8. நவீன யுகத்தின் தொடக்கம்
I. சரியான விடையை எழுதுக
1. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
அ) லியானார்டோ டாவின்சி
ஆ) பெட்ரார்க்
இ) ஏராஸ்மஸ்
ஈ) தாமஸ் மூர்
விடை: ஆ) பெட்ரார்க்
2. ‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்
அ) ரஃபேல்
ஆ) மைக்கேல் ஆஞ்சலோ
இ அல்புருட் டியரர்
ஈ) லியானார்டோ டாவின்சி
விடை: அ) ரஃபேல்
3. வில்லியம் ஹார்வி _____ கண்டுபிடித்தார்.
அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம்
இ) புவியீர்ப்பு விசை
ஈ) இரத்தத்தின் சுழற்சி
விடை: ஈ) இரத்தத்தின் சுழற்சி
4. “தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஐான் கால்வின்
ஈ) தாமஸ்மூர்
விடை: அ) மார்ட்டின் லூதர்
5. ‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _____
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஜான் கால்வின்
ஈ) செர்வாண்டிஸ்
விடை: இ) ஜான் கால்வின்
6. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
அ) மாலுமி ஹென்றி
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்
இ பார்த்தலோமியோ டயஸ்
ஈ) கொலம்பஸ்
விடை: ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்
7. பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்
அ) கொலம்பஸ் ______
ஆ) அமெரிகோ வெஸ்புகி
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்
ஈ) வாஸ்கோடகாமா
விடை: இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்
8. அமெரிக்க கண்டம் ____ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
அ) அமெரிகோ வெஸ்புகி
ஆ) கொலம்பஸ்
இ) வாஸ்கோடகாமா
ஈ) ஹெர்நாண்டோ கார்டஸ்
விடை: அ) அமெரிகோ வெஸ்புகி
9. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _____ இருந்தது.
அ) மணிலா
ஆ) பம்பாய்
இ பாண்டிச்சேரி
ஈ) கோவா
விடை: ஈ) கோவா
10. கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) கரும்பு
ஆ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இ) அரிசி
ஈ) கோதுமை
விடை: ஆ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கி.பி. 1453ல் கான்ஸ்டாண்டி நோபிளை _____ கைப்பற்றினர்.
விடை: உதுமானியத் துருக்கியர்
2. ______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.
விடை: எராஸ்மஸ்
3. _____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.
விடை: மைக்கேல் ஆஞ்சலோ
4. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.
விடை: எதிர்மத சீர்திருத்தம்
5. வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் _____, _______ மற்றும் _____ ஆகும்.
விடை: வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி
III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.
1. அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்
ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.
இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.
ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.
விடை: (ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.
2. அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.
இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.
ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விடை: (அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
IV. பொருத்துக.
1. நிலபரபுத்துவம் – அ) ஏகபோக வர்த்தகம்
2. மனிதாபிமானம் – ஆ) மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை
3. நீதி விசாரணை – இ) ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம்
4. மெர்க்கண்டலிசம் – ஈ) சமூகப் பொருளாதார அமைப்பின் படிநிலை
5. கொலம்பிய பரிமாற்றம் – உ) மனித கௌரவம்
விடை:
1. நிலபரபுத்துவம் – ஈ) சமூகப் பொருளாதார அமைப்பின் படிநிலை
2. மனிதாபிமானம் – உ) மனித கௌரவம்
3. நீதி விசாரணை – ஆ) மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை
4. மெர்க்கண்டலிசம் – அ) ஏகபோக வர்த்தகம்
5. கொலம்பிய பரிமாற்றம் – இ) ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம்