1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி
விடை: அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) கொரியா
ஈ) மங்கோலியா
விடை: ஆ) ஜப்பான்
3.“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
ஈ) மா சே தூங்
விடை: அ) லெனின்
4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிபோர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை
விடை: ஆ) பதுங்குக் குழிபோர்முறை
5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை: அ) பிரிட்டன்
6. பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்
விடை: ஆ) ரஷ்யா
II.கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
விடை: 1894
2. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
விடை: லண்டன்
3. ……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
விடை: 1902
4. பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
விடை: மாசிடோனியா
5. டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.
விடை: ரஷ்யா
6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.
விடை: கிளமென்சோ
7. …………………ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
விடை: 1925
III.சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி
விடை: ஈ) i), ii), iv) ஆகியன சரி
2. கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருட்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம் : இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்தன.
அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.
விடை: ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
3. கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
கராணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை: அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
IV. பொருத்துக.
|
1. |
பிரெஸ்ட் லிடோவக்ஸ் உடன்படிக்கை |
வெர்செய்ல்ஸ் |
|
2. |
ஜிங்கோயிசம் |
துருக்கி |
|
3. |
கமால் பட்ஷா |
ரஷ்யாவும் ஜெர்மனியும் |
|
4. |
எம்டன் |
இங்கிலாந்து |
|
5. |
கண்ணாடி மாளிகை |
சென்னை |
விடை: