Course Content
நாள் 4 – ஆங்கிலம்
0/2
புத்தக வினாக்கள் – 7-ம் வகுப்பு – பொருளியல்
0/2
SI DAY – 04 CLASS
About Lesson

3. மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க. 

1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

அ) தாதாஜி கொண்ட தேவ்

ஆ) கவிகலாஷ்

இ) ஜீஜாபாய்

ஈ) ராம்தாஸ்

விடை: அ) தாதாஜி கொண்ட தேவ்

 

 

2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

அ) தேஷ்முக்

ஆ) பேஷ்வா

இ) பண்டிட்ராவ்

ஈ) பட்டீல்

விடை: ஆ) பேஷ்வா

 

 

3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

அ) ஷாகு

ஆ) அனாஜி தத்தா

இ) தாதாஜி கொண்ட தேவ்

ஈ) கவிகலாஷ்

விடை: ஈ) கவிகலாஷ்

4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.

அ) பீரங்கிப்படை

ஆ) குதிரைப்படை

இ) காலட்படை

ஈ) யானைப்படை

விடை: இ) காலட்படை

 

 

5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

அ) பாலாஜி விஸ்வநாத்

ஆ) பாஜிராவ்

இ) பாலாஜி பாஜிராவ்

ஈ) ஷாகு

விடை: ஆ) பாஜிராவ்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மகாராஷ்டிராவில் பரவிய ………………………….. இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.

விடை: பக்தி

2. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்………………….

விடை: காமவிஸ்தார்

3. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு …………………… இடத்தில் சோகமாய் முடிந்தது.

விடை: பானிபட்

4. அஷ்டபிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ………………..

விடை: சுமந்த் /துபிர்

5. சிவாஜியைத் தொடர்ந்து ……………………. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.

விடை: அனாஜி தத்தோ

 

III. பொருத்துக. 

1. ஷாஜி போன்ஸ்லே – சிவாஜியின் தாய்

2. சாம்பாஜி – பீஜப்பூர் தளபதி

3. ஷாகு – சிவாஜியின் தந்தை

4. ஜீஜாபாய் – சிவாஜியின் மகன்

5. அப்சல்கான் – சிவாஜியின் பேரன்

 

விடை:

1. ஷாஜி போன்ஸ்லே – சிவாஜியின் தந்தை

2. சாம்பாஜி – சிவாஜியின் மகன்

3. ஷாகு – சிவாஜியின் பேரன்

4. ஜீஜாபாய் – சிவாஜியின் தாய்

5. அப்சல்கான் – பீஜப்பூர் தளபதி

 

 

 

 

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

1. கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.

காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அ) கூற்றிற்கான காரணம் சரி

ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

விடை: ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

 

 

2. வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.

வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அ) சரி

ஆ) II சரி

இ) I மற்றும் II சரி

ஈ) I மற்றும் II தவறு

விடை: அ) சரி

 

 

 

 

 

 

3. பொருந்தாததைக் கண்டுபிடிக்க: 

ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு

விடை: ரகுஜி, போன்ஸ்லே

 

4. தவறான இணையைக் கண்டுபிடிக்க.

1. கெய்க்வாட் – பரோடா

2. பேஷ்வா – நாக்பூர்

3. ஹோல்கா – இந்தூர்

4. சிந்தியா – குவாலியர்

விடை: பேஷ்வா – நாக்பூர்

 

 

5. காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.

I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.

II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.

III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.

IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.

விடை:

1649 – சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.

1656 – சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.

1713 – பாலாஜி விஸ்வநாத் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்

1749 – பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்

 

Join the conversation