GK TEST 8
- ஈஸ்டில் காணப்படும் ஸ்டீராய்டின் பெயர் என்ன?
(A) லானோஸ்டீரால்
(B) பித்த அமிலம்
(C) எர்கோஸ்டீரால்
(D) ஆஸ்டிரியோஸ்டீரால்
(E) விடை தெரியவில்லை
102.பூச்சிகளின் ஹீமோலிம்பில் காணப்படும் சர்க்கரை
(A) செல்லோபயோஸ்
(B) மால்டோஸ்
(C) டிரக்கலோஸ்
(D) குளுக்கோஸ்
(E) விடை தெரியவில்லை
- தற்கால உலகம் என்பது எவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது?
(A) பரிணாம சக்திகளால்
(B) கனிம மற்றும் கரிம பொருள்களால்
(C) கடவுளால்
(D) கரிம பரிணாமத்தால்
(E) விடை தெரியவில்லை
- ஜாவா குரங்கு மனிதனின் புதைபடிவமான பித்திகேன்தோரோபஸ் எரக்டஸ்யை கண்டுபிடித்தவர்.
(A) மாயர்
(B) சிம்சன்
(C) எல்.எஸ்.பி. லீக்கி
(D) டிபாயிஸ்
(E) விடை தெரியவில்லை
- ஒரு தனிமத்தின் பொருண்மை எண் ‘A’. அதன் அணுக்கருவின் பருமன் எந்த விகிதம்?
(A) A (B) A2 (C) A3 (D) A1/3
(E) விடை தெரியவில்லை
- பின்வரும் துகள்களில் எலக்ட்ரானின் அதே அளவு நிறை கொண்ட துகள் எது?
(A) புரோட்டான்
(B) நியூட்ரான்
(C) பாசிட்ரான்
(D) நியூட்ரினோ
(E) விடை தெரியவில்லை
- அறுவை சிகிச்சை செய்ய லேசர் கற்றை பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் அது
(A) மிகவும் ஓரியல் கற்றையாகும்
(B) மிகவும் திசை கற்றை ஆகும்
(C) கூர்மையான குவியம் கொண்டது
(D) மிகவும் ஒற்றை நிறமுடையது
(E) விடை தெரியவில்லை
- சோடியம் ஃப்ளோரோ அசிட்டேட், ஆல்பா நாப்தைல் யூரியா, நார்போர்மைடு மற்றும் தாலியம் அசிட்டேட் ஆகியவற்றுள் கொறித்துண்ணிகளான எலிகளுக்கு மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லியை தேர்ந்தெடு.
(A) சோடியம் ஃப்ளோரோ அசிடேட்
(B) ஆல்பா நாப்தைல் யூரியா
(C) நார்போர்மைடு
(D) தாலியம் அசிட்டேட்
(E) விடை தெரியவில்லை
- இந்திய விலங்கினம் கணக்கெடுப்பு மையத்தால் கீழ்க்கண்டவற்றுள் எது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருசிகுல்யா நதி வாய் வழியாக வலசைபோகும் அழிந்து வரும் இனங்களை ஆராய குறியீடு செய்யப்பட்டுள்ளது
(A) இந்திய கருப்பு ஆமை
(B) பச்சை கடல் ஆமை
(C) ஆலிவ் ரிட்லி ஆமை
(D) இந்திய நட்சத்திர ஆமை
(E) விடை தெரியவில்லை
- கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக கீழ்கண்ட திட்டங்களில் எது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது?
(A) கங்கா செயல் திட்டம்
(B) நமாமி கங்கே
(C) கங்கே நமாமி செயல்திட்டம்
(D) கங்கையை சுத்தம் செய்யும் பணி
(E) விடை தெரியவில்லை.
- 2021 ஜூன் 4ஆம் தேதி அறிவுசார் பொருளாதார மிஷன் எந்த அரசால் நிறுவப்பட்டது?
(A) மத்திய பிரதேசம்
(B) தமிழ்நாடு
(C) உத்தர பிரதேசம்
(D) கேரளா
(E) விடை தெரியவில்லை
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதுமைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வருவனவற்றுள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்
(A) பிரதமரின் யுவா திட்டம்
(B) பிரதமரின் ஸ்ரம் யோகி மன்–தன் திட்டம்
(C) பிரதமரின் வய வந்தனா திட்டம்
(D) பிரதமரின் முத்ரா திட்டம்
(E) விடை தெரியவில்லை
- எந்த நகரம் தோலாவிரா பழமையான நகரம்?
(A) ஹரப்பன்
(B) மொஹஞ்சதாரோ
(C) கீழடி
(D) லோதல்
(E) விடை தெரியவில்லை
- வந்தே மாதரம் என்ற பாடல் எந்த மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது?
(A) வங்காளம்
(B) ஹிந்தி
(C) உருது
(D) சமஸ்கிருதம்
(E) விடை தெரியவில்லை.
- ‘சமத்துவச் சிலை’ அமையப் பெற்ற நகரம்
(A) ஒரிசா
(B) டில்லி
(C) ஹைதராபாத்
(D) குஜராத்
(E) விடை தெரியவில்லை
116.கீழ்கண்டவற்றுள் எது விஜயநகர் இரும்பு எஃகு ஆலையுடன் பொருந்தாது?
(A) இது கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது
(B) இதற்கு ஜாரியாவிலிருந்து நிலக்கரி பெறுகிறது
(C) இதற்கு துங்கபத்ரா நீர்மின் சக்தியிலிருந்து நீர்மின்சக்தி கிடைக்கிறது
(D) இங்கு நிலக்கரியானது கோரக்ஸ் முறையில் பயன்படுத்தப்படுகிறது
(E) விடை தெரியவில்லை
- கீழே கொடுக்கப்பட்ட விலங்குகளை அவற்றின் சரியான இனங்களுடன் பொருத்துக.
(a) ஆபத்தான இனங்கள் 1. காட்டு எருமை
(b) பாதிக்கப்படக்கூடிய இனங்கள் 2. ஆசிய புலி
(c) அரிதான இனங்கள் 3. முதலை
(d) அழிந்து போன இனங்கள் 4. டால்ஃபின்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 2 4 1 3
(C) 3 1 4 2
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவில் எத்தனை உயிர் கோள காப்பகங்கள் உள்ளன?
(A) 22 (B) 23 (C) 18 (D) 16
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவில், தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எத்தனை நகரங்கள் மற்றும் இடைநிலை ஆறுகள் உள்ளடக்கப்பட்டன?
(A) 152 நகரங்கள் மற்றும் 27 இடைநிலை ஆறுகள்
(B) 125 நகரங்கள் மற்றும் 30 இடைநிலை ஆறுகள்
(C) 512 நகரங்கள் மற்றும் 33 இடைநிலை ஆறுகள்
(D) 215 நகரங்கள் மற்றும் 25 இடைநிலை ஆறுகள்
(E) விடை தெரியவில்லை
- புவிவெப்ப சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம்
(A) அமைதி பள்ளத்தாக்கு
(B) தப்தி பள்ளத்தாக்கு
(C) புகா பள்ளத்தாக்கு
(D) அரக்கா பள்ளத்தாக்கு
(E) விடை தெரியவில்லை
- கூற்று (A) : சிந்து வியாபாரிகள் மெசபடோமியாவில் தங்கினர்
காரணம் (R) : பருத்தியை தங்களுடன் கொண்டு சென்றனர்
(A) (A) சரி (R) தவறு
(B) (A), (R) இரண்டும் சரி
(C) (A) தவறு (R) சரி
(D) (A) சரி ஆனால் (R) (A) யின் சரியான விளக்கமல்ல
(E) விடை தெரியவில்லை.
- இந்தோ–இஸ்லாமிய கவிஞர்களில் மிகப்பெரியவர். ஏழு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். மேலும் அலாவுதீன் அரச அவையில் நீண்ட காலம் தொடர்பு உடையவர். அவர் யார்?
(A) அமிர் குஸ்ரு
(B) பரணி
(C) கபீர்
(D) ஹனிபா டீன்
(E) விடை தெரியவில்லை
- ‘சிபார்ஸ்‘ என்ற சொல் எதை குறிக்கின்றது?
(A) துப்பாக்கியுடன் கூடிய படகுகள்
(B) வலிமையான வாணிப கப்பல்கள்
(C) வணிக படகுகள்
(D) கப்பல் பணியாளர்கள்
(E) விடை தெரியவில்லை
- 1303 ஆம் ஆண்டில் வங்காளத்தின் வழியாக வாரங்கலுக்கு எதிராக அலாவுதின் கில்ஜியின் தெற்கு படையெடுப்பை வழி நடத்தியது யார்?
(A) பிர்துல்
(B) ஜலாலுதின் பிருஸ்
(C) மாலிக்கபூர்
(D) ஷிகாபுதின் ஒமர்
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவில் இந்து பண்பாடு யாருடைய ஆட்சியின் கீழ் உச்சத்தை அடைந்தது?
(A) மௌரியர்கள்
(B) குப்தர்கள்
(C) குஷாணர்கள்
(D) ஹர்ஷர்கள்
(E)விடை தெரியவில்லை
- இந்தியாவில் அதன் பித்தளை பொருட்களின் வரம்பிற்கு உலகப்புகழ் பெற்ற இடத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
(A) பனாரஸ்
(B) ஜெய்ப்பூர்
(C) மொராதாபாத்
(D) பலித்தானா
(E) விடை தெரியவில்லை.
- கி.பி. 5-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன?
(A) நாலந்தா
(B) வாதாபி
(C) தட்சசீலம்
(D) விக்ரமஷிலா
(E) விடை தெரியவில்லை
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
(a) டெப்ஸா கணவாய் 1. உத்தரகாண்ட்
(b) லிகாபனி கணவாய் 2. ஹிமாச்சல பிரதேசம்
(c) நாது லா கணவாய் 3. அருணாச்சல பிரதேசம்
(d) முலிங் லா கணவாய் 4. சிக்கிம்
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 4 2 3 1
(C) 2 3 1 4
(D) 4 2 1 3
(E) விடை தெரியவில்லை
- இந்திய அரசியலமைப்பு விதி 94 விளக்குவது
(A) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நீக்கம்
(B) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்
(C) தலைமை தேர்தல் ஆணையர் நீக்கம்
(D) துணைக் குடியரசுத் தலைவர் நீக்கம்
(E) விடை தெரியவில்லை
- இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தடை செய்கிறது
(A) உறுப்பு 21
(B) உறுப்பு 22
(C) உறுப்பு 23
(D) உறுப்பு 24
(E) விடை தெரியவில்லை
- அடிப்படைக் கடமைகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
(i) உரிமைகளை அனுபவிக்கின்ற குடிமக்களுக்கு, அவர்களின் கடமைகள் பற்றிய நினைவூட்டலாக இது அமைந்துள்ளது.
(ii) தேச விரோதிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.
(iii) ஆதாரமாகவும், அவர்களிடம் ஒழுங்கை குடிமக்களுக்கு ஊக்கத்தின் மேம்படுத்துமாறும் இது அமைந்துள்ளது.
(iv) இது சட்டத்தின் மூலம் நிலை நாட்டக்கூடியது.
(A) (i), (ii) மற்றும் (iii) சரியானது
(B) (i), (iii) மற்றும் (iv) சரியானது
(C) (i) மற்றும் (ii) சரியானது
(D) அனைத்தும் சரியானது
(E) விடை தெரியவில்லை
132.”கிழக்கு நோக்கும் கொள்கையை” துவக்கிய இந்திய பிரதமர் யார்?
(A) P.V. நரசிம்ம ராவ்
(B) அடல் பிகாரி வாஜ்பாய்
(C) மன்மோகன் சிங்
(D) I.K. குஜ்ரால்
(E) விடை தெரியவில்லை
- சட்டமன்ற மேலவையை உருவாக்கவும் மற்றும் நீக்கவுமான அதிகாரம் யாரிடம் உள்ளது?
(A) குடியரசு துணைத் தலைவர்
(B) மாநில சட்டமன்றம்
(C) குடியரசு தலைவர்
(D) நாடாளுமன்றம்
(E) விடை தெரியவில்லை
- மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1984 (B) 1985 (C) 1986 (D) 1987
(E) விடை தெரியவில்லை
- “பொது நல வழ்க்கு” முதன் முதலாக எந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது?
(A) அமெரிக்கா
(B) இங்கிலாந்து
(C) கனடா
(D) ஜப்பான்
(E) விடை தெரியவில்லை
- கீழே உள்ளவற்றினைப் பொருத்தி சரியான விடை எழுதுக.
சட்டம் வருடம்
(a) ஆதார் சட்டம் 1. 1997
(b) நிதி ஆயோக் 2. 1999
(c) ஐ.ஆர்.டி.ஏ. சட்டம் 3. 2015
(d) டிராய் சட்டம் 4. 2016
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 2 4 1
(C) 3 2 1 4
(D) 4 1 3 2
(E) விடை தெரியவில்லை
- பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
(A) நிலைத்தன்மையுடனான வளர்ச்சி
(B) வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
(C) வறுமையை ஒழித்தல்
(D) தற்சார்பு அடைதல்
(E) விடை தெரியவில்லை
- பட்டியல் – I மற்றும் II – ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
பட்டியல் – I பட்டியல் – II
(a) எம்.என். ராய் 1. காந்திய திட்டம்
(b) ஸ்ரீமன் நாராயன் 2. பம்பாய் திட்டம்
(c) எட்டு தொழிலதிபர்கள் 3. மக்கள் திட்டம்
(a) (b) (c)
(A) 2 3 1
(B) 3 1 2
(C) 1 3 2
(D) 3 2 1
(E) விடை தெரியவில்லை
- கீழே காணப்படும் இனங்களில் மாநில அரசின் வரி வருவாய் மூலம் இல்லாதது எது?
(A) நில வருவாய்
(B) மோட்டார் வாகன வரி
(C) பொழுதுபோக்கு வரி
(D) வணிக நிறுவன வரி
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் நிதிக்குழு எந்த பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது ?
(A) பிரிவு 252
(B) பிரிவு 268
(C) பிரிவு 272
(D) பிரிவு 280
(E) விடை தெரியவில்லை
- பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(a) NABARD 1. தொழில் நிதி அல்லது (கடன்)
(b) HDFC 2. நுண்ணிய நிதி அல்லது (கடன்)
(c) IDBI 3. வீட்டு நிதி அல்லது (கடன்)
(d) SHG 4. விவசாய நிதி அல்லது (கடன்)
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 3 1 2 4
(C) 2 1 4 3
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
- “இந்தியாவில் செய்யுங்கள்” திட்டம் தொடங்கப்பட்ட நாள் மற்றும் ஆண்டு
(A) மார்ச் 25, 2012
(B) ஏப்ரல் 20, 2014
(C) செப்டம்பர் 25, 2014
(D) டிசம்பர் 12, 2016
(E) விடை தெரியவில்லை
- நகர்ப்புறத்தில் உள்ள அடிப்படை வசதிகளை கிராமப்புறத்தில் வழங்குதல் (PURA) – திட்டமானது 2003ல் எத்தனை கிராம வளர்ச்சி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டது?
(A) 2000 வட்டாரங்கள்
(B) 3000 வட்டாரங்கள்
(C) 5000 வட்டாரங்கள்
(D) 6000 வட்டாரங்கள்
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எது சரி ?
கூற்று [A] : அந்நிய ஆட்சிக்கு எதிராக நடந்த முதல் கிளர்ச்சி 1770ல் வங்காளத்தில் வெடித்தது.
காரணம் [R] : இதற்கான முக்கிய காரணம் அழிவை ஏற்படுத்திய பஞ்சமும் மற்றும் விவசாயிகள் சுரண்டப்பட்டதும் ஆகும்.
(A) [A] மற்றும் [R] சரி, மற்றும், (R] [A]க்கான சரியான விளக்கம் அல்ல
(B) [A] சரி, ஆனால் (R] தவறு
(C) [A] மற்றும் (R] சரி, மற்றும் [R], [A] க்கான சரியான விளக்கம்
(D) [A] தவறு, ஆனால் (R] சரி
(E) விடை தெரியவில்லை
- கூற்று [A] : தாதாபாய் நௌரோஜி கிழக்கிந்தியக் கழகத்தை லண்டனில் உருவாக்கினார்.
காரணம் [R] : பிரிட்டிஷ் பொதுமக்கள் கருத்தின் மீது செல்வாக்கு ஏற்படுத்த விரும்பினார்.
(A) [A] மற்றும் [R] சரி, மற்றும் [R], [A] க்கான சரியான விளக்கம்
(B) [A] சரி, ஆனால் [R] தவறு
(C) [A] தவறு, ஆனால் (R) சரி
(D) (A) மற்றும் (R] சரி, மற்றும் [R], [A] க்கான சரியான விளக்கமல்ல
(E) விடை தெரியவில்லை
- சரியானவற்றை பொருத்துக:
- இந்திய தேசியத்தின் தூதுவர் இராஜா ராம் மோகன்ராய்
- 2. மக்களின் சிறந்த பாரம்பரியத்தை
தெரிந்து கொண்டு எழுச்சி பெற
‘வேதங்களை நோக்கி செல்லும்’ சுவாமி விவேகானந்தா
- R.G. பிரதான் இவரை இந்திய
‘தேசியத்தின் தந்தை‘ என்றழைத்தார் சுவாமி தயானந்த சரஸ்வதி
- ‘சுயராஜியம் எனது பிறப்புரிமை‘
என்று கூறியவர் – பால கங்காதர் திலகர்
(A) 1 மற்றும் 2 சரி
(B) 2 மற்றும் 3 சரி
(C) 3 மற்றும் 4 சரி
(D) 1 மற்றும் 4 சரி
(E) விடை தெரியவில்லை
- பின்வரும் வார்த்தைகளைக் கூறியவர் யார்?
“இரும்பை உருக்கி, எஃகு உருவாக்கி, உறுதியான இயந்திரங்களை உருவாக்கு”
(A) வ.உ.சிதம்பரனார்
(B) பகத் சிங்
(C) சுப்ரமணிய பாரதி
(D) சுபாஷ் சந்திர போஸ்
(E) விடை தெரியவில்லை
- பின்வரும் கூற்றினை கூறியவர் யார்?
“வன்முறையில்லாமல் விடுதலை அடைந்துவிட்டால் மிக நல்லது : இல்லை என்றால் தேசத்திற்கு படையை வைத்து அந்நியரை விரட்டும் உரிமை உண்டு”
(A) பகத்சிங்
(B) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
(C) சுபாஷ் சந்திர போஸ்
(D) குர்தியால் சிங் திலான்
(E) விடை தெரியவில்லை
- சத்தியாகிரக உத்தி பல்வேறு முறைகளை உள்ளடக்கியது.
பின்வருவனவற்றுள் எது/எவை காந்தியால் சேர்க்கப்படவில்லை?
(i) உண்ணாவிரதம்
(ii) வேலை நிறுத்தம்
(iii) எரிந்த பூமி கொள்கை
(iv) நிலத்தடி நடவடிக்கைகள்
(A) (i) மற்றும் (iv)
(B) (iii) மற்றும் (iv)
(C) (i) மற்றும் (iii)
(D) (ii) மற்றும் (iv)
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எக் கருத்து/கள் சரி?
கூற்று [A] : அலிகார் இயக்கம் சர் சையத் அகமத் கான் தலைமையின் கீழ் வகுப்புவாதத்தை உருவாக்கியது. அது பாகிஸ்தான் உருவாவதற்கு உறுதுணை செய்தது.
காரணம் [R] : சர் சையத் அகமத் கான் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷாரை சார்ந்து இருந்தார். இது பிரிட்டிஷார் முஸ்லீம் வகுப்புவாதம் கொண்டு வர வைத்தது.
(A) [A] மற்றும் (R] சரி, [R], [A] க்கான சரியான விளக்கம்
(B) (A) சரி (R) தவறு
(C) (A) மற்றும் (R) சரி, (R], [A] க்கான சரியான விளக்கமல்ல
(D) [A] தவறு [R] சரி
(E) விடை தெரியவில்லை.
- கீழ்வருவனவற்றுள் ஒன்று பல்லவர்களது கிராம நிர்வாகத்தைக் கூறும் கல்வெட்டு ஆகும்.
(A) மானூர் கல்வெட்டு
(B) திருச்சிராப்பள்ளி கல்வெட்டு
(C) கழுகுமலை கல்வெட்டு
(D) ஏர்வாடி கல்வெட்டு
(E) விடை தெரியவில்லை
- கூற்று [A] : தமிழர்கள் ரோமானியர்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.
காரணம் [R] : ரோமன் நாட்டு பானை ஓடுகளும் தங்க நாணயங்களும் அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
(A) [A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்
(B) [A] சரி ஆனால் (R] தவறு
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
(E)விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்க
புலவர்கள் பகுதிகள்
(a) மருதனார் 1. ஓரகடம் (செங்கை)
(b) வங்கனார் 2. இடைக்காடு (குமரி)
(c) காடனார் 3. ஆலங்குடி (புதுக்கோட்டை)
(d) கந்தரத்தனார் 4. குருங்குடி (நெல்லை)
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 4 3 2 1
(C) 1 2 3 4
(D) 4 2 3 1
(E) விடை தெரியவில்லை
- வரிசை I ஐ வரிசை II உடன் பொருத்தி விடையை காண்க.
வரிசை I (படைப்புகள்) வரிசை II (ஆசிரியர்கள்)
(a) பெரியபுராணம் 1. ஒளவையார்
(b) கொன்றை வேந்தன் 2. ஜெயங்கொண்டார்
(c) கலிங்கத்துப்பரணி 3. கங்காதேவி
(d) மதுராவிஜயம் 4. சேக்கிழார்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 1 2 3
(C) 2 3 4 1
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்ட கூற்றுகளில் பாரதிதாசனிடம் தொடர்பில்லாத நூல் எது ?
(A) பாண்டியன் பரிசு
(B) அழகின் சிரிப்பு
(C) மலரும் மாலையும்
(D) இருண்ட வீடு
(E) விடை தெரியவில்லை
- கூற்று [A] : திருக்குறள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காரணம் [R] : மனிதர்கள் திருக்குறளின் மூலப்பொருளான அகிம்சை, மதச்சார்பின்மை. சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர்.
(A) [A] சரி ஆனால் (R] தவறு
(B) [A] தவறு ஆனால் (R] சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி மேலும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்
(E) விடை தெரியவில்லை
157 “……யிவ்விரண்டும் கண்ணெண்ப வாழும் உயிர்க்கு“.
மேற்காணும் திருக்குறளில் இந்த இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்.
(A) அறமும் பொருளும்
(B) நடுவுநிலைமையும் அடக்கமுடைமையும்
(C) பொருளும் இன்பமும்
(D) எண்ணும் எழுத்தும்
(E) விடை தெரியவில்லை.
158.(i) “பொய்மையும் வாய்மை யிடத்த…..”
(ii) “புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை …..”
இவ்விரண்டு குறள்களையும் ஒரு சேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர்?
(A) பொய்மை
(B) வாய்மை
(C) புறந்தூய்மை
(D) புரை தீர்ந்த நன்மை
(E) விடை தெரியவில்லை
- முதல் கர்நாடகப் போரின் போது ஐரோப்பாவில் நடந்த போர் எது ?
(A) ஏழாண்டுப்போர்
(B) ஆஸ்திரிய–பிரஸ்யப்போர்
(C) ரோஜாப்பூ போர்
(D) ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்தி விடையை தேர்ந்தெடு :
- வேலூர் கலகம்
- கட்டபொம்மனை தூக்கிலிடுதல்
- பழனி சதிதிட்டம்
- பாண்டிச்சேரி உடன்படிக்கை
(A) 1, 2, 3, 4
(B) 4, 3, 2, 1
(C) 2, 3, 4, 1
(D) 4, 2, 3, 1
(E) விடை தெரியவில்லை
- 1934ம் ஆண்டு மெட்ராஸ் தொகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது பெண்கள் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெண்மணியின் பெயரைக் குறிப்பிடுக.
(A) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
(B) திருமதி. மார்க்கெரட் கசின்ஸ்
(C) பேகம் ஷரிஜா ஹமித் அலி
(D) திருமதி. அன்னிபெசன்ட்
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று அல்ல?
(A) சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98 க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது
(B) சென்னை மாகாணத்தில் A. சுப்புராயன் முதல் முதலமைச்சராக ஆனார்
(C) 1919-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது
(D) 1920-ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்கடித்தது
(E) விடை தெரியவில்லை
- நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது ?
(A) முஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் போராடுதல்
(B) அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல்
(C) ஜமின்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல்
(D) பொதுப் பிரச்சனை பற்றி விவாதி
(E) விடை தெரியவில்லை
- கூற்று (A) : E.V. இராமசாமி 20-ம் நூற்றாண்டின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார்.
காரணம் (R) : அவர் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க பாடுபட்டார்.”
(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்.
(B) (A) சரி ஆனால் (R) தவறு.
(C) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.
(D) (A) மற்றும் (R) இரண்டும் சரி.
(E) விடை தெரியவில்லை.
- கீழ்க்கண்ட கூற்றுகளில் E.V. இராமசாமி பற்றிய தவறான கூற்று எது?
(A) E.V. இராமசாமி “வைக்கம் வீரர்” என அழைக்கப்படுகிறார்
(B) இவர் “குருகுல” கல்வி முறையை ஆதரித்தார்
(C) இவர் “சுயமரியாதை இயக்கத்தை” தோற்றுவித்தார்
(D) இவர் “சுயமரியாதை திருமணத்திற்கு” ஆதரவு தந்தார்
(E) விடை தெரியவில்லை
- சமுதாய காரணிகளான ஒருவர் உயிர் வாழும் வாய்ப்புள்ள கால அளவு, கல்வி அறிவு மற்றும் வருமானம் ஆகியவைகளை கொண்டு கணிக்கும் குறியீடு
(A) அத்தியாவசிய தேவை குறியீடு
(B) வாங்கும் திறன் குறியீடு
(C) மனித மேம்பாட்டு குறியீடு
(D) நல குறியீடு
(E) விடை தெரியவில்லை
- பட்டியல் – I மற்றும் II ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க :
பட்டியல் – I பட்டியல் – II
(a) தியோசோபிகல் சங்கம் 1. 1865
(b) சுத்தி இயக்கம் 2. 1897
(c) இராமகிருஷ்ண மிஷன் 3. மேடம் பிளவாட்ஸ்கி
(d) சமரச சுத்த சன்மார்க்கம் 4. தயானந்த சரஸ்வதி
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 2 1 3 4
(C) 4 2 3 1
(D) 3 4 1 2
(E) விடை தெரியவில்லை
- “சட்டமும் விதிகளும் மக்களுக்காக தான், ஆனால் மக்கள் சட்டத்திற்காகவும் விதிகளுக்காகவும் அல்ல” என்று கூறியவர்
(A) அண்ணாதுரை
(B) பெரியார் ஈ.வே. ராமசாமி
(C) ராஜாஜி
(D) காமராசர்
(E) விடை தெரியவில்லை
169.தமிழ்நாட்டில் 1923 ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
(A) சிங்காரவேலர்
(B) ஈ.வே.ரா.
(C) காமராஜர்
(D) ராஜாஜி
(E) விடை தெரியவில்லை.
- ‘இந்திய முத்திரை பலம் அமைப்பு’ – யாரால் நிறுவப்பட்டது?
(A) நிதி அமைச்சகம்
(B) வாணிபம் மற்றும் தொழில் அமைச்சகம்
(C) தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
(D) மனித வள வளர்ச்சி அமைச்சகம்
(E) விடை தெரியவில்லை
- பட்டியல் – I மற்றும் II ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
திட்டம் அமைச்சகம்
(a) சுவாஜல் திட்டம் 1. பண்பாட்டு
(b) சமக்ரா சிக்ஷா 2. மனிதவள மேம்பாடு
(c) சேவா போஜ் யோஜனா 3. தகவல் தொடர்பு
(d) சம்பூர்ண பீமா கிராம் யோஜனா 4. குடிநீர் மற்றும் சுகாதாரம்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 2 3 4 1
(C) 1 4 3 2
(D) 4 2 1 3
(E) விடை தெரியவில்லை
- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் அமைப்பு
(A) மருத்துவ கல்வி இயக்குநரகம்
(B) மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம்
(C) தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம்
(D) பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்
(E) விடை தெரியவில்லை
- ‘கொடிவேரி அணை‘ எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
(A) நொய்யல் ஆறு
(B) பவானி ஆறு
(C) காவிரி ஆறு
(D) தாமிரபரணி ஆறு
(E) விடை தெரியவில்லை.
- தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய பூங்கா (ஆனைமலை புலிகள் காப்பகம்) அமைந்துள்ள மாவட்டம்/மாவட்டங்கள்
(A) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்
(B) நீல்கிரிஸ்
(C) ஏலகிரி
(D) கொடைக்கானல்
(E) விடை தெரியவில்லை
- ஜனவரி 2020-ல் இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்களிப்பு எத்தனை சதவீதம் ஆகும்?
(A) 16.05%
(B) 17.00%
(C) 18.05%
(D) 19.00%
(E) விடை தெரியவில்லை