Course Content
நாள் 3 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 3 – உளவியல் தேர்வு
0/1
நாள் 3 – ஆங்கிலம் தேர்வு
COMPOUND WORDS
0/1
SI DAY – 03 TEST
About Lesson

TAMIL TEST – REVISION

TEST 1/10

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல்நிலை. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சு மொழியே என்பர். பேச்சு மொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டது. பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி; ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.

 

1.மொழியின் முதல் நிலை
2.மொழியின் உயிர் நாடி எது?

3.பேச்சு மொழி எதை எளிதாக வெளிப்படுத்தும்?

4.பேச்சு மொழியின் நோக்கம்

5.பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகளுள் ஒன்று

6.ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
(A) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளது
(B) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன
(C) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உளது
(D) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளனர்

7.ஒருமையைக் குறிக்கும் தொடர்
(A) நான் வந்தோம்
(B) நாம் வந்தேன்
(C) நான் வந்தேன்
(D) நாம் வருகிறோம்

8.அஃறிணை பலவின்பால் விகுதிகள் யாவை?

9.பொருந்தாத இணை எது?
(A) நிறை – மேன்மை
(B) பொறை – பொறுமை
(C) மதம் – கொள்கை
(D) மையல் – நட்பு

10.“கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?” – இப்பழமொழி உணர்த்தும் பொருளைத் தேர்க.

TEST 11/20

11.பொருத்தும் வரிசையைத் தேர்ந்தெடுக்க
(a) கொண்டல்    1. மேற்கு
(b) கோடை          2. தெற்கு
(c) வாடை             3. கிழக்கு
(d) தென்றல்       4. வடக்கு

12.சரியான எண்ணடையைத் தெரிவு செய்க
ஒன்று + தலைவன்
(A) ஓர் தலைவன்
(B) ஒரே தலைவன்
(C) ஒற்றை தலைவன்
(D) ஒரு தலைவன்

13. பிழை திருத்துக
சரியான எண்ணடையைக் கண்டறிக
(A) ஓர் குளம்
(B) ஒன்று குளம்
(C) ஒரு குளம்
(D) ஒன் குளம்

14.சரியான தொடரைத் தேர்ந்தெடுத்தல்
‘காலக்கணிதம்’ கவிதையில் இடம் பெற்ற சரியான தொடரைக் கண்டறிக
(A) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
(B) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
(C) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
(D) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

15.வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்
உன் திருக்குறள் நூலைத் தா – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

16.சரியான தொடரைக் கண்டறிக.
(A) அழைத்து வாருங்கள் எனக்காகக் காத்திருக்கிறவரை கலையரங்கத்தில்
(B) எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள் கலையரங்கத்தில்
(C) கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்
(D) எனக்காகக் காத்திருக்கிறவரை கலையரங்கத்தில் அழைத்து வாருங்கள்

17. சொற்களின் கூட்டுப் பெயர்கள் – ‘வாழை’
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க

18.குளித்தல் என்பது

19.சரியான பொருளை அறிக
வாய்மை எனப்படுவது …..

20.தமிழ்ச்சொல் கண்டறிக:
Land Breeze

TEST 21/30

21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக.
(A) Emblem – அறிவாளர்
(B) Thesis – ஆய்வேடு
(C) Document – நிலப்பகுதி
(D) Consulate – வணிகக் குழு
22.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைப்பெற்றிருக்கும் இணையைக் குறிப்பிடுக.
(A) Agreement – ஒப்பந்தம்
(B) Objective – நம்பிக்கை
(C) Constitution – கொள்கை
(D) University – கல்லூரி

23.கூற்று – சரியா? தவறா?
1. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது.
2. இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
3. இவ்வூர் மதுரை மாவட்டத்தில் உள்ளது.

24.கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று: இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கா.
காரணம்: தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல.

25. கூற்று. காரணம் – சரியா? தவறா?
கூற்று : ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு
காரணம் : ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும்

26. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
(A) ஒன்று ஓதல்
(B) உரிமை ஊக்கம்
(C) மக்கள் அறிவியல்
(D) அகல் ஆவல்

27.குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.
படலை – பாடலை
(A) மலை – மாலை
(B) மாலை – மிடற்றுப்பாடல்
(C) அலை – ஆலை
(D) கடல் – பாடல்

28.ஒரு பொருள் தரும் பலசொற்கள் ‘ஆறு’

29.மாலை – இரு பொருள் தருக.

30.மது – இரு பொருள் தருக.

TEST 31/40

31.சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
_____ வந்து கொண்டு இருக்கிறார்கள்
(A) அவைகள்
(B) நாம்
(C) அவர்கள்
(D) அது

32.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (வாழ்வியல் அறிவைக்)
(A) தமிழ்___கொண்டுள்ளது
(B) நாம்___வாங்க வேண்டும்
(C) புத்தகங்கள்__கொடுக்கின்றன.
(D) நல்ல நூல்கள்_____ நல்வழிப்படுத்துகின்றன.

33. கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் _____அவர் எளிமையை விரும்பியவர்.
34.சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் ________ கடுஞ்சொல்லால் ஏற்படும் காயம் ஆறாது.
35.சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
“தமிழ்மொழி தான் மிகப் பழமையானமொழி ____________ தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்” என்றார் காயிதே மில்லத்.

36.சரியான வினாச்சொல் அமைந்த வாக்கியங்களைக் கண்டறிக.
I. தமிழ்ப்பாவை பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
II. தமிழ்ப்பாவை பள்ளிக்கு எதற்குச் சென்றாள்?
III. தமிழ்ப்பாவை பள்ளிக்கு ஏன் சென்றாள்?
IV. தமிழ்ப்பாவை பள்ளிக்கு எப்பொழுது சென்றாள்?

37.வினாச்சொல்லை சரியாகப் பொருத்துக.
I. நூலகம்                                – A. ஏன்?
II. பாண்டவர்கள்               – B.யார்?
III. பள்ளிக்கு சென்றது  –  C.எங்குள்ளது ?
செடிகள் வாடுவது            –  D.எத்தனைப்பேர்

38. பின்வரும் வினாத்தொடர்களில் ஏவல் வினாத் தொடரைக் கண்டறிக.
(A) ஆகுபெயர் என்றால் என்ன?
(B) நீ வரிசையில் நிற்க மாட்டாயா?
(C) இந்நூற்பாவிற்கு பொருள் யாது?
(D) தமிழ்ப்புத்தகம் உன்னிடம் தானே இருக்கிறது?

39.பொருத்தமான வினையடிச் சொல்லைக் கண்டறிக.
புத்தகம் மேசையில் இருக்கிறது.

40.அதைச் செய்தது____
I. நான் அன்று
II. நான் அல்லேன்
III. நான் அல்ல
IV. நான் இல்லை

TEST 41/50

41. தேன், வான் – இவ்விரு சொற்களுக்கும் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.
(A) வளி
(B) துளி
(C) அடை
(D) படை

42.சரியான இணையைக் கண்டறிக.
(A) தண்ணீர் – பருகினான்
(B) தண்ணீர் – குடித்தான்
(C) பால் – அருந்தினான்
(D) பால் – குடித்தான்
43.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
(A) பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர்.
(B) பேச்சு மொழியை இலக்கிய வழக்கு என்றும், எழுத்து மொழியை உலக வழக்கு என்றும் கூறுவர்.
(C) பேச்சு மொழியை பேச்சு வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கண வழக்கு என்றும் கூறுவர்.
(D) பேச்சு மொழியை இலக்கண வழக்கு என்றும், எழுத்து மொழியை பேச்சு வழக்கு என்றும் கூறுவர்.

44.எழுத்து வழக்கில் அமைந்துள்ள வாக்கியங்களைக் கண்டறிக
I. “பசிக்குது அண்ணா” என்கிறான் தம்பி.
II. “அம்மா ஏன் நமக்குச் சாப்பாடு கொடுத்தனுப்புறதில்ல?” என்றான் தம்பி.
III. “மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப் போகிறேன்” என்றார் முதல்வர்.
IV. “தமிழ்நாட்டுக் குழந்தைகள் பசியறியாமல் படிக்க வேண்டும்” என்றார் தலைவர்.

45. எந்தமிழ்நா – பிரித்து எழுதுக.
46.நிறுத்தற்குறிகளை அறிதல்
எது சரியானது?
(A) ‘வளர் பிறையும் தேய் பிறையும்’ என்னும் தலைப்பில் பேசுக.
(B) மழையைப் போற்றுவோம்?
(C) ஆகா, தூண்டிலில் மாட்டியது நீதானா.
(D) என்னே உயரமான மலை

47. கீழ்க்கண்டவற்றில் எங்கு முற்றுப்புள்ளி பயன்படுத்துவதில்லை?
(A) சொற்றொடரின் இறுதியில்
(B) மேற்கோள் குறிகளுக்கு அடுத்து
(C) சொற்குறுக்கங்களை அடுத்து
(D) பெயரின் தலைப்பு எழுத்தை அடுத்து

48.புதுகை – என்பதன் மரூஉ எது?
49.ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுது
மயிலாப்பூர்

50.ஊர்ப்பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க
தவறான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக
(A) திருச்சி – திருச்சிராப்பள்ளி
(B) கோவை – கொடைக்கானல்
(C) நெல்லை – திருநெல்வேலி
(D) உதகை – உதகமண்டலம்

TEST 51/60

51.‘வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்’ – இணையான தமிழ்ச்சொல் தருக

52.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
(A) கணியன் பள்ளி முடிந்து வீடு திரும்பினான்
(B) மணி காலிங்பெல்லை அழுத்தினான்
(C) மாணவர்கள் கிரவுண்டில் விளையாடினர்
(D) இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது

53.இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
‘டெம்பெஸ்ட்’

54. விடை வகைகள்
‘எனக்குக் கற்றுத் தருகிறாயா’ என்ற வினாவிற்கு ‘கற்றுத் தருவேன்’ என உரைப்பது

55.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
(A) Guild – மீட்டுருவாக்கம்
(B) Patent – வணிகக் குழு
(C) Nanotechnology – மீநுண் தொழில் நுட்பம்
(D) Myth – கலைப்படைப்பு

56.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக
(A) Worksheet – முகப்புத்தாள்
(B) Spread sheet – விரிவுத்தாள்
(C) Wall paper – ஒப்பனைத்தாள்
(D) Ledger – பதிவேடு

57.அலுவல் சார்ந்த கலைச் சொல்லைக் கண்டறிக. ’ஃபாண்ட்’

58.கிணற்றுத் தவளை போல – உவமை கூறும் பொருள் தெளிக.

59. ‘விழலுக்கு இறைத்த நீர் போல’- உவமை கூறும் பொருத்தமான பொருளைத் தேர்க.
I. பயனின்மை
II. இல்லாதிருத்தல்
III. பயனடைதல்
IV. மறைந்துபோதல்
60.வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
அவனைத் திருந்தச் செய்தான்.

TEST 61/70

61.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
“குமரன் பாடம் படித்தான்”

62.செயப்பாட்டு வாக்கியங்களை கண்டு எழுதுக.
(A) கவிதா கவிதை எழுதவில்லை
(B) கவிதா கவிதை எழுதினாளா?
(C) கவிதா கவிதை எழுதப்பட்டது
(D) கவிதை கவிதாவால் எழுதப்பட்டது

63.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் மாணவர்களே ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல் என்ன வினா?

64.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
காட்டில் புலி நடமாட்டம் உள்ளது

65.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
(A) குடியரசுத் தலைவர் என்று தமிழகம் வருகிறார்?
(B) குடியரசுத் தலைவர் ஏன் தமிழகம் வருகிறார்?
(C) குடியரசுத் தலைவர் நாளை எவ்வாறு வருகிறார்?
(D) குடியரசுத் தலைவர் எதற்காக நாளை தமிழகம் வருகிறார்?

66.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. (சரியான தொடர் தேர்க)
(A) எளிமையை நான் எப்போதும் கடைபிடிப்பேன்
(B) கடைபிடிப்பேன் நான் எப்போதும் எளிமையை
(C) நான் எப்போதும் எளிமையைக் கடைபிடிப்பேன்
(D) எளிமையைக் கடைபிடிப்பேன் எப்போதும் நான்

67.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான தொடரினை உருவாக்குக
(A) ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை புத்தகம் ஒன்று நெடுகப் பேசிக் கொண்டே வருகிறது
(B) புத்தகம் ஒன்று ஒருசிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக் கொண்டே வருகிறது
(C) வாழ்க்கை நெடுகப் பேசிக் கொண்டே வருகிறது புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன்
(D) புத்தகம் ஒன்று பேசிக்கொண்டே வருகிறது வாழ்க்கை நெடுக ஒரு சிறு பெண்ணுடன்

68.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக
கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.

69.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
புன்பமொப்லமைழி

70.அகர வரிசைப்படுத்துக
(A) பூட்டு, உழக்கோல், கலப்பை, கொழு
(B) கொழு, பூட்டு, உழக்கோல், கலப்பை
(C) உழக்கோல், கலப்பை, கொழு, பூட்டு
(D) கலப்பை, கொழு, பூட்டு, உழக்கோல்

TEST 71/80

71.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
வௌவால், ஆசிரியர், மனிதன், தையல், ஓணான்
72.அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்க
(A) கலை, கலாம், கண், கடை, கழுத்து
(B) கடை, கண், கலை, கழுத்து, கலாம்
(C) கடை, கண், கலாம், கலை, கழுத்து
(D) கடை, கலாம், கண், கழுத்து. கலை

73.வேர்ச்சொல்லில் இருந்து வினை முற்றை உருவாக்குக
‘பெறு’
74.”சிரி” என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக

75.உண் – என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக.

76.வேர்ச்சொல்லைக் கண்டறிக
‘வாழ்க்கை’
77.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
‘துய்ப்பது’

78.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
‘பயின்றாள்’

79.கப்பல் செலுத்துபவரை இப் பெயர்களாலும் அழைப்பர்
(A) நாவாய் ஓட்டுனர், கடல்வழிகாட்டி

(B) மீகாமன், நீகான்
(C) நங்கூரர், கலஞ்செய்யர்
(D) பாய்மரர், பரிமுக அம்பி

80.ஒழி என்பதன் பொருள் கண்டறிக
(A) அழித்து விடு, தொலைத்து விடு

(B) அறிவு, அழகு
(C) வெளிச்சம், பதுங்கிக் கொள்
(D) ஓசை, புகழ்

TEST 81/90

81.சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக
(A) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
(B) நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது
(C) நம் மாநிளம் இந்த ஆன்டு வறட்சியாள் பாதிக்கப்பட்டது.
(D) நம் மாநிலம் இந்த ஆண்டு வறச்சியால் பாதிக்கப்பட்டது.

82.ஒலி வேறுபாடறிந்து சரியான தொடரைக் கண்டறிக :
(A) தோட்டத்தில் மலர்கள் மனம் வீசியதால் மணம் மகிழ்ந்தது
(B) தோட்டத்தில் மலர்கள் மனம் வீசியதால் மனம் மகிழ்ந்தது
(C) தோட்டத்தில் மலர்கள் மணம் வீசியதால் மனம் மகிழ்ந்தது
(D) தோட்டத்தில் மலர்கள் மணம் வீசியதால் மணம் மகிழ்ந்தத

83.பொருள் வேறுபாடறிந்து பொருத்தமுடைய சொற்களைக் கண்டறிக :
பறவை – பரவை
(A) புள் – கடல்
(B) பறத்தல் – பரவுதல்
(C) கிளி – நாவாய்
(D) இறகு – கரையோரம்
84.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக :
(A) Epigraph – சித்திர எழுத்து
(B) Lexicography – கல்வெட்டு
(C) Pictograph – அகராதியியல்
(D) Phoneme – ஒலியன்

85.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக :
(a) Commodity        1. பாரம்பரியம்
(b) Voyage                2. கலப்படம்
(c) Adulteration     3. கடற் பயணம்
(d) Heritage            4. பண்டம்

86.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக :
(a) கரன்சிநோட்                         1.பற்று அட்டை
(b) டெபிட் கார்டு                        2.இணையத்தள வணிகம்
(c) கிரெடிட் கார்டு                     3.பணத்தாள்
(d) ஆன்லைன் ஷாப்பிங்       4.கடன் அட்டை

87.மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

88.சந்திப் பிழையை நீக்குக :
மனிதக் கண்டுப்பிடிப்புகள் அனைத்திலும் நன்மை, தீமை என்று இரண்டுப் பக்கங்கள் இருந்தே வந்திருக்கின்றன.
(A) கண்டுப்பிடிப்புகள், இரண்டு பக்கங்கள்
(B) கண்டுபிடிப்புகள், இரண்டு பக்கங்கள்
(C) கண்டுபிடிப்புகள், இரண்டுப் பக்கங்கள்
(D) கண்டுப்பிடிப்புகள், இரண்டுப் பக்கங்கள்

89.வழுவற்ற தொடர் எது?
(A) நாளை பேசுகிறான்
(B) நாளை பேசுவான்
(C) நாளை பேசினான்
(D) நாளை பேசிச் சென்றான்

90.மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக
(A) சிங்கம் – உறுமும்
(B) பசு – கதறும்

(C) நாய் – கத்தும்
(D) குரங்கு – குனுகும்

TEST 91/100

91.மரபுப் பிழையற்ற சொல்லைத் தெரிவு செய்க.
கப்பல் கட்டும் கலைஞர்கள் _____ என்று அழைக்கப்பட்டனர்.

92.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) வன் தொடர்
(B) மென் தொடர்
(C) இடைத் தொடர்
(D) கடைத்தொடர்

93.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
‘மதி’ என்பதன் பொருளைக் குறிக்காத சொல்
(A) சந்திரன்
(B) சூரியன்
(C) அறிவு
(D) நிலவு

94.மதுரைக்குச் செல்வாயா? என்ற வினாவிற்குச் செல்லாமல் இருப்பேனா? என்று கூறுவது எவ்வகை விடை?

95.எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
‘இனிய’

96. எதிர்ச்சொல்லை எடுத்தெழுது.
சோம்பல்
97.‘மருள்’ – எதிர்ச்சொல் தருக.

98.வாழை + இலை – சேர்த்தெழுதுக.

99.அருந்துணை பிரித்தெழுதுக.

100.அறிவு + உடைமை சேர்த்தெழுதுக.

Join the conversation