2. சமத்துவம் பெறுதல்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
அ) சமூகமயமாக்கல்
ஆ) பொருளாதார நன்மைகள்
இ) அதிகாரத்துவ ஆளுமை
ஈ) புவியியல்
விடை: ஈ) புவியியல்
2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
அ) பாலின பாகுபாடு
ஆ) சாதி பாகுபாடு
இ) மத பாகுபாடு
ஈ) சமத்துவமின்மை
விடை: அ) பாலின பாகுபாடு
3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
அ) திரைப்படங்கள்
ஆ) விளம்பரங்கள்
இ) தொலைக்காட்சி தொடர்கள்’
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
4. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்
அ) இந்தியா 2020
ஆ) அக்கினிச்சிறகுகள்
இ) எழுச்சி தீபங்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
5. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1997
ஆ) 1996
இ) 1995
ஈ) 1994
விடை: அ) 1997
6. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
அ) 1985
ஆ) 1986
இ) 1987
ஈ) 1988
விடை: ஈ) 1988
7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
அ) செஸ்
ஆ) மல்யுத்தம்
இ) கேரம்
ஈ) டென்னிஸ்
விடை: இ) கேரம்
8. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?
அ) 14(1)
ஆ) 15 (1)
இ) 16 (1)
ஈ) 17 (1)
விடை: அ) 15 (1)
9. பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1989
இ) 1988
ஈ) 1987
விடை: அ) 1990
10. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) சேலம்
இ) கன்னியாகுமரி
ஈ) சிவகங்கை
விடை: இ) கன்னியாகுமரி
II. பொருத்துக :
1.
பாரபட்சம்
அ) தீண்டாமை ஒழிப்பு
2.
ஒத்தக் கருத்து உருவாதல்
ஆ) மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3.
பாகுபாடு
இ) சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4.
பிரிவு 14
ஈ) தவறான பார்வை அல்லது தவறான கருத்து
5.
பிரிவு 17
உ) பிறரை பற்றி எதிர்மறையாக மதிப் பிடுதல்
விடை: 1 – ஆ; 2 – ஈ; 3 – உ; 4 – இ; 5 – அ
III. கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. ______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை: பாரபட்சம்
2. _____ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தார்.
விடை: 1931
3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் _____
விடை: விஸ்வநாதன் ஆனந்த்
4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____.
விடை: டாக்டர் B.R. அம்பேத்கார்
5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____
விடை: தருமபுரி