3. தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
அ) பாடலிபுத்திரம்
ஆ) வல்லபி
இ) மதுரா
ஈ) காஞ்சிபுரம்
விடை: அ) பாடலிபுத்திரம்
2. ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
அ) அர்த்த – மகதி பிராகிருதம்
ஆ) இந்தி
இ) சமஸ்கிருதம்
ஈ) பாலி
விடை: அ) அர்த்த – மகதி பிராகிருதம்
3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
அ) புத்தமதம்
ஆ) சமணமதம்
இ) ஆசீவகம்
ஈ) இந்து மதம்
விடை: ஆ) சமணமதம்
4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
அ) வேலூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) சித்தன்னவாசல்
ஈ) மதுரை
விடை: அ) வேலூர்
5. கழுகுமலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
அ) மகேந்திரவர்மன்
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
இ) பராந்தக வீரநாராயண பாண்டியன்
ஈ) இரண்டாம் ஹரிஹரர்
விடை: ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ………………..
விடை: நேமிநாதர்
2. புத்த சரிதத்தை எழுதியவர் …………………… ஆவார்.
விடை: அஸ்வகோஷர்
3. ………………. நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.
விடை: 7ஆம்
4. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என …………….. எடுத்துரைக்கிறார்.
விடை: மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்
5. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆதரித்தனர்.
விடை: ஆசீவகர்களை
III. பொருத்துக:
1. கல்ப சூத்ரா – திருத்தக்கத் தேவர்
2. சீவகசிந்தாமணி – மதுரை
3. நேமிநாதர் – நாகசேனர்
4. மிலிந்தபன்கா – பத்ரபாகு
5. கீழக் குயில்குடி – 22வது தீர்த்தங்கரர்
விடை:
1. கல்ப சூத்ரா – பத்ரபாகு
2. சீவகசிந்தாமணி – திருத்தக்கத் தேவர்
3. நேமிநாதர் – 22வது தீர்த்தங்கரர்
4. மிலிந்தபன்கா – நாகசேனர்
5. கீழக் குயில்குடி – மதுரை
IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி:
1. பொருந்தாததைக் காண்க.
திருப்பருத்திக்குன்றம், கீழக்குயில்குடி, கழுகுமலை, நாகப்பட்டினம், சித்தன்னவாசல்
விடை: நாகப்பட்டினம்
2. கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை: அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
3. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) ‘பள்ளி’ என்பது புத்த மதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பலவிகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டது.
அ) (i) மற்றும் (iii) சரி
ஆ) (i, ii) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii, iii) மற்றும் (iv) சரி
விடை: அ) (i) மற்றும் (iii) சரி
4. தவறான இணையைக் காண்க
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
3. விசுத்திமக்கா – புத்தகோசா
4. புத்தர் – எண்வகை வழிகள்
விடை:
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்,
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு