7. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம்
அ) தௌலதாபாத்
ஆ) டெல்லி
இ மதுரை
ஈ) பிடார்
விடை: அ) தௌலதாபாத்
2. தக்காண சுல்தானியங்கள் ______ ஆல் கைப்பற்றப்பட்டன.
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) அலாவுதீன் பாமன்ஷா
இ ஒளரங்கசீப்
ஈ) மாலிக்காபூர்
விடை: இ) ஔரங்கசீப்
3. ______ பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
அ) பாமினி
ஆ) விஜயநகர்
இ) மொகலாயர்
ஈ) நாயக்கர்
விடை: ஆ) விஜயநகர்
4. கிருஷ்ணதேவராயர் ______ ன் சமகாலத்தவர்.
அ) பாபர்
ஆ) ஹுமாயுன்
இ) அக்பர்
ஈ) ஷெர்ஷா
விடை: இ) பாபர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் ______
விடை: போர்ச்சுக்கீசியர்கள்
2. கி.பி.(பொ.ஆ) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை ______ போரில் தோற்கடித்தது.
விடை: தலைக்கோட்டைப்
3. விஜயநகரம் ஓர் _____ அரசாக உருவானது.
விடை: ராணுவத்தன்மை கொண்ட
4. நகரமயமாதலின் போக்கு ______ காலத்தில் அதிகரித்தது.
விடை: விஜயநகர அரசர்
5. ______ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
விடை: மொகலாயர்
III. சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்.
1. அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
ஈ) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும், அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
விடை: அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்
2. அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
ஆ) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் பாகம் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.
இ) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.
ஈ) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.
விடை: அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
3. அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.
இ) மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.
ஈ) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினார்.
விடை: அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
4. கூற்று (கூ) : கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம் (கா) : இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு ; காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை: அ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது
5. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைக் சோழர்கள் வடித்தனர்.
ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
அ) (i) சரி (ii) தவறு
ஆ) (i), (ii) ஆகிய இரண்டும் சரி
இ) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு
ஈ) (i) தவறு (ii) சரி.
விடை: இ) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு
IV. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
1. போர்ச்சுகீசியர்கள் – அ) வங்காளம்
2. தான்சேன் – ஆ) கோட்டம்
3. பட்டுவளர்ப்பு – இ) அக்பரின் அரச சபை
4. அங்கோர்வாட் – ஈ) கோவா
5. மாவட்டம் – உ) கம்போடியா
விடை:
1. போர்ச்சுகீசியர்கள் – ஈ) கோவா
2. தான்சேன் – இ) அக்பரின் அரச சபை
3. பட்டுவளர்ப்பு – ஆ) கோட்டம்
4. அங்கோர்வாட் – உ) கம்போடியா
5. மாவட்டம் – அ) வங்காளம்