Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

2. வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

அ) சுஜா – உத் – தௌலா

ஆ) சிராஜ் – உத் – தௌலா

இ) மீர்காசிம்

ஈ) திப்பு சுல்தான்

விடை: ஆ) சிராஜ் – உத் – தௌலா

 

2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

அ) 1757

ஆ) 1764

இ) 1765

ஈ) 1775

விடை: அ) 1757

 

3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

அ) அலகாபாத் உடன்படிக்கை

ஆ) கர்நாடக உடன்படிக்கை

இ) அலிநகர் உடன்படிக்கை

ஈ) பாரிசு உடன்படிக்கை

விடை: அ) அலகாபாத் உடன்படிக்கை

 

4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அ) முதல்

ஆ) இரண்டாம்

இ) மூன்றாம்

ஈ) ஏதுமில்லை

விடை: ஆ) இரண்டாம்

 

5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ___________

அ) 1756

ஆ) 1761

இ) 1763

ஈ) 1764

விடை: ஆ) 1761

 

6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.

அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்

இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

விடை: இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

 

7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்

அ) இராபர் கிளைவ்

ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்

இ) காரன்வாலிஸ்

ஈ) வெல்லெஸ்லி

விடை: இ) காரன்வாலிஸ்

 

8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் __________

அ) இரண்டாம் பாஜிராவ்

ஆ) தௌலத்ராவ் சிந்தியா

இ) ஷாம்பாஜி போன்ஸ்லே

ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

விடை: அ) இரண்டாம் பாஜிராவ்

 

9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________

அ) பாலாஜி விஸ்வநாத்

ஆ) இரண்டாம் பாஜிராவ்

இ) பாலாஜி பாஜிராவ்

ஈ) பாஜிராவ்

விடை: ஆ) இரண்டாம் பாஜிராவ்

 

10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

அ) அயோத்தி

ஆ) ஹைதராபாத்

இ) உதய்பூர்

ஈ) குவாலியர்

விடை: ஆ) ஹைதராபாத்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு

விடை: 1757 – பிப்ரவரி – 9

 

2. சிராஜ் உத் – தௌலாவின் தலைமை படைத் தளபதி ___________

விடை: மீர்ஜாபர்

 

3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் ___________

விடை: வாரிசுரிமை பிரச்சனை

 

4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக

விடை: டல்ஹௌசி பிரபு

 

5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________

விடை: ஆர்தர் வெல்லெஸ்லி

 

6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.

விடை: மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார்

 

7. 1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____________

விடை: வெல்லெஸ்லி பிரபு

 

III. பொருத்துக. 

1. அய்-லா–சப்பேல் உடன்படிக்கை – அ) முதல் ஆங்கிலேய மைசூர் போர் 

2. சால்பை உடன்படிக்கை – ஆ) முதல் கர்நாடகப் போர் 

3. பாரிசு உடன்படிக்கை – இ) மூன்றாம் கர்நாடகப் போர்

4. ஶ்ரீரங்கபட்டின உடன்படிக்கை – ஈ) முதல் மராத்தியப் போர் 

5. மதராஸ் உடன்படிக்கை – உ) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

 

விடை: 

1. அய்-லா–சப்பேல் உடன்படிக்கை – ஆ) முதல் கர்நாடகப் போர் 

2. சால்பை உடன்படிக்கை – ஈ) முதல் மராத்தியப் போர்

3. பாரிசு உடன்படிக்கை – இ) மூன்றாம் கர்நாடகப் போர்

4. ஶ்ரீரங்கபட்டின உடன்படிக்கை – உ) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

5. மதராஸ் உடன்படிக்கை – அ) முதல் ஆங்கிலேய மைசூர் போர்

 

IV. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

1. அடையாறு போர் – 1748

2. ஆம்பூர்போர் – 1754

3. வந்தவாசிப் போர் – 1760

4. ஆற்காட்டுப் போர் – 1749

விடை: 3. வந்தவாசிப் போர் – 1760

Join the conversation