1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
அ) பொய்கை ஆழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆண்டாள்
விடை: ஆ) பெரியாழ்வார்
2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்
விடை: ஈ) ஆதி சங்கார்
3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
அ) வல்லபாச்சாரியார்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சூர்தாஸ்
விடை: இ) இராமாநந்தர்
4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
இ) அமீர் குஸ்ரு ஸ்ரு
ஈ) நிஜாமுதின் அவுலியா
விடை: அ) மொய்னுதீன் சிஸ்டி
5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
அ) லேனா
ஆ) குரு அமீர் சிங்
இ) குரு நானக்
ஈ) குரு கோவிந் சிங்
விடை: இ) குரு நாதால்,
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் …………………
விடை: விஷ்ணு சித்தர்
2. சீக்கியர்களின் புனித நூல் ……………… ஆகும்.
விடை: குரு கிரந்சாகிப்
3. மீராபாய் ………………. என்பாரின் சீடராவார்
விடை: ரவிதாஸ்
4. ……………….. என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
விடை: இராமானுஜர்
5. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ……………… என்ற இடத்தில் அமைந்துள்ளது.
விடை: கர்தார்பூர்
III. பொருத்துக:
1. பாகல் – கபீர்
2. இராமசரிதமானஸ் – இராமானுஜர்
3. ஸ்ரீவைஷ்ணவம் – அப்துல் வகித் அபுநஜிப்
4. கிரந்தவளி – குரு கோவிந் சிங்
5. சுரவார்டி – துளசிதாசர்
விடை:
1. பாகல் – குரு கோவிந் சிங்
2. இராமசரிதமானஸ் – துளசிதாசர்
3. ஸ்ரீவைஷ்ணவம் – இராமானுஜர்
4. கிரந்தவளி – கபீர்
5. சுரவார்டி – அப்துல் வகித் அபுநஜிப்
IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
துக்காராம் – வங்காளம்
சைதன்யதேவா – மகாராஷ்டிரா
பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
குருத்வாராக்கள் – சீக்கியர்கள்
விடை:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்
2. கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.
அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.
விடை: இ) கூற்று சரி, காரணம் தவறு.
3. பொருந்தாததைக் கண்டுபிடி.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.
விடை: ஆண்டாள்