3. குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி
விடை: ஆ) மகதம்
2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா
விடை: அ) அஜாதசத்ரு
3. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
4. சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ……………. என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) ஸ்துலபாகு
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா
விடை: அ) பத்ரபாகு
5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ………….
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை: ஈ) மெகஸ்தனிஸ்.
6. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்
விடை: இ) பிரிகத்ரதா
II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை: ஆ) கூற்றும் காரணமும் உண்மையான, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, 2 ஆகிய இரண்டும்
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை: ஆ) 2 மட்டும்
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை: இ) 1 மற்றும் 2
4. கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
அ) நந்தா சிசுநாகா ஹரியங்கா மௌரியா
ஆ) நந்தா சிசுநாகா மௌரியா ஹரியங்கா
இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா
ஈ) சிசுநாகா மௌரியா நந்தா ஹரியங்கா
விடை: இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மெளரியா
5. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
ஆ) 3 மற்றும் 4 மட்டும்
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
ஈ) இவை அனைத்தும்
விடை: இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ………….. மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
விடை: ராஜகிரகம்
2. முத்ரராட்சசத்தை எழுதியவர் ……………
விடை: விசாகதத்தர்
3. …………. பிந்துசாரரின் மகனாவார்.
விடை: அசோகர்
4. மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ………..
விடை: சந்திகுப்த மௌரியர்
5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ………….. பணியமர்த்தப்பட்டனர்.
விடை: தர்ம – மகா மாத்திரர்கள்
IV. பொருத்துக.
1. கணா – அர்த்தசாஸ்திரம்
2. மெகஸ்தனிஸ் – மதச் சுற்றுப்பயணம்
3. சாணக்கியா – மக்கள்
4. தர்மயாத்திரை – இண்டிகா
விடை: அ) 3 4 1 2