GK TEST 5
- இலையில் காணப்படும் பச்சையம் எதற்குத் தேவைப்படுகின்றது.
(A) ஒளிச்சேர்க்கை
(B) சார்பசைவு
(C) நீராவிப்போக்கு
(D) திசை சாரா தூண்டல் அசைவு
(E) விடை தெரியவில்லை
- கூற்று (A) : ஹீமோகுளோபினில் இரும்புச் சத்து உள்ளது.
காரணம் (R] : இரும்புச்சத்து குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
(A) (A) மற்றும் (R] இரண்டும் சரி; [R] என்பது [A]-விற்கு சரியான விளக்கம் ஆகும்
(B) [A] மற்றும் (R] இரண்டும் சரி; ஆனால் (R] என்பது (A)-விற்கு சரியான
விளக்கம் அல்ல
(C) [A] சரி ; ஆனால் (R] தவறு
(D) [கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
- உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிக்கும். இதனை எவ்வாறு என்பார்கள்.
(A) நீரிழிவு
(B) பாலியூரியா
(C) உடல் பருமன்
(D) பாலிடிப்சியா
(E) விடை தெரியவில்லை
- வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு தாவரங்களுக்குள் சென்று நிலைப்படுத்தப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?.
(A) ஒளிச்சேர்க்கை
(B) நீராவியாதல்
(C) சுவாசித்தல்
(D) சிதைத்தல்
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றுள் சரியான ஒப்பிடுதலை தேர்ந்தெடுக்கவும் :
(a) அமில ஊடகத்தில் பினாப்தலீன் நிறமற்றது
(b) கார ஊடகத்தில் பினாப்தலீன் மஞ்சள்
(c) அமில ஊடகத்தில் மெத்தில் ஆரஞ்சு இளஞ்சிவப்பு/சிவப்பு
(d) கார ஊடகத்தில் மெத்தில் ஆரஞ்சு நிறமற்றது
(A) (a) மற்றும் (c) சரியானவை
(B) (a) மற்றும் (b) சரியானவை
(C) (b) மற்றும் (c) சரியானவை
(D) (c) மற்றும் (d) சரியானவை
(E) விடை தெரியவில்லை
- டீசல் எஞ்சினில் உள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதக் கால அளவை அளப்பதற்கு உதவும் அளவு
(A) சீட்டேன் எண்
(B) ஆக்டேன் எண்
(C) கலோரி மதிப்பு
(D) தன் ஆற்றல்
(E) விடை தெரியவில்லை
- மத்தியில் உள்ள தனிமத்தின் அணு நிறையானது ஏறக்குறைய மற்ற இரு தனிமங்களின் அணுநிறையின் சராசரிக்குச் சமமாகும்.
(A) நவீன ஆவர்த்தன விதி
(B) நியூலாந்தின் எண்ம விதி
(C) டாபர்னீரின் மும்மை விதி
(D) மெண்ட்லீவின் ஆவர்த்தன விதி
(E) விடை தெரியவில்லை
- இயற்பியல் அளவுகளை அதன் SI அலகுகளுடன் சரியாகப் பொருத்துக:
(a) அழுத்தம் – 1. Nm−1
(b) பரப்பு – 2. Nm-2
(C) பரப்பு இழுவிசை – 3. N
(d) விசை – 4. m2
(A) 1 3 4 2
(B) 3 1 4 2
(C) 2 4 1 3
(D) 4 2 3 1
(E) விடை தெரியவில்லை
- விண்மீன்களின் குழுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) சூரிய மண்டலம்
(B) நட்சத்திரக் கூட்டங்கள்
(C) கோள்கள்
(D) இவை அனைத்தும்
(E) விடை தெரியவில்லை
- உயரமான இடங்களில், பொருளின் கொதிநிலை
(A) குறையும்
(B) அதிகரிக்கும்
(C) குறைந்து, பின் அதிகரிக்கும்
(D) அதிகரித்து, பின் குறையும்
(E) விடை தெரியவில்லை
- இமயமலை.பற்றிக் கூறப்படும் பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
(i) பெரிய இமயமலை இமாத்ரி என்று அழைக்கப்படும்
(ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும் போது இப்பகுதி அதிக மழையைப் பெறுகின்றது.
(iii) புகழ் பெற்ற கோடை வாழிடங்கள் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளன.
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
- உலகின் மிக நீளமான அணை எது?
(A) நாகார்ஜூன சாகர் அணை
(B) ஹிராகுட் அணை
(C) பக்ரா-நங்கல் அணை
(D) தாமோதர் பள்ளத்தாக்கு அணை
(E) விடை தெரியவில்லை
- ஓதக்காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) பருவகாலக் காடுகள்
(B) அல்பைன் காடுகள்
(C) அலையாத்திக் காடுகள்
(D) மழைக் காடுகள்
(E) விடை தெரியவில்லை
- கிழக்கு மத்திய இரயில்வேயின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
(A) ஜபல்பூர்
(B) ஹாசிப்பூர்
(C) ஜெய்ப்பூர்
(D) பிலாஸ்பூர்
(E) விடை தெரியவில்லை
- உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11ஆம் நாள் என்பது எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
(A) 1986
(B) 1987
(C) 1988
(D) 1989
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எத்துறை பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் செயல்படுகின்ற மாவட்ட அமைப்பு அல்ல?
(A) அஞ்சல் துறை
(B) வருவாய்த் துறை
(C) குடிமைப்பணி நிர்வாகம்
(D) உள்ளூர் காவல்துறை
(E) விடை தெரியவில்லை
- இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழி வகை செய்யும் அரசியல் அமைப்புப் பிரிவு எது?
(A) அரசியல் அமைப்புப் பிரிவு 280
(B) அரசியல் அமைப்புப் பிரிவு 302
(C) அரசியல் அமைப்புப் பிரிவு 316
(D) அரசியல் அமைப்புப் பிரிவு 324
(E) விடை தெரியவில்லை
- குடியுரிமைப் பற்றி தொடர்புள்ள சட்டப்பிரிவுகளாவன
(A) சட்டப்பிரிவு 5 – 11
(B) சட்டப்பிரிவு 14 – 18
(C) சட்டப்பிரிவு 19 – 22
(D) சட்டப்பிரிவு 25 – 28
(E) விடை தெரியவில்லை
- சரியான விடையைத் தேர்வு செய்க.
தொடக்கக்கல்வி கற்றலை அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ள
சட்டப்பிரிவு எது?
(A) சட்டப்பிரிவு 51 A
(B) சட்டப்பிரிவு 21
(C) சட்டப்பிரிவு 29
(D) சட்டப்பிரிவு 21 A
(E) விடை தெரியவில்லை
- சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘போக்சோ’ – சட்டம் என்பது ?
(A) குழந்தைகள் மீதான பொருளாதாரச் சுரண்டல்
(B) குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல்
(C) குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்
(D) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்
(E) விடை தெரியவில்லை
- தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
(A) மாநிலங்களவை 18 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள்
(B) மாநிலங்களவை 28 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள்
(C) மாநிலங்களவை 81 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள்
(D) மாநிலங்களவை 80 உறுப்பினர்கள் மற்றும் மக்களவை 39 உறுப்பினர்கள்
(E) விடை தெரியவில்லை
- இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
(A) குடியரசுத் தலைவர்
(B) பிரதம அமைச்சர்
(C) மாநில அரசாங்கம்
(D) நாடாளுமன்றம்
(E) விடை தெரியவில்லை
- மத்திய அரசு இந்து வாரிசுரிமை சட்டம் எந்த் ஆண்டு திருத்தங்களை மேற்கொண்டது?
(A) 2002
(B) 2003
(C) 2004
(D) 2005
(E) விடை தெரியவில்லை
- அழுத்தக் குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு
(A) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(B) இந்தியா
(C) இங்கிலாந்து
(D) கனடா
(E) விடை தெரியவில்லை
- லோக்ஆயுக்தா அமைப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
(A) 1970
(B) 1971
(C) 1972
(D) 1973
(E) விடை தெரியவில்லை
- ‘ரிவோல்ட்‘ என்னும் ஆங்கிலப் பத்திரிக்கையை ஈ.வே.ரா. பெரியார் தொடங்கிய ஆண்டு எது?
(A) 1925
(B) 1928
(C) 1933
(D) 1934
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலேயர் அச்சுறுத்தல் காரணமாக பாரதி எந்த பகுதிக்கு இடம் பெயர்ந்தார்?
(A) மாஹே
(B) பாண்டிச்சேரி
(C) பம்பாய்
(D) காசி
(E) விடை தெரியவில்லை
- இந்திய தேசிய இராணுவத்தின் மீது விசாரணை நடைபெற்ற இடம்?
(A) ஆக்ரா கோட்டை
(B) செங்கோட்டை
(C) வில்லியம் கோட்டை
(D) புனித ஜார்ஜ் கோட்டை
(E) விடை தெரியவில்லை
- “அமர் சோனார் பங்களா” என்ற வங்காள தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
(A) சையது அபு முகம்மது
(B) இரஜினி கந்தா சென்
(C) இரவீந்திரநாத் தாகூர்
(D) முகுந்தா தாஷ்
(E) விடை தெரியவில்லை
- காமராசரின் அரசியல் குரு யார்?
(A) இராஜாஜி
(B) சத்தியமூர்த்தி
(C) நேரு
(D) காந்தி
(E) விடை தெரியவில்லை
- மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?
(A) M.G. ராணடே
(B) W.C. பானர்ஜி
(C) பாலகங்காதர திலகர்
(D) கோபால கிருஷ்ண கோகலே
(E) விடை தெரியவில்லை
- 1933-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?•
(A) கோவில் நுழைவு நாள்
(B) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
(C) நேரடி நடவடிக்கை நாள்
(D) சுதந்திரப் பெருநாள்
(E) விடை தெரியவில்லை
- சிவசுப்பிரமணியனார் 1799 செப்டம்பர் 13 ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட இடம்
(A) கயத்தாறு
(B) நாகலாபுரம்
(C) விருப்பாட்சி
(D) பாஞ்சாலங்குறிச்சி
(E) விடை தெரியவில்லை
- இந்திய தேசிய காங்கிரசால் பூரண சுதந்திர நாளாகக் கொண்டாடிய நாள்
(A) ஜனவரி 26, 1930
(B) ஜனவரி 29, 1929
(C) ஆகஸ்ட் 16, 1930
(D) ஆகஸ்ட் 18, 1930
(E) விடை தெரியவில்லை
- எந்த வங்கி கடன் வழங்குவதில் கடைசி புகலிடம் என்று அழைக்கப்படுகிறது?
(A) வணிக வங்கி
(B) இந்தியன் வங்கி
(C) ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
(D) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
(E) விடை தெரியவில்லை
- 2021ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆர்காம்–ரீட்’ என்ற சாதனம் கீழ்வரும் எந்த வகையான குறைபாடுள்ள மனிதர்களுக்கு பயன்படுகிறது?
(A) பார்வை
(B) கேட்டல்
(C) உண்ணுதல்
(D) இயக்கம்
(E) விடை தெரியவில்லை
- BRICs என்ற அமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன?
(A) 5
(B) 4
(C) 3
(D) 2
(E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் அன்னை தெரசா நினைவுத் திருமண உதவித் திட்டம் எதனை அடிப்படையாகக் கொண்டது?
(A) ஏழை விதவைகள்
(B) சிறுபான்மையோர்
(C) ஒற்றை தாய்மார்கள்
(D) அனாதைப் பெண்களின் திருமணம்
(E) விடை தெரியவில்லை
- ‘Playing it my way’ என்ற புத்தகத்தை எழுதிய விளையாட்டு வீரர் யார்?
(A) கபில் தேவ்
(B) யுவராஜ் சிங்
(C) சச்சின் டெண்டுல்கர்
(D) சானியா நேவால்
(E) விடை தெரியவில்லை
- பின்வருபவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
ரயில் மண்டலம் தலைமையகம்
மத்திய வடக்கு – அலகாபாத்
மேற்கு – மங்களூர்
மத்திய – ஜான்சி
மத்திய கிழக்கு – ஹாஜிபூர்
(A) 1 மற்றும் 2
(B) 2 மற்றும் 3
(C) 1 மற்றும் 4
(D) 3 மற்றும் 4
(E) விடை தெரியவில்லை
- தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
(A) 1948 டிசம்பர், 9
(B) 1948 டிசம்பர், 10
(C) 1949 டிசம்பர், 9
(D) 1949 டிசம்பர், 10
(E) விடை தெரியவில்லை
- கே. காமராஜருக்கு பின் மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றவர் யார்?
(A) சி.என். அண்ணாதுரை
(B) எம். பக்தவத்சலம்
(C) மு. கருணாநிதி
(D) பி.எஸ். குமாரசாமி ராஜா
(E) விடை தெரியவில்லை
- ECR (கிழக்கு கடற்கரைச் சாலை) என்ற பெயரை “முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை” என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த நாள்
(A) பிப்ரவரி 02, 2022
(B) மார்ச் 02, 2022
(C) ஏப்ரல் 02, 2022
(D) மே 02, 2022
(E) விடை தெரியவில்லை
- “சமயச்சார்பின்மை” என்னும் சொல் எந்த மொழியில் இருந்து வந்தது?
(A) கிரேக்கம்
(B) இலத்தீன்
(C) உருது
(D) ஆங்கிலம்
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றுள் எது இந்தியாவில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க பெரிதும் உதவுகின்றன?
(A) நடனம் மற்றும் இசை
(B) இலக்கியம் மற்றும் இலக்கணம்
(C) உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்
(D) கலை மற்றும் கட்டிடக்கலை
(E) விடை தெரியவில்லை
- பல்லவர்கள் காலத்தில் அயல்நாட்டு வணிகர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?
(A) பட்டணசாமி
(B) நானாதேசி
(C) விதேசி
(D) தேசி
(E) விடை தெரியவில்லை
- இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?
(A) புது தில்லி
(B) மும்பை
(C) சென்னை
(D) கொல்கத்தா
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும் :
(A) ஹோல்கர் – புனே
(B) பான்ஸ்லே – நாக்பூர்
(C) சிந்தியா – பரோடா
(D) பேஷ்வா – இந்தூர்
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை தவறாகப் பொருந்தியுள்ளது :
(A) ஜாகிருதின் பாபர் – உலகைக் கைப்பற்றியவர்
(B) ஷாஜகான் – உலகத்தின் அரசர்
(C) ஷாஜி பான்ஸ்லே – சிவாஜியின் தந்தை
(D) அக்பரின் பாதுகாவலர் – பைராம் கான்
(E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றுள் எது முகலாயக் கட்டிடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்?
(A) கோல் கும்பாஸ்
(B) ஷாலிமர் தோட்டங்கள்
(C) ஹீமாயூனின் கல்லறை
(D) தாஜ்மஹால்
(E) விடை தெரியவில்லை
- ‘பெண் ஏன் அடிமையானாள்‘ என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) சிங்காரவேலர்
(B) முத்துலட்சுமி அம்மையார்
(C) பெரியார்
(D) நீலாம்பிகை அம்மையார்
(E) விடை தெரியவில்லை
- 1709-இல் தரங்கம்பாடியில் யார் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்?
(A) கால்டுவெல்
(B) F.W. எல்லிஸ்
(C) சீகன்பால்கு
(D) மீனாட்சி சுந்தரம்
(E) விடை தெரியவில்லை
- தவறான ஒன்றை தெரிவு செய்க :
இரட்டை மலை சீனிவாசன்
1893-இல் ஆதி திராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார்.
இலண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்.
அவ்வப்போது ‘சித்திர புத்திரன்‘ எனும் புனைப் பெயரில் கட்டுரைகளும் எழுதினார்.
1932-இல் செய்து கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் இவரும் ஒருவர்
(A) 1, 2 மற்றும் 3
(B) 2 மற்றும் 4
(C) 3 மட்டும்
(D) 4 மட்டும்
(E) விடை தெரியவில்லை
- வேலு நாச்சியாரின் தந்தையின் பெயர்
(A) முத்து குமார ரகுநாத சேதுபதி
(B) செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி
(C) பெரிய உடையார் சேதுபதி
(D) சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி
(E) விடை தெரியவில்லை
- ‘சிவகங்கையின் சிங்கம்‘ என அழைக்கப்படுபவர்
(A) பெரிய மருது
(B) சின்ன மருது
(C) வேலு நாச்சியார்
(D) கட்டபொம்மன்
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்காணும் கூற்றுகளில் கீழடியைப் பற்றிய சரியான கூற்றுகள் எவை?
(i) செங்கற் கட்டுமானங்கள்
(ii) தமிழ்-பிராமி எழுத்துகள் கொண்ட மட்கல ஓடுகள்
(iii) கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி
(iv) பதிற்றுப்பத்தில் கீழடியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
(A) (i), (ii) மற்றும் (iv) சரி
(B) (i), (ii), (iii) மற்றும் (iv) அனைத்தும் சரி
(C) (i), (ii) மற்றும் (iii) சரி
(D) (ii) மற்றும் (iv) சரி
(E) விடை தெரியவில்லை
- சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை யாது?
(A) கரோஷ்தி
(B) தேவநாகிரி
(C) தமிழ்-பிராமி
(D) கிரந்தம்
(E) விடை தெரியவில்லை
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் – இக்குறள் வழிப் பெறப்படும் கருத்து யாது?
(A) சாதி ஒழிப்பு
(B) மத ஒழிப்பு
(C) வர்க்க ஒழிப்பு
(D) வருண ஒழிப்பு
(E) விடை தெரியவில்லை
- மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி – என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
(A) முதுமையில் காத்தல்
(B) நற்சொல் கூறல்
(C) பொருள் கொடுத்து உதவுதல்
(D) புகழும் படி வாழ்தல்
(E) விடை தெரியவில்லை
- அருளை விரும்பி நடப்பவர், பிறர் பொருளை விரும்ப நேரிட்டால் அவர் என்ன ஆவார் என வள்ளுவர் வினவுகிறார்?
(A) நன்கு வாழ்வார்
(B) செழிப்புடன் வாழ்வார்
(C) கெட்டொழிவார்
(D) சுற்றமுடன் வாழ்வார்
(E) விடை தெரியவில்லை
- தானமும் தவமும் செய்பவர்களைவிட உயர்ந்தவர்கள் யார் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
(A) புறங்கூறாதவர்
(B) உண்மை பேசுபவர்
(C) கல்வி கேள்விகளில் சிறந்தவர்
(D) இனிதாகப் பேசுபவர்
(E) விடை தெரியவில்லை
- எப்படிப்பட்ட பொருள் ஒருவருக்கு இன்பத்தைத் தரும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?
(A) கொடையால் வந்த பொருள்
(B) உரிமையால் வந்த பொருள்
(C) தீதின்றி வந்த பொருள்
(D) போரால் வந்த பொருள்
(E) விடை தெரியவில்லை
- நிலையற்றவைகளை நிலையானவை என்று கருதுகிறவர்களை வள்ளுவர் எப்படிப் பார்க்கிறார்?
(A) பெருமையாக
(B) இழிவாக
(C) நம்பிக்கையாக
(D) வியப்பாக
(E) விடை தெரியவில்லை
- சரியாகப் பொருந்தியுள்ளதைக் காண்க.
A) முதல் வாகனத் தொழிற்சாலை – செராம்பூர்
B) தேசியச் செய்தித்தாள் மற்றும்
காகித ஆலை – கொல்கத்தா
C) மத்திய பட்டு வாரியம் – நேபா நகர்
D) முதல் காகிதத் தொழிற்சாலை – பெங்களூரு
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 4 3 2 1
(C) 1 2 3 4
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
- பசுமைப் புரட்சியின் பலவீனங்கள் என்பதைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
(i) விதைகள் மற்றும் உரங்களுக்குப் பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.
(ii) முதன்மைப் பயிர்களான கோதுமை மற்றும் நெல் உற்பத்தி பன்மடங்காகப் பெருகியது
(iii) அதிக உரங்களின் பயன்பாடு நிலத்தின் செழுமைத் தன்மையைப் பாதித்தது
(A) (i) மற்றும் (ii) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
- 1940 இல் பம்பாய் திட்டத்தை வழங்கியவர்கள்
(A) எட்டு முன்னணி அரசியல்வாதிகள்
(B) எட்டு முன்னணி பொருளியல் அறிஞர்கள்
(C) எட்டு முன்னணி தத்துவவாதிகள்
(D) எட்டு முன்னணி தொழில் அதிபர்கள்
(E) விடை தெரியவில்லை
191.தனிநபர் வருமானம் கணக்கிடப்படுவது
(A) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையை வகுத்தல்
(B) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையைக் கழித்தல்
(C) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகையைக் கூட்டுதல்
(D) தேசிய வருமானத்திலிருந்து மக்கள் தொகைப் பெருக்குதல்
(E) விடை தெரியவில்லை
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம்
(A) வறுமை ஒழிப்பு
(B) விரைவான தொழில் வளர்ச்சி
(C) வேலைவாய்ப்பு
(D) சமூக நீதி
(E) விடை தெரியவில்லை
193.கீழ்க்காண்பவற்றுள் எது/எவை ‘சமூக நீதி‘யை வரையறுக்கும் பொழுது சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
சம உரிமை
சம வாய்ப்பு
சமமாக நடத்துதல்
செல்வத்தினை அனைவருக்கும் சமமாக பகிர்தல்
(A) 1 மட்டும்
(B) 1 மற்றும் 2 மட்டும்
(C) 1,2 மற்றும் 3 மட்டும்
(D) 1,2 மற்றும் 4 மட்டும்
(E) விடை தெரியவில்லை.
- தமிழக அரசு முதல் மனித வளர்ச்சி அறிக்கை வெளியிட்ட ஆண்டு
(A) 2000
(B) 2003
(C) 2006
(D) 2004
(E) விடை தெரியவில்லை
- இதில் சரியானவை எவை?
NHRC – தேசிய மனித உரிமைகள் ஆணையம்
SHRC – சட்டப்படியான மனித உரிமைகள் ஆணையம்
NCW – தேசியப் பெண்கள் மன்றம்
RTI – தகவல் அறியும் உரிமைச் சட்டம்
(A) 1 மற்றும் 2 சரியானவை
(B) 1 மற்றும் 4 சரியானவை
(C) 2 மற்றும் 3 சரியானவை
(D) 2 மற்றும் 4 சரியானவை
(E) விடை தெரியவில்லை
- இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு எது?
(A) பிரிவு 280
(B) பிரிவு 315
(C) பிரிவு 324
(D) பிரிவு 365
(E) விடை தெரியவில்லை
- இந்தியாவில் தோல் பொருட்களை அதிகளவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் மாவட்டம் எது?
(A) சேலம்
(B) வேலூர்
(C) திண்டுக்கல்
(D) மதுரை
(E) விடை தெரியவில்லை
- தமிழ் நாடு சுகாதாரச் சீரமைப்பு திட்டத்திற்கு நிதி உதவி எதன் மூலம் கிடைக்கின்றது?
(A) உலக வங்கி
(B) உலக சுகாதார நிறுவனம்
(C) யுனெஸ்கோ
(D) தேசிய சுகாதார மிஷன்
(E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம்
(A) 79.9%
(B) 80.9%
(C) 81.9%
(D) 82.9%
(E)விடை தெரியவில்லை
- பெருந்தொற்று நோயினால் முடக்கப்பட்ட காரணத்தால் உருவான கற்றல் குறைபாட்டை சரி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டம்
(A) மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வகுப்பறை திட்டம்
(B) கணினி ஆய்வகத் திட்டம்
(C) இல்லம் தேடிக் கல்வி திட்டம்
(D) இல்லம் தேடி மருத்துவம் திட்டம்
(E) விடை தெரியவில்லை