1201. அரசியல் சுதந்திரம் நாட்டின் உயிர் மூச்சு என்று கூறியவர் யார்?
A) ஜவஹர்லால் நேரு
B) அரவிந்த் கோஷ்
C) மகாத்மா காந்தி
D) ஏ.ஓ. ஹியூம்
1202. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக இயக்கத்திற்கு தலைமையேற்றவர்
A) சத்யமூர்த்தி
B) காமராஜ்
C) இராஜகோபாலாச்சாரியார்
D) இவர்களில் எவருமிலர்
1203. ‘இராமகிருஷ்ண மிஷனை’ நிறுவியர்
A) சுவாமி தயானந்தர்
B) சுவாமி விவேகானந்தர்
C) சங்கராச்சாரியார்
D) ராமானுஜர்
1204. தமிழ்நாட்டில் முதன் முதலில் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்தவர் யார்?
A) எம். பக்தவச்சலம்
B) கு. காமராஜ்
C) எம்.ஜி. ராமச்சந்திரன்
D) வி.என். ஜானகி
1205. மாமல்லபுரத்தை நிறுவியவர்கள்
A) சாளுக்கியர்கள்
B) சோழர்கள்
C) கடம்பர்கள்
D) பல்லவர்கள்
1206. அல்பெரூனி இந்தியாவிற்கு வந்தது
A) கி.பி.9ம் நூற்றாண்டு
B) கி.பி.10ஆம் நூற்றாண்டு
C) கி.பி.11ஆம் நூற்றாண்டு
D) கி.பி.12ஆம் நூற்றாண்டு
1207. மாலிக்காபூர்_____என்பவரின் சிறந்த தளபதி
A) அலாவுத்தீன் கில்ஜி
B) பால்பன்
C) முகம்மது-பின்-துக்ளக்
D) குதுப் உத்-தின்-ஐபக்
1208. முதல் பானிப்பட் போர் பாபருக்கும் மற்றும்____ க்கும் இடையில் நடைபெற்றது
A) இப்ராஹீம் லோடி
B) மெடினிராய்
C) ராணா சங்கா
D) ஷெர்ஷா
1209. விஜய நகரப் பேரரசை புகழ்ந்துக் கூறிய இத்தாலிய பயணி
A) பார்போசா
B) மார்கோ போலோ
C) நிக்கோலோ கான்டி
D) ரஸாக்
1210. ஒளரங்கசீப் கொலை செய்த சீக்கிய குருவின் பெயரைக் கூறுக:
A) குரு அர்ஜீன் தேவ்
B) குரு ஹர்கோவிந்த்
C) குரு ஹர்கிஷன்
D) குரு தேஜ்பகதூர்
1211. வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டையை அடைந்த ஆண்டு
A) கி.பி.1492
B) கி.பி.1498
C) கி.பி.1502
D) கி.பி.1512
1212. “ஆற்காட்டு வீரர்” என்று அழைக்கப்பட்டவர்?
A) டியூப்ளே
B) ஹைதர் அலி
C) ராபர்ட் கிளைவ்
D) சர் அயர் கூட்
1213. பிண்டாரிகளை ஒழித்தவர் யார்?
A) ஹேஸ்டிங்ஸ்
B) ரிப்பன்
C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
D) வில்லியம் பெண்டிங்
1214. இல்பர்ட் மசோதா கொண்டு வரப்பட்ட காலம்
A) ரிப்பன் பிரபு
B) கர்சன் பிரபு
C) கானிங் பிரபு
D) இர்வின் பிரபு
1215. சிந்து சமவெளி நாகரிகம் முதலாவதாக வெளிச்சத்திற்கு வந்த ஆண்டு
A) கி.பி.1912
B) கி.பி.1922
C) கி.பி.1932
D) கி.பி.1942
1216. புத்தர் முதலில் போதனை செய்த இடம்
A) கயா
B) லும்பினி
C) சாஞ்சி
D) சாரநாத்
1217. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
A) கௌடில்யர்
B) மெனாண்டர்
C) செலூக்கஸ்
D) வால்மீகி
1218.குப்த வம்சத்தின் ஸ்தாபகர்
A) புக்கர்
B) சமுத்திர குப்தர்
C) ஸ்ரீகுப்தர்
D) விந்திய சக்தி
1219. சிந்து சமவெளி நாகரீகத்தின் காலம் என்ன?
A) கி.மு.3250-2750
B) கி.மு.3000-2000
C) கி.மு.3750-2250
D) கி.மு.2750-2755
1220. ‘மூன்று இரத்தினங்கள்’ கொள்கையை போதித்தவர்
A) புத்தர்
B) சங்கரர்
C) இராமாஜனுர்
D) மஹாவீரர்
1221 ‘அர்த்த சாஸ்திரம்’என்ற நூலின் ஆசிரியர்
A) பாணர்
B) கௌடில்யர்
C) செலூக்கஸ்
D) மெகஸ்தனிஸ்
1222. கனிஷ்கர் காலத்தில் வளர்ச்சியடைந்த மிகப்பெரும் கலை
A) கோதிக்கலை
B) காந்தாரக் கலை
C) ஹிமாலயன் கலை
D) ரோமன் கலை
1223. நவரத்தினங்கள் வாழ்ந்த ஆட்சி காலம்
A) குஷானர்கள்
B) சோழர்கள்
C) குப்தர்கள்
D) விஜயநகரப் பேரரசு
1224. ஹச்சர் காலத்தில் முழுதும் வளர்ச்சி பெற்ற பல்கலைக்கழகம்
A) நாலந்தா பல்கலைக்கழகம்
B) ஆக்ரா பல்கலைக்கழகம்
C) பாடலிபுத்திர பல்கலைக்கழகம்
D) வல்லபி பல்கலைக்கழகம்
1225. பல்லவ அரச வம்சத்தை தோற்றுவித்தவர்
A) முதலாம் மகேந்திரவர்மன்
B) முதலாம் நரசிம்மவர்மன்
C) சிம்ம விஷ்ணு
D) பரமேஸ்வர வர்மன்
1226. அரபியர்கள் சிந்துவை கைப்பற்றிய ஆண்டு
A) கி.பி.1206
B) கி.பி.647
C) கி.பி.1191
D) கி.பி.712
1227. அடிமை வம்சத்தினை தோற்றுவித்த அரசர்
A) குத்புதின் ஐபெக்
B) ஆராம்ஷா
C) இல்டுட்மிஷ்
D) பால்பன்
1228. விஜய நகரப் பேரரசினை தோற்றுவித்தவர்கள்
A) ஹரிஹரர்
B) புக்கர்
C) ஹரிஹாரும் புக்கரும்
D) அரவீடு சகோதரர்கள்
1229. பாணபட்டர் எந்த அரசரின் அவைக்களப் புலவராக இருந்தார்?
A) இரண்டாம் புலிகேசி
B) ஹர்ஷவர்த்தனர்
C) சமுத்திரகுப்தர்
D) யசோவர்மன்
1230. அக்பரின் நிதி அமைச்சர்
A) இராஜா மான்சிங்
B) இராஜா தோடர்மால்
C) இராஜா பீர்பால்
D) இராணா பிரதாப்
1231. ஆங்கிலயே கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A) கி.பி.1600
B) கி.பி.1620
C) கி.பி.1630
D) கி.பி.1640
1232. துணைப்படை திட்டத்தை புகுத்தியவர்
A) வெல்லெஸ்லி
B) காரன் வாலிஸ்
C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
D) இராபர்ட் கிளைவ்
1233. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பட்ட முதல் இராணுவ எதிர்ப்பு
A) இந்திய சிப்பாய் கலகம் கி.பி.1857
B) வேலூர் சிப்பாய்கள் கலகம் கி.பி.1806
C) இராஜாக்களின் எதிர்ப்பு
D) அவுத் பேகம்களின் எதிர்ப்பு
1234. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்
A) விவேகானந்தர்
B) இராஜா ராம்மோகன்ராய்
C) ஆத்மராம்
D) இரானடே
1235. சதியை ஒழித்தவர்
A) ஹேஸ்டிங்ஸ் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) பெண்டிங் பிரபு
D) கர்ஸன் பிரபு
1236. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தியப் பகுதி
A) கோவா
B) டையூ
C) பாண்டிச்சேரி
D) சென்னை
1237. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்
A) லாகூர்
B) கல்கத்தா
C) பூனா
D) பம்பாய்
1238. காங்கிரஸின் முதல் பெண் தலைவர்
A) சரோஜினி நாயுடு
C) விஜயலட்சுமி பண்டிட்
B) சுசேதா கிருபளானி
D) ராஜகுமாரி அம்ரித்கௌர்
குறிப்பு : இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர்- அன்னிபெசன்ட் அம்மையார் (1917). இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் – சரோஜினி நாயுடு (1925).
1239. ‘இந்தியாவின் குரல்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்
A) சுரேந்திரநாத்
B) அன்னிபெசன்ட்
C) லோகமான்ய திலகர்
D) தாதாபாய் நௌரோஜி
1240. இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட வருடம்
A) 1905
B) 1906
C) 1907
D) 1919
1241. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முக்கிய கொள்கைகளை முதலில் பரப்பிய நாடு
A) இந்தியா
B) இங்கிலாந்து
C) பிரான்ஸ்
D) அமெரிக்கா
1242. இந்திய தேசிய காங்கிரஸின் அதிதீவிரவாதக் காலமாக விளங்கியது
A) 1900-1905
B) 1906-1910
C) 1911-1916
D) 1919-1935
1243. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்
A) ஜெனரல் டயர்
B) மாண்டேகு
C) ரௌலட்
D) ஜின்னா
1244. சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்
A) சி.ஆர்.தாஸ்
B) காந்திஜி
C) அன்னிபெசன்ட்
D) நேரு
1245.ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
A) 1909
B) 1911
C) 1914
D) 1919
1246. இந்திய தேசிய படையை நிறுவியவர்
A) சி.ஆர்.தாஸ்
B) நேதாஜி
C) காந்திஜி
D) நேரு
1247. காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்
A) தேவதாரண்யம்
B) கோவா
C) கல்கத்தா
D) தண்டி
1248. சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை வளர்த்தவர்.
A) அன்னிபெசன்ட்
B) திலகர்
C) இராஜாஜி
D) கோகலே
1249. தனி முஸ்லீம் நாடு (பாகிஸ்தான்) என்று கோரியவர் யார்?
A) முகமது இக்பால்
B) நவாப் சலிமுல்லா
C) முகமத அலிஜின்னா
D) அலி சகோதரர்கள்
1250. மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஏற்படுத்திய ஆண்டு
A) 1940
B) 1942
C) 1943
D) 1945
1251. இந்திய தேசியக் காங்கிரஸின் இறுதி இலட்சியம்
A) ஆங்கிலேயர்களை விரட்டுதல்
B) அந்நியப் பொருட்களை விலக்குதல்
C) சுதேசி இயக்கத்தை தொடங்குதல்
D) பூரண சுதந்திரம் பெறுதல்
1252. ராம்சே மெக்டனால்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு அமைக்கும் திட்டத்தை அறிவித்த ஆண்டு
A) 1931
B) 1932
C) 1933
D) 1934
1253. ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திரும்ப பெற்றுக் கொண்டதின் காரணம்
A) காந்தி-இர்வின் ஒப்பந்தம்
B) சௌரி-சௌராவில் ஏற்பட்ட மக்கள் வன்முறை
C) ஆங்கில அரசின் எதிர்ப்பு
D) தீவிரவாதிகளின் எதிரப்பு
1254. இடைக்கால அரசில் பிரதம அமைச்சர் ‘பதவி வகித்தவர்
A) நேரு
B) இராஜாஜி
C) படேல்
D) காந்திஜி
1255. இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக அமைதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்
A) சர்வதேச சங்கம்
B) ஐக்கிய நாட்டு நிறுவனம்
C) அணிசேரா நாடுகளின் அமைப்பு
D) பன்னாட்டு கலாச்சார நிறுவனம்
1256. இந்தியாவில் முதல் இரயில் பாதை_____கவர்னர் ஜெனரல் ஆட்சியின் கீழ் திறக்கபட்டது
A) ரிப்பன் பிரபு
B) டல்ஹௌசி பிரபு
C) பெண்டிங் பிரபு
D) காரன்வாலிஸ் பிரபு
1257. வாஞ்சிநாதன் எந்த அமைப்பினைச் சேர்ந்தவர்
A) யுகாந்தர் கட்சி
B) அபினவ் பாரத் சங்கம்
C) பாரத் மாதா சங்கம்
D) ஹிந்து மஹா சபை
1258. காந்திஜி தனது தண்டி யாத்திரையை எங்கிருந்து துவங்கினார்?
A) பர்தௌலி
B) அஹமதாபாத்
C) சூரத்
D) பம்பாய்
1259. இந்திய தேசிய காங்கிரஸ் துவங்குவதற்கு வழி வகுத்தவர் யார்?
A) ஏ.ஓ.ஹ்யூம்
B) டபிள்யூ சி பானர்ஜி
C) அன்னிபெசன்ட்
D) காந்திஜி
1260. முழு சுதந்திரம் என்ற தீர்மானம் இந்திய தேசி காங்கிரஸின் எந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது?
A) லாகூர்
B) கல்கத்தா
C) சென்னை
D) பம்பாய்
1261. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையொப்பமிடப்பட்டது?
A) 1934
B) 1932
C) 1930
D) 1931
1262. சென்னையில் 1916 இல் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கியவர் யார்?
A) கிருஷ்ணமூர்த்தி
B) அன்னிபெசன்ட்
C) இராஜாகோபாலாச்சாரி
D) பிரகாசம்
1263. 1942ஆம் ஆண்டு வழங்குவதாக கிரிப்ஸ் தூதுக்குழு எதை உறுதி கூறியது?
A) இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து
B) இந்தியாவிற்கு சுய ஆட்சி
C) இந்தியாவில் மாநில ஆட்சி
D) இந்தியாவில் இடைக்கால அரசு
1264. 1929 ஆம் ஆண்டு அலகாபாத் மாவட்டத்தில் குடியானவர்களின் சார்பாக வரிகொடா இயக்கத்தை நடத்திச் சென்றவர்
A) ஜவஹர்லால் நேரு
B) சகஜானந்த சரஸ்வதி
C) எம். என். ராய்
D) பி. சி. ஜோஷி
1265. இந்தியாவின், தலைநகரை கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்ற முன்மொழிந்த இந்திய கவர்னர்
A) ரிப்பன் பிரபு
B) கர்சன் பிரபு
C) ஹார்டிஞ்சு பிரபு
D) டஃப்ரின் பிரபு
1266. எத்தனை முறை ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார்?
A) 2
B) 3
C) 4
D) 5
1267. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த நகரத்தில் நடைபெற்றது?
A) ஆக்ரா
B) மீரட்
C) அமிர்தசரஸ்
D) லாகூர்
1268. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தினை தலைமை ஏற்று நடத்தியவர்
A) வேதரத்னம்
B) சத்யமூர்த்தி
C) வி.வி.எஸ்.ஐயர்
D) இராஜாஜி
1269. சிப்பாய் கலகத்தின் உடனடிக் காரணம்
A) கொழுப்பு தடவப்பட்ட தோட்டர்க்கள்
B) கிறிஸ்தவ சமயம் பரவியது
C) சம்பளத்தில் உள்ள வேறுபாடு
D) அவகாசியிலிக் கொள்கை
1270. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தினை ஏற்படுத்தியவர் யார்?
A) அலி சகோதரர்கள்
B) சர் சையது அஹமது கான்
C) ஆகா
D) ஜின்னா
1271. ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்?
A) லின்லித்தோ பிரபு
B) இர்வின் பிரபு
C) மவுண்ட்பேட்டன் பிரபு
D) வேவல் பிரபு
1272. கீழக்கண்டவர்களில் இந்திய தேசிய காங்கிரஸின் மிதவாதப் பிரிவை சேர்ந்தவர் யார்?
A) லாலா லஜபதி ராய்
B) பிபின் சந்திர பால்
C) கோபால கிருஷ்ண கோகலே
D) பாலகங்காதர திலகர்
1273. இந்தியாவில் முதல் இரயில் போக்குவரத்து எந்த இரண்டு இடங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது?
A) சென்னை- பெங்களூர்
B) டெல்லி-ஆக்ரா
C) பம்பாய்-தானே
D) கல்கத்தா-தன்பாத்
1274. சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் நிலவிய நிலவாரக் குடிமுறை
A) ஜமீன்தாரி முறை
B) மஹல்வாரி முறை
C) இரயத்வாரி முறை
D) இவை அனைத்தும்
1275. கங்கா தேவி எழுதிய நூலின் பெயர்
A) மாளவி காக்னிமித்ரம்
B) ஆமுக்த மால்யதா
C) மதுராவிஜ்யம்
D) திருவரங்கன் உலா
1276. மூன்றாவது பானிப்பட்டுப் போரில் அதிகபயனடைந்தவர்கள்
A) ஆப்கானியர்
B) முகலாயர்கள்
C) ரோஹில்லர்கள்
D) ஆங்கிலேயர்கள்
1277. பர்தோலி சத்யாகிரகத்தை நடத்தியர்
A) வினோபாபாவே
B) வல்லபாய் படேல்
C) மகாத்மா காந்தி
D) விதல்பாய் படேல்
1278. ‘வேதத்திற்கு திரும்புக’ என்று யார் சொன்னது?
A) தயானந்த சரஸ்வதி
B) தேவேந்திர நாத் தாகூர்
C) கேசப் சந்திர சென்
D) விவேகானந்தர்
1279. முகலாய வம்சத்தில் யாருடைய ஆட்சிக் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?
A) ஷாஜகான்
B) அக்பர்
C) ஜஹாங்கீர்
D) ஔரங்கசீப்
1280. மொத்தம் எத்தனை சங்கங்கள் கூட்டப்பட்டுள்ளன
A) மூன்று
B) நான்கு
C) இரண்டு
D) ஐந்து
1281. சோழர் வம்சத்துக் கோவில் கட்டிடக் கலை எந்தப் பாணியைச் சார்ந்தது?
A) நகரா பாணி
B) திராவிடபாணி
C) கோபுரப் பாணி
D) சோலங்கி பாணி
1282. சுல்தானியர்களுடைய ஆட்சிக் காலத்தின் மந்திரிகளை நியமிப்பதற்கும் நீங்குவதற்கும் அதிகாரம் பெற்றவர்
A) உலேமாக்கள்
B) கலிபா
C) சுல்தான்
D) வாசிர்
1283. கிருஷ்ண தேவராயருடன் நட்பு உடன்படிக்கை செய்தி கொண்ட போர்த்துகீசிய கவர்னர்
A) நி னோ டா கன்ஹா
B) வாஸ்கோடாகாமா
C) டிஅல்மெய்டா
D) அல்புகர்க்
1284. பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
A) காளிதாசர்
B) பாவபூதி
C) பாணர்
D) விஷ்ணு சர்மா
1285. காந்தி சபர்மதி ஆசிரமத்தை தோற்றுவித்த ஆண்டு
A) கி.பி.1915
B) கி.பி.1916
C) கி.பி.1917
D) கி.பி.1918
1286. களப்பிரர் காலத்தில் சிறப்புற்றிருந்த சமயம்
A) சைவம்
B) சீக்கியம்
C) வைணவம்
D) சமணம்
1287. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சுதந்திர மரத்தை நட்டவர் யார்?
A) தேவராஜ்
B) ஹைதர் அலி
C) திப்பு சுல்தான்
D) நஞ்சராஜர்
1288. சரஸ்வதி மஹால் நூலகம் இருக்கும் இடம்
A) மும்பாய்
B) கல்கத்தா
C) மதுரை
D) தஞ்சாவூர்
1289. வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு
A) கி.பி.1885
B) கி.பி.1890
C) கி.பி.1900
D) கி.பி.1905
1290. சிந்து சமவெளி நாகரீகமானது
A) கால்நடை பேணிய நாகரீகம்
B) நகர நாகரீகம்
C) நாடோடிகளின் நாகரீகம்
D) பழங்குடிகளின் நாகரீகம்
1291. பௌத்த மதம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A) கி.மு.600
B) கி.மு.500
C) கி.மு.400
D) கி.மு.567
1292. ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பயணி
A) யுவான் சுவாங்
B) பாஹியான்
C) மெகஸ்தனிஸ்
D) மார்கோபோலோ
1293. கரிகாலனைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் மிகவுட் சரியானது எது?
A) கி.பி.2ம் நூற்றாண்டில் சோழ அரசனாக இருந்தான்
B) புகார் நகரத்தை நிறுவினான்
C) கல்லணையைக் கட்டினான்
D) இவை அனைத்தும் சரி
1294. டெல்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர்
A) பாபர்
B) அக்பர்
C) ஔரங்கசீப்
D) ஷாஜகான்
1295. நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
A) இராபர்ட் கிளைவ்
B) வாரன் ஹேஸ்டிங்ஸ்
C) காரன் வாலிஸ்
D) ஹேஸ்டிங்ஸ் பிரபு
1296. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டது?
A) காரன்வாலிஸ் பிரபு
B) ஹேஸ்டிங்ஸ் பிரபு
C) அம்ஹர்ஸ்ட் பிரபு
D) டல்ஹௌசி பிரபு
1297. ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலை எழுதியவர்
A) ஜவஹர்லால் நேரு
B) மகாத்மா காந்தி
C) இராஜேந்திர பிரசாத்
D) ஆர்.கே. நாராயண்
1298. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
A) வாரன் ஹேஸ்டிங்ஸ்
B) மவுண்ட்பேட்டன் பிரபு
C) கானிங் பிரபு
D) இவர்களில் எவருமிலர்
1299. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய்
A) ராஜாஜி
B) வாரன் ஹேஸ்டிங்ஸ்
C) கானிங் பிரபு
D) மவுண்ட் பேட்டன் பிரபு
1300. உபநிஷத்துகள்
A) இந்து மதத்தின் தத்துவங்களுக்கு அடிப்படையாக உள்ளன
B) பழங்கால் இந்து மதச் சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளன
C) பழங்கால மக்களின் சமூக நடத்தைகளுக்கு அடிப்படையாக உள்ளன
D) கடவுளை வேண்டும் தோத்திரங்களுக்கு அடிப்படையாக உள்ளன
1301. கண்ணகிக்கு கோயில் கட்டியது யார்?
A) கரிகாலன்
B) நெடுஞ்சேரல்
C) செங்குட்டுவன்
D) இராஜேந்திரன்
1302. தமிழ்க் காப்பியம் மணிமேகலையை எழுதியவர்
A) இளங்கோ அடிகள்
B) சீத்தலை சாத்தனார்
C) நக்கீரர்
D) கபிலர்
1303. குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
A) சேரர்கள்
B) சோழர்கள்
C) பாண்டியர்கள்
D) சாளுக்கியர்கள்
1304. காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயிலைக் கட்டியவர்
A) முதலாம் நரசிம்மவர்மன்
B) முதலாம் மகேந்திரவர்மன்
C) ராஜசிம்மன்
D) இரண்டாம் நந்திவர்மன்
1305. சோழர் வம்சத்தின் மிகச் சிறந்த அரசன்
A) முதலாம் ராஜராஜன்
B) இரண்டாம் புலிகேசி
C) ராஜாதி ராஜன்
D) வீர ராஜேந்திரன்
1306. விஜயநகரப் பேரரசின் மிகப் புகழ் பெற்ற அரசர்
A) ராமராயர்
B) ஹரிஹரர்
C) புக்கர்
D) கிருஷ்ணதேவராயர்
1307. ‘டெல்லி’ நகரின் பழங்காலப் பெயர்
A) பாடலிபுத்திரம்
B) கயா
C) அயோத்தி
D) இந்திரபிரஸ்தம்
1308. மன்சப்தாரி முறையைப் பின்பற்றியவர் யார்?
A) பாபர்
B) அக்பர்
C) ஷெர்ஷா
D) ஹீமாயூன்
1309. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A) கங்கை
B) சிந்து
C) யமுனை
D) தபதி
1310. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) சோழர்கள்-உறையூர்
B) சேரர்கள்-புகார்
C) பாண்டியர்கள்-காஞ்சி
D) பல்லவர்கள்-வாதாபி
1311. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் முக்கியக் கூறு
A) மாநில சுயாட்சி
B) மாநிலங்களில் இரட்டையாட்சி
C) வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
D) வைஸ்ராயின் மறுப்பு அதிகாரம்
1312. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (1). பட்டியல் (2)
a) பாண்டிச்சேரி – 1. ஆங்கிலேயர்கள்
b) கோவா – 2. டேனியர்கள்
c) தரங்கம்பாடி – 3. பிரெஞ்சுக்காரர்கள்
d) சென்னை – 4. போர்ச்சுகீசியர்கள்
A)4 1 2 3
B)2 3 4 1
C)3 4 2 1
D)4 3 1 2
1313. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) சாசுவத நிலவரித் திட்டம்- சர்தாமஸ் மன்ரோ
B) இரயத்வாரி முறை வெல்லெஸ்லி பிரபு
C) உதவிச் சேனைத் திட்டம்- காரன்வாலிஸ் பிரபு
D) லாப்ஸ் கொள்கை-டல்ஹௌசி பிரபு
1314. கீழ்வருவனவற்றை காலவரிசைப்படி அமைத்துக் காண்க:
I. ஒழுங்குமுறை சட்டம்
II. பட்டயச் சட்டம்
III. பிட் இந்திய சட்டம்
IV. இந்திய அரசு சட்டம்
இவற்றுள்:
A) I, II, III, IV
B) II, III, I, IV
C) I, III, II,IV
D) I, II, IV, III
1315. இவரது ஆட்சிக் காலத்தில் வங்காளப் பிரிவினை கொண்டு வரப்பட்டது?
A) கர்சன் பிரபு
B) மின்ட்டோ பிரபு
C) ரிப்பன் பிரபு
D) மவுண்ட் பேட்டன் பிரபு
1316. எந்தக் கூற்று சரியானது?
A) தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் சி. இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் நடந்தது
B) பாரதியார் விஷக் காய்ச்சலால் இறந்தார்
C) சுப்ரமண்ய சிவா பாரதியாரின் ஆதரவாளர் (சீடர்)
D) ஈ.வே.ரா நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்
1317. தனிமனித சிவில் கீழ்ப்படியாமை இயக்கத்தில் கைதாகிய முதல் சத்தியாகிரகி
A) வினோபா பாவே
B) ஜவஹர்லால் நேரு
C) சர்தார் வல்லபாய் படேல்
D) இவர்களில் எவருமிலர்
1318. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
A) மொரார்ஜி தேசாய் -ஜனதா அரசாங்கம்
B) மகாத்மா காந்தி -அஹிம்சை
C) ஏ.ஓ. ஹியூம் -இந்திய தேசிய காங்கிரஸ்
D) சைமன் குழுவின் வருகை – மே, 1930
1319. பின்வருவனவற்றில் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
A) சுபாஷ் சந்திரபோஸ் -விடுதலை வீரர்
B) முகமது அலி -இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்
C) டாக்டர் அம்பேத்கார் -அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவர்
D) இர்வின் -பிரிட்டிஷ் பிரதம மந்திரி
1320. பின்வரும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி எழுதவும்.
I. பிளாசிப் போர்
II. பக்ஸார் போர்
III.மூன்றாம் பானிப்பட் போர்
IV. தலைகோட்டைப் போர்
இவற்றில் சரியான வரிசை :
A) I, II, IV மற்றும் lll
B) IV, I, III மற்றும் II
C) IV, II, I மற்றும் III
D) I, IV, III மற்றும் II
1321. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க
I. சர்தார் வல்லபாய் படேல் இந்திய மாநிலங்களைஒருங்கிணைத்தார்
II. அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைத்தார்கள்
III. அவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைத்தார்கள்
IV. அவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆவார்
இவற்றில் :
A) I, II மற்றும் IV சரியானவை
B) l மற்றும் IV சரியானவை
C) I, II மற்றும் III சரியானவை
D) l மட்டும் சரியானது
1322. ஹரப்பா எங்கே உள்ளது?
A) ஹரப்பா ஸ்ரீலங்காவில் உள்ளது
B) ஹரப்பா இந்தியாவில் உள்ளது
C) ஹரப்பா பாகிஸ்தானில் உள்ளது
D) ஹரப்பா நேபாளில் உள்ளது
1323. இது யாருடைய கூற்று?
“சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்”
A) டி.டி. கோசாம்பி
B) ஆர்.டி. பானர்ஜி
C) சர் ஜான் மார்ஷல்
D) சர் மார்டிமர் வீலர்
1324. அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது?
A) அசோகர்
B) சமுத்திர குப்தர்
C) ஹர்ஷவர்த்தனர்
D) காரவேலர்
1325. இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்
A) இட்சிங்
B) யூவாங் சுவாங்
C) பாஹியான்
D) இவர்களில் யாருமில்லை
1326. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
A) பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி.அடைந்தது
B) ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
C) இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
D) குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை
1327. மௌரிய ஆட்சி நிர்வாகம் நன்மை பயக்கும் எதேச்சதிகாரமாக விளங்கியதற்குக் காரணம்
A) மன்னர் மக்களை தன் குழந்தைகளைப் போல் பாவித்து ஆட்சி செய்தார்
B) மன்னர் மத சகிப்புத்தன்மையுடன் ஆட்சி செய்தார்
C) மன்னர் அளப்பரிய அரசியல் அதிகாரங்களுடன் ஆட்சி செய்தார்
D) மன்னர் மக்களின் ஒழுக்க நெறிகளையும், செல்வச் செழிப்பையும் கவனமுடன் கண்காணித்து ஆட்சி செய்தார்.
1328. கீழுள்ளவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது
A) ஹிஜ்ரி ஆண்டு-கி.பி.662
B) சாகா ஆண்டு-கி.பி. 78
C) சாளுக்கிய ஆண்டு-கி.பி. 682
D) பல்லவ ஆண்டு-கி.பி. 1076
1329. கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
A) அவர் பெரும் வெற்றி வீரர்
B) அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
C) அவர் புத்த மதத்தைப் பரப்பினார்
D) இவற்றில் எதுவுமில்லை
1330. பின்வரும் வம்சங்களில் எது விஜய நகரத்தை ஆளவில்லை?
A) சாளுவ வம்சம்
B) துளுவ வம்சம்
C) ஹொய்சள வம்சம்
D) அரவீடு வம்சம்
1331. திருவாசகத்தை இயற்றியவர்
A) மாணிக்கவாசகர்
B) காளிதாசர்
C) நம்மாழ்வார்
D) அப்பர்
1332. கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) இராம இராயர்-தலைக்கோட்டை போர்
B) பைராம் கான்-சாந்தேரிப் போர்
C) ஹெமு-முதலாம் பானிபட் போர்
D) இப்ராஹிம் லோடி-கான்வா போர்
1333. கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) பாபர்-இரண்டாம் பானிபட் யுத்தம்
B) ஹெமு-சாந்தேரிப் போர்
C) ராணா சங்கா-கான்வா போர்
D) சுல்தான் மஹ்முது-தலைக்கோட்டைப் போர்
1334. ஷாஜஹான் ஆட்சியின் சிறப்பம்சம்
A) பொருளாதாரச் செழிப்பு
B) ஆட்சி நிர்வாகத் திறமை
C) அயல்நாட்டுக் கொள்கை
D) கலையும், கட்டிடங்களும்
1335. திப்பு சுல்தானின் ஆட்சியில் மைசூரின் தலைநகராக விளங்கியது
A) ஹைதராபாத்
B) பெங்களூர்
C) தானே
D) ஸ்ரீரங்கப்பட்டணம்
1336. காந்திஜியின் தண்டி யாத்திரை புறப்பட்ட நகரம்
A) பர்தோலி
B) அஹமதாபாத்
C) சூரத்
D) பாம்பே
1337. பின்வருவனவற்றுள் சோழர்கள் கட்டிய கோயில் எது?
A) மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில்
B) தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்
C) கோனார்க்கில் உள்ள சூரிய ஆலயம்
D) மதுரையில் உள்ள மீனாட்சி ஆலயம்
1338. இந்திய தேசீய இராணுவத்தை அமைத்தவர்
A) திலக்
B) சுபாஷ் சந்திர போஸ்
C) கோகலே
D) ராஷ் பிஹாரி போஸ்
1339. கொழுப்பு தடவிய குண்டுகள் விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்ச்சி
A) 1805 இல் நடந்த வேலூர் கலகம்
B) இரண்டாவது ஆங்கிலோ-பர்மியப் போர்
C) 1857 இல் நடந்த சிப்பாய் கலகம்
D) ஜாலியன் வாலா பாக் படுகொலை
1340. வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்லப்பட்டது
A) ஆங்கிலேய வீரர்களால்
B) இந்திய வீரர்களால்
C) தனக்குத் தானே
D) பிரெஞ்சு வீரர்களால்
1341. இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
A) அன்னிபெசன்ட்
B) விஜயலட்சுமி பண்டிட்
C) சரோஜினி நாயுடு
D) இவற்றுள் எவருமிலர்
(குறிப்பு: முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு)
1342. “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்று முழங்கியவர்
A) மகாத்மா காந்தி
B) நேரு
C) திலகர்
D) கோகலே
1343. எந்த வருடம் காங்கிரஸ் “வெள்ளையனே வெளியேறு” தீர்மானத்தை நிறைவேற்றியது?
A) 1942
B) 1932
C) 1842
D) 1952
1344. காபினட் மிஷன் திட்டம், 1946 பரிந்துரைப்பது
A) மௌன்ட்பேட்டன் திட்டம்
B) இந்தியப் பிரிவினை
C) மாகாண சுயாட்சி
D) அரசியலமைப்பு சபை
1345.மௌன்ட் பேட்டன் திட்டம் குறிப்பிடுவது
A) இந்தியப் பிரிவினை
B) தனிப்பட்ட வாக்கமைப்பு
C) இரட்டையாட்சி
D) அரசியலமைப்பு சபை
1346. இந்திய யூனியனில் எந்த இருவர் கவர்னர் ஜெனரலாக இருந்தனர்?
A) வெல்லிங்டன் பிரபுவும், லின்லித்கௌ பிரபுவும்
B) லூயிஸ் மௌன்ட்பேட்டன் பிரபுவும், சி. ராஜகோபாலச்சாரியும்
C) லூயிஸ் மௌன்ட்பேட்டன் பிரபுவும், வெல்லிங்டன் பிரபுவும்
D) லூயிஸ் மௌன்ட்பேட்டன் பிரபுவும், லின்லித்கௌ பிரபுவும்
1347. “செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று?
A) வல்லபாய் பட்டேல்
B) லோக்மான்ய திலகர்
C) சுபாஷ் சந்திர போஸ்
D) மகாத்மா காந்தி
1348. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்
A) ஜனவரி 30, 1948
B) அக்டோபர் 2, 1948
C) மார்ச் 3, 1948
D) ஏப்ரல் 14, 1947
1349. ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு
A) 1919
B) 1935
C) 1942
D) 1945
1350. சுபாஷ் சந்திர போஸின் தந்தை ஏன் இங்கிலாந்திற்கு அவரை அனுப்பினார்?
A) மேலைநாட்டுக் கல்வியைப் பற்றி அவர் கொண்டிருந்த எண்ணங்களை கைவிடச் செய்வதற்காக
B) பிரிட்டிஷ் பல்கலைக்கழங்களில் மாணவர்களை சுதந்திரமாக அனுமதிப்பதை அனுபவிக்க
C) உலக நிகழ்ச்சிகளை நேரடியாக அனுபவரீதியாக பகிர்ந்து கொள்ள
D) இவற்றுள் எதுவுமில்லை
1351. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத இயக்கம்
A) சமூக மத சீர்திருத்த இயக்கம் எனலாம்
B) மத இயக்கம் மட்டும்
C) தேசிய இயக்கம்
D) இவை அனைத்தும்
1352. கீழ் உள்ளவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A) இந்தியா டிவைடட்-ஜவஹர்லால் நேரு
B) டிஸ்கவரி ஆஃப் இந்தியா- இராஜேந்திர பிரசாத்
C) இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்- அபுல் கலாம் ஆசாத்
D) இந்தியா, த கிரிடிகல் இயர்ஸ்-எஸ்.நிஹல் சிங்
1353. இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
A) இராஜேந்திர பிரசாத்
B) மகாத்மா காந்தி
C) இராஜகோபாலாச்சாரி
D) ஜவஹர்லால் நேரு
1354. “இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்” (India Wins Freedom) என்ற நூலை எழுதியவர்
A) மகாத்மா காந்தி
B) ஜவஹர்லால் நேரு
C) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
D) சர்தார் வல்லபாய் படேல்
1355. இந்தியாவின் தந்தை எனப்படுபவர்
A) ஜவஹர்லால் நேரு
B) மகாத்மா காந்தி
C) முகம்மது அலி ஜின்னா
D) காமராஜர்
1356. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A) மு. கருணாநிதி
B) எம்.ஜி. இராமச்சந்திரன்
C) காமராசர்
D) ஈ.வெ.ரா. பெரியார்
1357. ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு எது?
A) ஜெர்மனி
B) ரஷியா
C) சீனா
D) யு.எஸ்.ஏ.
1358. கீழே குறிப்பிட்டவைகளில் எது இந்து சமயத்திற்கும் கலாச்சாரத்திற்கும் அதன் அடித்தளமாக விளங்குகிறது?
A) ஆசரம முறை
B) சாதி முறை
C) தர்ம சூத்திரங்கள்
D) வேதங்கள்
1359. சிந்து சமவெளி நாகரீகம் ஓர்
A) ஆரியா அல்லாத நாகரீகம்
B) ஆரிய நாகரீகத்திற்கு முந்தியது
C) ஒரு திராவிட நாகரீகம்
D) எல்லாமே பொருந்தும்
1360. சகா ஆண்டு ஆரம்பிக்கும் வருடம்
A) கி.பி.27
B) கி.பி.78
C) கி.பி.102
D) கி.பி.98
1361. மௌரியப் பேரரசை நிறுவியவர்
A) சமுத்திர குப்தர்
B) முதலாம் சந்திர குப்தர்
C) சந்திர குப்த மௌரியர்
D) ஸ்கந்த் குப்தர்
1362. சாதவகானர்களின் தலைநகரம்
A) வாதாபி
B) காஞ்சி
C) ஸ்ரீகாகுளம்
D) கானோஜ்
1363. எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) கல்ஹாணர்-சியூக்கி
B) விசாகத்தர்-இராஜதரங்கிணி
C) காளிதாசர்-மாளவிகாக்னிமித்திரம்
D) யுவான்சுவாங்-முத்ர ராட்க்ஷஸம்
1364. திகம்பரர் என்ற சமயபிரிவினர்
A) இந்துக்கள்
B) புத்த மதத்தவர்
C) சமணர்
D) சீக்கியர்
1365. சித்தன்ன வாசல் ஓவியம்
A) ஆரம்ப சோழருடையது
B) ஆரம்ப பாண்டியருடையது
C) பல்லவருடையது
D) களப்பிரருடையது
1366. பல்லவர்களை நினைவில் கொள்ள காரணம்,அவர்களின்
A) கலை, கட்டிடக்கலைப் படைப்புகள்
B) நிர்வாகம்
C) சமயப்பணி
D) சாளுக்கியர்களோடு மேற்கொணடப்போர்
1367. உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள்
A) பல்லவர்
B) பிற்கால சோழர்
C) பிற்கால பாண்டியர்
D) விஜயநகர அரசர்கள்
1368. எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A) யாதவர்கள் – தேவகிரி
B) ஹொய்சாளர்கள் – வாரங்கல்
C) காகத்தியர்கள் – மதுரை
D) பாண்டியர்கள்-துவார சமுத்திரம்
1369. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
பட்டியல் (l). பட்டியல் (2)
a) ராணா சங்கா. -1. சீனப்பயணி
b) அக்பர் -2. முதலாம் பானிபட்போர்
c) இப்ராஹிம் லோடி -3. கான்வாப் போர்
d) யுவான்சுவாங். -4. பைராம் காள்
குறியீடுகள்:
A)3 1 4 2
B)1 3 4 2
C)2 4 3 1
D)3 4 2 1
1370. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியப் போர்
A) முதலாம் தரெய்ன் போர்
B) முதலாம் பானிபட் போர்
C) தலைகோட்டை போர்
D) இரண்டாம் தரெய்ன் போர்
1371. டெல்லி சுல்தானின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் தடையாக விளங்கியது
A) தலைமை மந்திரி / பிரதம மந்திரி
B) கலிபா
C) புனிதகுர்ரான்
D) உலாமாக்கள் என்ற மார்க்க அறிஞர்கள்
1372. மங்கோலியர்களுக்கு எதிராக இல்ட்டுமிஷிடம் மாங்பார்னி உதவி கேட்டபோது அவர் நடுநிலைமைக் கொள்கையை கடைபிடித்தார் ஏனெனில்
A) அவருக்கு உதவி செய்யும் அளவுக்கு இல்துத்மின் வலிமை பெற்றிருக்கவில்லை
B) இல்துத்மிஷ் மாங்பர்னியை வெறுத்தார்
C) ஆரம்ப நிலையில் இருந்த தன் அரசை அனாவசியமாக அரசியலில் நுழைக்க அவர் மத்திய ஆசிய விரும்பவில்லை
D) இல்துத்மிஸ் மங்கோலியர்களை கண்டு பயந்தார்
1373. தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு
A) கி.பி.1392
B) கி.பி.1398
C) கி.பி.1408
D) கி.பி.1396
1374. லோடி வம்சத்தை நிறுவியவர்
A) ஜலாலுத்தீன் பிரோஸ் கில்ஜி
B) குத்புதீன் ஐபெக்
C) பஹ்லோல் லோடி
D) இப்ராஹீம் லோடி
1375. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது
A) 1700
B) 1800
C) 1600
D) 1900
1376. இந்தியா குடியரசு என அறிவிக்கப்பட்ட நாள்
A) ஜனவரி 26, 1950
B) ஜனவரி 26, 1947
C) ஜனவரி 26, 1949
D) ஜனவரி 26, 1948
1377. மொகஞ்சதாரோ மக்களுக்கு குடிநீர் பிரச்சனை இன்மைக்கு காரணம்
A) நதிக்கு அருகில் நகரம் இருந்தது
B) குடிநீர் பெற பெரிய குளம் இருந்தது
C) வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப் பட்டது
D) நகரில் பல கிணறுகள் இருந்தன
1378. கீழ்வருவனவற்றுள் தவறானது எது?
A) ஆரிய சமாஜம்-தயானந்த சரஸ்வதி
B) பிரம்ம சமாஜம்-ராஜாராம் மோகன்ராய்
C) தேவ சமாஜம்-அக்னி ஹோத்ரி
D) பிரார்த்தனா சமாஜம்-விவேகானந்தர்
1379. கீழ் உள்ளவற்றில் பொருந்தாதது எது?
A) காரன் வாலிஸ்-நிரந்த நிலவரித் திட்டம்
B) வெல்லெஸ்லி-துணைப்படைத் திட்டம்
C) டல்ஹௌசி-நாடு இழக்கும் கொள்கை
D) ரிப்பன்-சாதி ஒழிப்பு
1380. இந்திய தண்டனை சட்டங்களை உருவாக்கியவர்
A) டாக்டர் அம்பேத்கார்
B) மவுண்ட்பேட்டன்
C) மெக்காலே பிரபு
D) வாரன் ஹேஸ்டிங்ஸ்
1381. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிற்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசி
A) எலிசபெத்
B) ஆன்அரசி
C) விக்டோரியா
D) மார்கரெட்
1382. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து பிரதமர்
A) சர்ச்சில்
B) மாக்டொனால்டு
C) சேம்பர்லின்
D) அட்லி பிரபு
1383.1907ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாத தலைவர்கள் வெளியேறியது
A) தலைமையை எதிர்த்து
B) விருப்பம் இன்மையால்
C) முஸ்லீம்களை எதிர்த்து
D) கட்சி தேர்தலை முன்னிட்டு
1384. இந்தியாவில் பூமிதான இயக்கத்தை துவக்கிய தலைவர்
A) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
B) ஆச்சார்யா வினோபா பாவே
C) மதன் மோகன் மாளவியா
D) நம்பூதிரி பாட்
1385. காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாள்
A) 10.8.1942
B) 9.8.1942
C) 26.8.1942
D) 20.8.1942
1386. ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு விடுதலை அளிக்க ஆகஸ்டு 15 எனத் தீர்மானித்தது ஏன்?
A) இந்தியாவில் வெள்ளையர்கள் வந்திறங்கிய நாளை கொண்டாட
B) இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததை கொண்டாட
C) பிரிட்டிஷ் அரசி முடிசூட்டிய நாளைக் கொண்டாட
D) இவைகளில் எதுவும் இல்லை
1387. முதலாவது வட்டமேஜை மாநாட்டில் (1930-31)டாக்டர் அம்பேத்கார் கலந்து கொண்டது
A) காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக
B) இளவரசர்கள் மற்றும் பிறகட்சிகளின் பிரதிநிதியாக
C) தன் சொந்த செல்வாக்கில்
D) தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக
1388. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
A) டாக்டர் இராதாகிருஷ்ணன்
B) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C) திரு. ராஜகோபாலாச்சாரியார்
D) எஸ். டி.சர்மா
1389. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
A) மௌண்ட்பேட்டன் பிரபு
B) செம்ஸ்போர்டு பிரபு
C) சுரேந்திரநாத் பானர்ஜி
D) டாக்டர் சி. ராஜகோபாலாச்சாரி
1390. வேலூர் சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு
A) 1801
B) 1805
C) 1806
D) 1857
1391. இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர்
A) லால்பகதூர்
B) ஜவஹர்லால் நேரு
C) திருமதி இந்திராகாந்தி
D) அடல் பிஹாரி வாஜ்பேயி
1392. பங்களாதேசம் சுதந்திரமடைந்த ஆண்டு
A) 1971
B) 1947
C) 1965
D) 1952
1393. எந்த வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?
A) 1931
B) 1952
C) 1950
D) 1942
குறிப்பு : இரண்டாவது வட்டமேசை மாநாடு 1931 செப்டம்பர் 7 முதல் 1 டிசம்பர் 1931 வரை காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்றது.
1394. காந்தியடிகளும் மூன்று வட்டமேஜை மாநாடுகளும்
பற்றிய கூற்றுகளில் பின்வருவனவற்றில் எது சரி?
A) காந்தியடிகள் முதல் வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
B) காந்தியடிகள் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
C)காந்தியடிகள் முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டார்
D)காந்தியடிகள் மூன்றாவது வட்ட மேஜை மாநாட்டில்மட்டும் கலந்து கொண்டார்
1395. எந்த வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?
A) முதலாவது
B) இரண்டாவது
C) மூன்றாவது
D) இவற்றுள் எதுவுமில்லை
1396. சபர்மதி ஆசிரமத்தை காந்தி துவக்கிய ஆண்டு
A) 1900
B) 1910
C) 1915
D) 1918
1397. நேருவை இடைக்கால அரசை அமைக்க அழைத்தவர்
A) அட்லி
B) சர்ச்சில்
C) மௌண்ட்பேட்டன்
D) வேவல்
1398. வேல்ஸ் இளவரசர் இந்திய மக்கள் ஆங்கிலேய அரசுக்கு உலகப் போரில் உதவி செய்ததற்காக நன்றி செலுத்தும் வண்ணம் தமிழ்நாட்டுக்கு எப்பொழுது வந்தார்?
A) 1921
B) 1922
C) 1940
D) 1945
1399. தமிழ்நாட்டில் தேசியத்தை விழிப்படையச் செய்த பத்திரிகைகளில் கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று அல்ல?
A) கேசரி
B) நவசக்தி
C) சுதேசமித்திரன்
D) தி இந்து
1400. எதிர்க்கட்சியில்லை என்றால் ஜனநாயகம் இல்லை என்று சொன்னவர்
A) பி.ஆர். அம்பேத்கார்
B) சர் ஐவர் ஜென்னிங்ஸ்
C) ஜெய பிரகாஷ் நாராயண்
D) மொரார்ஜி தேசாய்
1401. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
A) 1978
B) 1982
C) 1981
D) 1985
1402. இப்போது உள்ள மாவட்ட அதிகாரி என்ற நிலையை உருவாக்கிய சட்டம்
A) 1909 – மிண்டோ மார்லி சீர்திருத்தம்
B) 1773 – ம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம்
C) 1919 – மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
D) 1935 – ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
1403. இரண்டாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு
A) 1956
B) 1957
C) 1958
D) 1960
1404. தி.மு.க. வை நிறுவியவர் யார்?
A) பெரியார்
B) அண்ணாதுரை
C) கருணாநிதி
D) அன்பழகன்
1405. தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்
A) சர் தாமஸ் மன்றோ
B) எல்பின்ஸ்டன்
C) இராபர்ட் கிளைவ்
D) காரன்வாலிஸ் பிரபு
1406. தியாகராஜ சுவாமிகளின் புகழ் ஸ்தலம் எங்குள்ளது?
A) திருச்செந்தூர்
B) மதுரை
C) திருவாரூர்
D) கும்பகோணம்
1407. “காந்தி ஆசிரமம்” அமைந்துள்ள ஊர்
A) நாமக்கல்
B) திருச்செங்கோடு
C) நீலகிரி
D) கூடலூர்
1408. பல்லவர்கள் சம்பந்தப்பட்ட குகைக் கோயில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடு
A) மாமல்லபுரம்
B) கல்பாக்கம்
C) திருப்போரூர்
D) திருக்கழுக்குன்றம்
1409. சுதேசி இயக்கம் எந்த ஆண்டு நடந்தது?
A) 1903
B) 1905
C) 1902
D) 1912
1410. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்
A) திருமதி. இந்திராகாந்தி
B) திருமதி. விஜயலெட்சுமி பண்டிட்
C) திருமதி. சரோஜினி நாயுடு
D) திருமதி. சுசேதா கிருபளானி
1411, “ஹரிசேனர்” யாருடைய காலத்தில் இருந்தவர்?
A) அசோகர்
B) முதலாம் சந்திரகுப்தர்
C) சமுத்திரகுப்தர்
D) ஹர்ஷவர்த்தனர்
1412. இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகம்
A) ஆரிய நாகரீகம்
B) வேத கால நாகரீகம்
C) சிந்து சமவெளி நாகரீகம்
D) திராவிடர் நாகரீகம்
1413. சரியான விடையைக் காண்க
A) ஞான காண்டமே வேத இலக்கியம்
B) கர்ம காண்டமே வேத இலக்கியம்
C) ஞானம், கர்ம காண்டம் இணைந்ததே வேத இலக்கியம்
D) பக்தி யோகமே வேத இலக்கியம்
1414. “நிஷ்காம கர்மா” விளக்கப்படுவது
A) உபநிடதம்
B) வேதம்
C) ஆகமம்
D) பகவத்கீதை
1415. புத்தரின் இயற்பெயர்
A) இராகுலர்
B) கௌதமர்
C) வர்தமானர்
D) சித்தார்த்தர்
1416. கீழ்க்கண்ட ஆற்காடு நவாபுகளுள் யார் “வாலாஜா’ என அழைக்கப்பட்டார்?
A) அன்வருதின்
B) முகமது அலி
C) தோஸ்த் அலி
D) உம்-தத்-உல்-உமாரா
1417, கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
துணிபு (A) :ஹரப்பா நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
காரணம் (R) :ஹரப்பா நாகரிகம் சிந்துநதிக் கரையில் வளர்ச்சியடைந்தது. கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமில்லை
C) (A) சரி; ஆனால் (R) தவறு
D) (A) தவறு; ஆனால் (R) சரி
1418. கிருஷ்ண தேவராயர் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார் ஏனெனில்
A) அவரது வெற்றிகள்
B) அவர் இலக்கியம், கலைக்கு ஆற்றிய தொண்டு
C) சமய சகிப்பு தன்மை
D) போர்த்துகீசியருடன் நட்பு
1419. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) அர்த்தசாஸ்திரம்-மெகஸ்தனிஸ்
B) சத்திய சோதனை-அம்பேத்கார்
C) ஹர்ஷ சரிதம்-கௌடில்யர்
D) காளிதாசர்-குமாரசம்பவம்
1420. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
l. சிவாஜி சிறந்த படைத்திறன் மிக்க ஒருவர்.
II. சிவாஜி மராத்தியப் பேரரசினை உருவாக்கினார்.
III.சிவாஜி சமய சகிப்பு தன்மையுள்ளவர்.
IV.சிவாஜி உழவர்களிடம் தாராளமாக நடந்து கொண்டார்.
இவற்றில் :
A) I மட்டும் சரியானது
B) I மற்றும் 11 சரியானவை
C) I, II மற்றும் II1 சரியானவை
D) அனைத்தும் சரியானவை
1421. பட்டியல் 1ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) காந்தாரக் கலை. -1. சுங்கர்கள்
b) பர்கூர் -2. இராட்டிரகூடர்கள்
c) கைலாசநாதர் கோயில் -3. குப்தர்கள்
d) தியோகர் கோயில் -4. குஷாணர்கள்
குறியீடுகள் :
A)4 1 2 3
B)4 2 3 1
C)2 1 3 4
D)1 3 2 4
1422. ரிக் வேதத்தில் அடங்கியுள்ளவை
A) 1028 பாடல்கள்
B) 1000 பாடல்கள்
C) 2028 பாடல்கள்
D) 1038 பாடல்கள்
1423. காவிரி ஆற்றின் குறுக்கில் கல்லணையைக் கட்டியவர் யார்?
A) முதலாம் இராஜராஜ சோழன்
B) கரிகால சோழன்
C) முதலாம் இராஜேந்திர சோழன்
D) செங்குட்டுவன்
1424.மகாபலிபுரத்தை நிறுவியவர்கள்
A) பாண்டியர்
B) பல்லவர்
C) சோழர்
D) சாளுக்கியர்
1425. பட்டியல் lஐ பட்டியல் ll உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
பட்டியல் l பட்டியல் – II
a) ஆரிய சமாஜம் -1. இராமலிங்க சுவாமிகள்
b) பிரார்த்தனை சமாஜம். -2. கர்னல் ஆல்காட்
c) சுத்த சன்மார்க்க சங்கம் -3. சுவாமி தயானந்தர்
d) தியோசபிகல் இயக்கம் -4. ஆத்மராம் பாண்டுரங்.
குறியீடுகள் :
A)3 4 1 2
B)2 1 3 4
C)4 3 1 2
D)1 2 4 3
1426. குடுமியான்மலை கல்வெட்டு படம் பிடித்துக் காட்டுவது
A) கட்டடக்கலை
B) நாட்டியம்
C) இசை
D) கல்வி
1427. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) சிப்பாய் கலகம் – 1757
B) ரௌலட் சட்டம் – 1927
C) வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942
D) தண்டிப் பயணம் -1940
1428. இந்திய தேசிய காங்கிர்சின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
A) தாதாபாய் நௌரோஜி
B) சுரேந்திரநாத் பானர்ஜி
C) பிரோஷ் ஷா மேத்தா
D) உமேஷ் சந்திர பானர்ஜி
1429. சௌரி சௌரா படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1921
B) 1922
C) 1920
D) 1924
1430. கி.பி. 1917 இல் சம்பரன் அறப்போரில் பங்கேற்றவர்
A) பால கங்காதர திலகர்
B) கோபால கிருஷ்ண கோகலே
C) ஜவஹர்லால் நேரு
D) காந்திஜி
1431. கீழ்க்கண்டவற்றில் சரியான வரிசை முறையைக் கண்டுபிடி:
A) மின்டோ-மார்லி சட்டம், தன்னாட்சி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவைத் தூதுக்குழு
B) மின்டோ-மார்லி சட்டம், அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம்
C) தன்னாட்சி இயக்கம், மின்டோ-மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவைத் தூதுக்குழு
D) அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், மின்டோ-மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம்
1432. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
பட்டியல் l பட்டியல் II
a) தீவிரவாதி -1. பிரோஸ் ஷா மேத்தா
b) மிதவாதி -2. சி.ஆர். தாஸ்
c) பயங்கரவாதி -3. பால கங்காதர திலகர்
d) சுயராஜ்யம் -4. வ.வே.சு. ஐயர்
குறியீடுகள் :
A)1 3 2 4
B)2 1 4 3
C)2 1 3 4
D)3 1 4 2
1433.கி.பி.1947 இல் இந்தியா விடுதலை பெற்ற போது சென்னை சட்டசபையின் தலைவராக இருந்தவர் யார்?
A) டி. பிரகாசம்
B) இராஜாஜி
C) ஓ.பி. இராமசாமி ரெட்டியார்
D) காமராஜர்
1434. வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்பொழுது வந்தார்?
A) 1923
B) 1927
C) 1922
D) 1924
1435. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
துணிபு (A) : வன்முறை தவிர்த்தல் வலுவற்றவர் ஆயுதமேயன்றி வலிமையற்றோர் ஆயுதமன்று.
காரணம் (R) : வன்முறை நீக்கியே வலிமை மிக்க பிரிட்டன் பேரரசிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுள்ளது.
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமில்லை
C) (A) சரி; ஆனால் (R) தவறு
D) (A) தவறு; ஆனால் (R) சரி
1436. வ.உ. சிதம்பரம் பிள்ளை ஒரு புகழ்பெற்ற இந்தியனாக இருப்பதற்குக் காரணம்
A) ஆங்கிலேயரின் பவள ஆலையில் வேலை நிறுத்தத்தை ஏற்படுத்தினார்
B) சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றை முதன் முதலில் நிறுவியவர்
C) கடுங்காவல் தண்டனையால் துன்பப்பட்டார்
D) இலக்கியங்களின்பால் அக்கறை காட்டினார்.
1437. சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள்
A) இந்திரன்
B) வருணன்
C) பெண்தெய்வம்
D) மித்ரா
1438. இராமாயணத்தை எழுதியவர் யார்?
A) இராமர்
B) வால்மீகி
C) வியாசர்
D) லக்குமணன்
1439. விக்கிரமாதித்தர் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டவர்
A) சந்திரகுப்த மௌரியர்
B) அசோகர்
C) இரண்டாம் சந்திரகுப்தர்
D) சமுத்திரகுப்தர்
1440. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்
A) குத்புதின் அய்பெக்
B) பால்பன்
C) ருக் உதின்
D) ஜலாலுதின்
1441. சீக்கியர்களின் புனித நூல்
A) பகவத் கீதை
B) ஜெண்ட் அவஸ்த்தா
C) குரான்
D) ஆதி கிரந்தம்
1442. ராஜா தோடர்மால் எதனுடன் தொடர்பு கொண்டவர்?
A) இசை
B) சட்டம்
C) இலக்கியம்
D) நிலச்சீர்திருத்தம்
1443. தலசுய ஆட்சியின் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?
A) வில்லியம் பெண்டிங் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) கானிங் பிரபு
D) மேயோ பிரபு
1444. சங்க காலச் சோழ அரசர்களில் புகழ்பெற்ற சோழ அரசர்
A) நெடுங்கிள்ளி
B) கரிகாலன்
C) ராஜராஜன்
D) ஆதித்ய சோழன்
1445. வேலூர் கலகம் நடந்த ஆண்டு
A) 1824
B) 1806
C) 1857
D) 1836
1446. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
A) சேரன் செங்குட்டுவன்
B) கம்பர்
C) இளங்கோவடிகள்
D) கபிலர்
1447. பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
A) 1857
B) 1858
C) 1859
D) 1860
1448. காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்
A) வேதாரண்யம்
B) தண்டி
C) தூத்துக்குடி
D) கோவா
1449. ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு காரணமானவர்-
A) மாண்டேகு
B) செம்ஸ்போர்டு
C) ரௌலட்
D) ஜெனரல் டயர்
1450. சுயராஜ்ஜியக் கட்சியை உருவாக்கியவர்
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) இத, தாஸ்
C) அன்னிபெசன்ட்
D) மோதிலால் நேரு
குறிப்பு : B யும், D யும்
1451. காந்திஜியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம்
A) சாம்பரான்
B) பர்தோலி
C) தண்டி
D) பரோடா
1452. 1931-ல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் வட்டமேஜை பங்கேற்றவர் யார்?
A) மகாத்மா காந்தி
B) ஜவஹர்லால் நேரு
C) சீனிவாச சாஸ்திரி
D) இவர்களுள் எவரும் இல்லை
1453. முஸ்லிம்களுக்கு என தனிநாடு கோரியவர்
A) முகமது அலி ஜின்னா
B) கான் அப்துல் கபார்கான்
C) சாகுத் அலி
D) அபுல் கலாம் ஆசாத்
1454. வாஞ்சிநாதனை சுட்டுக் கொன்றவர்
A) பிரஞ்சுக்காரர்
B) ஆங்கிலேயர்
C) இந்திய சிப்பாய்
D) தனக்குத்தானே
1455. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பல பாடல்கள்
A) நாடகப் பாடல்கள்
B) தேசபக்திப் பாடல்கள்
C) திரைப்படப் பாடல்கள்
D) நாடோடிப் பாடல்கள்
1456. வேதாரண்யத்தில் உப்பு காயச்சியவர் யார்?
A) வ.உ. சிதம்பரம் பிள்ளை
B) பாரதியார்
C) ராஜாஜி
D) காமராஜர்
1457. இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A) 1915
B) 1916
C) 1911
D) 1910
1458. டெல்லியை ஆண்ட முதல் மொகலாய அரசர் யார்?
A) இல்துத் மிஷ்
B) பால்பன்
C) குத்புதின் ஐபெக்
D) கஜினி முகமது
1459. “சுதந்திர தொழிலாளர்கள் கட்சி”-ஐ ஆரம்பித்தவர்
A) ஈ.வி. இராமசாமி
B) அம்பேத்கார்
C) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
D) சி.என். அண்ணாத்துரை
1460. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?
A) மூன்றாம் ராஜராஜன்
B) மூன்றாம் ராஜேந்திரன்
C) மூன்றாம் குலோத்துங்கன்
D) வீர ராஜேந்திரன்
1461. கீழ்க்கண்டவற்றுள் எதன்மூலம் ஆரியமயமாதல் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது?
A) சமஸ்கிருதக் கூறுகள்
B) ஆங்கிலேய அம்சங்கள்
C) மேற்கத்தியக் கூறுகள்
D) வர்ணம்
1462. நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்
A) பி.டி. ராஜன்
B) கே. காமராஜ்
C) சி.என். அண்ணாத்துரை
D) பக்தவத்சலம்
1463. ‘அயினி அக்பரி’ என்ற நூலின் ஆசிரியர்
A) அபுல் ஃபாசல்
B) அமீர் குஸ்ரு
C) அபுல் ஃபைஸி
D) நிஜாமுதீன் அகமது
1464. பட்டியல் lஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் ll
a) ராஜா ராம்மோகன்ராய் -1. ஆரிய சமாஜம்
b) சுவாமி விவேகானந்தர் -2. ராமகிருஷ்ண பரமஹம்சர்
c) தயானந்த சரஸ்வதி -3. பிரம்மசமாஜ்
d) பிளேவட்ஸ்கி அம்மையார் -4. பிரம்மஞான சபை
குறியீடுகள் :
A)1 2 3 4
B)2 3 4 1
C)3 2 1 4
D)4 1 2 3
1465. சரியான கூற்றைத் தெரிந்தெடுக்கவும்:
A) காசி மத்திய இந்துக் கல்லூரி 1891-ல் ஏற்படுத்தப்பட்டது
B) அலிகார் இயக்கம் முகமது அலி ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்டது
C)அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 1920-ல் ஆரம்பிக்கப்பட்டது
D) விஷ்வபாரதி பல்கலைக்கழகம் தேவேந்திரநாத் தாகூரால் ஆரம்பிக்கப்பட்டது
1466. கீழ்உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தாது?
A) பகத்சிங்-“டெல்லி சலோ”
B) தயானந்த சரஸ்வதி-“வேதங்களுக்குத்திரும்புவோம்”
C) காந்திஜி-“தீண்டாமை ஒரு குற்றம்”
D) நேரு-“பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் வருங்காலத்தோடு சந்திப்பைக் கொண்டு விட்டோம்”
467. சங்க காலத்தில் தலைசிறந்த சோழ மன்னன்
A) நளங்கிள்ளி
B) கரிகாலன்
C) முதலாம் ஆதித்தன்
D) முதலாம் இராசராசன்
468. கி.பி. 640ல் காஞ்சிபுரத்திற்கு வந்த சீன யாத்திரிகர்
A) பாஹியான்
B) இட்சிங்
C) யுவான்சுவாங்
D) மெகஸ்தனிஸ்
1469. பழந்தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அயல்நாட்டவரைக் குறிக்க தமிழிலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சொல்
A) யவனர்
B) மகதர்
C) அறிவர்
D) உமணர்
1470. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர்
A) முதலாம் இராஜராஜன்
B) விக்கிரம சோழன்
C) இராஜாஜி இராஜா
D) முதலாம் இராஜேந்திரன்
1471. மகாத்மா காந்தி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை இந்த ஆண்டில் தொடங்கினார்.
A) கி.பி. 1945
B) கி.பி. 1942
C) கி.பி. 1947
D) கி.பி. 1946
1472. கீழ்க்கண்டவர்களில் யார் கலெக்டர் ஆஷ்-ஐ மணியாச்சி இரயில்வே ஸ்டேஷனில் படுகொலை செய்தது?
A) கொடிகாத்த குமரன்
B) ஜம்புலிங்கம்
C) வாஞ்சிநாதன்
D) வேதரத்தினம் பிள்ளை
1473. வைக்கம் வீரர் இறந்த ஆண்டு
A) 1971
B) 1973
C) 1975
D) 1977
1474. நாட்டிற்காகத் தனது அரசுப் பணியினைத் துறந்தவர் யார்?
A) கொடிகாத்த குமரன்
B) வாஞ்சிநாதன்
C) வ.உ. சிதம்பரம் பிள்ளை
D) விஸ்வநாத தாஸ்
1475. தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?
A) ஜோகன்பர்க்
B) தில்லையாடி
C) டர்பன்
D) காரைக்குடி
1476. தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் உப்பு தயார் செய்தவர்
A) இராஜாஜி
B) காமராஜ்
C) பிரகாசம்
D) பக்தவத்சலம்
1477. சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
A) புஷ்ய மித்ரன்
B) அக்னி மித்ரன்
C) தேவபூதி
D) கீர்த்திவர்மன்
1478. எஸ்.என்.பி. இயக்கம் இவரால் ஆரம்பிக்கப்பட்டது.
A) மஹாத்மா காந்தி
B) டாக்டர் அம்பேத்கார்
C) நாராயண குரு
D) இராஜாராம் மோகன்ராய்
1479. கௌதம புத்தர் எந்த ஊரில் பிறந்தார்?
A) பாட்னா
B) லும்பினி
C) உஜ்ஜையின்
D) சாரநாத்
1480. சிந்துவெளி நாகரீகத்தை அகழ்வாய்வு செய்தவர்
A) கன்னிங்காம்
B) மார்ஷல்
C) வீலர்
D) ராபர்ட் புரூஸ் புட்
1481. சங்க காலத்தில் வணங்கப்பட்ட தமிழ் கடவுள்
A) பிள்ளையார்
B) முருகன்
C) பார்வதி
D) கிருஷ்ணன்
1482.____ஆல் நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது
A) முதலாம் குமாரகுப்தர்
B) புத்த குப்தர்
C) ஸ்கந்த குப்தர்
D) ஸ்ரீகுப்தர்
1483. எண்வகை மார்க்கத்தை போதித்தவர்
A) கபீர்தாசர்
B) புத்தர்
C) மகாவீரர்
D) சங்கரர்
1484. தில்லி சுல்தானியத்தை உருவாக்கியவர்
A) முகமது கஜினி
B) குத்புதீன் ஐபெக்
C) இல்டுத்மிஷ்
D) சாபுக்டஜின்
1485. விஜயநகர பேரரசை நிறுவியவர்
A) கிருஷ்ண தேவராயர்
B) ஹரிஹர புக்கர்
C) சிவாஜி
D) தேவராயர்
1486. பாளையக்கார நிர்வாக முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A) விஸ்வநாத நாயக்கர்
B) வீரப்ப நாயக்கர்
C) திருமலை நாயக்கர்
D) மங்கம்மாள்
1487. திருமலை ‘சௌல்ட்ரியின்’ மறுபெயர்
A) புதுமண்டபம்
B) ஆயிரங்கால் மண்டபம்
C) கல்தூண்கள்
D) திருமலை நாயக்கர் மஹால்
1488. இந்தியாவில் ஸ்தல சுய ஆட்சியின் தந்தை எனப்படுபவர் யார்?
A) ரிப்பன் பிரபு
B) கர்ஸான் பிரபு
C) லிட்டன் பிரபு
D) கானிங் பிரபு
1489. பின்வருவனவற்றுள் தேசிய இயக்க இதழ்கள் யாவை?
A) சுதந்திரச் சங்கு, தேசபக்தன்
B) மணிக்கொடி, கணையாழி
C) பாப்பா, அரும்பு
D) ஞான பூமி, ஞான ஒளி
1490. தென்னிந்தியாவின் சிறப்பு பெற்ற பகுத்தறிவாளர்
A) பாரதியார்
B) ஈ.வே. ராமசாமி
C) பாரதிதாசன்
D) நாராயண குரு
491. இந்தியாவின் முதல் செய்தித்தாள் “பெங்கால் கெஜட்” வெளிவந்த ஆண்டு?
A) 1790
B) 1780
C) 1870
D) 1880
492. தனது பாடல்களின் மூலம் மக்களிடம் விடுதலை இயக்கக் காலத்தில் உணர்வுகளைத் தூண்டியவர் யார்?
A) காரைக்குடி சா. கணேசன்
B) விஸ்வநாத தாஸ்
C) ப. ஜீவானந்தம்
D) அகிலன்
1493.1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வரானவர் யார்?
A) பனகல் இராஜா
B) காமராஜ்
C) சுப்பராயன்
D) இராஜாஜி
1494. சுவாமி விவேகானந்தரின் உண்மையான பெயர்
A) வள்ளலார்
B) நரேந்திரர்
C) கதாதர்
D) சித்தார்த்தர்
1495. மெருகு செய்யப்பட்ட கல் ஆயுத காலத்திலிருந்து, புதிய கற்கால கலாச்சாரத்திற்கு மாற்றப்படுவதற்கு உதவியது என்ன?
A) நெருப்பின் பயன் தெரிந்தது
B) சக்கரம் செய்யப்பட்டது
C) தானியம் விளைவித்தது
D) எழுத்து அறிந்து கொண்டது
1496. மௌரியரின் சமுதாய பிரிவு ஏழு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது குறித்து கீழ்க்காணும் ஆதாரம் குறிப்பாக உதவுகிறது
A) கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
B) அசோகரின் கல்வெட்டுகள்
C) புராணங்கள்
D) மெகஸ்தனிஸ் இண்டிகா
1497. மத்த விலாசன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தவர்
A) முதலாம் மகேந்திரவர்மன்
B) நரசிம்மவர்மன்
C) ராஜசிம்மன்
D) இரண்டாம் நந்திவர்மன்
1498. பௌத்தத்தில் முழுமையான விடுதலை என்பது
A) பரமுக்தி
B) நிர்வாணம்
C) ஈஸ்வரமுக்தி
D) ஜீவன்முக்தி
1499. எக்காரணத்திற்காக ஷெர்ஷா சிறந்த அரசராகக் கருதப்படுகிறார்?
A) ஹூமாயூனுக்கெதிரான வெற்றிகள்
B) சிறந்த படைத் தளபதி
C) நிர்வாகச் சீர்த்திருத்தங்கள்
D) மதச்சார்பின்மை
1500.சைவ உணவு பழக்கத்தை மிகவும் தீவிரமாக நியாயப்படுத்தியவர்
A) காஞ்சி அடிகள்
B) வடலூர் சுவாமிகள்
C) திருவண்ணாமலை சுவாமிகள்
D) மதுரை ஆதினம்
1501. கீழ்வருவனவற்றுள் எது சோழர்களால் கட்டப்பட்ட கோயில்கள் சிறப்பம்சமாகும்?
A) மண்டபங்கள்
B) பெரிய தூண்கள்
C) விமானங்கள்
D) கோபுரங்கள்
1502. சோழர் காலத்தில் மிகவும் சிறப்பு பெற்றிருந்த நிர்வாக அமைப்பு
A) கிராம சபைகள்
B) படை
C) வெளியுறவு கொள்கை
D) வருவாய்த் துறை
1503. நிலையான படையை முதன்முதலில் கொண்டு வந்த இஸ்லாமிய மன்னர்
A) அலாவுதீன் கில்ஜி
B) இல்துத்மிஷ்
C) பால்பன்
D) பிரோஸ் ஷா
1504. பல்லவ மன்னர்களில் சித்திரகாரப் புலி என்ற அடைமொழி பெற்றவர்
A) மகேந்திரவர்மன்
B) இராஜசிம்மன்
C) மாமல்லன்
D) நந்திவர்மன்
1505. சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மாவின் வகைகள்
A), இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
1506. ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு
A) 1920
B) 1922
C) 1930
D) 1927
1507. ‘ஹரிஜன்’ என்ற இதழின் ஆசிரியர்
A) திரு.வி.க.
B) ஈ.வே.ரா.
C) மகாத்மா காந்தி
D) பாரதியார்
1508.கீழ்வருவனவற்றுள் எந்த மாகாணம் முதன் முதலில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது?
A) ஆந்திரப் பிரதேசம்
B) மகாராஷ்டிரா
C) சென்னை மாகாணம்
D) மேற்கு வங்காளம்
1509. எந்த வருடம் மத்திய சமூக நலவாரியம் அமைக்கப்பட்டது?
A) 1950
B) 1951
C) 1952
D) 1953
1510. வேலூர் கலகம் நடைபெற்ற பொழுது சென்னை கவர்னராக இருந்தவர்
A) தாமஸ் மன்றோ
B) வில்லியம் பெண்டிங்
C) எட்வர்ட் ஹாரிசன்
D) நேப்பியர் பிரபு
1511. ‘பிரான்சிஸ்டே’ வால் கட்டப்பட்டது
A) வில்லியம் கோட்டை
B) லூயி கோட்டை
C) புனித ஜார்ஜ் கோட்டை
D) புனித டேவிட் கோட்டை
1512. இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத தலைமை அமைச்சர்
A) வாஸ்கோட காமா
B) வி.பி. சிங்
C) அல்புகர்க்
D) நீலம் சஞ்சீவ் ரெட்டி
1513. பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய சிறந்த புத்தகம்
A) சத்திய சோதனை
B) இந்தியா
C) டிஸ்கவரி ஆப் இந்தியா
D) ஆனந்த மடம்
1514. 1893-ம் ஆண்டில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்ற இடம்
A) லண்டன்
B) சிக்காக்கோ
C) கல்கத்தா
D) எகிப்து
1515. போர்ச்சுகீசியர் ஆட்சியில் முதல் ஆளுநராக நியமனம் பெற்றவர்
A) மொரார்ஜி தேசாய்
B) ஆல்வாரிஸ்காப்ரல்
C) சரண்சிங்
D) டி-அல்மெய்டா
1516. ஆங்கிலேயர்கள் தென் இந்தியாவில் தங்கள் முதல் தொழிற்சாலையை ஏற்படுத்திய இடம்
A) சூரத்
B) பாண்டிச்சேரி
C) மசூலிப்பட்டினம்
D) மெட்ராஸ்
1517. ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய தீவிரவாத தலைவர்
A) அன்னிபெசன்ட்
B) காந்தியடிகள்
C) திலகர்
D) பாரதியார்
1518. இந்திய தேசிய படையினை உருவாக்கியவர்
A) வல்லபாய் படேல்
B) காந்தியடிகள்
C) நேதாஜி
D) திலகர்
1519. லாகூர் தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்
A) மகாத்மா காந்தியடிகள்
B) நேதாஜி
C) நேரு
D) வல்லபாய் படேல்
1520. ‘லைஃப் டிவைன்” என்ற புத்தகத்தை எழுதியவர்
A) அரவிந்தோ கோஸ்
B) சுவாமி விவேகானந்தர்
C) டாக்டர் இராதாகிருஷ்ணன்
D) மகாத்மா காந்தி
1521. முதல் உலகப் போர் முடிந்த ஆண்டு
A) 1914
B) 1915
C) 1916
D) 1918
1522. தலசுய ஆட்சியின் தந்தை என கருதப்படுபவர்
A) கர்சன் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) லிட்டன் பிரபு
D) மின்டோ பிரபு
1523. ‘ஆனந்தமடம்’ என்ற நூலின் ஆசிரியர்
A) இரவீந்திரநாத் தாகூர்
B) ஹேமச்சந்திர சட்டர்ஜி
C) கேசவ சந்திரா சென்
D) பக்கிம் சந்திர சட்டர்ஜி
1524. ஆதிமனிதன் முதலில் தெரிந்து கொண்டது
A) நெருப்பை உண்டாக்குவதற்கு
B) மிருகங்களை அடக்குவதற்கு
C) சக்கரம் செய்வதற்கு
D) தானியம் விளைவிக்க
1525. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர் என்ன?
A) பல்லவ வம்சம்
B) சோழ வம்சம்
C) பாண்டிய வம்சம்
D) சேர வம்சம்
1526. தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னவர் காலத்தில் சாதிமுறை தீவிரமாகப் பின்பற்றப்பட்டது.
A) விஷ்ணு கோபா
B) முதலாம் மகேந்திரவர்மன்
C) முதலாம் நந்திவர்மன்
D) இரண்டாம் நந்திவர்மன்
1527. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர்
a) உறையூர்
b) மதுரை
c) தஞ்சாவூர்
d) பூம்புகார்
1528.பின்வருபவர்களுள் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A) காமராஜ்
B) பெரியார்
C) ராஜாஜி
D) சத்தியமூர்த்தி
1529. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
A) காந்திஜி
B) மோதிலால் நேரு
C) சரோஜினி நாயுடு
D) அன்னிபெசன்ட்
1530. ‘இந்து’ என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
A) ஜி. சுப்பிரமணிய ஐயர்
B) ரா. வேங்கட ராஜூலு
C) ஜெகன்னாத் ஆச்சாரியார்
D) இராஜ கோபாலாச்சாரி
1531. ஜீவானந்தம் “ஜனசக்தி” என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
A) 1917
B) 1927
C) 1937
D) 1947
1532. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A) நுண் கற்காலம்-நுண்கற் தொழிற்சாலை
B) பழைய கற்காலம்-திரியும் வாழ்க்கை
C) புதிய கற்காலம்-நிரந்தர வாழ்க்கை
D) செம்புக்காலம்-உணவு உற்பத்தி நிலை
1533. பின்வருவனவற்றுள் எது சமண சமயத்தின் மூன்று இரத்தினங்களில் உள்ளடங்கியது இல்லை?
A) நிறைந்த அறிவு
B) தியானம்
C) நற்செயல்
D) விடுதலை
1534. அஜந்தா ஓவியங்கள் எந்தக் கதைகளை விளக்குகிறது?
A) இராமாயணம்
B) மகாபாரதம்
C) பஞ்சதந்திரம்
D) ஜாதகா கதைகள்
1535. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I. பட்டியல் ll
(மஹாயானர்களின் படைப்பு) (தொடர்புடையது)
a) சாத்தர்மபுண்டாரிக்கா -1) இறையருள்
b) வாஜ்ரஜிடிக்கா -2) சொர்க்கம்
c) சுக்கவாதி வியூகா -3) ஒழுக்கம்
d) காரந்த வியூகா -4) புலன்கடந்த மெய் பொருளியல்
குறியீடுகள் :
A)2 1 3 4
B)3 4 2 1
C)3 1 4 2
D)4 3 2 1
1536.______என்பது சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு
A) அரிசி
B) கோதுமை
C) சோளம்
D) கம்பு
1537.பண்டைக்கால மருத்துவத்தைப் பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது?
A) ரிக் வேதம்
B) சாமவேதம்
C) யஜூர் வேதம்
D) அதர்வண வேதம்
1538. ஆசிரமங்கள் (அ) வாழ்க்கையின் நான்கு நிலைகள் எந்தக்கால கட்டத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது?
A) வேதங்களுக்கு முந்திய காலம்
B) ரிக் வேத காலம்
C) பிந்திய வேத காலம்
D) இவற்றுள் எதுவுமில்லை
1539. ரிக் வேதங்களில் எவை அடங்கியுள்ளது?
A) பாசுரங்களின் தொகுப்பு
B) கதைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
C) பல்வேறு ஆட்சிகளின் வரிசையான தொகுப்பு
D) மந்திரங்கள் மற்றும் சடங்குகளின் தொகுப்பு
1540. கீழ்க்கண்ட எந்த நிலப்பரப்பு ஆதிகால ஆரியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை?
A) பலுசிஸ்தான்
B) கிழக்கு ஆப்கானிஸ்தான்
C) பஞ்சாப்
D) மேற்கு உத்திரப்பிரதேசம்
1541. புத்தரின் கருத்துப்படி மனித துயரங்களுக்கு அடிப்படை காரணம்
A) கோபம்
B) இச்சை
C) பெருமை
D) ஆசை
1542. ரிக் வேத கால மக்களின் அடிப்படை சமூக அமைப்பு எது?
A) தாய் ஆதிக்க குடும்பம்
B) தந்தை ஆதிக்க குடும்பம்
C) தாய் ஆதிக்க மற்றும் தந்தை ஆதிக்க குடும்பம்
D) இவை எதுவுமில்லை
1543. சங்க இலக்கியம் எழுதப்பட்ட மொழி
A) ஆவதி
B) தமிழ்
C) மைதிலி
D) மலையாளம்
1544. பல்லவ மன்னர்கள் இவற்றுள் எதை தழுவினார்கள்?
A) ஜைன மதம்
B) புத்த மதம்
C) இந்து மதம்
D) சைவ மதம்
1545. சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?
A) லோத்தல்
B) காளிபங்கன்
C) ரூபர்
D) மொகஞ்சதாரோ
1546. ரிக்வேத கலாச்சாரத்தின் முக்கிய பிரதிபளிப்பு
A) சிந்து-கங்கை பள்ளத்தாக்கு
B) பஞ்சாப் மற்றும் டில்லி பகுதி
C) சிந்து பள்ளத்தாக்கு
D) சிந்து மற்றும் சுவாத்திற்கு இடைப்பட்ட பகுதி
1547. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
கூற்று (A): யுவான் சுவாங் ஹர்ஷர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
காரணம் (R): அவரின் முக்கிய நோக்கம் புத்த ஆலயங்களை பார்வையிட வேண்டும் என்பதே.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A)-ம் (R)-ம் சரி, (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை
1548. சங்க காலத்தில் போர் அறிவிப்பு அல்லது விலக்குதல்
A) பகைவனின் வாகை மரத்தை வெட்டுதல்
B) பகைவனின் விலங்குகளை கவர்தல்
C) பகைவனின் கோட்டையை கைப்பற்றுதல்
D) யானையின் காலால் பகைவனின் பயிர்களை அழித்தல்
1549. பின்வருவனவற்றில் எதனைப் பற்றி மெசபடோமிய நாகரீகம் அறிந்திருக்கவில்லை?
A) பொன் மற்றும் வெள்ளி
B) செம்பு
C) வெண்கலம்
D) இரும்பு
1550. சிந்து சமவெளி நாகரீகத்தின் மட்கலன்கள்
A) சாம்பல் மட்கலன்கள்
B) கருப்பு வண்ணம் பூசிய சிவப்பு மட்கலன்கள்
C) வட இந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள்
D) கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள்
1551. முதல் அகழ்வாராய்ச்சியின் இயக்குனர் யார்?
A) முனைவர் ஹல்ட்ஸ்
B) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
C) ஃபெர்குசன்
D) மார்ஷல்
1552. இந்தியாவில் இரும்பை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்கள்
A) ஆரியர்கள்
B) திராவிடர்கள்
C) பாரசீகர்கள்
D) சுமேரியர்கள்
1553. சிந்து சமவெளி நாகரீகம் எதில் சிறப்புத்தன்மை உடையதாக காணப்பட்டது?
A) நகர திட்டமிடுதல்
B) கட்டிடக் கலை
C) கைவினை
D) இவை அனைத்தும்
1554. சிந்து சமவெளி மக்கள் பின் சொல்லப்பட்ட எந்த தெய்வத்தை வணங்கினார்கள்?
A) இந்திரன்
B) வருணன்
C) விஷ்ணு
D) இவை எதுவுமில்லை
1555. சிந்து சமவெளி மக்கள் எந்தப் பொருளை இறக்குமதி செய்தார்கள்?
A) கோதுமை
B) பழரசம்
C) வெள்ளி
D) சில்க்
1556. சங்க காலத்தின் போது முக்கியத் துறைமுகங்கள் என்பது
i) காவேரிப்பட்டினம்
ii) மதுரை
iii) அரிக்கமேடு
iv) கபாடபுரம்
iv) முசிறி
A) (i),(iii) மற்றும் (iv)
B) (i), (ii) மற்றும் (iii)
C) (i), (iii) மற்றும் (v)
D) (ii) மட்டும்
1557. ‘புத்த சரிதம்’ என்ற நூலின் ஆசிரியர்
A) பாணபட்டர்
B) அஸ்வகோஷர்
C) பார்சவா
D) வசுமித்திரர்
1558. கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் யாருடைய அவைக்கு விஜயம் செய்தார்?
A) அஜாதசத்ரு
B) சந்திரகுப்த மௌரியர்
C) அசோகர்
D) புஷ்யமித்ர சுங்கர்
1559. பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எந்த அரசர் ஆட்சியில் விஜயம் செய்தார்?
A) சந்திரகுப்த மௌரியர்
B) கனிஷ்கர்
C) சந்திரகுப்த விக்ரமாதித்யா
D) ஹர்ஷர்
1560. இக்தகாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A) பால்பன்
B) ஐபெக்
C) இல்டுட்மிஷ்
D) அலாவுதீன் கில்ஜி
1561. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மற்றொரு பெயர்
A) கங்கை கொண்ட சோழன்
B) சுங்கம் தவிர்த்த சோழன்
C) கிருமி கண்ட சோழன்
D) மும்முடி கொண்ட சோழன்
1562. ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னம்
A) குதுப்மினார்
B) செங்கோட்டை
C) தாஜ்மஹால்
D) முத்து மசூதி
1563. தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்
A) சிவாஜி
B) வெங்கோஜி
C) முதலாம் சரபோஜி
D) துக்கோஜி
1564. எந்த தமிழ் தேசியவாதி “பாலபாரதி” என்ற இலக்கிய சஞ்சரிகையை வெளியிட்டார்?
A) சுப்ரமணிய பாரதி
B) சுப்ரமணிய சிவா
C) வ.உ.சி.
D) வி.வி.எஸ். ஐயர்
1565. பின்வருபவர்களில் யார் மூன்று வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டவர்?
A) பி.ஆர். அம்பேத்கார்
B) எம்.எம். மாளவியா
C) எம்.கே. காந்தி
D) வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி
1566. இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகையை சரியான முறையில் வரிசைப்படுத்தவும்
A) போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்
B) டச்சுக்காரர், ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்
C) ஆங்கிலேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர
D) பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், டச்சுக்காரர்
1567. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) : கர்சன் 1905-ல் வங்காளத்தை பிரித்தார்.
காரணம் (R) : அவர் தேசிய ஒற்றுமையை அழிக்க விரும்பினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A)-ம் (R)-ம் சரி, (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A) சரி, ஆனால் (R) தவறு
C) (A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
D) (A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
1568. ‘ஆனந்மத்’ எழுதியது யார்?
A) இரவீந்திரநாத் தாகூர்
B) பக்கிம் சந்திர சத்தோப்தியாயா
C) அரவிந்தர்
D) மதுசூதனன் தத்தா
1569. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I. பட்டியல் II
காங்கிரஸ்தலைவர்கள் இடமும்ஆண்டும்
a) ஜார்ஜ் ஏல் -1) அலகாபாத் 1888
b) டாக்டர் ஆர்.சி. தத் -2) லக்னோ 1899
c) அன்னிபெசன்ட் -3) கல்கத்தா 1917
d) சரோஜினி நாயுடு -4) கான்பூர் 1928
குறியீடுகள் :
A)2 3 4 1
B)1 2 3 4
C)1 3 4 2
D)2 4 3 1
1570. “சௌரி சௌரா” சம்பவம் எப்பொழுது நிகழ்ந்தது?
A) 1920
B) 1923
C) 1922
D) 1921
1571. மெட்ராஸ் மகாஜன சபை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
A) 1883
B) 1882
C) 1884
D) 1886
1572. நவ விதான் சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
A) தேவேந்திரநாத்
B) நவீன் சந்திரா பாய்
C) கேசவ் சந்திரா சென்
D) பி.ஸி. மஜூம்தார்
1573. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
A) தாதாபாய் நௌரோஜி
B) சி.ஆர். தாஸ்
C) டபிள்யூ. சி. பானர்ஜி
D) ஜவஹர்லால் நேரு
1574. 1926-ம் ஆண்டு
A) நீதிக்கட்சி மந்திரி சபையை அமைத்தது
B) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு சென்னையில் நடைபெற்றது
C) திராவிடன் தமிழ் வாரப் பத்திரிக்கை தொடங்கப்பட்டது
D) இவை எதுவுமில்லை
1575. திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் யாரால் படுகொலை செய்யப்பட்டார்?
A) வி.வி.எஸ். ஐயர்
B) வாஞ்சி ஐயர்
C) வி.எஸ். சீனிவாச சாஸ்திரி
D) எஸ். சீனிவாச ஐயங்கார்
1576. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி,
துணிபு (A): புத்த சமயம் கர்மா கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை
காரணம் (R) : புத்த சமயம் நிரந்தர ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவில்லை
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமில்லை
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
1577. மணிமேகலையை எழுதியவர்
A) தொல்காப்பியர்
B) கபிலர்
C) இளங்கோவடிகள்
D) சீத்தலை சாத்தனார்
1578. ‘மந்திரமாவது நீறு’ என்று துவங்கும் பாடலை எழுதியவர் –
A) திருமூலர்
B) ஞானசம்பந்தர்
C) கண்ணப்பர்
D) மங்கையர்கரசியார்
1579. ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியை பெற்றனர்?
A) அக்பர்
B) ஜஹாங்கீர்
C) ஷாஜகான்
D) ஔரங்கசீப்
1580. பட்டியல் 1-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I. பட்டியல் ll
a) தனிநபர் அறப்போர் -1) 1927
b) சைமன் குழு -2) 1942
c) கிரிப்ஸ் தூதுக்குழு -3) 1940
d) சட்டமறுப்பு இயக்கம் -4) 1930
குறியீடுகள் :
A)3 1 2 4
B)2 3 4 1
C)1 3 4 2
D)4 2 3 1
1581. கி.பி. 1917 இல் நடைபெற்ற அறப்போரில் கலந்து கொண்டவர் யார்?
A) பால கங்காதர திலகர்
B) கோபால கிருஷ்ண கோகலே
C) தாதாபாய் நௌரோஜி
D) மகாத்மா காந்தி
1582. சுயராஜ்ஜியக் கட்சியின் முக்கியத் தலைவர்கள்
A) ஜே. பட்டேல், டாக்டர் அன்சாரி
B) எம்.என். ராய், முசாபர் அகமது
C) மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்
D) பி.ஆர். அம்பேத்கார், பி.சி. ஜோஸி
1583. கி.பி. 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர் யார்?
A) மகாத்மா காந்தி
B) ஜவஹர்லால் நேரு
C) டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
D) மோத்திலால் நேரு
1584.ரௌலட் சட்டம் கொண்டு வந்தபோது அரசப் பிரதிநிதியாக இருந்தவர்
A) மின்டோ
B) செம்ஸ்போர்டு
C) ஹார்டின்ஜ் பிரபு
D) இவர்களில் எவருமில்லை
1585. கி.பி. 1946-ல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்
A) சர்ச்சில்
B) அட்லி
C) மௌண்ட்பேட்டன்
D) இவர்களில் எவருமில்லை
1586. கீழ்க்காண்பவர்களில் யார் தீவிரவாதியில்லை?
A) பாலகங்காதர திலகர்
B) அரவிந்த் கோஷ்
C) வ.உ. சிதம்பரம்பிள்ளை
D) சுரேந்திரநாத் பானர்ஜி
1587. தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தவர்
A) குமரன்
B) இராஜாஜி
C) ஈ.வே. இராமசாமி
D) இவர்களில் எவருமில்லை
1588. இராபர்ட் வில்லியம் டி.இ. ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற இடம்
A) தர்மபுரி
B) ஈரோடு
C) திருப்பூர்
D) மணியாச்சி
1589. சுதேசி நீராவிக் கப்பல் என்ற நிறுவனம் தூத்துக்குடியில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
A) திருப்பூர் குமரன்
B) காமராசர்
C) வ.உ. சிதம்பரம்பிள்ளை
D) வாஞ்சிநாதன்
1590. அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
A) கி.பி. 74
B) கி.மு. 261
C) கி.மு. 326
D) கி.மு. 323
1591. இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர்
A) முதலாம் நரசிம்மவர்மன்
B) முதலாம் மகேந்திரவர்மன்
C) சிம்ம விஷ்ணு
D) இவர்களில் எவருமில்லை
1592. வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A) கி.பி. 1971
B) கி.பி. 1961
C) கி.பி.1981
D) கி.பி. 1969
1593. சரியான இணையைத் தேர்ந்தெடு.
A) ஒழுங்குமுறைச் சட்டம்-இராபர்ட் கிளைவ்
B) துணைப்படைத் திட்டம்-வெல்லெஸ்லி பிரபு
C) வாரிசு இழப்புக் கொள்கை-வாரன் ஹேஸ்டிங்ஸ்
D) இரட்டை ஆட்சி-டல்ஹௌசி பிரபு
1594. ரிப்பன் பிரபு மிகச்சிறந்த அரசப் பிரதிநிதியாகக் காரணம்
A) அவர் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு மதிப்பளித்தார்
B) தல கய ஆட்சி நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
C) சிறார்கள் தொழிற்சாலையில் பணியமர்த்துவதை தடை செய்தார்
D) அவர் அரசப் பிரதிநிதியாக இருந்தபோது இந்திய மக்கள்தொகையின் முழுக் கணக்கெடுப்பு நடைபெற்றது
1595. ஜாவா, சுமத்ரா ஆகியவற்றை வெற்றி கொண்ட இந்திய அரசர்
A) முதலாம் இராஜேந்திர சோழன்
B) முதலாம் இராஜராஜ சோழன்
C) குலோத்துங்க சோழன்
D) முதலாம் பராந்தகன்
1596. கிராம நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் கிடைத்த ஆட்சிக் காலம்
A) சோழர்கள்
B) முகலாயர்கள்
C) பாலர்கள்
D) ஆங்கிலேயர்கள்
1597. முடத்திருமாறன் மதுரை நகரை உருவாக்கிய ஆற்றங்கரை
A) காவேரி
B) வைகை
C) பாலாறு
D) தாமிரபரணி
1598. 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
A) கலைஞர் கருணாநிதி
B) திரு. சி.என். அண்ணாதுரை
C) திரு. ஈ.வே. ராமசாமி நாயக்கர்
D) திரு. கே. காமராஜ்
1599. சிவகங்கை சிங்கம்
A) பெரியமருது
B) புலித்தேவன்
C) சின்னமருது
D) கட்டபொம்மன்
1600. தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத் தந்தை
A) வ.உ. சிதம்பரம்பிள்ளை
B) இராஜ கோபாலாச்சாரியார்
C) பாரதியார்
D) சுப்ரமணிய சிவா