5. இடம்பெயர்தல்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
அ) 121 கோடி
ஆ) 221 கோடி
இ) 102 கோடி
ஈ) 100 கோடி
விடை: அ) 121 கோடி
2. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
அ) இராமநாதபுரம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) வேலூர்
விடை: இ) சென்னை
3. 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
அ) 7%
ஆ) 75%
இ 23 %
ஈ) 9%
விடை: அ) 7%
4. ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
அ) வாழ்வாதாரத்திற்காக
ஆ) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
இ) சேவைக்காக
ஈ) அனுபவத்தைப் பெறுவதற்காக
விடை: அ) வாழ்வாதாரத்திற்காக
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ____ மற்றும் _____ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.
விடை: பிறப்பிடம், வாழிடம்
2. மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____ காணப்படுகின்றன.
விடை: அதிகமாக
3. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமப்புற இந்தியாவில் _____ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
விடை: 37
4. பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் _____
விடை: திருமணம்
5. இடம்பெயர்வு நகர்வு என்பது _____ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
விடை: பல்வேறு வகைப்பட்ட
III. பொருத்துக.
1. இடம்பெயர்வு கொள்கை – அ) வேலை
2. பெண் இடம்பெயர்வாளர் – ஆ) வெளி குடியேற்றம் குறைவு
3. சென்னை – இ) வெளி குடியேற்றம் அதிகம்
4. வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் – ஈ) திருமணம்
5. சேலம் – உ) இடம்பேயர்தலின் அளவைக் குறைப்பது
6. ஆண் இடம்பெயர்வாளர் – ஊ) வழக்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
விடை:
1. இடம்பெயர்வு கொள்கை – உ) இடம்பேயர்தலின் அளவைக் குறைப்பது
2. பெண் இடம்பெயர்வாளர் – ஈ) திருமணம்
3. சென்னை – இ) வெளி குடியேற்றம் அதிகம்
4. வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர் – ஊ) வழக்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
5. சேலம் – ஆ) வெளி குடியேற்றம் குறைவு
6. ஆண் இடம்பெயர்வாளர் – அ) வேலை