2. குடிமக்களும் குடியுரிமையும்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1. கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அ) பிறப்பின் மூலம்
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ) வம்சாவழியின் மூலம்
ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
விடை: ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
2. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
அ) பகுதி II
ஆ) பகுதி II பிரிவு 5-11
இ) பகுதி II பிரிவு 5-6
ஈ) பகுதி I பிரிவு 5-11
விடை: ஆ) பகுதி II பிரிவு 5-11
3. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) இந்திய தலைமை நீதிபதி
விடை: ஆ) குடியரசுத் தலைவர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
விடை: குடிமக்கள்
2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
விடை: ஒற்றைக்
3. இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார்.
விடை: வெளிநாட்டு வாழ் இந்தியன்
4. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
விடை: குடிமை பொறுப்பை
5. _____________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
விடை: உலகளாவிய குடியுரிமை
III. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க.
1. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
அ) i மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii, iv சரி
ஈ) i, ii, iii சரி
விடை: ஆ) i மற்றும் iii சரி
2. கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்லல
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை: அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்