞர் அப்துல்ரகுமான்
A) பால்வீதி
B) கரித்துண்டு
C) நேயர்விருப்பம்
D) சொந்தச்சிறைகள்

16. தென்திராவிட மொழிக் குடும்பத்திற்குப் பொருந்தாதது கண்டறிக.
A) தமிழ்   B) மலையாளம்   C) தெலுங்கு     D) கன்னடம்

17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
ஊறுகாய், கருங்குவளை, ஆடுகொடி, வளர்தமிழ்
A) வளர்தமிழ்   B) ஊறுகாய்   C) ஆடுகொடி     D) கருங்குவளை

18. செய்யுளிசை அளபெடைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்க.   

A) ஓஒதல்  B) படாஅ   C) படூஉம்  D) இன்புறூஉம்

19. சரியான இணையைத் தேர்க.
A) அணுகு – பொய்மை   B) ஐயம் – தெளிவு   C) ஊக்கம் விலகு    D) உண்மை சோர்வு

20. எதிர்ச்சொல்  “மிசை” 

TEST 11/20

11. Revivalism – ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்:  விடை: மீட்டுருவாக்கம்

12. பிழையான தொடரைக் கண்டறிக.
விடை: C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

13. பிழை நீக்கி எழுதுக.
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை: C) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்

14. சரியான ஒலி மரபு கண்டறிக. சிங்கம் – விடை: முழங்கும்

15.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
கவிஞர் அப்துல்ரகுமான்
A) பால்வீதி   B) கரித்துண்டு     C) நேயர்விருப்பம்    D) சொந்தச்சிறைகள்
விடை: B) கரித்துண்டு

16. தென்திராவிட மொழிக் குடும்பத்திற்குப் பொருந்தாதது கண்டறிக.
A) தமிழ்   B) மலையாளம்    C) தெலுங்கு   D) கன்னடம்
விடை: C) தெலுங்கு

17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
ஊறுகாய், கருங்குவளை, ஆடுகொடி, வளர்தமிழ்
A) வளர்தமிழ்    B) ஊறுகாய்    C) ஆடுகொடி    D) கருங்குவளை
விடை: D) கருங்குவளை

18. செய்யுளிசை அளபெடைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்க. 

 A) ஓஒதல்   B) படாஅ     C) படூஉம்  D) இன்புறூஉம்
விடை: D) இன்புறூஉம்

19. சரியான இணையைத் தேர்க.
A) அணுகு – பொய்மை
B) ஐயம் – தெளிவு
C) ஊக்கம் விலகு
D) உண்மை சோர்வு
விடை: B) ஐயம் – தெளிவு

20. எதிர்ச்சொல்  மிசை”விடை:  கீழே

TEST 21/30

21. ஈதல் – எதிர்ச்சொல்

22. “பொருளுடைமை”  பிரித்து எழுதெழுதுக. 

23. சேர்த்தெழுதுக : இன்பு + உருகு

24. பிரித்தெழுதுக: பெருங்கடல்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடு : வினா எண் 25 முதல் 29 வரை 

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும்.

உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை.

இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

25. பழமொழியின் சிறப்பு ___ சொல்வது 

26. நோயற்ற வாழ்வைத் தருவது  

27. உடல் ஆரோக்கியமே _____ அடிப்படை

28. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன

29. இப்பத்தியில் இடம் பெறும் பழமொழி 

30. ஒருமை – பன்மை பிழையான தொடரை நீக்குக.
A) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்
B) சிறுமி தனது கையில் புத்தகம் வைத்திருந்தாள்
C) கன்று தனது தலையை ஆட்டியது
D) இவை தான் எனக்குப் பிடித்த நூல்கள்

REVISION 21/30

21. ஈதல் – எதிர்ச்சொல் – விடை: ஏற்றல்

22. “பொருளுடைமை”  பிரித்து எழுதெழுதுக. – விடை: பொருள் + உடைமை

23. சேர்த்தெழுதுக : இன்பு + உருகு  – விடை:  இன்புருகு

24. பிரித்தெழுதுக: பெருங்கடல் – விடை: பெருமை + கடல்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடு :

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும்.

உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை.

இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

25. பழமொழியின் சிறப்பு ___ சொல்வது  விடை: சுருங்கச்

26. நோயற்ற வாழ்வைத் தருவது   விடை:  சுத்தம்

27. உடல் ஆரோக்கியமே _____ அடிப்படை.  விடை:  உழைப்புக்கு

28. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன விடை: உணவு, உடை, உறைவிடம்

29. இப்பத்தியில் இடம் பெறும் பழமொழி   விடை:  சுத்தம் சோறு போடும்

30. ஒருமை – பன்மை பிழையான தொடரை நீக்குக.
A) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்
B) சிறுமி தனது கையில் புத்தகம் வைத்திருந்தாள்
C) கன்று தனது தலையை ஆட்டியது
D) இவை தான் எனக்குப் பிடித்த நூல்கள்
விடை: D) இவை தான் எனக்குப் பிடித்த நூல்கள்

TEST 31/40

31. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
A) அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான்
B) அவன் நெறியோடு நின்று காவல் காக்கிறார்கள்
C) அவர்கள் நெறியோடு நின்று காவல் காக்கிறார்
D) அவன் நெறியோடு நின்று காவல் காக்கிறார்

32. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தோம்
B) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தேன்
C) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்கள்
D) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்

33. சொல்-பொருள்-பொருத்துக
(a) புரிசை – சாளரம்
(b) புழை. – நீர்நிலை
(c) பனை. – மதில்
(d) கயம். – முரசு
A) 3 1 4 2
B) 3 2 1 4
C) 2 3 4 1
D) 4 1 2 3

34. சொல்லும்-பொருளும் தவறான இணையைக் கண்டறிக
A) மேதி-மயில்  B) மா-வண்டு  C) மது-தேன்    D) வாவி-பொய்கை

35.சொல்-பொருள்-பொருத்துக
(a) அலந்தவர். – 1. உறவினர்
(b) நோன்றல். – 2. வறியவர்
(c) கிளை. – 3. பகைவர்
(d) போற்றார். – 4. பொறுத்தல்
A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 2 4 1 3
D) 2 1 4 3

36. கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக. 

அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

37.  ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடர் எது?  __  புத்தகத்தைத் தொடுகிறபோது நீ __  அனுபவத்தைத் தொடுவாய்

38. சரியானத் தொடரைத் தேர்ந்தெடு : கவிதையை எழுதினார்இது எவ்வகைத் தொடர்?

39. சரியானத் தொடரைக் கண்டறிந்து எழுதுக.  கொடியிலுள்ள மலரைக் __ வா

40. பூக்களைப் பறிக்காதீர் – இது எவ்வகைத் தொடர்.

REVISION 31/40

31. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
A) அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான்
B) அவன் நெறியோடு நின்று காவல் காக்கிறார்கள்
C) அவர்கள் நெறியோடு நின்று காவல் காக்கிறார்
D) அவன் நெறியோடு நின்று காவல் காக்கிறார்
விடை: A) அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான்

32. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தோம்
B) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தேன்
C) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்கள்
D) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்
விடை: D) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்

33. சொல்-பொருள்-பொருத்துக
(a) புரிசை – 1.சாளரம்
(b) புழை. – 2.நீர்நிலை
(c) பனை. – 3.மதில்
(d) கயம். – 4. முரசு
A) 3 1 4 2
B) 3 2 1 4
C) 2 3 4 1
D) 4 1 2 3
விடை: A) 3 1 4 2

34. சொல்லும்-பொருளும் தவறான இணையைக் கண்டறிக
A) மேதி-மயில்
B) மா-வண்டு
C) மது-தேன்
D) வாவி-பொய்கை
விடை: A) மேதி-மயில்

35.சொல்-பொருள்-பொருத்துக
(a) அலந்தவர். – 1. உறவினர்
(b) நோன்றல். – 2. வறியவர்
(c) கிளை. – 3. பகைவர்
(d) போற்றார். – 4. பொறுத்தல்
A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 2 4 1 3
D) 2 1 4 3
விடை: C) 2 4 1 3

36. கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக.  அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது – விடை: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

37.  ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடர் எது? விடை:  ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்

38. சரியானத் தொடரைத் தேர்ந்தெடு : கவிதையை எழுதினார் – இது எவ்வகைத் தொடர்? – விடை: வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

39. சரியானத் தொடரைக் கண்டறிந்து எழுதுக. – விடை: கொடியிலுள்ள மலரைக் கொய்து வா

40. பூக்களைப் பறிக்காதீர் – இது எவ்வகைத் தொடர். – விடை: கட்டளைத் தொடர்

TEST 41/50

41.  சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க. எறும்பு.

42. சொற்களின் கூட்டு பெயர்களில் தவறான இணையைக் கண்டறிக. ஆட்டு___

43. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்.

44. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் அமைந்திருப்பது.
A) மலர்க்கை
B) தேர்பாகன்
C) கொல்களிறு
D) சாரைப்பாம்பு

45. காலம் கரந்த பெயரெச்சம் எது?

46. கலைச் சொல் அறிதல் WHIRLWIND 

47.  கலைச்சொல்லின் பொருளை அறிந்து தெரிவு செய்க. Marine creature

48.கூற்று,காரணம் – சரியா?தவறா?கூற்று: ‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும்.
காரணம்: உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

49. கூற்று, காரணம் சரியா?தவறா?கூற்று: தாய்சேய்-உவமைத்தொகை
காரணம்: உவம உருபு மறைந்து வந்துள்ளது

50. கூற்று, காரணம் சரியா?தவறா?
கூற்று. : “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது”என்று சர்ச்சில் கூறினார்.
காரணம் : தமிழ் மக்களின் துணையுடன் போராடிய நேதாஜியைக் கொண்டு சர்ச்சில் கோபம் கொண்டார்.

REVISION 41/50

41.  சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க. எறும்பு.விடை:  எறும்புச் சாரை

42. சொற்களின் கூட்டு பெயர்களில் தவறான இணையைக் கண்டறிக. விடை:  ஆட்டுக்கூட்டம்

43. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல். – விடை: D) வேருக்கு நீர்

44. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் அமைந்திருப்பது.
A) மலர்க்கை
B) தேர்பாகன்
C) கொல்களிறு
D) சாரைப்பாம்பு
விடை: D) சாரைப்பாம்பு

45. காலம் கரந்த பெயரெச்சம் எது? – விடை: வினைத்தொகை

மூன்று காலத்தையும் காட்டும் தொகைச்சொல்லை தமிழில் வினைத்தொகை என்பர். இதனைத் தொல்காப்பியம் காலம் கரந்த பெயரெச்சம் எனக் குறிப்பிடுகிறது. வினைமுற்றுக்களில் மட்டுமன்றி வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழிற்பெயர்கள், நிபந்தனை எச்சம், பெயரடை போன்றவற்றிலும் காலங்காட்டும் இடைநிலைகள் வருகின்றன.

46. கலைச் சொல் அறிதல் WHIRLWINDவிடை: சுழல்காற்று

47.  கலைச்சொல்லின் பொருளை அறிந்து தெரிவு செய்க. Marine creatureவிடை: கடல்வாழ் உயிரினம்

48.கூற்று,காரணம் – சரியா?தவறா?

கூற்று. : ‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும்.
காரணம். : உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.  – விடை:  கூற்று சரி, காரணம் சரி

49. கூற்று, காரணம் சரியா?தவறா?

கூற்று. : தாய்சேய்-உவமைத்தொகை
காரணம்: உவம உருபு மறைந்து வந்துள்ளது – விடை: கூற்றும் காரணமும் தவறு

50. கூற்று, காரணம் சரியா?தவறா?
கூற்று. : “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது”என்று சர்ச்சில் கூறினார்.
காரணம் : தமிழ் மக்களின் துணையுடன் போராடிய நேதாஜியைக் கொண்டு சர்ச்சில் கோபம் கொண்டார். – விடை: கூற்றும் காரணமும் சரி

TEST 51/60

51. இரு பொருள் தருக – இதழ்:

52. விடை வகையைத் தேர்ந்தெழுதுதல்: “நீ விளையாடவில்லையா?”என்ற வினாவிற்கு “உடம்பு சரியில்லை”. என்று கூறுவது.

53. அவசரக் குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக.

54. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு. ஆறு

55. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவிற்கு “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?’ என்று விடையளிப்பது

56. சரியான விடைவகையை தெரிவு செய்க. இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டதற்கு, “அதோ, அங்கு நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ______ விடை.

57. எவ்வகை வினா என்பதை எழுதுக. வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?’ என்று அக்கா தம்பியிடம் வினவிச் சொல்லுதல்

58. அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக. ரெக்கார்ட்.

59. Honorary Doctorate – என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க. 

60. ‘AUDITOR’-என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

REVISION 51/60

51. இரு பொருள் தருக – இதழ்விடை: கண் இமை, உதடு

52. விடை வகையைத் தேர்ந்தெழுதுதல்: “நீ விளையாடவில்லையா?”என்ற வினாவிற்கு “உடம்பு சரியில்லை”. என்று கூறுவது.விடை:  உற்றது உரைத்தல் விடை

53. அவசரக் குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக. – விடை:  எண்ணி செயல்படாமை

54. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு. ஆறுவிடை: நதி, எண்

55. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவிற்கு “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?’ என்று விடையளிப்பது விடை: வினா எதிர் வினாதல் விடை

56. சரியான விடைவகையை தெரிவு செய்க. இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டதற்கு, “அதோ, அங்கு நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ______ விடை.
விடை: சுட்டு விடை

57. எவ்வகை வினா என்பதை எழுதுக. வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?’ என்று அக்கா தம்பியிடம் வினவிச் சொல்லுதல்விடை:  ஏவல் வினா

58. அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக. ரெக்கார்ட்.விடை: ஆவணம்

59. Honorary Doctorate – என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க. – விடை: மதிப்புறு முனைவர்

60. ‘AUDITOR‘-என்பதற்கு இணையான கலைச்சொல் தருக. – விடை: பட்டயக் கணக்கர்

TEST   61/70

61. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “காக்கை உட்காரப் பணம்பழம் விழுந்ததுபோல”

62. கலைச்சொல் அறிக. Missile  

63. ‘பசுமரத்து ஆணி போலஎன்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?  

64. பந்து உருண்டது இது எவ்வகை வாக்கியம்? 

65. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.  “பணம் திருடப்பட்டது.”

66. தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தேர்க.  உன் திருக்குறள் நூலைத் தருக.

67. திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூலாகும் _____ விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

68.விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

69. இருவினைகளின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க. பொருந்து-பொருத்து

70. பொருத்தமான இணைகளை தேர்க (பிணைந்து-பிணைத்து)

(1) பாம்புகள் பிணைந்தன    (II) பாம்புகள் பிணைத்தன    (III) தாம்புகள் பிணைந்தன       (IV) தாம்புகள் பிணைத்தன

REVISION  61/70

10/10 சரியான விடைகளை சரிபார்க்கவும் 

61. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: காக்கை உட்காரப் பணம்பழம் விழுந்ததுபோல”விடை:  தற்செயல் நிகழ்வு

62. கலைச்சொல் அறிக. Missile  விடை:  ஏவுகணை

63. ‘பசுமரத்து ஆணி போல என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?  விடை: எளிதில் மனதில் பதிதல்

64. பந்து உருண்டது இது எவ்வகை வாக்கியம்?  விடை: தன்வினை

65. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.  “பணம் திருடப்பட்டது.” – விடை: செயப்பாட்டு வினை

66. தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தேர்க.  உன் திருக்குறள் நூலைத் தருக. விடை: விழைவுத் தொடர்

67. திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூலாகும் _____ விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

விடை: உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் எது ?

68.விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.விடை:  பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

69. இருவினைகளின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க. பொருந்து-பொருத்து – விடை:  மின் விசிறி பொருத்தி சரியாக பொருந்தி உள்ளதா? என்று கவனி.

70. பொருத்தமான இணைகளை தேர்க (பிணைந்து-பிணைத்து) (1) பாம்புகள் பிணைந்தன    (II) பாம்புகள் பிணைத்தன    (III) தாம்புகள் பிணைந்தன       (IV) தாம்புகள் பிணைத்தன

விடை:  I மற்றும் IV சரி

TEST   71/80

71. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.   உணர்ந்தபடி உள்ளதை  கூறுவது கவிதை

72. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக –  வீரவிளையாட்டு தமிழர்களின் தொன்மையான  ஏறு தழுவுதல்

73. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. விளையும் உப்பு “அளம்” களத்திற்கு என்று பெயர். – 

74.அகர வரிசைப்படுத்துக:- எழுத்து, ஒலிவடிவம், அழுகுணர்ச்சி, ஏழ்கடல், ஊழி, இரண்டல்ல, உரைநடை, ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம், ஔகாரம்

75. கீழ்க்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமைத்து எழுதுக. வைதல், வாழ்த்துதல், வேண்டுதல் வினாவுதல்  – 

76. அகர வரிசைப்படுத்துக.   மரகதம் மாணிக்கம் முத்து கோமேதகம்

77. “சரி”என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருக.

78. வேர்ச்சொல்லின் வழி வினையெச்சம் கண்டறிக.  பாடு: 

79. அடைப்புக்குள் உள்ள சொல்லை ஏற்ற தொடரில் சேர்க்க (திருவெஃகா) 

80. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (பிப்ரவரி 2)

REVISION 71/80

71. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.   விடை:  உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை

72. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக – விடை:  தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்

73. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. விளையும் உப்பு “அளம்” களத்திற்கு என்று பெயர். – விடை:  உப்பு விளையும் களத்திற்கு “அளம்” என்று பெயர்

74.அகர வரிசைப்படுத்துக:- எழுத்து, ஒலிவடிவம், அழுகுணர்ச்சி, ஏழ்கடல், ஊழி, இரண்டல்ல, உரைநடை, ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம், ஔகாரம்

விடை: அழுகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்

75. கீழ்க்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமைத்து எழுதுக. வைதல், வாழ்த்துதல், வேண்டுதல் வினாவுதல்  – விடை:  வாழ்த்துதல், வினாவுதல், வேண்டுதல், வைதல்

76. அகர வரிசைப்படுத்துக. – விடை: கோமேதகம், மரகதம் மாணிக்கம் முத்து

77. சரி”என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருக. – விடை:  சரிந்து

78. வேர்ச்சொல்லின் வழி வினையெச்சம் கண்டறிக.  பாடு: விடை:  பாடி

79. அடைப்புக்குள் உள்ள சொல்லை ஏற்ற தொடரில் சேர்க்க (திருவெஃகா)  – விடை:  பொய்கையாழ்வார்  திருவெஃகா_என்னும் ஊரில் பிறந்தார்

80. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (பிப்ரவரி 2) விடை: உலக ஈர நில நாள் பிப்ரவரி 2

TEST  81/90

81. பொருத்தமான இணைப்புச்சொல் அமைந்தத் தொடரைத் தேர்க. தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. _____  தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

82. சரியான இணைச்சொல்லைத் தெரிவு செய்க.
“இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். _____ ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று” என்றான்.

83. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு நோய்கள் பெருகக் காரணம் _____ ? 

84. சரியான வினாச்சொற்களை தேர்க  இயற்கையை _____ பாதுகாக்க வேண்டும்?  (I) ஏன். (II) எப்படி (III) யார். (IV) யாது – 

85. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. முதல் ஆழ்வார்கள். _____ பேர்? 

86. பொருத்தமான காலம் அமைத்தல் சரியான தொடரைத் தேர்ந்தெடு –   இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன்  ____ காலம். 

87. காலத்திற்கேற்ப வினைமுற்றைத் தேர்க.என் மாமா நாளை_______  

88. எதிர்காலத்தைக் குறிக்கும் தொடரைத் தேர்ந்தெடு.    வறு செய்தால் தண்டனைக் 

89. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக. மணி

90. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் உருவாக்குதல் பொருத்துக.
(a) வாழை. – 1. திடல்
(b) குருவி. – 2. சோறு
(c)தயிர். – 3. கூடு
(d) விளையாட்டு. – 4. பழம்

REVISION 81/90

81. பொருத்தமான இணைப்புச்சொல் அமைந்தத் தொடரைத் தேர்க.

விடை: தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

82. சரியான இணைச்சொல்லைத் தெரிவு செய்க.
“இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். _____ ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று” என்றான். விடை: அதற்கு

83. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு நோய்கள் பெருகக் காரணம் _____ ? – விடை:  என்ன

84. சரியான வினாச்சொற்களை தேர்க  இயற்கையை _____ பாதுகாக்க வேண்டும்?  (I) ஏன். (II) எப்படி (III) யார். (IV) யாது – விடை: A) I, II, III சரி

85. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. முதல் ஆழ்வார்கள். _____ பேர்? விடை: C) எத்தனை

86. பொருத்தமான காலம் அமைத்தல் சரியான தொடரைத் தேர்ந்தெடு – விடை:  இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன் (நிகழ்காலம்)

87. காலத்திற்கேற்ப வினைமுற்றைத் தேர்க. – என் மாமா நாளை_______ – விடை:  வருவார்

88. எதிர்காலத்தைக் குறிக்கும் தொடரைத் தேர்ந்தெடு. – விடை:  தவறு செய்தால் தண்டனைக் கிடைக்கும்

89. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக. மணி – விடை: மேகலை

90. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் உருவாக்குதல் பொருத்துக.
(a) வாழை. – 1. திடல்
(b) குருவி. – 2. சோறு
(c)தயிர். – 3. கூடு
(d) விளையாட்டு. – 4. பழம்
விடை: 4 3 2 1

TEST  91 /100

91. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க இத்தொடருக்கு இணையான எழுத்து வழக்கைத் தேர்க.

92. பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக.      அவன் பாட்டியோடு வெளியூர்____

93. எழுத்து வழக்காக மாற்றுக ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென் 

94. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)    அந்தோ  இயற்கை அழிகிறதே

95. கொடுக்கப்பட்டுள்ள தொடரின் சரியான நிறுத்தற்குறி இடப்பட்டுள்ள தொடரை தெரிவு செய்க.

நீரோடையும் தாமரை மலர்களும் எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன.

96.ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக கும்பகோணம்

97. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
A) மன்னார்குடி. -மன்னை
B) உதகமண்டலம். -உதகை
C) புதுக்கோட்டை – புதுவை
D) திருச்சிராப்பள்ளி – திருச்சி

98. பிறமொழிக் கலப்பற்ற தொடரைத் தேர்க.
A) செத்த பிணமாய் சீவனில்லாமல் உறக்கத்தில் வாழ்ந்தோம்
B) சபதம் முடித்து ஆனந்த தரிசனம் அளித்து நின்றது.
C) கைவிலங்கு ஒடித்து பகையைத் துடைத்தது சத்திய நெஞ்சம்
D) விரட்டியடித்து விழிக்க வைத்தது; வையம் வியக்க வைத்தது

99. ‘SAILOR’என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக.
விடை: D) மாலுமி

100.பிறமொழிச் சொற்களற்ற தொடரைத் தேர்க.
A) பிராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு
B) மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி?
C) காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்
D) கணினித் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

REVISION 91 /100

91. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க இத்தொடருக்கு இணையான எழுத்து வழக்கைத் தேர்க. –

விடை: வண்டியைத் தூக்கி மாட்டு வண்டியில் வைத்துக்கொண்டு வாருங்கள்

92. பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக. – விடை:  அவன் பாட்டியோடு வெளியூர் போயிருக்கிறான்

93. எழுத்து வழக்காக மாற்றுக ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென் – விடை:  நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்

94. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது) – விடை:  அந்தோ! இயற்கை அழிகிறதே!

95. கொடுக்கப்பட்டுள்ள தொடரின் சரியான நிறுத்தற்குறி இடப்பட்டுள்ள தொடரை தெரிவு செய்க.

நீரோடையும் தாமரை மலர்களும் எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன.விடை:  நீரோடையும் தாமரை மலர்களும் “எங்களைக் கவி ஒவியமாகத் தீட்டுக” என்றன

96.ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக கும்பகோணம்விடை: குடந்தை

97. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க. – விடை:  புதுக்கோட்டை – புதுவை

98. பிறமொழிக் கலப்பற்ற தொடரைத் தேர்க. – விடை:  விரட்டியடித்து விழிக்க வைத்தது; வையம் வியக்க வைத்தது

99. ‘SAILOR’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக. – விடை:  மாலுமி

100.பிறமொழிச் சொற்களற்ற தொடரைத் தேர்க. விடை: கணினித் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

Join the conversation