1. சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1943ல் அமைத்த இந்திய தேசியத் தலைவர்
A) சுரேந்திரநாத் பானர்ஜி
B) எம். என். ராய்
C) சுபாஷ் சந்திரபோஸ்
D) ஜவஹர்லால் நேரு
2. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப்பட்டுள்ளது?
A) தண்டி யாத்திரை – 1930
B) நேரடிப் போராட்டம் – 1927
C) சைமன் குழு – 1930
D) பூரண சுயராஜ்யம் – 1946
3. ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்
A) கொல்கத்தா
B) மும்பாய்
C) சென்னை
D) டெல்லி
4. மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு
A) 1956
B) 1958
C) 1966
D) 1976
5. பின்வருவனவற்றை ஆய்க.
துணிபுரை (A) : முதல் உலகப்போரைத் தொடர்ந்து பிரிட்டிஷார் பின் பற்றிய கொள்கைகளும் நடவடிக்கைகளும் இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்தன
காரணம் (R) : போர்க்காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அறிவித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை இவற்றில்
A) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமாகும்
B) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
6. அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது.
A) 1940
B) 1920
C) 1947
D) 1958
7. பின்வருவனவற்றை ஆய்க.
துணிபுரை (A) : இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சனையை வளர்ப்பதும் குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிப்பதும் பிரிட்டிஷாரின் நோக்கமாய் இருந்தது
காரணம் (R) : தாங்கள் இந்தியாவில் இருப்பதற்கு இதனை ஒரு காரணமாகவும், தங்களை நடுவுநிலைமை தவறாத சமரசம் செய்து வைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ளவும் பிரிட்டிஷார் விரும்பினர் குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
A) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமாகும்
B) (A) யும் (R) ம் சரி, (R), (A) க்கு சரியான காரணமல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
8. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்
A) சர் சையது அகமதுகான்
B) முகமது அலி ஜின்னா
C) முகமது இக்பால்
D) ஆசாத்
9. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) ராஜாராம் மோகன்ராய் – 1. ஆரிய சமாஜம்
b) சுவாமி விவேகானந்தர் – 2. ராமகிருஷ்ணபரமஹம்சர்
c) தயானந்த சரஸ்வதி – 3. பிரம்ம சமாஜம்
d) பிளவட்ஸ்கி அம்மையார் – 4. தியாசாஃபிகல் சொசைட்டி குறியீடுகள்
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 3 2 1 4
D) 4 1 2 3
10. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை?
A) வேதகாலத்திற்கு திரும்புங்கள் – தயானந்த சரஸ்வதி
B) தீண்டாமை என்பது ஒரு குற்றமாகும் – காந்திஜி
C) டெல்லியை நோக்கி நடைபோடுங்கள் – பகத்சிங்
D) பல்லாண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தோம்- ஜவஹர்லால் நேரு
11. எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேறியது?
A) லாகூர்
B) சூரத்
C) மும்பாய்
D) கல்கத்தா
12. கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். நரசிம்மவர்மன் 1.கி.பி. 630ல் அரியணையேறினார்
2. சாளுக்கிய அரசரான முதலாம் புலிகேசியைத் தோற்கடித்தார்
3. மாமல்லபுரத்தில் கடற்கோயில்களைக் கட்டினார்.
4. அவர் ஆட்சியின் போது சீன யாத்ரீகர் காஞ்சிக்கு வருகை புரிந்தார்
மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் :
A) 1, 2 மற்றும் 4 சரியானவை
B) 2, 3 மற்றும் 4 சரியானவை
C) 1, 3 மற்றும் 4 சரியானவை
D) எல்லாம் சரியானவை
13. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?
A) ஆரியர்கள் – ரிக் வேதம்
B) சிந்துவெளி – தாய்க்கடவுள்
C) சமணர்கள் – தீர்த்தங்கரர்
D) லிச்சாவிகள் – பாடலிபுத்திரம்
E) காரவேலர் – ஹதிகும்பா கல்வெட்டுகள்
14. எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?
A) கான் அப்துல் கஃபார்கான்
B) வாலிகான்
C) வினோபா பாவே
D) அயூப்கான்
15. தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது
A) தாய்லாந்து
B) லாவோஸ்
C) மியான்மர்
D) இலங்கை
16. சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு
A) அகமது நகர்
B) பிஜப்பூர்
C) கோல்கொண்டா
D) சதாரா
17. அமைச்சரவை தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள்
1) சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் திரு.ஏ. வி. அலெக்சாந்தர்
II) லார்டுவேவல், திரு. ஏ. வி. அலெக்சாந்தர் மற்றும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ்
III) லார்டு வேவல், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் திரு. ஏ. வி. அலெக்சாந்தர்
iV) சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு வேவல் மற்றும் லார்டு பெத்திக் லாரன்ஸ்
A) 1 மற்றும் IV சரியானவை
B) III மற்றும் IV சரியானவை
C) 1 மட்டும் சரியானது
D) எதுவும் சரியல்லை
18. ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமான பிரிட்டிஷ் தளபதி
A) ஆஷ் B) மக்லியோட் C) டையர் D) பிளாக்
19. “டில்லி சலோ” என்ற கோஷத்தை முழங்கியவர்
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) வ. உ. சிதம்பரம்
C) அரவிந்த கோஷ்
D) வாஞ்சி அய்யர்
20. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) பகத்சிங் – கதர்கட்சி
B) ஏ. ஓ. ஹியூம் – மத்திய பாராளுமன்ற மண்டபத்தில் வெடிகுண்டு
C) லாலா ஹர்தயாள் – இந்திய தேசிய காங்கிரஸ்
D) வாஞ்சி ஐய்யர் – ஆஷ்துரை
21. கீழ்க்காண்பவர்களில் இந்திய தேசீயக் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பேற்றவர் யார்?
A) திருமதி சரோஜினி நாயுடு
B) டாக்டர் அன்னி பெசன்ட்
C) திருமதி ஜெ. எம். சென்குப்தா
D) இவர்கள் அனைவரும்
22. கீழ்க்கண்டவர்களில் தீவிரவாதிகளின் பட்டியலில் இல்லாதவர்
A) திலகர்
B) பிபின் சந்திரபால்
C) அரவிந்த கோஷ்
D) டபிள்யூ. சி. பானர்ஜி
23. பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர்
A) ரஹ்மத் அலி
B) ஜின்னா
C) சர் ஜப்பருல்லாகான்
D) சர் முகமது இக்பால்
24. பனாரசில் மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர்
A) லாலா லஜபதிராய்
B) மதன் மோகன் மாளவியா
C) டாக்டர் அன்னி பெசன்ட்
D) கோவிந்த வல்லப பந்த்
25. இந்தியாவில் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
A) டல்ஹௌசி
B) லார்ட் மௌண்ட் பேட்டன்
C) கேனிங்
D) சி. ராஜகோபாலாச்சாரி
26. சோழர்களுடைய கிராம ஆட்சியைப் பற்றி அறிய உதவும் முக்கிய ஆதாரம்
A) அலகாபாத் தூண் கல்வெட்டு
B) ஹதிகும்பா கல்வெட்டு
C) அய்ஹோல் கல்வெட்டு
D) உத்திரமேரூர் கல்வெட்டு
27. சோழர்களின் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி
A) பாகா
B) உப்பாயம்
C) வாலியயாம்
D) ஹிரண்யா
28. ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்
A) லக்னோ
B) பாட்னா
C) அமிர்தசரஸ்
D) லாகூர்
29. ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?
A) குரு ராம்தாஸ்
B) குரு ஹர்கிஷன் தாஸ்
C) குரு அமர்தாஸ்
D) குரு அர்ஜுன் தேவ்
30. அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
A) டல்ஹௌசி
B) கானிங்
C) ரிப்பன்
D) லிட்டன்
31. புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?
A) சம்ப்ரான்
B) சபர்மதி ஆசிரமம்
C) சௌரி சௌரா
D) தண்டி
32. பின்வருவனவற்றில் எது ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
A) காளிதாசர் – காவியதர்சா
B) தண்டின் – சாகுந்தலம்
C) சுபந்து – வாசவதத்தா
D) மனு – விக்கிரம ஊர்வசி
33. கூற்று (A) : ஷெர்ஷாவின் பெருமை அவருடைய நிர்வாக சீர்த்திருத்தங்களில் உள்ளது
காரணம் (R) : ஷெர்ஷா, அக்பரின் நிர்வாகnசீர்த்திருங்களின் முன்னோடியாக உள்ளார் – இக்கூற்றுகளைக் கொண்டு சரியான விடையளி.
A) (A) மற்றும் (R) ஆகியவை உண்மை (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) ஆகியவை உண்மை, ஆனால் (R) என்பது (A) வுக்கு உரிய விளக்கமல்ல
C) ஆனால் (R) என்பது தவறு
D) ஆனால் (R) என்பது சரி
34. காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது
A) ஆங்கில வர்த்தக நிறுவனத்தின் எல்லையினை விரிவுபடுத்தினார்
B) நீதித் துறையில் மாற்றம் செய்தார்
C) நிரந்தர வருமான முறையை முடிவு செய்தார்
D) இரட்டை ஆட்சியை ஒழித்தார்
35. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) திலகர் – 1. புதிய இந்தியா
b) அன்னிபெசன்ட் அம்மையார் – 2. வந்தே மாதரம்
c) காந்தியடிகள் – 3. கேசரி
d) லாலா லஜபதிராய் – 4. இளைய இந்தியா குறியீடுகள்
A) 3 1 4 2
B) 1 2 3 4
C) 2 3 1 4
D) 4 3 2 1
36. ஹுமாயூன் நாமாவை இயற்றியவர் யார்?
A) அபுல்பாஸல்
B) குல்பதான் பேகம்
C) ஹாசன் நிசாமி
D) அப்துல் காதர் பதாமி
37. கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும்.
துக்ளக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் பிரோஸ் துக்ளக்கின்
1. நிலவருவாய் கொள்கை
2. சமயக் கொள்கை
3. அடிமை முறைக்கு அளித்த ஊக்கம்
4.நிலமானிய முறைக் கூறுகளை மீண்டும் உயிர்ப்பித்தது:
A) 2, 3 மற்றும் 4 சரியானவை
B) 1, 2 மற்றும் 3 சரியானவை
C) 1, 3 மற்றும் 4 சரியானவை
D) 3 மட்டும் சரியானவை
38. காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசீய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?
A) பம்பாய்
B) சென்னை
C) கல்கத்தா
D) டெல்லி
39. விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்
A) அலாவுதீன் கில்ஜி
B) முகம்மது துக்ளக்
C) இல்துத்மிஷ்
D) பால்பன்
40. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்
A) வங்காள இந்துக்களின் செல்வாக்கைக் குறைக்க
B) முஸ்லீம் லீக் கோரியது
C) வங்காள மக்கள் அதை விரும்பினர்
D) இவற்றுள் எதுவுமில்லை
41. லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் உருவாக தீர்மானம் .நிறைவேற்றிய நாள்
A) 1933ம் ஆண்டு மார்ச் 5ம் நாள்
B) 1933ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் நாள்
C) 1940ம் ஆண்டு மார்ச் 22ம் நாள்
D) 1940ம் ஆண்டு மார்ச் 23ம் நாள்
42. நமது தேசத்தின் தந்தை என்பவர்
A) வினோபாவே
B) மகாத்மா காந்தி
C) மோதிலால் நேரு
D) ஜெயப் பிரகாஷ் நாராயண்
43. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்?
A) அம்பேத்கார்
B) காந்தி
C) நேரு
D) பட்டேல்
44. 1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றி கவிதை வரியில் தமிழில் எழுதி வெளியிட்டவர்
A) நாமக்கல் கவிஞர்
B) சுப்பிரமணிய பாரதி
C) கவிமணி தேசிக விநாயகம்
D) ஜீவானந்தம்
45. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு.
1.லக்னோ ஒப்பந்தம் – காங்கிரஸி லீக் ஒப்பந்தம்
2. இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்
3. ரௌலட் சட்டம்
4. வங்கப் பிரிவினை
A) 1, 3, 2 மற்றும் 4
B) 4, 1, 3 மற்றும் 2
C) 1, 2, 3 மற்றும் 4
D) 4, 3, 2 மற்றும் 1
46. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) லக்னோ ஒப்பந்தம் – 1. 1919
b) பூனா ஒப்பந்தம் – 2. 1909
c) மிண்டோமார்லி சீர்த்திருத்தம் – 3. 1916
d) மான்ட்போர்டு சீர்த்திருத்தம் – 4. 1932
குறியீடுகள்
A) 3 4 2 1
B) 4 3 1 2
C) 2 1 4 3
D) 1 2 3 4
47. 1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்
A) இரண்டாம் அக்பர்
B) ஷெர்ஷா
C) இரண்டாம் பகதூர் ஷா
D) தாரா
48. வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த காள் அப்துல் கஃபார்கான் வேறு எந்த பெயரால் பிரபலமானார்?
A) இறைவனின் ஊழியன்
B) செஞ்சட்டைத் தலைவர்
C) எல்லை காந்தி
D) கான்சாகிப்
49. 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது. ஏனெனில்
A) மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை
B) இந்திய சுதேச அரசர்கள் அதற்கு உதவவில்லை
C) இரஷ்யர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவினர்
D) முகம்மதியர்கள் ஒதுங்கி இருந்தனர்
50. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்?
A) ரபீந்திரநாத் தாகூர்
B) ராஜாராம் மோகன்ராய்
C) ஜெயபிரகாஷ் நாராயண்
D) அம்பாலால் சாராபாய்
51. சுப்புரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்?
A) ஜீவானந்தம்
B) திரு. வி. க.
C) பாரதிதாசன்
D) சுத்தானந்த பாரதி
52. சகா வருடம் ஆரம்பித்த ஆண்டு
A) கி. மு. 58
B) கி.மு. 78
C) கி.பி.58
D) கி.பி. 78
53. பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) இரண்டாம் சங்கம் – 1. அபிதம்மபீடகா
b) மூன்றாம் சங்கம் – 2. தொல்காப்பியம்
c) முதல் புத்த கவுன்சில் – 3. திரிபீடகம்
d) மூன்றாம் புத்த கவுன்சில் – 4. சிலப்பதிகாரம் குறியீடுகள்:
A) 2 3 1 4
B) 2 4 3 1
C) 4 2 3 1
D) 4 2 1 3
54. 1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசீய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்புமுனையாக இருந்ததன் காரணம்
A) இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தைக் கோரியதால்
B) முழு சுதந்திரத்தை கோரியதால்
C) அன்னிபெசன்ட் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதால்
D) இந்திய தேசீய காங்கிரசும் அகில இந்திய முஸ்லீம்லீக்கும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்ததால்
55. சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?
A) ஜனவரி 5, 1922
B) பிப்ரவரி 5, 1922
C) மார்ச் 5, 1922
D) மார்ச் 15, 1922
56. மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?
A) கனிஷ்கர்
B) முதலாம் காட்பீஸஸ்
C) வைசாகர்
D) வாசுதேவர்
57. அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?
A) முகம்மது அலி ஜின்னா
B) சையது அகமது கான்
C) ஆகாகான்
D) நவாப் சலிமுல்லா கான்
58. ‘வந்தே மாதரம்’ முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்
A) கீதாஞ்சலி
B) ஹரிஜன்
C) கேசரி
D) ஆனந்த மடம்
59. இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்
A) சர்தார் வல்லபாய் பட்டேல்
B) இராஜாஜி
C) காமராஜ்
D) காந்திஜி
60. 1889 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்
A) யங் இந்தியா
B) இந்தியா
C) இந்திய மக்கள்
D) வாய்ஸ் ஆஃப் இந்தியா
61. அமிர்தசரஸ் நகரின் ஸ்தாபகர்
A) குரு கோவிந்தசிங்
B) குரு ராம்தாஸ்
C) குரு தேஜ் பகதூர்
D) குருநானக்
62. இராஜதரங்கிணி இதனைப் பற்றிய நூல்
A) மௌரிய வம்சம்
B) குப்த வம்சம்
C) காஷ்மீர் வரலாறு
D) சுங்கர்கள்
63. மௌரியப் பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து அகற்றியவர்
A) அக்னிமித்ரர்
B) காரவேலர்
C) புஷ்யமித்ரர்
D) தனநந்தர்
64. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்
A) முகம்மது பின் காசிம்
B) முகம்மது கஜினி
C) முகம்மது கோரி
D) முகம்மது பின் துக்ளக்
65. சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்
A) மதுரை
B) வத்தலக்குண்டு
C) திருநெல்வேலி
D) பாப்பாரப்பட்டி
66. ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?
A) ஒத்துழையாமை இயக்கம்
B) கிலாபத் இயக்கம்
C) சௌரி சௌரா நிகழ்ச்சி
D) ஜாலியன் வாலாபாக் துயரம்
67. புகழ்வாய்ந்த லக்னோ ஒப்பந்தத்தில் (1916) கையெழுத்திட்டது
A) காந்தியும், டாக்டர் அம்பேத்காரும்
B) நேருவும், மின்டோவும்
C) முஸ்லீம் லீக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும்
D) ஸ்வராஜ்ய கட்சியும், அன்னிபெசன்ட்டும்
68. வாதாபி இவர்களது தலைநகரம்
A) பல்லவர்கள்
B) சாளுக்கியர்கள்
C) கூர்ஜரபிரதிகாரர்கள்
D) கங்கர்கள்
69. பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?
A) தயானந்த சரஸ்வதி
B) சுவாமி விவேகானந்தர்
C) இராஜாராம் மோகன்ராய்
D) இரவீந்திரநாத் தாகூர்
70. 1907ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?
A) சூரத்
B) லாகூர்
C) பம்பாய்
D) கல்கத்தா
71. இந்திய தேசீய காங்கிரஸின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
A) கல்கத்தா
B) டெல்லி
C) சென்னை
D) பம்பாய்
72. இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்
A) முதலாம் தரெய்ன் போர்
B) இரண்டாம் தரெய்ன் போர்
C) முதலாம் பானிபட் போர்
D) இரண்டாம் பானிபட் போர்
73. காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்
A) ஜவஹர்லால் நேரு
B) சரோஜினி நாயுடு
C) திலகர்
D) நேதாஜி
74. யுவான்சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யார்?
A) காளிதாசர்
B) கம்பர்
C) தர்மபாலர்
D) பாணர்
75.1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்
A) சர்ச்சில்
B) மக்டானல்டு
C) அட்லி
D) சேம்பர்லின்
76. “விடுதலை விடுதலை விடுதலை” என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்?
A) சுப்பிரமணிய பாரதி
B) பாரதிதாசன்
C) சுத்தானந்த பாரதி
D) கவிமணி
77. திரு.வி. கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்
A) தேசாபிமானி
B) விடுதலை
C) நவசக்தி
D) வீரகேசரி
78. இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்
A) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் ஜாகீர் உசேன்
C) வி. வி. கிரி
D) ஆர். வெங்கட்ராமன்
79. இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது
A) இந்தோனேசியா
B) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C) அயர்லாந்து
D) இந்தோ-சீன நாடுகள்
80. பட்டியல் (1)யும் பட்டியல் (2) உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பிட் இந்திய சட்டம் – 1. 1773
b) ஒழுங்குமுறை சட்டம் – 2. 1784
c) இந்திய அவைகள் சட்டம்- 3. 1861
d) மின்டோமார்லி சீர்திருத்த சட்டம்- 4. 1909
குறியீடுகள்
A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 3 4 1 2
D) 4 3 2 1
81. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
A) மும்பாய்
B) தில்லி
C) லண்டன்
D) லீட்ஸ்
82. வந்தேமாதரம் எழுதியவர்
A) மகாத்மா காந்தி
B) அரபிந்தோ
C) பங்கிம் சந்திர சட்டர்ஜி
D) மதன்மோகன் மாளவியா
83. உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?
A) சௌரி சௌரா
B) சம்பரன்
C) கோபால்பூர்
D) தண்டி
84. சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்?
A) ஆறுமுகனேரி
B) திருநெல்வேலி
C) எட்டயபுரம்
D) சிவகங்கை
85. பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர்
A) ஹுகம் சிங்
B) லாலா லஜபத்ராய்
C) மான்சிங்
D) லாலா ஷேவக் ராம்
86. புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை உபதேசித்த இடம்
A) லும்பினி
B) சாரநாத்
C) சாஞ்சி
D) கயா
87. இந்திய தேசிய சேனையை நிறுவியவர் யார்?
A) ராஷ் பிகாரி போஸ்
B) சுபாஷ் சந்திர போஸ்
C) சௌமித்ர போஸ்
D) தருண் போஸ்
88. சென்னை மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
A) கி.பி. 1830
B) கி. பி. 1835
C) கி.பி. 1840
D) கி. பி. 1845
89. இந்திய தேசிய காங்கிரஸ் சபையில் தலைமை வகித்த முதல் தேசியத் தலைவர்
A) எஸ். சுப்பிரமணிய ஐயர்
B) ஆனந்தாச்சார்யுலு
C) டபிள்யூ. சி. பானர்ஜி
D) சுரேந்திரநாத் பானர்ஜி
90. தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை எந்த நகரத்துடன் இணைத்தது?
A) திருச்சி
B) அரக்கோணம்
C) மதுரை
D) கோயம்புத்தூர்
91. அகில இந்திய முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A) 1905
B) 1906
C) 1909
D) 1911
92. சீக்கிய சமயத்தை நிறுவியவர்
A) தேஜ் பகதூர்
B) குரு கோவிந்த் சிங்
C) குரு அர்ஜுன்
D) குருநானக்
93. ரிக்வேத நாகரிகத்தின் முக்கிய கூறு
A) பெண் தேவதை வழிபாடு
B) இயற்கை வழிபாடு
C) திரிமூர்த்திகள் வழிபாடு
D) பசுபதி வழிபாடு
94. லோகமான்யா என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?
A) கோகலே
B) பட்டேல்
C) திலக்
D) காந்தி
95. பட்டியல் (1)யும் பட்டியல் (2)உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பண்டிதராவ் – 1. அயல்துறை செயலர்
b) பேஷ்வா – 2. நிதியமைச்சர்
c) அமதியா – 3. சட்டத்துறை நீதிபதி
d) சமந்த் – 4. பிரதமர்
குறியீடுகள்
A) 4 2 1 3
B) 3 4 2 1
C) 4 3 1 2
D) 3 2 1 4
96. கீழ் உள்ள கூற்றுகளை கவனி.
துணிபுரை (A) : சமணர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்
காரணம் (R) : சமணர்கள் வேதங்களை ஏற்பதில்லை
A) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம் (R) ஆகும்
B) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம் (R) அல்ல
C) (A) உண்மை, ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால், (R) சரி
97. சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?
A) பாஜிராவ்
B) பாலாஜி பாஜிராவ்
C) பாலாஜி விஸ்வநாத்
D) மகதாஜி சிந்தியா
98. எந்த துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?
A) லோத்தால்
B) காலிபங்கன்
C) ரோப்பார்
D) மொகஞ்சதாரோ
99. கீழ் உள்ள கூற்றுகளை கவனி.
துணிபுரை (A): சிந்து சமவெளி மக்கள் ஆண் கடவுள் தெய்வத்தை வழிபட்டனர்
காரணம் (R): சிவ உருவில் முத்திரை கண்டெடுக்கப்பட்டது
A) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம் (R) ஆகும்
B) (A) மற்றும் (R) சரியானவை, (A) க்கு சரியான விளக்கம் (R) அல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, (R) உண்மை
100. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்
A) சர் சையது அஹமதுகான்
B) முகம்மது அலி ஜின்னா
C) முகம்மது இக்பால்
D) அபுல் கலாம் ஆசாத்
101. ஆதிகிரந்தத்தை தொகுத்தவர்
A) குரு அர்ஜுன்
B) குரு தேஜ் பகதூர்
C) குருநானக்
D) குரு கோவிந்த்
102. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. கபீர்
2. இராமானந்தர்
3. நானக்
4. வல்லபாச்சாரியார் இதில்
A) 1, 3, 2, 4 சரியான வரிசை
B) 2, 3, 1, 4 சரியான வரிசை
C) 2, 1, 4, 3 சரியான வரிசை
D) 3, 1, 2, 4 சரியான வரிசை
103. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடம்
A) டில்லி
B) கொல்கத்தா
C) மும்பை
D) அமிர்தசரஸ்
104. ஆய்க.
துணிபுரை (A) : பிண்டாரிகள் நல்லதொரு அமைப்பின் கீழிருந்ததுடன் ஆங்கிலேயரையும் எதிர்த்தனர்.
காரணம் (R): ஹேஸ்டிங்ஸ் பிரபு போரின் மூலம் அவர்களை ஒடுக்கினார். குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால், (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
105. மிகப் பழமையான வேதம்
A) ரிக்
B) யஜூர்
C) சாமம்
D) அதர்வணம்
106. சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள் வழிபட்ட தெய்வம்
A) விஷ்ணு
B) பசுபதி
C) பிரம்மா
D) இந்திரன் & வருணன்
107. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்
A) தாதாபாய் நௌரோஜி
B) ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
C) சுரேந்திரநாத் பானர்ஜி
D) அன்னி பெசன்ட்
108. சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படுவதன் காரணம் அவர்
1. இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்ததால்
2. நிஜாமின் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்ததால்
3.சிதறிய சிறு அரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்தால்
4. அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்பதால் – இவற்றில்
A) 1 மட்டும் சரி
B) 2 மற்றும் 3 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) 3 மற்றும் 4 சரி
109. சைமன் குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு
A) 1920
B) 1922
C) 1928
D) 1942
110. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. ஆரியபட்டா
2. பாஸ்கரா
3. பிரம்மகுப்தா
இதில்
A) 1, 3, 2 சரியான வரிசை
B) 1, 2, 3 சரியான வரிசை
C) 2, 1, 3 சரியான வரிசை
D) 3, 2, 1 சரியான வரிசை
111. பின்வருவனவற்றை ஆய்க.
கூற்று (A) : வங்கப் பிரிவினை திட்டமிட்டு வேண்டுமென்றே வங்காள மக்களைப் பிரிக்கச் செய்த முயற்சி
காரணம்(R) : கர்சன் பிரபு நிர்வாகச் சௌகரியத்திற்காக வங்காளத்தைப் பிரிக்கச் செய்தார். இவற்றில்
A) (A) யும் (R) ம் சரி (R), (A) யின் சரியான காரணம்
B) (A) யும் (R) ம் சரி (R), (A) யின் சரியான காரணமல்ல
C) (A) சரி (R) தவறு
D) (A) தவறு (R) சரி
112. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம்
A) முகமது பின் காசிம்
B) முகமது கஜினி
C) முகமது கோரி
D) குத்புதீன் ஐபக்
113. சிவாஜியின் வாழ்க்கைத் தொடர்பான செய்திகளை கால வரிசைப்படுத்துக.
1. ஆக்ராவிற்குச் செல்லல்
2. இரண்டாம் முறையாக சூரத்தைத் தாக்கல்
3. அரியணை ஏறல்
4. புரந்தார் உடன்பாடு செய்தல் இதில்
A) 2, 1, 4, 3 சரியான வரிசை
B) 3, 2, 1, 4 சரியான வரிசை
C) 4, 2, 3, 1 சரியான வரி
D) 4, 1, 2, 3 சரியான வரிசை
114. முதல் பட்டியலை இரண்டாம் பட்டியலுடன் பயன்படுத்தி விடை தருக.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) எனவே நாங்கள் இந்தியா பிரிட்டிஷ் உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் பூரணசுயராஜ்யத்தை அடைய வேண்டும் என்றும் நம்புகிறோம் – 1. சுபாஷ் சந்திரபோஸ்
b) பிரிட்டிஷாரின் அழிவில் நாங்கள் எங்கள் விடுதலையைக் கோரவில்லை –
2. வின்ஸ்டன் சர்ச்சில்
c) பிரிட்டிஷ் பேரரசின் அழிவுக்குத் தலைமை தாங்க நான் மேன்மை தங்கிய பேரரசின் முதல் அமைச்சராகவில்லை. – 3. லாகூர் கூட்டத் தீர்மானம் (1929)
d) குறுதி தாருங்கள், நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன். – 4. காந்திஜி
A) 1 3 4 2
B) 3 4 2 1
C) 2 1 3 4
D) 4 3 1 2
115. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. ஆகஸ்டு அறிவிப்பு
2. சூரத் பிளவு
3. நேரு அறிக்கை
4.வெள்ளையனே வெளியேறு இயக்கம் இதில்
A) 2, 1, 4, 3 சரியான வரிசை
B) 2, 3, 1, 4 சரியான வரிசை
C) 2, 1, 3, 4 சரியான வரிசை
D) 2, 4, 3, 1 சரியான வரிசை
116. முதல் பட்டியலை, இரண்டாம் பட்டியலுடன் ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி விடை தருக.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) காந்தி-இர்வின் ஒப்பந்தம் – 1. 1858
b) ஜாலியன்வாலாபாக் துயரநிகழ்ச்சி – 2. 1940
c) ஆகஸ்டு திட்டம் – 3. 1919
d) மேலும் சிறந்த இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் – 4. 1931
A) 3 4 1 2
B) 1 4 2 3
C) 2 1 3 4
D) 4 3 2 1
117. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. மகாவீரர்
2. பார்ச்வர்
3. ஸ்தூலபத்ரா
4. பத்ரபாஹூ -இதில்
A) 1, 2, 3, 4 சரியான வரிசை
B) 2, 1, 4, 3 சரியான வரிசை
C) 2, 4, 3, 1 சரியான வரிசை
D) 4, 3, 1, 2 சரியான வரிசை
118. “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” இக்கூற்று யாரால் முழங்கப்பட்டது?
A) காந்திஜி
B) லோகமானிய திலகர்
C) ஜவஹர்லால் நேரு
D) சுபாஷ் சந்திர போஸ்
119. சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A) யுவான் சுவாங் – இராஜ ராஜன்
B) பெர்னியர் – பெரோஸ் துக்ளக்
C) அப்துர்ரசாக் – கிருஷ்ண தேவராயா
D) இபின் படூடா – ஷாஜகான்
120. இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்
A) அட்லி
B) லாயிட் ஜார்ஜ்
C) மாக்மில்லன்
D) சர்ச்சில்
121. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. நாதிர் ஷா
2. முகமது கஜினி
3. முகமது கோரி – இதில்
A) 1, 2, 3 சரியானவை
B) 2, 3, 1 சரியானவை
C) 3, 2, 1 சரியானவை
D) 1, 3, 2 சரியானவை
122. காலமுறைப்படி குறிப்பிடுக.
1. பதேபூர் சிக்ரி
2. சசராம் கல்லறை
3. தாஜ்மஹால் இதில்
A) 1, 3, 2 சரியான வரிசை
B) 1, 2, 3 சரியான வரிசை
C) 2, 3, 1 சரியான வரிசை
D) 2, 1, 3 சரியான வரிசை
123. சுதேசி இயக்கம் என்பது
A) பிரிட்டிஷார் எதிர்ப்புக் கோஷங்கள் போடுதல்
B) அயல்நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து இந்தியப் பொருட்களை ஆதரித்தல்
C) காதித் தொப்பியை அணிந்து கொள்ளுதல்
D) பேச்சுவார்த்தைகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துதல்
124. பின்வருவனவற்றை ஆய்க.
கூற்று (A): போர்க்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் தான் சுயாட்சி இயக்கம் ஏற்பட காரணமானவை
காரணம்(R) : போர்க்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுடைய நிர்ப்பந்தம் இருந்தாலொழிய சலுகைகள் கொடுக்காது என்று இந்திய அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர் இவற்றில்
A) (A) மற்றும் (R) சரி (R), (A) யின் சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி (R), (A) யின் சரியான விளக்கமல்ல
C) (A) சரி (R) தவறு
D) (A) தவறு (R) சரி
125. ஆய்க.
துணிபுரை (A) : டல்ஹௌசி தன் நாடிழப்புக கொள்கையால் இந்திய அரசுகளை இணைத்தார்
காரணம் (R) : ஆங்கிலேயர் அயோத்தியை ஆளப்படுவோரின் நலனுக்காக என்று போர்வையில் இணைத்தனர். குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால், (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
126. கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
A) அர்த்தசாஸ்திரம் – கார்ல்மார்க்ஸ்
B) மூலதனம் – கௌடில்யர்
C) ஹர்ஷ சாஸ்திரம் – பாணர்
D) மெயின் கெம்ஃப் – காளிதாசர்
127. ஆய்க.
கூற்று (A): பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய ரயில்வேயை நிறுவி முன்னேற்றம் அடையச் செய்தனர்
காரணம் (R) : பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் தனியார் தொழிலை முன்னேற்றுவதில் அக்கறையாக இருந்தனர் உன்னுடைய விடையினை கீழேயுள்ள குறியீட்டில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதுக.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) யின் சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை ஆனால் (R), (A) யின் சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால், (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
128. அசோகர் மீதான கலிங்கப் போரின் தாக்கம் பற்றி கூறுவது
A) குகை கல்வெட்டுகள்
B) தூண் கல்வெட்டுகள்
C) அர்த்தசாஸ்திரம்
D) அசோகரின் சுயசரிதை
129. காபினெட் மிஷன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது
A) மதக் கலகங்களை அடக்க
B) இந்திய – பாகிஸ்தான் எல்லையை நிர்ணயிக்க
C) அரசியலமைப்புச் சிக்கலைத் தீர்க்க
D) கிறித்துவ மத போதனை செய்ய
130. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
A) சம்பாரன் போராட்டம் – பாலகங்காதர திலகர்
B) கதர் கட்சி – லாலா ஹர்தயாள்
C) கணபதி விழா – அன்னிபெசன்ட்
D) சுய ஆட்சி இயக்கம் – காந்திஜி
131. வரிசைப்படுத்துக.
1. கீழ்ப்பட்ட ஒதுக்குக் கொள்கை
2. கீழ்ப்பட்ட ஐக்கியக் கொள்கை
3. கீழ்ப்பட்ட சமகூட்டாட்சிக் கொள்கை
4. சுற்றரண் காப்புக் கொள்கை இதில்
A) 4, 1, 2, 3 சரியான வரிசை
B) 4, 2, 1, 3 சரியான வரிசை
C) 2, 1, 3, 4 சரியான வரிசை
D) 4, 3, 2, 1 சரியான வரிசை
132. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது
A) தத்துவம்
B) மதம்
C) ராஜதந்திரம்
D) ஆட்சிமுறை
133. குதாய கித்மத்கார்களின் தலைவர்
A) பகத்சிங்
B) பிபின் சந்திர பால்
C) கான் அப்துல் கஃபார்கான்
D) அப்துல் கலாம் ஆசாத்
135. ஹண்டர் கமிஷனின் முக்கிய பணி
A) சமூக சீர்திருத்தங்கள்
B) பொருளாதார சீர்திருத்தங்கள்
C) கல்வி சீர்திருத்தங்கள்
D) நீதி சீர்திருத்தங்கள்
136. திராவிடக் கழகத்தைத் தோற்றுவித்தவர்
A) ஈ. வெ. ரா. பெரியார்
B) அண்ணாதுரை
C) வீரமணி
D) எம். ஜி. ஆர்.
137. ஆய்க.
1. ஆரிய சமாஜம் உருவ வழிபாட்டிற்கு எதிரி
2. ஆரிய சமாஜம் சாதிமுறையை எதிர்த்தது
3. ஆரிய சமாஜம் சடங்கு முறையை எதிர்த்தது
4. வேதங்களின் மறுமலர்ச்சியை ஆரிய சமாஜம் வரவேற்றது
– மேலே குறிப்பிட்டவற்றில்
A) 1, 2 சரியானவை
B) 1, 2, 3 சரியானவை
C) 1, 2, 3, 4 சரியானவை
D) 4 மட்டும் சரியானது
138. வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர்
A) காந்திஜி
B) மதன் மோகன் மாளவியா
C) லாலா லஜ்பத் ராய்
D) இரவீந்திரநாத் தாகூர்
139. சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்
A) காந்திஜி
B) கோகலே
C) திலகர்
D) சவர்கார்
140. சரியான காலவரை முறைப்படி அமைக்கவும்.
1. அவகாசியிலிக்கொள்கை
2. வங்காளப் பிரிவினை
3. துணைப்படைத்திட்டம்
– இதில்
A) 1, 2, 3 சரியானவை
B) 2, 3, 1 சரியானவை
C) 3, 1, 2 சரியானவை
D) 1, 3, 2 சரியானவை
141. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய ஆளுநர்
A) இராபர்ட் கிளைவ்
B) மாண்டேகு
C) செம்ஸ்போர்ட்
D) லிட்டன்
142. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
A) இரவீந்திரநாத் தாகூர்
B) இராஜாராம் மோகன்ராய்
C) காந்திஜி
D) பாரதியார்
143. லண்டனில் நடைபெறும் அரசுத்துறை தேர்வில் இந்தியர் பங்குபெற அனுமதித்தது
A) சாசன சட்டம் 1813
B) சாசன சட்டம் 1833
C) சாசன சட்டம் 1953
D) அரசியின் பேரறிக்கை 1858
144. “இல்பர்ட் மசோதா” பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்
A) கானிங் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) கர்சன் பிரபு
D) வேவல் பிரபு
145.”சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தேதீருவேன்” என்று கூறியவர் A) பாலகங்காதர திலகர்
B) லாலா லஜபத் ராய்
C) பிபின் சந்திரபால்
D) கோபாலகிருஷ்ண கோகலே
146. சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்
A) திலகர்
B) காந்திஜி
C) சிதம்பரனார்
D) இராஜாஜி
147. காந்திஜி கலந்து கொண்டது
A) முதல் வட்ட மேஜை மாநாடு
B) 2வது வட்ட மேஜை மாநாடு
C) 2வது, 3வது வட்ட மேஜை மாநாடுகள்
D) முதல், 3வது வட்ட மேஜை மாநாடுகள்
148. கீழ்வரும் நிகழ்ச்சிகளை கால முறைப்படி கூறவும்.
A) சூரத் பிளவு, ஹோம்ரூல் இயக்கம், முஸ்லீம் லீக் தோற்றம்
B) ஹோம்ரூல் இயக்கம், சூரத் பிளவு, முஸ்லீம் லீக் தோற்றம்
C) சூரத் பிளவு, முஸ்லீம் லீக் தோற்றம், ஹோம்ரூல் இயக்கம்
D) முஸ்லீம் லீக் தோற்றம், சூரத் பிளவு, ஹோம்ரூல் இயக்கம்
149, கடார் கட்சியை தோற்றுவித்தவர்
A) வி.டி. சவர்கார்
B) லாலா ஹர்தயாள்
C) கிருஷ்ண வர்மா
D) கணேஷ் சவர்கார்
150. அன்னிபெசன்ட்
1. ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தார்
2. வெளிநாட்டு பொருட்களை பகிஷ்கரிக்கத் தூண்டினார்
3. தேசிய கல்வி முறையை ஆதரித்தார்
4. சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்
– இதில்
A) 1, 2 சரியானவை
B) 1, 2, 3 சரியானவை
C) 1, 2, 3, 4 சரியானவை
D) 1, 4 சரியானவை
151. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
A) கோகலே – நியூ இந்தியா
B) பாரதியார் – யுகந்தர்
C) திலகர் – கேசரி
D) காந்திஜி – காமன் வீல்
152. ஆய்க.
துணிபுரை (A) :ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி வாபஸ் வாங்கினார்
காரணம் (R) : சௌரி சௌராவில் போலீஸ்காரர்கள்
கொல்லப்பட்டது அவரது மனத்தை மாற்றியது
குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
A) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம் (R) ஆகும்
B) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம் (R) அல்ல
C) (A) உண்மை, ஆனால் (R) தவறானது
D) (A) தவறு, ஆனால் (R) உண்மை
153. காந்திஜியின் அரசியல் குரு
A) பாலகங்காதர திலகர்
B) தாதாபாய் நௌரோஜி
C) லாலா லஜ்பத் ராய்
D) கோபாலகிருஷ்ண கோகலே
154. ஆய்க.
துணிபுரை (A) : இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கணித்தனர்
காரணம் (R) : அது இந்தியர் பிரச்சனையை சரியாக ஆராயவில்லை
A) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம் (R) ஆகும்
B) (A) மற்றும் (R) சரியானவை (A) க்கு சரியான விளக்கம் (R) அல்ல
C) (A) உண்மை, ஆனால் (R) தவறானது
D) (A) தவறு, ஆனால் (R) உண்மை
155. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?
A) அலிகார் இயக்கம் – ஜின்னா
B) ஹோம்ரூல் இயக்கம் – திலகர்
C) உப்பு சத்தியாகிரகம் – காந்திஜி
D) வங்காளப் பிரிவினை – கர்சன்
156. தனிநாடு வேண்டி முஸ்லீம் லீக் எப்போது கோரிக்கை விடுத்தது?
A) 1939
B) 1940
C) 1941
D) 1942
157. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
A) சி. இராஜ கோபாலாச்சாரி
B) மௌண்ட்பேட்டன் பிரபு
C) ஜவஹர்லால் நேரு
D) சர்தார் வல்லபாய் படேல்
குறிப்பு: சதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் சி. இராஜகோபாலாச்சாரி
158, பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பாண்டிச்சேரி 1. ஆங்கிலேயர்கள்
b) கோவா 2. டேனியர்கள்
c) தரங்கம்பாடி 3. பிரெஞ்சுக் காரர்கள்
d) மதராஸ் 4. போர்ச்சுகீசியர்கள்
குறியீடுகள் :
a b c d
A) 4 1 2 3
B) 2 3 4 1
c) 3 4 2 1
D) 4 3 1 2
159. பட்டியல் 1-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) மூங்கில் நடனம் 1. பஞ்சாப்
b) பங்காரா 2. தமிழ்நாடு
c) கதி 3. நாகலாந்து
d) கோலாட்டம் 4, வங்காளம்
குறியீடுகள் :
a b c d
(A) 2 3 1 4
(B) 2 1 4 3
(C) 3 1 4 2
(D) 4 3 2 1
160. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) நானாசாகிப் – ஜான்ஸி
B) குன்வார்சிங் – கான்பூர்
C) பேகம் ஹசரத் மஹால் – லக்னோ
D) லெட்சுமி பாய் – குவாலியர்
161. பாராக்பூர் சிப்பாய் கலகம் தோன்ற உண்மையான காரணம்
A) பூர்வீக வங்காள படையினர், பர்மியருக்கு எதிராக சண்டையிட மறுத்தனர்.
B) சிப்பாய்கள் அதிகம் படி கேட்டனர்
C) இந்திய வீரர்கள் அலட்சியத்துடன் நடத்தப் பட்டனர்
D) இந்திய வீரர்கள் தலைப்பாகைகள் அணிய மறுத்தனர்
162. பழங்காலத்தில் இந்திய நுழைவாயிலாக இருந்தது?
A) கயா
B) பம்பாய்
C) துவாரகா
D) கைபர்
163. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்க:
கூற்று (A): 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை பின்பற்றியது
காரணம் (R): கிரிப்ஸ் தூதுக்குழு உடனடியாக சில சலுகைகளை அளிக்காமல் வருங்- காலத்திற்கு சில வாக்குறுதிகளை தந்தது
கீழ் உள்ளவற்றை கொண்டு சரியான விடையளி:
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல
B) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) க்கு சரியான விளக்கம்
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
164. பட்டியல் 1-ஐ பட்டியல் II -‘உடன் பொருத்தி கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான
பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) சார்ஜன்ட் கல்வி திட்டம் 1. கி.பி. 1948
b) ஹார்டாக் கமிட்டி 2. கி.பி. 1835
c) மெக்காலே அறிக்கை 3. கி.பி. 1944
d) ராதாகிருஷ்ணன் கமிஷன் 4. கி.பி. 1929
a b c d
A) 2 3 4 1
B) 4 1 2 3
C) 2 1 3 4
D) 3 4 2 1
165. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள், எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) மௌரியர்கள் – ஒரே கல்லால் ஆன தூண்கள்
B) குஷானர்கள் – குகை கட்டிட கலை
C) குப்தர்கள் – காந்தாரக்கலை
D) நாயக்கர்கள் – இரதங்கள்
166. சமண மதத்தை பொறுத்த மட்டில் கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. மகாவீரர், ஆன்மா, ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு மாறி செல்லும் என்பதை நம்பவில்லை
II. மகாவீரர் மோட்சமடைவதை வலியுறுத்தினார்
III. உலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மகாவீர மறுத்தார்
IV. மகாவீரர் யாகங்கள், பலிகள், சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிரானவர்
இவற்றில்,
A) I மற்றும் II சரியானவை
B) I, மற்றும் III சரியானவை
C) II மற்றும் III சரியானவை
D) I, III மற்றும் IV சரியானவை
167. கீழ்க்கண்டவற்றில் எவை புத்தரின் கோட்பாடு இல்லை?
A) கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை அவர் கருதவில்லை.
B) உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் நிலையற்றவை என வெளியிட்டார்.
C) ஆசையே அனைத்து துன்பங்கட்கும் காரணம் என அவர் கூறினார்.
D) கரும விதி, மறு பிறவி ஆகியவற்றை வலியுறுத்தினார்.
168. இந்திய ‘சமய சார்பிலா’ கோட்பாட்டை உருவாக்கிய தலைமை சிற்பி
A) இந்திரா காந்தி
B) காந்தி
C) ஜவஹர்லால் நேரு
D) தாகூர்
169. ‘நேரடி நடவடிக்கை நாள்’ என முஸ்லீம் லீக் குறித்தது
A) 2 செப்டம்பர், 1946
B) 16 ஆகஸ்ட், 1946
C) 14 நவம்பர், 1946
D) 23 டிசம்பர், 1946
170. ‘செஞ்சட்டையர்களின்’ தலைவர்
A) மகாத்மா காந்தி
B) எல்லை காந்தி
C) சுபாஷ் சந்திர போஸ்
D) பகத்சிங்
171. 1878ம் ஆண்டு சுதேசி மொழியில் பத்திரிகை சட்டத்தை கொண்டு வந்தவர்
A) கானிங் பிரபு
B) லிட்டன் பிரபு
C) ரிப்பன் பிரபு
D) கர்சன் பிரபு
172. இந்தியாவின் முதுபெரும் மனிதர், என்று அன்புடன் அழைக்கப்படுபவர்
A) காந்திஜி
B) தாகூர்
C) தாதாபாய் நௌரோஜி
D) திலகர்
173. 1853 ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் தந்தி கம்பி அமைக்கப்பட்டது?
A) மும்பாய் முதல் தானா வரை
B) கல்கத்தா முதல் இரணிகஞ்ச் வரை
C) கல்கத்தா முதல் ஆக்ரா வரை
D) சென்னை முதல் அரக்கோணம் வரை
174. கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக:
I. பிட் இந்திய சட்டம்
II. ஒழுங்கு முறை சட்டம்
III. மிண்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
IV. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை
இவற்றில்,
A) I, II, IV, III
B) II, III, I, IV
C) IV, I, III, II
D) II, I, IV, III
175. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள், எந்த ஒன்று சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) சாஸ்திரி, சிரிமாவோ ஒப்பந்தம் – 1964
B) சிம்லா ஒப்பந்தம் – 1974
C) தாஷ்கண்ட் ஒப்பந்தம் – 1966
D) பஞ்ச சீல ஒப்பந்தம் – 1955
176. காஷ்மீர் 1948ல் இந்திய ஒன்றியத்தோடு இணைக்க காரணம்
A) மஹாராஜா ஹரிசிங் பாகிஸ்தானின் தாக்குதலைக் கண்டு பயந்தார்
B) காஷ்மீர் மக்கள். இந்தியவோடு சேர விரும்பினர்
C) ஐ.நா. சங்கம் நடத்திய வாக்கெடுப்பு இந்தியாவுக்கு சாதகமாய் இருந்தது
D) ராணுவ உதவி செய்ததால் காஷ்மீரை இணைக்க சொல்லி இந்தியா ஹரிசிங்கை வற்புறுத்தியது
177. சரியாக பொருத்தப்பட்ட இணைகளை கண்டுபிடிக்க:
A) 1853 – அம்பாலா – டில்லி நகர்களுக்கிடையே ரயில் போக்குவரத்து துவக்கம்
B) 1963 – பாம்பே – தானாவிற்கிடையே ரயில் போக்குவரத்து துவக்கம்
C) 1915 – இந்திய பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது
D) 1904 – வங்காளம் பிரிக்கப்படுதல்
178. ‘நமது இன்றைய ஆலயங்கள்’ என்று ஜவஹர்லால் நேரு கருதியது
A) அணைக்கட்டுகளும், நீர் மின்சார திட்டங்களும்
B) களரகம் மற்றும் சுரங்கத் தொழில்கள்
C) உயிர் காக்கும் மருந்து தொழிற்சாலைகள்
D) விவசாயம் மற்றும் ஊரக தொழில்கள்
179. இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்த ஏ.டு.ஹியும் துவக்கத்தில்
A) ஆங்கில ராணுவத்தின் தலைவர்
B) சமூக சேவகர்
C) கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்
D) ஆளுநர்
180. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் (1919) முக்கியக் கூறு
A) மாநில சுயஆட்சி
B) ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டோ அதிகாரம்
C) மத அடிப்படை தேர்தல் முறை
D) இரட்டை ஆட்சி
181. ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திரும்பப் பெற்றுக் கொண்டதன் காரணம்
A) காந்தி – இர்வின் ஒப்பந்தம்
B) சௌரி – சௌராவில் ஏற்பட்ட மக்கள் வன்முறை
C) ஆங்கில அரசின் எதிர்ப்பு
D) தீவிரவாதிகளின் எதிர்ப்பு
182. லாலா லஜ்பத்ராய் அவர்கள் மரண காயங்கள் பெற்றது
A) கிரிப்ஸ் தூதுக்குழுவை எதிர்த்து போராட்டம் செய்த போது
B) சைமன் குழுவை எதிர்த்து போராட்டம் செய்த போது
C) இந்தியாவை விட்டு வெளியேறு இயக்க போராட்டத்தின் போது,
D) ஒத்துழையாமை இயக்கத்தின் போது
183. லாகூரில் அகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றிய ஆண்டு
A) கி.பி. 1906
B) கி.பி. 1916
C) கி.பி. 1940
D) கி.பி. 1942
184. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு
A) கி.பி. 1942
B) கி.பி. 1948
C) கி.பி. 1950
D) கி.பி. 1956
185. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
A) பாபு ராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் ராதாகிருஷ்ணன்
C) சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
D) வி.வி.கிரி
186. இந்திய தேசிய காங்கிரஸிற்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண்மணி
A) விஜயலஷ்மி பண்டிட்
B) கஸ்தூரி பாய்
C) ராணி லஷ்மிபாய்
D) சரோஜினி நாயுடு
187. 1947 இந்திய பிரிவினைக்கு காரணமான தலைவர்
A) சர்சையது அகமது கான்
B) சர் ஆஹாகான்
C) முகமது அலி ஜின்னா
D) சர் முகமது இக்பால்
188. டெல்லி தர்பாரில் வங்கப் பிரிவினையை இரத்து செய்ய அறிவிக்கப்பட்ட ஆண்டு
A) 1906
B) 1911
C) 1919
D) 1920
189. முதல் கர்நாடக போர் எதனுடன் தொடர்புடையது?
A) ஆஸ்திரிய – பிரஷ்யப் போர்
B) ஆஸ்திரிய வாரிகரிமை போர்
C) ஏழாண்டு போர்
D) ஸ்பானிய வாரிசுரிமை போர்
190. 1760 ஆம் ஆண்டு நடைபெற்ற வந்தவாசி போரில் பங்கு கொண்ட ஐரோப்பியர்கள்
A) போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள்
B) டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள்
C) பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்
D) டேனியர்கள், பிரெஞ்சுக்காரர்கள்
191. பூஜ்யத்தை யார் கண்டுபிடித்தது?
A) பாஸ்கரா
B) ஆரியபட்டா
C) வரகமிஹிரா
D) பெயர் தெரியாத இந்தியன்
192. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) கரிகாலன் 1. சோழன்
b) செங்குட்டுவன் 2. பாண்டியன்
c) நெடுஞ்செழின் 3. சேரன்
d) மானஸ் (A) மோகா 4. சாகா
a b c d
A) 1 3 2 4
B) 1 3 4 2
C) 3 2 1 4
D) 1 4 2 3
193. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பல்லவர்கள் 1. பாடலிபுத்திரம்
b) மௌரியர்கள் 2. மகாபலிபுரம்
c) முகமது பின் துக்ளக் 3. தஞ்சாவூர்
d) சோழர்கள் 4. தேவகிரி
a b c d
A) 2 1 4 3
B) 2 1 3 4
C) 2 3 1 4
D) 1 2 4 3
194. ரயத்வாரி முறையில் யாருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது?
A) ஜமீன்தார்கள்
B) விவசாயிகள்
C) கிராம அலுவலர்கள்
D) முக்டம்தார்கள்
195. தல சுயாட்சி முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
A) கானிங்பிரபு
B) ரிப்பன் பிரபு
C) கர்சன் பிரபு
D) மவுண்ட்பேட்டன் பிரபு
196. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்
A) ஏ.ஓ.ஹுயூம்
B) பி.ஜி. திலகர்
C) எம்.ஜி.ரானடே
D) டபுள். யூ.சி. பானர்ஜி
197. இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்
A) பாலகங்காதர திலகர்
B) பி.ஆர். அம்பேத்கார்
C) ராஜாராம் மோகன் ராய்
D) விவேகானந்தர்
198. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் எது?
A) எட்டயபுரம்
B) சென்னை
C) பாண்டிச்சேரி
D) திருநெல்வேலி
199. இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர்
A) பக்கிம் சந்திர சாட்டர்ஜி
B) ரவீந்திரநாத் தாகூர்
C) சுபாஷ் சந்திர போஸ்
D) சரோஜினி நாயுடு
200. இந்தியா சார்பில் பஞ்சசீல கொள்கையில் கையெழுத்திட்டவர்
A) காந்திஜி
B) இந்திராகாந்தி
C) ஜவஹர்லால் நேரு
D) லால் பகதூர் சாஸ்திரி
201. வங்காளத்தில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர்
A) இராபர்ட் கிளைவ்
B) வாரன் ஹேஸ்டிங்ஸ்
C) வெல்லெஸ்லி பிரபு
D) காரன் வாலிஸ் பிரபு
202. நிரந்தர நிலவருவாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A) கி.பி.1786
B) கி.பி. 1788
C) கி.பி 1793
D) கி.பி.1798
203. முகலாயர் காலத்தில் சிறப்பாக நடந்த தொழில் எது?
A) உலோகம்
B) பட்டு
C) துணி வகைகள்
D) சாயம் பூசுதல்
204. சிவாஜியின் ஆசிரியர்
A) தெனாலி ராமன்
B) ராமதாஸ்
C) தாதாஜி கொண்டதேவ்
D) அப்ஸல்கான்
205. சிவாஜி முதன் முதலில் எந்தக் கோட்டையை கட்டினார்?
A) கோபா
B) புரந்தர்
C) ராய்கர்
D) கொங்கன்
206. தாதாஜி கொண்டதேவ் என்பவர் யார்?
A) சிவாஜியின் தந்தை
B) சிவாஜியின் தாய்மாமன்
C) சிவாஜியின் பாதுகாவலர்
D) பேஷ்வா
207. கங்க மரபை முடிவுக்கு கொண்டு வந்தவர்
A) கனிஷ்கர்
B) சந்திரகுப்தா
C) சமுத்ரகுப்தா
D) வாசுதேவா
208. அலகாபாத் கல்தூண் கல்வெட்டு யார் வரலாற்றை கூறுகிறது?.
A) அசோகா
B) ஸ்ரீகுப்தா
C) சந்திர குப்தா
D) சமுத்திர குப்தா
209. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) பல்லவர்கள் -ஒற்றைக்கல் ரதங்கள்
B) ஆரியபட்ட -காந்தாரக்கலை
C) குப்தர்கள் -பாரசீகக்கலை
D) குஷானர்கள் -கட்டுமானக் கோயில்கள்
210. இந்தியாவில் பழமை பொருந்திய பேரரசு எது?
A) மௌரியர்
B) குப்தர்
C) வர்தனர்
D) குஷானப் பேரரசு
211. குஷானர் வம்சத்தின் சிறந்த அரசர்
A) குவிஷ்கர்
B) கனிஷ்கர்
C) புஷ்யர்
D) காமரூபர்
212. பழங்கால துறைமுக பட்டிணமான புகார் எந்த நதியில் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது?
A) வைகை
B) காவேரி
C) தென் பெண்ணாறு
D) துங்கபத்திரா
213. அறிவுக்கும் நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற தெனாலிரா மன் எந்த தென்னிந்திய அரசரோடு தொடர்புடையவர்?
A) இரண்டாம் புலிகேசி
B) கிருஷ்ணதேவராயர்
C) திருமலை நாயக்கர்
D) முதலாம் ராஜராஜன்
214. இந்துக்களிடமிருந்து டெல்லி சுல்தானியர்கள் கற்றுக் கொண்டு தங்கள் கலைப்பணியில் உபயோகித்துக் கொண்ட அலங்கார சின்னங்கள் எவை?
I. மணி
II. தாமரை
III. பூவேலைகள்குறியீடுகள்:
IV. சுவஸ்திகா சின்னம்
A) II, III மற்றும் IV
B) I, மற்றும் III
C) III மற்றும் IV
D) I, II மற்றும் IV
215. எது சரியான விதத்தில் பொருத்தப்படவில்லை?
A) குதுப்மினார் -ஐபெக் மற்றும் இல்துத்மிஷ்
B) தாய்தின்கா ஜோபரா- இப்ரஹிம் லோடி
C) அலி தர்வாஜா- அலாவுதின் கில்ஜி
D) சிவப்பு அரண்மனை-பால்பன்
216. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A) கி.பி. 1526
B) கி.பி. 1556
C) கி.பி. 1761
D) கி.பி. 1762
217. ஜாதக் கதைகள் எந்த பழமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது?
A) பாலி
B) பிராகிருதம்
C) சமஸ்கிருதம்
D) தமிழ்
218. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:
I. புத்தரின் இயற்பெயர். சித்தார்த்தர்
II. புத்தர்; பலியிடுதல், சடங்குகள், ஆகிய பழக்கங்களை எதிர்த்தார்
III. எண் வழிகள், அவரால் போதிக்கப்பட்டது
IV. அவர் உருவவழிபாட்டை ஆதரித்தார்.
இக்கூற்றுகளில்,
A) I, II மற்றும் III சரியானவை
B) I, II மற்றும் IV சரியானவை
C) II, III மற்றும் IV சரியானவை
D) I, III மற்றும் IV சரியானவை
219. மகாவீரர் பிறந்த இடம்
A) வைசாலி
B) பாடலிபுத்திரம்
C) பீகார்
D) கயா
220. அசோகர் எந்த பெயரில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்?
A) சக்கரவர்த்தி
B) தர்ம தேவா
C) தர்மகீர்த்தி
D) பிரியதர்சி
221. லண்டனில் நடைபெற்ற மூன்றாவது வட்டமேஜை மாநாட்டின் காலம்
A) 1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
B) 1933 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
C) 1934 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
D) 1935 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
222. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதலாவது வைஸ்ராயும் யார்?
A) டல்ஹௌசி
B) எல்ஜின் பிரபு
C) கானிங் பிரபு
D) வாரன் ஹேஸ்ட்டிங்ஸ்
223. லால் பகதூர்’ சாஸ்திரி பிரதமராக வருவதற்குமுன் பிரதமராக இருந்து இறந்தவர்
A) இந்திராகாந்தி
B) ராஜீவ் காந்தி
C) ஜவஹர்லால் நேரு
D) வல்லபாய் படேல்
224. காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி என்ற இடத்திற்கு புறப்பட்ட நாள்
A) 1930ம் ஆண்டு, மார்ச் 12ம் நாள்
B) 1931ம் ஆண்டு, மார்ச் 12ம் நாள்
C) 1932ம் ஆண்டு, மார்ச் 12ம் நாள்
D) 1933ம் ஆண்டு, மார்ச் 12ம் நாள்
225. திருப்பூர் குமரன் என்பவர்
A) ஆற்காடு நவாபின் பிரதிநிதி
B) திப்பு சுல்தானின் பிரதிநிதி
C) தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்
D) சட்டசபை உறுப்பினர்
226, பிட் இந்திய சட்டம் கட்டுப்பாட்டு குழுவிற்கு
A) ஆறு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
B) எட்டு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
C) பத்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
D) பதினைந்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
227. சைமன் குழு நியமிக்கப்பட்டது
A) நவம்பர், 1927
B) நவம்பர், 1928
C) நவம்பர், 1929
D) நவம்பர், 1930
228. மலை வாசஸ்தலங்களின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
A) சிம்லா
B) கொடைக்கானல்
C) காஷ்மீர்
D) உதக மண்டலம்
229. சைமன் குழு லாகூருக்கு வருகை புரிந்த நாள்
A) 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 20
B) 1928 ஆம் ஆண்டு நவம்பர் 20
C) 1928 ஆம் ஆண்டு டிசம்பர் 20
D) 1928 ஆம் ஆண்டு ஜூலை 20
230. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) 1905-பூனா ஒப்பந்தம்
B) 1935-இரண்டாவது வட்டமேஜை மாநாடு
C) 1947-இந்திய சுதந்திர சட்டம்
D) 1950- சைமன் குழு
231. ராம்சே மெக்டொனால்டு தன்னுடைய புகழ் பெற்ற வகுப்பு வாத பிரதிநிதித்துவத்தை வழங்கியது
A) 1932ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாள்
B) 1935ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாள்
C) 1937ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாள்
D) 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாள்
232. எந்த ஆண்டில் காங்கிரஸ் ஸ்வராஜ்யம் அல்லது தன்னாட்சியை தனது முடிவான கொள்கையாக அறிவித்தது?
A) 1905
B) 1928
C) 1942
D) 1906
233. கீழ்க்கண்ட சொற்றொடர்களை ஆராய்க:
I. கிரிமினல் சட்டம் -1907
II. வெடிபொருள் தடுப்பு சட்டம் -1908
III. செய்தித்தாள் சட்டம் – 1908
IV. இந்தியபிரஸ் சட்டம்-1910
குறியீடுகள்:
A) I மட்டும் சரியானது
B) எல்லாம் சரியானவை
C) I, II மற்றும் IV சரியானவை
D) 1 மற்றும் II சரியானவை
234. எந்த ஆண்டில் டெல்லி தர்பார் வங்கப் பிரிவினையை ரத்து செய்தது?
A) 1909
B) 1910
C) 1911
D) 1914
235. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
A) வி.டி.சவர்கார்சிப்பாய் கலகம் 1857
B) வல்லபாய் படேல்முதல் பிரதம மந்திரி
C) அன்னிபெசன்ட்ஆரிய சமாஜம்
D) சி.ஆர்.தாஸ்சி.ஆர்.திட்டம்
236, சைமன் கமிஷனை எதிர்த்து லாலாலஜபதி ராய் தலைமையில் ஊர்வலம் நடத்திய கட்சியின் பெயர் என்ன?
A) இந்திய தேசிய காங்கிரஸ்
B) முஸ்லீம் லீக்
C) இந்திய ஜனநாயக கட்சி
D) ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ஜனநாயக கட்சி
237. முதல் இந்திய சுதந்திரப் போர் எந்த வருடம் நடைபெற்றது?
A) 1857
B) 1947
C) 1820
D) 1900
238. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவி
A) அன்னிபெசன்ட்
B) சரோஜினி நாயுடு
C) விஜயலட்சுமி பண்டிட்
D) கஸ்தூர்பா காந்தி
239. இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
A) சக்கரவர்த்தி சி. இராஜகோபாலாச்சாரியார்
B) ஒ.பி.ராமசாமி செட்டியார்
C) பவநகர் மஹாராஜா
D) ஜெய சாம்ராஜ்ய உடையார்
240. இந்தியாவின் முன்னாள் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்தவர் யார்?
A) சுபாஷ் சந்திர போஸ்
B) மோதிலால் நேரு
C) சர்தார் வல்லபாய் படேல்
D) வ.உ.சிதம்பரம் பிள்ளை
241. உப்பு சத்யாகிரகத்தின் போது தமிழ் நாட்டில் வேதாரண்யத்திற்கு சென்றவர்
A) கு.காமராஜ்
B) சி.ராஜாஜி
C) ஈ.வே.ரா
D) டி.எம்.நாயர்
242. இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோட்டை வகுத்தவர்
A) மவுண்ட்பேட்டன் பிரபு
B) சர் சிரில் ரெட்கிளிப்
C) கிரிப்ஸ்
D) லாரன்ஸ்
243. ‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கத்தை கூறியவர்.
A) லாலா லஜபதிராய்
B) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
C) திலகர்
D) காந்திஜி
244. இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர்
A) காந்திஜி
B) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
C) பால கங்காதரதிலகர்
D) பட்டேல்
245 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
A) 1917
B) 1918
C) 1919
D) 1920
246. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு
A) 1940
B) 1930
C) 1942
D) 1945
247. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
A) சி.ஆர்.ரெட்டி
B) ஈ.வெ.ராமசாமி நாயக்கர்
C) கு.காமராஜ்
D) சி.எம். அண்ணாதுரை
248. ‘நவ ஜீவன் மற்றும் யங்இந்தியா’ என்ற இரு பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?
A) மகாத்மா காந்தி
B) அரவிந்த் கோஷ்
C) சுபாஷ் சந்திரபோஸ்
D) மோதிலால் நேரு
249. மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்ற ஆண்டு
A) 1929
B) 1928
C) 1927
D) 1930
250. ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர்
A) திலகர்
B) பங்கிம் சந்திர சாட்டர்ஜி
C) ரவிந்திரநாத் தாகூர்
D) சரோஜினி நாயுடு
251. மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்
A) பி.ஆர். அம்பேத்கார்
B) பட்டேல்
C) ஜவஹர்லால் நேரு
D) எம்.எம்.மாளவியா
252. இந்தியாவை இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கும் திட்டத்தினை 1947-ஜுன் மாதத்தில் கொண்டு வந்தவர்
A) காந்திஜி
B) வேவல் பிரபு
C) மவுண்ட்பேட்டன் பிரபு
D) நேரு
253. இந்தியாவின் முதுபெரும் மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
A) ஜி.கே. கோகலே
B) ஜெயபிரகாஷ் நாராயணன்
C) ராஜாஜி
D) தாதாபாய் நௌரோஜி
254. இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்தவர்
A) டபிள்யூ. சி. பானர்ஜி
B) மகாத்மா காந்தி
C) ஏ.ஓ. ஹியூம்
D) அன்னிபெசன்ட்
255. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராய் இருந்த முதல் இந்திய பெண்மணி
A) விஜயலட்சுமி பண்டிட்
B) சரோஜினி நாயுடு
C) சுசேதா கிருபளானி
D) கமலா நேரு
256. மாநிலங்களை மாற்றி அமைக்கும் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A) 1951
B) 1953
C) 1955
D) 1957
257. இந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பிய நாட்டினர்
A) ஹாலாந்து
B) போர்ச்சுகல்
C) ஸ்பெயின்
D) ஸ்வீடன்
258. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
A) கி.பி. 1757
B) கி.பி. 1752
C) கி.பி. 1755
D) கி.பி. 1751
259. ஆரிய சமாஜத்தை தொடங்கியவர்
A) இராஜாராம் மோகன்ராய்
B) சுவாமி தயானந்த்
C) சுவாமி விவேகானந்தர்
D) அன்னிபெசன்ட்
260. உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்
A) இராஜாராம் மோகன்ராய்
B) சுவாமி தயானந்த்
C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
D) வெல்லெஸ்லி பிரபு
261. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) அசோகர் 1. மகாயானம்
b) கனிஷ்கர் 2. தர்மம்
c) கல்ஹணர் 3. யாத்ரிகர்களின்இளவரசன்
d) யுவான் சுவாங் குறியீடுகள் 4. ராஜதரங்கினி
abcd
A) 2143
B) 1234
C) 2134
D) 1243
262. மூன்றாவது புத்த சங்கத்தை கூட்டியவர்
A) அசோகர்
B) கனிஷ்கர்
C) ஹர்ஷர்
D) இரண்டாம் புலிகேசி
263. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A) மத்த விலாச பிரகசனம்-மெகஸ்தனிஸ்
B) ஆமுகக்த மால்யதா-மகேந்திரவர்மன்
C) இண்டிகா-கிருஷ்ண தேவராயர்
D) பகவத்கீதா-வேதவியாசர்
264. பாமினி அரசை தோற்றுவித்தவர்
A) மாலிக்காபூர்
B) புக்கர்
C) ஹரிஹரா
D) இவர்களில் யாருமில்லை
265. டில்லி சுல்தானியம் ஏற்பட காரணமாய் இருந்தவர்
A) கோரி முகமது
B) கஜினி முகமது
C) குத்புதின் ஐபெக்
D) இல்துத்மிஷ்
266. அங்காடிச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்
A) இல்டுட்மிஷ்
B) பால்பன்
C) கஜினிமுகமது
D) அலாவுதின் கில்ஜி
267. டில்லியின் முதலாவது சுல்தான்
A) குத்புதின் ஐபெக்
B) பால்பன்
C) இல்டுட்மிஷ்
D) கோரி முகமது
268. பாபர் நாமாவை எழுதியவர்
A) அல்பருனி
B) அபுல்பாசல்
C) பாணர்
D) பாபர்
269. இசையை ஆதரிக்காத முகலாய மன்னன்
A) பாபர்
B) ஹீமாயூன்
C) ஷாஜகான்
D) ஔரங்கசீப்
270. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. அக்பர் ஒரு மதசகிப்பாளர்
II. அக்பர் இராசபுத்திரர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்
III. அக்பர் முஸ்லீம் அல்லாதவர்களை தண்டித்தார்
IV. அக்பர் ஒரு புதிய சமயத்தை அறிமுகப்படுத்தினார்
இவற்றில்,
A) I மட்டும் சரியானது
B) III மட்டும் சரியானது
C) II மற்றும் III சரியானது
D) I,II மற்றும் IV சரியானது
271. அசோகர் மிகச் சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்’ ஏனெனில் அவர்
A) மௌரியர்களில் வெற்றிகரமான பேரரசர்
B) கலிங்கப் போரில் வெற்றி கண்டார்
C) புத்தரை பகவத் என அழைத்தார்
D) புத்த, தர்மா ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு அதன்வழி நடந்தார்
272. கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை?
A) அசோகர் – தர்மா
B) கனிஷ்கர் – மகாயாணம்
C) யுவான் சுவாங் – யாத்ரிகர்களின் இளவரசன்
D) பாணர் – கொள்கைகள்
273. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்
A) அசோகர்
B) பாணர்
C) கனிஷ்கர்
D) சமுத்திர குப்தர்
274. ஹர்ஷ சரிதையை எழுதியவர்
A) பாணர்
B) கல்ஹணர்
C) காளிதாஸ்
D) யுவான்சுவாங்
275. அர்த்த சாஸ்திரம் என்பது
A) பொருளாதார வளர்ச்சி பற்றிய நூல்
B) மௌரிய அரசியலை பற்றியது
C) ஆட்சியியலின் கோட்பாட்டையும், செயல் முறையையும் கூறும் நூல்
D) வெளி நாட்டு கொள்கை பற்றி கூறும் நூல்
276. காந்தாரக்கலை தோன்றிய ஆட்சிக் காலம்
A) ஹர்ஷர் காலம்
B) அசோகர் காலம்
C) கனிஷ்கர் காலம்
D) சந்திர குப்த மௌரியர் காலம்
277. குழந்தை திருமண முறை இவர்களது காலத்தில் தோன்றியது
A) குஷாணர் காலம்
B) மௌரியர் காலம்
C) கனிஷ்கர் காலம்
D) வேத காலம்
278. மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியவை
A) பழங்கால இந்திய அரச வம்சங்கள்
B) சமண சமயத்தின் இரு பிரிவுகள்
C) இந்திய வரலாறு பற்றிக் கூறும் இலங்கை வரலாற்று நூல்கள்
D) இந்து சமய நூல்கள்
279. இந்திய நாட்டின் நெப்போலியன் என்று புகழப்பட்ட குப்த அரசர் பெயர்
A) ஸ்கந்த குப்தர்
B) சமுத்திர குப்தர்
C) ஸ்ரீகுப்தர்
D) முதலாம் சந்திர குப்தர்
280. சங்க காலத் தமிழகம் தொடர்பாக கீழ்க்கண்ட கூற்றுகளில் எது” தவறானது?
A) நாடு ஐந்து இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது
B) மக்கள் காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்
C) சமுதாயம் சமய சார்பற்றதாக இருக்கவில்லை
D) பெண்களுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டது
281. சாதவாகனர் ஆட்சிப் பகுதி
A) கர்நாடகம்
B) ஆந்திரப் பிரதேசம்
C) காஞ்சி
D) விஜயநகரம்
282. நாலந்தா பல்கலைக்கழகம் சிறப்புற்ற காலம்
A) மௌரியர் காலம்
B) சுங்கர் காலம்
C) குஷாணர் காலம்
D) வர்த்தனர் காலம்
283. குகைவகை கோயில்கள் தமிழ் நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்
A) சோழர்கள்
B) பாண்டியர்கள்
C) பல்லவர்கள்
D) விஜய நகர அரசர்கள்
284. இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை காலவரிசைப்படி குறிப்பிடுக
A) பாஹியான், மார்க்கோபோலோ, யுவாங் சுவாங், இட்சிங்
B) மார்க்கோபோலோ, பாஹியான், யுவாங் சுவாங், இட்சிங்
C) யுவாங்சுவாங், பாஹியான், இட்சிங், மார்க்கோபோலா
D) இட்சிங், யுவாங்சுவாங், மார்க்கோபோலோ, பாஹியான்
285. பிற்கால சோழர்களில் சிறந்த சோழ மன்னர்
A) இராஜராஜசோழன்
B) இராஜேந்திர சோழன்
C) கரிகாலன்
D) குலோத்துங்கன்
286. கி.பி. 1336ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி
A) தக்காணத்தில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது
B) தக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது
C) விஜய நகர அரசால் முஸ்லீம்கள், தோற்கடிக்கப்பட்டது
D) தைமூருடைய படையெடுப்பு
287. பிளாசிப் போர் ஏற்பட்டது
A) பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயருக்குமிடையே
B) பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே
C) ஆங்கிலேயருக்கும், இந்தியர்களுக்குமிடையே
D) இவர்கள் யாருடனுமில்லை
288,1857 ஆம் ஆண்டு இந்தியப் புரட்சி
A) முதல் தேசியப் போர்
B) மதப்போர்
C) இந்திய சிப்பாய்களின் கலகம்
D) அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கது
289. முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர்
A) ஜெயச் சந்திரர்
B) அனந்த பாலர்
C) பிருதிவிராஜ்
D) லலித் ஆதித்யா
290. முகலாயப் பேரரசின் கடைசி அரசர்
A) முதலாம் பகதூர்ஷா
B) ஔரங்கசீப்
C) இரண்டாம் பகதூர்ஷா
D) முஜாபர்ஷா
291. கடல் மார்க்கமாக இந்திய நாட்டிற்குள் வந்த முதல் ஐரோப்பியர்
A) போர்ச்சுகீசியர்கள்
B) பிரெஞ்சுக்காரர்கள்
C) ஆங்கிலேயர்கள்
D) டச்சுக்காரர்கள்
292. வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கில்லிடப்பட்ட இடம்
A) பாளையம் கோட்டை
B) கயத்தாறு
C) வேலூர்
D) சென்னை
293. இராணி மங்கம்மாள் ஆண்டது
A) தஞ்சையிலிருந்து
B) மதுரையிலிருந்து
C) செஞ்சியிலிருந்து
D) வேலூரிலிருந்து
294. கர்சன் பிரபுவின் ஆட்சிப் புகழுக்கு காரணம்
A) நிர்வாக சீர்திருத்தங்கள்
B) விவசாய வளர்ச்சி
C) வங்கப் பிரிவினை
D) பழமையான நினைவு சின்னங்களை பாதுகாத்தல்
295. இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர் யார்?
A) காந்திஜி
B) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
C) பாலகங்காதர் திலக்
D) மோதிலால் நேரு
296. காந்தி-இர்வின் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A) 1930
B) 1931
C) 1932
D) 1940
297. இந்திய அரசு சட்டம், 1919 குறிப்பிடுவது
A) மாகாண சுயாட்சி
B) தனிப்பட்ட வாக்கமைப்பு
C) இந்தியப் பிரிவினை
D) இரட்டை ஆட்சி
298. இந்திய அரசாங்க சட்டம் 1935 குறிப்பிடுவது
A) மாகாண சுயாட்சி
B) தனிப்பட்ட வாக்கமைப்பு
C) இந்தியப் பிரிவினை
D) இரட்டை ஆட்சி
299. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) மவுண்ட்பேட்டன் பிரபு 1. வரைவு குழுதலைவர்
b) டாக்டர் ராஜேந்திர பிரசாத் 2. முதல் இந்தியப் பிரதமர்
c) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் 3.அரசியலைமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்
d) ஜவஹர்லால் நேரு 4. இங்கிலாந்து தலைமை ஆளுநர்
e) டாக்டர் கே.எம்.முன்ஷி 5.அரசியலமைப்பு நிர்ணயசபை தலைவர்
குறியீடுகள்
a b c d e
A) 4 5 1 2 3
B) 4 1 3 2 5
C) 4 1 5 2 3
D) 4 3 5 2 1
300. வாகாபியர் என்போர் யார்?
A) இஸ்லாமியர்கள்
B) கிறிஸ்தவர்கள்
C) இந்துக்கள்
D) சீக்கியர்கள்
301. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A) 1861
B) 1885
C) 1892
D) 1902
302. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் குறிப்பிடுவது
A) மாகாண சுயாட்சி
B) இந்தியப் பிரிவினை
C) இரட்டை ஆட்சி
D) தனிப்பட்ட வாக்கமைப்பு
303. பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்படாதது எது?
A) அமிர்த பசார் பத்திரிக்கை – கல்கத்தா
B) டைம்ஸ் ஆஃப் இந்தியா – லாகூர்
C) தி இந்து – சென்னை
D) வாய்ஸ் ஆஃப் இந்தியா – பஞ்சாப்
304. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து தலைவர் கொண்ட காங்கிரஸ்
A) கோகலே
B) நேரு
C) அன்னிபெசன்ட்
D) காந்தி
305. இஸ்லாமியருக்கு தனிநாடு தேவை என்றவர்
A) நவாப் சலிம் முல்லா
B) அலி சகோதரர்கள்
C) ஜின்னா
D) ஜவஹர்லால் நேரு
306. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட நபர்
A) கலெக்டர் ஜாக்சன்
B) ஜெனரல் டையர்
C) கலெக்டர் லூசிங்டன்
D) ஜெனரல் கரியப்பா
307. காந்தி எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தது
A) ஆங்கிலேயரை எதிர்க்க
B) மதுவிலக்க அமலாக
C) வகுப்புவாதத்தை எதிர்க்க
D) தீண்டாமை
308. சுயராஜ்யம் என்ற சொல்லை 1906 ஆம் ஆண்டு முதன் முதலில் பயன்படுத்திய இந்தியர் யார்?
A) பி. ஜி. திலக்
B) தாதாபாய் நௌரோஜி
C) கோபால கிருஷ்ண கோகலே
D) லாலா லஜ்பத்ராய்
309. வெள்ளையனே வெளியேறு என்ற முடிவை இந்திய தேசிய காங்கிரஸ் எந்த மாநாட்டில் எடுத்தது?
A) லாகூர் மாநாடு
B) பாம்பே மாநாடு
C) கல்கத்தா மாநாடு
D) லக்னோ மாநாடு
310. ஆங்கில அரசுக்கு எதிராக செய் அல்லது ‘செத்துமடி என குரல் கொடுத்தது யார்?
A) ஜின்னா
B) நேதாஜி
C) காந்திஜி
D) சரோஜினி நாயுடு
311. கீழே கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துக
1. சைமன் கமிஷன்
2. வட்டமேஜை மாநாடுகள்
3. நேரு அறிக்கை
4. பூனா ஒப்பந்தம்
சரியான வரிசை:
A) 3, 1, 4, 2
B) 1, 3, 2, 4
C) 4, 3, 2, 1
D) 2, 3, 4, 1
312. தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டதன் காரணம்
A) உப்பு சத்தியாகிரகத்திற்காக
B) முஸ்லீம் பிரச்சனைக்காக
C) பூரண சுதந்திரம் அடைவதற்காக
D) வெளிநாட்டு பொருட்களின் மீது மறுப்பை தெரிவிப்பதற்காக
313. ஜாலியன வாலாபாக் கொடூரம் நடைபெற்ற ஆண்டு
A) 1927
B) 1915
C) 1919
D) 1937
314. இந்திய சுதந்திர சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
A) 1935
B) 1947
C) 1950
D) 1942
315. எந்த நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியையும் முஸ்லீம் லீக் கட்சியையும் ஒன்றாக இணைத்தது?
A) கிலாபத் இயக்கம்
B) சுதேசி இயக்கம்
C) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
D) உப்பு சத்தியாகிரகம்
316. இவர்களில் ஒரே பதவியை இரு வேறுபட்ட காலங்களில் வகித்தவர் யார்?
A) இராஜாஜி
B) டி.பிரகாசம்
C) ஒ.பி. ராமசாமி ரெட்டியார்
D) பி.எஸ். குமாரசாமி ராஜா
317. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) உப்பு சத்தியாக்கிரகம் 1. நேரு
b) பெண் விடுதலை 2. இந்திராகாந்தி
c) பஞ்சசீல கொள்கை 3. பெரியார்
d) இருபது அம்சத்திட்டம்4. காந்திஜி
குறியீடுகள்
a b c d
A) 1 2 3 4
B) 2 3 1 4
C) 4 3 1 2
D) 4 3 2 1
318. சிந்து சமவெளி நாகரீகம் என்பது
A) புதிய கற்காலத்தை சேர்ந்தது
B) இரும்பு காலத்தை சேர்ந்தது.
c) வெண்கல காலத்தை சேர்ந்தது
D) இவற்றில் எதுவுமில்லை
319. சபா, சமிதி அமைப்புகளை உருவாக்கியவர்
A) ஆரியர்கள்
B) திராவிடர்கள்
C) பல்லவர்கள்
D) சோழர்கள்
320. குப்தர்களின் பரம்பரையை தோற்றுவித்தவர்
A) ஸ்ரீகுப்தர்
B) சந்திரகுப்தர்
C) குமார குப்தர்
D) விஷ்ணு குப்தர்
321. இந்திய நெப்போலியன் என்ற பட்டம் பெற்ற மன்னர்
A) சந்திர குப்த விக்ரமாதித்தன்
B) அசோகர்
C) சமுத்திர குப்தர்
D) கனிஷ்கர்
322. இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் யார்?
A) யுவான் சுவாங்
B) கௌடில்யர்
C) ராஜாதோடர்மால்
D) வித்யாரண்ய
323. கீழ்க்காணும் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?
A) காஞ்சி-சோழர்
B) வஞ்சி-சேரர்
C) மதுரை-பல்லவர்
D) தஞ்சாவூர்-பாண்டியர்
324. பின்வரும் சொற்றொடர்களில் எது சரியானது?
A) கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து முஸ்லீம்களின் ஆட்சியை நிறுவ நாடினார்
B) கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து இஸ்லாம் சமயத்தை பரப்ப எண்ணினார்
C) கஜினி முகமதுவின் நோக்கம் படையெடுப்பின் மூலம் இந்தியாவை கொள்ளையடித்து செல்வ செழிப்படைவதேயாகும்
D) இவைகளில் எதுவுமில்லை
325. அடையாள பணத்தை அறிமுகப்படுத்தி தோல்வி கண்ட டெல்லி சுல்தானிய மன்னர்
A) இல்டுட்மிஷ்
B) பால்பன்
C) முகமது பின் துக்ளக்
D) அலாவுதீன் கில்ஜி
326. விஜய நகரப் பேரரசு தோன்ற காரணமாக இருந்தவர்.
A) சாணக்கியர்
B) தாதாஜி கொண்ட தேவ்
C) வித்யாரண்ய
D) பைராம்கான்
327. அக்பரின் பல்வேறு வகை செயல்பாடுகளின் முக்கிய நோக்கம்
A) இந்து, முஸ்லீம் ஒற்றுமை
B) முகலாயப் பேரரசை வலிமைப்படுத்துவது
C) சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அளிப்பது
D) ஒரு புதிய மதத்தை தோற்றுவிப்பது
328. கீழே உள்ளதில் பொருத்தமானது எது?
A) அக்பரின் மதம்-தீன் இலாஹி
B) ஹீமாயூன்-அதிர்ஷ்டசாலி மன்னன்
C) ஷெர்ஷா சூரி-மொகலாய மன்னர்
D) நூர்ஜஹான்-ஜஹாங்கீரின் முதல் மனைவி
329. இரண்டாம் தரெயின் போரில் முகமது கோரியுடன் சண்டையிட்ட ராஜபுத்திர மன்னர்
A) ராணா சங்கர்
B) ஜெயச்சந்திரன்
C) பிருதிவிராஜ்
D) கடோத்கஜன்
330.இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மொகலாய மன்னர்
A) ஜஹாங்கீர்
B) அக்பர்
C) ஔரங்கசீப்
D) ஷாஜகான்
331. முதல் கர்நாடகப் போர் நடந்தது
A) 1749 – 54
B) 1744 – 48
C) 1756- 63
D) 1767 – 69
332. இராஜாராம் மோகன்ராய் நிறுவிய சமாஜம்
A) ஆரிய சமாஜம்
B) பிரார்த்தனா சமாஜம்
C) பிரம்ம சமாஜம்
D) தியோஸ்பிகல் சொஸைட்டி
333. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட ஆண்டு
A) 1835
B) 1885
C) 1906
D) 1875
334. தலசுய ஆட்சி வளர்ச்சியுற்ற காலம்
A) மேயோ பிரபு
B) ரிப்பன் பிரபு
C) கானிங் பிரபு
D) டல்ஹௌசி பிரபு
335. இந்திய கல்விக்காக எந்த சட்டம் நிதி உதவி வழங்கியது?
A) 1813ம் ஆண்டு பட்டைய சட்டம்
B) 1833ம் ஆண்டு பட்டைய சட்டம்
C) 1853ம் ஆண்டு பட்டைய சட்டம்
D) 1858ம் ஆண்டு கவுன்சில் சட்டம்
336. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) 1909 1. சௌரி சௌராவன் முறை
b) 1919 2. சைமன் தூதுக்குழு அமைப்பு
c) 1927 3. இந்திய அரசுச்சட்டம்
d) 1922 4. இந்திய கவுன்சில்சட்டம்
குறியீடுகள்
a b c d
A) 3 1 2 4
B) 4 3 2 1
C) 4 2 3 1
D) 1 3 4 2
337. பின்வரும் நபர்களை காலவரிசைப்படி எழுதுக:
I. ரிப்பன் பிரபு
II. கர்ஸான் பிரபு
III. டல்ஹௌசி பிரபு
IV. கானிங் பிரபு
குறியீடுகள்:
A) III, II, IV, I
B) III, IV, II, I
C) III, IV, I, II
D) II, lll, IV, I
338. வங்காளப் பிரிவினையை ரத்து செய்த ஆண்டு
A) கி.பி.1907
B) கி.பி.1909
C) கி.பி.1911
D) கி.பி.1913
339. இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு
A) கி.பி.1910
B) கி.பி.1911
C) கி.பி.1912
D) கி.பி.1909
340. ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த மக்கள் மீது சுடுவதற்கு கட்டளையிட்டவர் யார்?
A) ஜெனரல் டயர்
B) நீதிபதி ரௌலட்
C) செம்ஸ் போர்டு பிரபு
D) மாண்டேகு
341. சைமன் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்த வருடம்
A) கி.பி.1925
B) கி.பி.1926
C) கி.பி.1927
D) கி.பி.1928
342. சைமன் தூதுக்குழுவை காங்கிரஸ் தலைவர்கள் பகிஷ்கரித்ததற்கு காரணம்
A) அது வெறும் கண்துடைப்பென்று அவர்கள் கருதினர்
B) தூதுக்குழுவில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர்
C) தூதுக்குழுவில் இருந்த எல்லாருமே ஆங்கிலேயர்களாக இருந்தனர்
D) அது இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யுமென்று அவர்கள் கருதவில்லை
343. சுதந்திரம் என்பது நமது பிறப்புரிமை; அதை நாம்அடைந்தே தீருவோம் ; என்று முழங்கியவர் யார்?
A) லாலா லஜபத்ராய்
B) மகாத்மா காந்தி
C) ஜவஹர்லால் நேரு
D) பாலகங்காதர திலகர்
344. இந்திய தேசிய முஸ்லீம் லீக்கை நிறுவியவர்கள்
A) ஆகாகானும், நவாப் சலிமுல்லாவும்
B) முகமது அலியும், சௌகத் அலியும்
C) முகமது அலி ஜின்னாவும், ஆகாகானும்
D) சர். சையது அகமது கானும், நவாப் சலி முல்லாவும்
345. பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை திரு.ஜின்னா முன் வைத்த வருடம்
A) கி.பி.1924
B) கி.பி.1940
C) கி.பி.1946
D) கி.பி.1935
346. வகுப்பு வாத இடஒதுக்கீடு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதற்கு காரணம்
A) சத்தியாகிரக போராட்டம்
B) கடும் எதிர்ப்பு
C) காந்திஜியின் உண்ணாவிரதம்
D) சட்ட மறுப்பு இயக்கம்
347. வெள்ளையனே வெளியேறு இயக்கம் கோரியது
A) இந்தியாவை விட்டு முஸ்லீம்கள் வெளியேறுதல்
B) ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுதல்
C) எல்லா வெளி நாட்டவருடைய வெளியேற்றம்
D) இவற்றில் எதுவுமில்லை
348. 1946-இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு தலைமை வகுத்தது
A) ஜவஹர்லால் நேரு
B) காந்திஜி
C) வல்லபாய் படேல்
D) சி.இராஜகோபாலாச்சாரி
349. மூன்றாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர்
A) காந்திஜி
B) ஜவஹர்லால் நேரு
C) சுபாஷ் சந்திரபோஸ்
D) இவர்களில் எவருமில்லை
350. பின்வரும் நிகழ்ச்சிகளில் 1942 ஆம் ஆண்டுடன் தொடர்புடையது
A) சைமன் தூதுக்குழு
B) வேவல் திட்டம்
C) கிரிப்ஸ் தூதுக்குழு
D) வகுப்புவாத பிரதிநிதித்துவம்
351. ஆரம்ப நிலையில் இந்திய தேசிய காங்கிரசுடன் ஆங்கிலேயரின் நடவடிக்கை
A) கடுமையாக இருந்தது
B) கருத்து வேற்றுமையுடன் விளங்கியது
C) தாராளத் தன்மையும், நட்பும் கொண்டு விளங்கியது
D) இவற்றில் எவையுமில்லை
352. வந்தே மாதரம் என்ற கோஷத்தை உருவாக்கியவர்
A) பங்கிம் சந்திர சாட்டர்ஜி
B) ரவிந்திர நாத் தாகூர்
C) இராஜாராம் மோகன்ராய்
D) சுபாஷ் சந்திர போஸ்
353. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A) அப்துல் கஃபார்கான்
B) காந்திஜி
C) தாதாபாய் நௌரோஜி
D) பக்ருத்தின் தி யாப்ஜி
354.கி.பி. 1905 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸின் ஆதிக்கம் செலுத்தியது
A) மிதவாதிகள்
B) தீவிரவாதிகள்
C) புரட்சியாளர்கள்
D) பகுத்தறிவாளர்கள்
355. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தது
A) சி.ஆர். தாஸும் ஜவஹர்லால் நேருவும்
B) மோதிலால் நேருவும், சி. ஆர். தாஸும்
C) பி.ஜி.திலக்கும், அன்னி பெசன்ட்டும்
D) சுபாஷ் சந்திரபோஸீம், சி.ஆர். தாஸும்
356. பூதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A) காந்தியடிகள்
B) ஜவஹர்லால் நேரு
C) வினோபாபாவே
D) பாலகங்காதர திலகர்
357. காந்திஜிக்கு ‘தேசப்பிதா’ என்று பட்டமளித்தவர் யார்?
A) ரவிந்திரநாத் தாகூர்
B) சுபாஷ் சந்திர போஸ்
C) ராஜாஜி
D) காமராஜர்
358. இந்தியாவில் எப்போது முதலாவதாக ஓட்டப்படக்கூடிய அச்சிடப் பெற்ற வில்லைகள் அஞ்சல் ஆரம்பிக்கப்பட்டது?
A) மார்ச் 31, 1774
B) அக்டோபர் 1, 1854
C) நவம்பர், 1902
D) ஜனவரி 1, 1956
359. மனுஸ்மிரிதி என்பது கீழ்க்கண்ட ஒன்றோடு தொடர்பு கொண்டுள்ளது
A) பொருளாதாரம்
B) அரசியல்
C) மாநில கிராப்டு
D) சட்டம்
360. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்தவில்லை?
A) மெகஸ்தனிஸ் – இண்டிகா
B) திரிபீடங்கள் – ஜைன சமயம்
C) இட்சிங் – ஜப்பானிய பயணி
D) நிக்கலோகாண்ட்டி – இத்தாலியப் பயணி
361. ஹரப்பா முத்திரைகள் இதனால் செய்யப்பட்டவை
A) சுட்டமண்
B) செம்பு
C) இரும்பு
D) ஈயம்
362.வேத கால நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம் ஏனென்றால், அவர்கள்
A) நிலங்களை பயிர் செய்தனர்
B) ஆடுமாடுகளை வளர்த்தனர்
C) மேய்ச்சல் வாழ்க்கை நடத்தினர்
D) கிராமங்களில் வாழ்ந்தவர்
363. மௌரியர்க்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்த முக்கிய நான்கு நிகழ்ச்சிகள் தரப்பட்டுள்ளன. அவை நிகழ்ந்த காலக்கிரம அடிப்படையில் அமைந்த சரியான வரிசையை காண்க:
A) மகாவீரர் பிறப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு, இராணியர் படையெடுப்பு, புத்தர் பிறப்பு
B) அலெக்ஸாண்டர் படையெடுப்பு, புத்தர் பிறப்பு, இராணியர் படையெடுப்பு, மகாவீரர் பிறப்பு
C) புத்தர் பிறப்பு, மகாவீரர் பிறப்பு, இராணியர் படையெடுப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு
D) இராணியர் படையெடுப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு, மகாவீரர் பிறப்பு, புத்தர் பிறப்பு
364. கூற்று(A): குப்தர் காலம் சமஸ்கிருத இலக்கியத்தின் மறுமலர்ச்சியை கண்டது.
காரணம் (R): குப்தர் காலம் அமைதி மற்றும் வளமான காலம்
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க:
A) (A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) உண்மை
365. முகமது பின்காசிம் சிந்துவை தாக்கிய ஆண்டு
A) கி.பி.710
B) கி.பி.711
C) கி.பி.712
D) கி.பி.715
366. சோழர்கள் காலத்தில் ஏராளமான இந்து கோயில்கள் உருவாக்கப்பட்டன. ஏனெனில்
A) சோழ அரசர்கள் கலை மற்றும் கட்டிட கலையை ஆதரித்தனர்
B) சோழர்கால சமுதாயத்தில் அமைதி நிலவியது
C) நாடு பொருளாதார செழிப்பு பெற்றிருந்தது
D) ஏராளமான கலைஞர்கள் இருந்தனர்.
367. மாலிக்காபூரின் தென்னிந்திய படையெடுப்புகளை சரியாக வரிசைப் படுத்துக:
I. மதுரை
II. வாரங்கல்
III. தேவகிரி
IV.துவாரக சமுத்திரம்
சரியான வரிசை:
A) II, III, I, IV
B) III, II, IV, I
C) IV, I, II, III
D) IV, III, I, II
368. இல்ட்டுமிஷ் சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
I . அவர், நிர்வாக ஸ்தாபனங்கட்கு அடித்தளம் அமைத்தார்
II. அவர், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், தலைசிறந்த கவிஞர்களையும், அறிஞர்களையும் அழைத்தார்
III. அவர் ஷியாக்களின் மீது நடவடிக்கை எடுத்தார்
IV. அவர், இந்தியாவில் குழந்தை முஸ்லீம் பேரரசை பாதுகாக்கவில்லை
குறியீடுகள்:
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் சரியானவை
369, பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பல்லவ அரசர்- 1. மங்களேசா
b) சாளுக்கிய அரசர் -2. விஜயாலயா
c) ராஷ்டிரகூட அரசர் -3. பரமேஷ்வரா II
d) சோழ அரசர் -4. தந்தி துர்கா
குறியீடுகள்
A) 2 4 1 3
B) 3 1 4 2
C) 4 2 3 1
D) 1 3 2 4
370. வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது அரச துரோக குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால்
A) அவர் ஆங்கில பாரம்பரியத்தை அவமதித்தார்
B) ஊழல்களில் திளைத்திருந்தார்
C) ராஜா நந்தகுமாரை தூக்கிலிட்டார். அவுத்பேகம்களை அவமதித்தார்
D) சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியுடன் ஒத்துழையாகாமலிருந்தது
371. பட்டியல் I -ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) வங்காளத்தில் இரட்டை அரசு – 1. காரன்வாலிஸ்
b) நிரந்தர நிலவரித்திட்டம் – 2. வெல்லஸ்லி
c) துணைப்படைத் திட்டம் – 3. பெண்டிங்
d) சதி ஒழிப்பு – 4.இராபர்ட் கிளைவ்
குறியீடுகள்
A) 4 1 2 3
B) 3 2 1 4
C) 1 4 3 2
D) 2 3 4 1
372. கர்சன் பிரபு இந்தியர்களினால் எப்பொழுதும் நினைக்கப்படுகிறார். ஏனெனில், அவர்
A) பூசாவில் விவசாய ஆராய்ச்சி மையத்தை நிறுவினார்
B) தொல்பொருள் துறையை தோற்றுவித்தவர்
C) 1905ல் விக்டோரியா நினைவிடத்தை தோற்றுவித்தார்
D) 1905ல் வங்காளத்தை பிரித்தார்
373. கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் இப்போரோடு சம்பந்தப்பட்டது
A) இரண்டாம் பர்மியப் போர்
B) 1857 ஆம் ஆண்டு கலகம்
C) வேலூர் கலகம்
D) ஜாலியன்வாலாபாக் படுகொலை
374. பல்கலைக்கழக மானியக் குழு நிறுவப்பட்டது
A) இந்தியாவில் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்காக
B) பல்கலைக்கழகங்களின் இயக்கங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக
C) பல்கலைக்கழக கல்வியினை மானியமளித்து ஊக்குவிக்க
D) ஆங்கில கல்வியினை மேம்படுத்துவதற்காக
375. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. ஆரிய சமாஜம் விக்கிரக ஆராதனையை எதிர்த்தது
II. ஆரிய சமாஜம் சாதி முறையை எதிர்த்தது
III. ஆரிய சமாஜம் சடங்குகளை எதிர்த்தது
IV. ஆரிய சமாஜம் வேதகாலப் பண்பாட்டை புதுப்பிக்க எண்ணியது
இவற்றில்,
A) I மற்றும் II சரியானவை
B) I, II மற்றும் III சரியானவை
C) அனைத்தும் சரியானவை
D) IV மட்டும் சரியானது
376. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A) ஹண்டர் கமிஷன்-பல்கலைக் கழக கல்வி
B) ராலே கமிஷன்-இலவச ஆரம்பக் கல்வி
C) ராதா கிருஷ்ண கமிஷன் – கல்விக்கு அரசு நிதி உதவி அதிகரிப்பு
D) சார்ஜன்ட் கல்வித் திட்டம்-தாய் மொழிக்கல்வி ஊக்குவிப்பு
377. ஆங்கிலயே கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்ட ஆண்டு
A) கி.பி.1500
B) கி.பி.1600
C) கி.பி.1664
D) கி.பி.1744
378. காந்தியை கூறுவது
A) தேசிய தந்தை
B) இந்தியாவின் தந்தை
C) இந்தியாவை உருவாக்கியவர்
D) தற்கால இந்தியாவின் தந்தை
379. விஜய நகர பேரரசை ஆண்ட வம்சங்களை காலவரிசைக் கிரமப்படி வரிசைப்படுத்துக:
I. துளுவ வம்சம்
II. சங்கம வம்சம்
III. சாளுவ வம்சம்
IV. அரவீட வம்சம்
சரியான கால வரிசை:
A) IV, III, II, I
B) III, IV, I, II
C) II, III, I, IV
D) IV, I, II, III
380. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
I. மகேந்திர வர்மன்
II. முதலாம் நரசிம்மவர்மன்
II. இரண்டாம் நரசிம்மவர்மன்-
IV. அபராஜித வர்மன்
இவற்றில் :
A) 1 மற்றும் II சரியானவை
B) II மற்றும் III சரியானவை
C) III மற்றும் IV சரியானவை
D) I, IIமற்றும் III சரியானவை
381. 1878 ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிக்கை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்
A) லிட்டன் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) இர்வின் பிரபு
D) ஹார்டிஞ்ச் பிரபு
382. கீழ்க்கண்ட நினைவுச் சின்னங்களை அவற்றின் கால வரிசைக் கேற்ப வரிசைப்படுத்துக:
I. மோதி மசூதி
II. தின் புனா
III. புராணகில்லா
IV. பதேபூர் சிக்ரி
சரியான கால வரிசை:
A) IV, I, II, III
B) II, IV, I, III
C) III, IV, I, II
D) II, III, IV, I
383. கீழ்க்கண்டவுற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
I. பான்ஸ்லே – பெரார்
II. ஹோல்கர்- இந்தூர்
III. சிந்தியா- பரோடா
IV. பேஷ்வா-பூனே
இவற்றில் :
A) II, III மற்றும் IV சரியானவை
B) I, II மற்றும் IV சரியானவை
C) I, III மற்றும் IV சரியானவை
D) I, II மற்றும் III சரியானவை
384. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. வி.டி.சவர்கர் அபிநவ் பாரத்தை துவக்கினார்
II. வி.டி. சவர்கர் 1909ல் லண்டனிலிருந்து ரகசியமாக கைத்துப்பாக்கிகளை நாசிக் மாவட்ட நீதிபதியைக் கொள்ளும் பொருட்டு அனுப்பினார்.
III. 1911 ஜீன் மாதம் வி.டி.சவர்கர் ஆஷ்-ஐ கொலை செய்தார்
IV. பிரிட்டிஷார் 1919ல் வி.டி. சவர்கரை சுட்டுக் கொன்றனர்
இவற்றில்,
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் அரியானவை
385. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
கூற்று(A): ஜாலியன் வாலாபாக் படுகொலை சுதந்திர போராட்டத்தில் காந்தியினை தீவிரமாக ஈடுபடுத்தியது
காரணம் (R): இப்படுகொலை காந்திஜியின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியது
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (A) க்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R)-உண்மை
386. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) 1885 -1. கிலாபத் இயக்கம்
b) 1915 -2. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
c) 1920 -3. ஹோம்ரூல் இயக்கம்
d) 1931 -4. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கம்
குறியீடுகள்
A) 2 1 4 3
B) 4 3 1 2
C) 3 2 4 1
D) 1 2 4 3
387. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) சரோஜினி நாயுடு -1. மீரட்
b) கூட்டு சேராமை -2. ஜெனரல் டயர்
c) சிப்பாய் கலகம் -3. இந்தியாவின் வானம்பாடி
d) ஜாலியன் வாலாபாக் படுகொலை -4. இந்திய வெளியுறவுக் கொள்கை
குறியீடுகள்
A) 3 4 1 2
B) 2 1 3 4
C) 4 2 3 1
D) 1 4 2 3
388. சர்தார் வல்லபாய் படேல் வரலாற்றில் கொள்ளப்படுகிறார். ஏனெனில்
A) அவர் ஒரு வெற்றிகரமான பாரிஸ்டர்
B) அவர் லோக் சபையின் முதலாவது சபாநாயகர்
C) அவர் இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர்
D) இந்தியாவிற்கு அரசியல் ஒற்றுமையை கொண்டு வந்தவர்
389. கீழ்க்கண்டவற்றுள் எவை கி.பி.1857 ஆம் ஆண்டு
கலகத்திற்கு காரணமாக கருதப்படுகின்றன?.
A) அவுத் இணைக்கப்படுதல்
B) என்பீல்டு துப்பாக்கிக்கு கொழுப்பு தடவிய குண்டுகள் புகுத்தப்படுதல்
C) சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்படுதல்
D) மேற்கண்ட அனைத்துமே
390. கீழ்க்கண்டவற்றுள் எவை. சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) சித்தரஞ்சன் தாஸ்-தலைசிறந்த வயதான மனிதர்
B) மதன்மோகன் மாளவியா-தேசபந்து
C) லாலா லஜ்பத்ராய்-ஷெர்-இ-பஞ்சாப்
D) தாதாபாய் நௌரோஜி – மகாமனோ
391. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. 1947, இந்திய சுதந்திர சட்டப்படி இந்தியா பிரிக்கப்பட்டது
II. இரண்டு சுதந்திரமான டொமினியன்களும் ஆகஸ்டு14-15, 1947ல் உதயமாயின
III. ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார்.
IV. சி. ராஜகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்
இவற்றில்,
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் II சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) அனைத்தும் சரியானவை
392. கீழ்க்கண்ட கூற்றினை ஆய்க:
கூற்று (A) : லக்னோ ஒப்பந்தம் தீவிரவாதிகளையும், மிதவாதிகளையும் காங்கிரஸில் மீண்டும் இணைத்தது
காரணம் (R): லக்னோ ஒப்பந்தம் இன அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை அங்கிகரித்தது
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) க்கு சரியான விளக்கம் (R) ஆகும்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) க்கு சரியான விளக்கம் (R) அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
393.1857 ஆம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திரம் போர் என்று அழைத்தவர்
A) ஆர்.சி. மசூம்தார்
B) பாராசந்த்
C) எஸ்.என். சென்
D) வி.டி. சவர்கர்
394. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) வேவல் பிரபு -1. வகுப்பு வாத இட ஒதுக்கீடு
b) வில்லிங்டன் பிரபு -2. கிரிப்ஸ் தூதுக்குழு
c) லினலித்கவ் பிரபு -3. முதல் வட்ட மேஜை மாநாடு
d) இர்வின் பிரபு -4. சிம்லா மாநாடு
குறியீடுகள்
A) 4 1 2 3
B) 1 3 4 2
C) 3 2 1 4
D) 2 4 3 1
395. பட்டியல் 1-ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1). பட்டியல் (2)
a) பாண்டிச்சேரி -1. வெள்ளையனே வெளியறுே
b) காந்திஜி – 2. யூனியன் பிரதேசம் மாநாடு
c) முதலாம் வட்டமேஜை மாநாடு -3. பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயக்கம்
d) வந்தே மாதரம் – 4. நவம்பர் 1930
குறியீடுகள்
A) 4 2 3 1
B) 2 1 4 3
C) 1 3 2 4
D) 3 4 1 2
396. இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்ட ஆண்டு
A) கி.பி.1905
B) கி.பி.1906
C) கி.பி.1907
D) கி.பி.1908
397. ஹண்டர் குழு இதற்காக அமைக்கப்பட்டது
A) சமூக சீர்திருத்தங்கள்
B) பொருளாதார சீர்திருத்தங்கள்
C) கல்வி சீர்திருத்தங்கள்
D) நீதித்துறை சீர்திருத்தங்கள்
398. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பாபு- 1. ஆர். என். தாகூர்
b) பியூரர்- 2. டி.பிரகாசம்
c) குருதேவ்- 3. காந்திஜி
d) ஆந்திர கேசரி- 4. ஹிட்லர்
குறியீடுகள்
A) 1 3 2 4
B) 2 3 4 1
C) 4 2 3 1
D) 3 4 1 2
399. சோழர்கள் காலம்
A) கிராம சபைகளுக்கு பெயர் பெற்றது
B) இராஷ்டிரக்ஷடருடன் நடத்திய சண்டைக்கு பெயர் பெற்றது
C) இலங்கையுடன் வாணிபம் செய்வதற்கு பெயர் பெற்றது
D) தமிழ் கலாச்சாரத்தை முன்னேற்றியதற்கு பெயர் பெற்றது
400. இந்தியாவில் டாக்டர் அன்னிபெசன்டின் சாதனை
A) தியோசாபிகல் சங்கத்தில் ஆற்றிய சமூக சேவை
B) பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது
C) ஹோம்ரூல் (தன்னாட்சி) இயக்கத்தை துவக்கியது
D) 1917ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது