1. அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
அ) தனி நபராட்சி
ஆ) முடியாட்சி
இ) மக்களாட்சி
ஈ) குடியரசு
விடை: ஆ) முடியாட்சி
2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
அ) சிறுகுழு ஆட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) மக்களாட்சி
ஈ) தனிநபராட்சி
விடை: ஈ) தனிநபராட்சி
3. முன்னாள் சோவியத் யூனியன் …………….. க்கு எடுத்துக்காட்டு
அ) உயர்குடியாட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியரசு
விடை: இ) சிறுகுழு ஆட்சி
4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) வாட்டிகன்
விடை: ஈ) வாட்டிகன்
5. ஆபிரகாம் லிங்கன் ………… நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) சோவியத் ரஷ்யா
ஈ) இந்தியா
விடை: அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
6. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை: இ) சோழர்கள்
7. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி
அ) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
ஆ) அமெரிக்கா
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
ஈ) பிரிட்டன்
விடை: இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
8. எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தை பெறப்பட்டது?
அ) கிரேக்கம்
ஆ) லத்தீன்
இ) பாரசீகம்
ஈ) அரபு
விடை: அ) கிரேக்கம்
9. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
அ) நாடாளுமன்றம்
ஆ) மக்கள்
இ) அமைச்சர் அவை
ஈ) குடியரசு தலைவர்
விடை: ஆ) மக்கள்
10. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
அ) இந்தியா
ஆ) பிரிட்டன்
இ) கனடா
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை: ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
11. உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு
அ) கனடா
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய
ஈ) சீனா
விடை: ஆ) இந்தியா
12. கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
13. கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
14. வாக்குரிமையின் பொருள் :
அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
இ) வாக்களிக்கும் உரிமை
ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
விடை: இ) வாக்களிக்கும் உரிமை
15. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
அ) சமூகச் சமத்துவம்
ஆ) பொருளாதார சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) சட்ட சமத்துவம்
விடை: அ) சமூகச் சமத்துவம்
16. பிரதமரை நியமிப்பவர் /நியமிப்பது
அ) மக்களவை
ஆ) மாநிலங்களவை
இ) சபாநாயகர்
ஈ) குடியரசுத் தலைவர்
விடை: ஈ) குடியரசுத் தலைவர்
17. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
அ) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஆ) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஈ) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
விடை: இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
18. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு
அ) 1948 – 49
ஆ) 1951 – 52
இ) 1957 – 58
ஈ) 1947 – 48
விடை: ஆ) 1951-52
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு …….
விடை: 1949
2. இரண்டு வகையான மக்களாட்சி ……… மற்றும் …….. ஆகும்,
விடை: நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி
3. நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ………
விடை: சுவிட்சர்லாந்து
4. இந்தியா …….. மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
விடை: மறைமுக
5. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ……… ஆவார்.
விடை: ஜவஹர்லால் நேரு
6. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு ………
விடை: 1920
7. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் …….. மற்றும்…….. ஆவர்.
விடை: எட்வின் லுட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்
III. பொருத்துக
1. தனிநபர் ஆட்சி – அ) 18
2. வாக்குரிமை – ஆ) அர்த்த சாஸ்திரம்
3. சாணக்கியர் – இ) வாடிகன்
4. மத குருமார்கள் ஆட்சி – ஈ) வட கொரியா
விடை:
1. தனிநபர் ஆட்சி – ஈ) வட கொரியா
2. வாக்குரிமை – அ) 18
3. சாணக்கியர் – ஆ) அர்த்த சாஸ்திரம்
4. மத குருமார்கள் ஆட்சி – இ) வாடிகன்
நினைவில் கொள்க
1. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா
2. இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியான வயது 18
3. தேர்தலில் போட்டியிடத் தகுதியான வயது 25
4. இந்தியாவில் தேர்தல் ஆணையம் பாரபட்சமற்ற தேர்தல்களை நடத்துகிறது
5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952 ல் நடைபெற்றது.