5. உயிர்க்கோளம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ______
அ) தூந்திரா
ஆ) டைகா
இ) பாலைவனம்
ஈ) பெருங்கடல்கள்
விடை: அ) தூந்திரா
2. உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
அ) சூழ்நிலை மண்டலம்
ஆ) பல்லுயிர்த் தொகுதி
இ) சுற்றுச்சூழல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை: அ) சூழ்நிலை மண்டலம்
3. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.
அ) உற்பத்தியாளர்கள்
ஆ) சிதைப்போர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) இவர்களில் யாரும் இல்லை
விடை: ஆ) சிதைப்போர்கள்
4. பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்.
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
ஆ) குறைந்த அளவு ஈரப்பசை
இ) குளிர் வெப்பநிலை
ஈ) ஈரப்பதம்
விடை: அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
5. மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்.
அ) மிக அதிகப்படியான ஈரப்பதம்
ஆ) மிக அதிகமான வெப்பநிலை
இ) மிக மெல்லிய மண்ணடுக்கு
ஈ) வளமற்ற மண்
விடை: ஈ) வளமற்ற மண்
II. கூற்று (A) காரணம் (R) கண்டறிக
1. கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.
காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
2. கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ____ எனப்படும்.
விடை: சூழ்நிலை மண்டலம்
2. பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை _____
விடை: நுகர்வோர்கள்
3. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _____ என அழைக்கின்றோம்.
விடை: உணவு வலை
4. மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _____ என்கிறோம்.
விடை: பல்லுயிர்த்தொகுதி
5. பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
விடை: பாலைவனத்தாவரங்கள்
6. ____ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
விடை: கடல்