1. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……..
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
விடை: இ) 3214கி.மீ
2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
விடை: இ) கோசி
3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
விடை: ஆ) தீபகற்பம்
4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
விடை: இ) இலங்கை
5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
விடை: ஆ) ஆனை முடி
6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
விடை:இ) பாங்கர்
7. பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
விடை: ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
II. பொருத்துக.
1. சாங்போ – கங்கை ஆற்றின் துணை ஆறு
2. யமுனை – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
3. புதிய வண்டல் படிவுகள் – பிரம்ம புத்திரா
4. காட்வின் ஆஸ்டின் ( K2 ) – தென்கிழக்கு கடற்கரை சமவெளி
5. சோழ மண்டல கடற்கரை – காதர்
விடை:
1. சாங்போ – பிரம்ம புத்திரா
2. யமுனை – கங்கை ஆற்றின் துணை ஆறு
3. புதிய வண்டல் படிவுகள் – காதர்
4. காட்வின் ஆஸ்டின் ( K2 ) – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
5. சோழ மண்டல கடற்கரை – தென்கிழக்கு கடற்கரை சமவெளி