Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

9. சமய இயக்கங்கள்

(Religious Movements)

 

பக்தி இயக்கம் (The Bhakthi Movement)

• இடைக்காலத்தில் இந்துக்களின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் தொடங்கப்பட்டது. இதன்படி இறைவனை மனமுருகப்பாடி வழிபடுவதே முக்தியடைவதற்கான (இறைவனை அடைவதற்கான) வழி என அறிவுறுத்தப்பட்டது.

 

• இவ்வியக்கம் இறைபற்றையே முன்னிலைப்படுத்தியது. பல்வேறு இடங்களையும் பல்வேறு காலகட்டங்களையும் சார்ந்தவர்கள் பக்தி இயக்கத்தினை தழைத்தோங்கிடச் செய்தனர்.

 

• பக்தி இயக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த கடவுள் வழிபாடு, தென்னிந்தியாவில் -சிவன் (சைவம்) மற்றும் விஷ்ணு (வைணவம்). வடஇந்தியாவில் – இராமன் மற்றும் கிருஷ்ணன்.

 

• இவ்வியக்கம் 10 -ஆம் நூற்றாண்டு வாக்கில் வீழ்ச்சியடையத் துவங்கியது. அச்சமயத்தில் சங்கராச்சாரியார், ராமானுஜர் உள்ளிட்டோர் பக்தி இயக்கத்தை மீண்டும் தழைக்கச் செய்தனர்.

 

• பக்தி இயக்கம் முதன்முதலாக கி.பி. 7 முதல் 12-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தென்இந்தியாவில் தோன்றியது. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் இதனை வளர்த்தெடுத்தனர்.

 

• தாழ்த்தப்பட்ட வகுப்பினரிலிருந்து அதிக அளவிலான பக்தி இயக்கத் துறவிகள் தோன்றினர். இவர்கள் சாதிகளைப் புறக்கணித்தனர். பெண்கள் பக்தி இயக்கத்தில் இணைய ஊக்கமளித்தனர். உள்ளூர் வழக்கு மொழிகளில் போதித்தனர்.

 

• இவர்கள் இறைவனை உருவமுடையவன் (சர்க்குண பிரம்மம்), அரூபமானவன் (நிர்க்குண பிரம்மம்) என இரு விதமாகக் கருதினர்.

 

• தென்னிந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கத்தை வட இந்தியாவிற்கு கொண்டு சேர்த்தவர் இராமானந்தர் ஆவார். இவர் இராமானுஜரின் சீடர் ஆவார்.

 

• சிவபக்தியில் தலைசிறந்தவர்கள நாயன்மார்கள் மொத்தம் 63 பேர் ஆவர். இவர்களில் (திருநாவுக்கரசர்), சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் முக்கியமானவர்களாவர். இவர்கள் சைவசமயக் குரவர்கள் எனப்படுகின்றனர்.

 

• திருநாவுக்கரசர் (அப்பர்) – இவர் கி.பி. 600-ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தார்.

 

• தனது தமக்கை திலகவதியின் அறிவுரைகளால் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.

 

• 49000 மேற்பட்ட பதிகங்களை எழுதியுள்ளார். எனினும் 311 பதிகங்களே கிடைத்துள்ளன.

 

• சுந்தரர் – எட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தார்.

• 38000 பதிகங்களைப் பாடினார். இருப்பினும் 100 பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

 

• மாணிக்கவாசகர் – ஒரே கடவுள் எனும் கோட்பாட்டைக் கொண்டவர்.

 

• கடவுளை அடையும் வழி “அன்பு” மட்டுமே என உறுதியாக நம்பினார். இவர் இயற்றிய நூல் திருவாசகமாகும்.

 

• சம்பந்தர் – 16000 பதிகங்களைப் பாடினார். ஆனால் 384 பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

 

• 63 நாயன்மார்களின் வரலாறு சேக்கிழாரின் பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

• இக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட தேவாரம், உள்ளிட்டவையும் சைவ சமய இலக்கியங்களாகும். திருவாசகம்

 

ஆழ்வார்கள்

• விஷ்ணுவின் புகழைப் பரப்பியது ஆழ்வார்களாவர். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். இவர்களுள் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

 

• 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட 4000 பாடல்கள், நாதமுனி என்பவரால் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

 

சங்கராச்சாரியார்

• பழங்காலத்தில் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர்களில் சங்கராச்சாரியாரும் ஒருவராவார்.

 

• கேரளாவின் காலடி எனுமிடத்தில் பிறந்தார்.

* இவரின் கொள்கையானது ஒரே கடவுள் எனும் அத்வைதக்கொள்கை ஆகும்.

 

• அன்பு, உண்மை, மதிப்பளித்தல் உள்ளிட்ட வாழ்வின் அடிப்படைக் கோட்பாடுகளை போதித்தார்.

 

இராமானுஜர் (கி.பி. 1017-1137)

• கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த இராமானுஜர், பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் ஆவார்.

 

• வேத பாரம்பரியத்தின் மூலம் பக்தியைத் தன்வயப்படுத்த இயலும் எனக் கருதினார்.

 

• பக்தி, அறிவு, வினைப்பயன் ஆகியவற்றின மூலம் எனப் போதித்தார். இவரின் கொள்கை விசிஷ்டாத்வைதமாகும்.

 

இராமானந்தர்

• 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் இராமானுஜரின் கொள்கை மற்றும் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் இராமானுஜரின் சீடர் எனப்படுகிறார்.

 

• தென்னிந்தியாவிலிருந்து வடஇந்தியாவிற்கு பக்தி இயக்கத்தைக் கொண்டு சென்றவர் இவரே.

 

• மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாகக் கருதியதோடு அவர்கள் அனைவரையும் சகோதர, சகோதரிகளாக எண்ணினார். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் இவரது சீடர்களாயினர்.

 

• வடஇந்திய மக்கள் பேசும் மொழியிலேயே இவர் போதனை செய்தார்.

 

வல்லபாச்சாரியார்

• இவர் கிருஷ்ணரை வழிபட்டார். மக்கள் ஒவ்வொருவரும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்று போதித்தார்.

 

• இவர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்றிருந்தார்.

 

• ஆத்மா மற்றும் பரமாத்மாவுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லையென போதித்தார்.

 

• இவர் புஷ்தி எனும் சமயப்பிரிவைத் (Pushti Sect) தோற்றுவித்தார்.

 

பசவர்

• இவர் வீரசைவம் என்ற பிரிவைத் தொடங்கினார். சிவனை வழிபட்ட இவரைப் பின்பற்றியோர் வீரசைவர் அல்லது லிங்காயத்துகள் எனப்பட்டனர்.

 

• சாதிமுறை, மறுபிறப்பு ஆகியவற்றை இவர் எதிர்த்தார். கர்நாடகத்தில் இவரது செல்வாக்கு இன்றும் காணப்படுகிறது.

 

சைதன்யர்

• இவர் கி.பி. 1485-இல் வங்காளத்தில் பிறந்தார். கிருஷ்ண வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார். அன்பும், பக்தியுமே இறைவனை அடையும் நல்வழி என்று போதித்தார். வங்காளத்தில் நவீன வைஷ்ணவ சமயத்தை தோற்றுவித்தவர் எனக்கருதப்படுகிறார்.

 

• இவரின் போதனைகள் அழைக்கப்படுகின்றன. “அசித்யபேதவேதம்” என்று

 

• இவரின் சீடர்கள் இவரை கிருஷ்ணரின் அவதாரம் எனக்கருதினர்.

 

• வங்காள சுல்தான் அலாவுதீன்ஷா, ஒடிஸாவின் கஜபதி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவராவார்.

 

கபீர்

• இவர் இராமானந்தரின் சீடராவார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை முதன்முதலாக வலியுறுத்தியவர். ஆன்மீகத் துறவிகளுள் இவர் சிறப்பிடம் பெற்றிருந்தார். இவரைப் பின்பற்றியோர் கபீர்பந்த் -எனப்பட்டனர்.

 

• இவரது போதனைகளின் தொகுப்பு பிஜகா எனப்படுகிறது. இவரது பாடல்களில் தோகா வகைப் பாடல்கள் மக்களிடையே தாக்கத்தையும், ஈர்ப்பினையும் ஏற்படுத்தின.

 

• மக்களின் வழிபாட்டுப் பாடல்களாகவும் அவை அமைந்தன. இவர், இராமனும், இரஹீமும் ஒருவரே என்றார். சிலை வழிபாட்டையம் சாதிமுறைகளையும் இவக் கண்டித்தார்.

 

குருநானக்

• பக்தி இயக்கத்தின் மற்றுமொரு மகான் குருநானக் ஆவார். இவர் சீக்கிய மதத்தை நிறுவினார். இவர் கபீரின் சீடர் ஆவார். லாகூர் அருகில் உள்ள தால்வாண்டி என்னும் ஊரில் கி.பி. 1469-இல் பிறந்தார்.

 

• கடவுள் ஒருவரே என்பது இவர் கருத்து. இந்து, முஸ்லீம்களிடையே, நம்பிக்கையையும், நட்புறவையும் வளர்க்க முற்பட்டார். உருவ வழிபாட்டினையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார்.

 

• உண்மை, நேர்மை, அன்பு ஆகியவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்.

 

• அன்பு மற்றும் பக்தியுடன் கடவுளின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதன்மூலம் எந்த சாதியையும், மதத்தையும், இனப்பிரிவைச் சார்ந்தவர்களும் மோட்சம் அடைய இயலும் எனப் போதனை செய்தார்.

 

• இவர் “குரு-கா-லங்கர்” எனும் சமூக உணவுக்கூட (community kitchen) வழக்கத்தைத் தோற்றுவித்தார்.

 

• உருவமற்ற கடவுளுக்கு அகல் புருஷ் எனப் பெயரிட்டு அழைத்தார். இவரது போதனைகள் ஆதிகிரந்தம் எனும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

 

• அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள் என்பது இவரின் புகழ்மிக்க போதனை ஆகும்.

 

 

 

மீராபாய்

• மேவார் நாட்டு மன்னர் ரதோர் ரத்தணாசிங் என்பவரின் மகளும், உதய்பூர் மன்னர் போஜராஜரின் மனைவியுமான மீராபாய் கி.பி. 1498-இல் பிறந்தார். இவர் ராணாசங்காவின் மருமகள் ஆவார், போஜராஜனை மணந்தார்.

 

• கிருஷ்ணரின் பக்தையான இவர் பக்தியியக்கத்தின் முக்கியத் துறவியாக விளங்கினார். இவரின் குரு, இரவிதாஸ் ஆவார். பஜன் என்னும் வகையிலமைந்த இவரது பாடல்கள் இராஜஸ்தான் பகுதியில் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

 

• மீராபாய்க்காக ஒரு பெரும் கோயில் மேவாரின் தலைநகர் சித்தூரில் கட்டி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

 

ஞானதேவர்

• இவர் மகாராஷ்டிரத்தில் பக்தி இயக்கத்தினைத் துவக்கி வளர்த்த முன்னோடி ஆவார்.

 

நாமதேவர்

• மகாராஷ்டிரத்தில் பக்தி இயக்கத்தைப் பரப்பிய இவரின் கருத்துகள் மகாராஷ்டிர தர்மம் எனப்படுகின்றன.

 

• பகவத் கீதைக்கு விளக்கம் கூறும் ஞானேஸ்வரி நூலை இயற்றியவர் இவரே.

 

• இவரது சில போதனைகள் சீக்கிய மதத்தின் புனித நூலான குருகிரந்த சாகிப்பிலும் இடம்பெற்றுள்ளன.

 

ஏக்நாத்

• மராத்திய கீதம் எனப்படும் ஞானேஸ்வரி எனும் நூலின் முதல் பதிப்பை வெளியிட்டவர் இவரே.

 

• மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் மாவட்டம் பதான் எனுமிடத்தில் பிறந்த இவர்,சாதிமுறையை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட பிரிவினரைத் தமது சீடர்களாக ஏற்றார்.

 

துக்காராம்

• இவர் விஷ்ணுவின் வடிவமான விட்டலின் மாபெரும் பக்தர் ஆவார். சத்ரபதி சிவாஜியின் சமகாலத்தவர்.

 

• மகாராஷ்டிரத்தின் தலைசிறந்த பக்தி இயக்கத் துறவி ஆவார். கபீரின் கருத்துக்களுடன் இவரின் கருத்துகள் ஒத்துப்போயின.

 

இராமதாஸ்

• சத்ரபதி சிவாஜியின் ஆன்மீக குரு இவர்தான். வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் அறிவுரை வழங்கும் நோக்கில் தசபோதா எனும் நூலை இயற்றினார்.

 

• நாடுமுழுவதும் ஆசிரமங்களை ஏற்படுத்தினார்.

 

சூர்தாஸ்

• வல்லபாச்சார்யரின் சீடர் ஆவார். கிருஷ்ணர் மற்றும் இராதையின் தீவிர பக்தர்.

• இவர் சூர் சூராவளி, சாகித்ய ரத்னா, சூர்சாகர் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

 

டாடு தயாள்

• நிர்க்குண பக்தி கலாச்சாரத்தைச் சார்ந்தவர். மனித குலத்திற்கு சேவை செய்வதை வலியுறுத்தினார்.

 

• இவர் பிரம்ம சம்ராதயா மற்றும் பரப்பிரம்ம சம்பிராதயா ஆகிய கோட்பாடுகளைத் தோற்றுவித்தார்.

 

மாதவாச்சார்யர்

• அறிவு மற்றும் பக்தியின் மூலமே மறுபிறப்பு சூழற்சியிலிருந்து விடுபட இயலும் என போதித்தார். இவருக்குப் பின் வந்தவர் ஜெயதீர்த்தர் ஆவார்.

 

துளசிதாஸர்

• வாரணாசியில் பிறந்த இவர் இராமபக்தர் (வைஷ்ணவம்) ஆவார்.. இவர் இராமாயணத்தின் இந்திமொழி வடிவமான இராம் சரிதமானஸ்.. கீதாவளி, கவிதாவளி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

 

புரந்தர் தாஸ்

• கர்நாடகத்தைச் சார்ந்த வைஷ்ணவத் துறவி. கர்நாடக இசைக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர்.

 

சங்கரதேவா

• அஸ்ஸாமைச் சார்ந்த வைஷ்ணவ துறவி.

 

தியாகராஜர் 

• கர்நாடக இசையில் மாபெரும் ஞானி, வைணவத் துறவி இராமன் மீது தீராத பக்தி கொண்டவர்.

 

சொக்கமேளா

• மகாராஷ்டிரத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த பக்தி இயக்கத் துறவி.

 

சூஃபி இயக்கம் (Sufi Movement)

• பாரசீகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம் இந்தியாவில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் பரவியது. இவ்வியக்கத்தைப் பின்பற்றியோர் சூஃபிகள் என அழைக்கப்பட்டனர்.

 

• சூஃபி இயக்கமானது கலிபாவின் போக்கினைக் கண்டித்தது. அரசியலையும், தத்துவத்தையும், இன்பங்களைத் தரும் பொருள்களையும் பயன்படுத்திக்கொள்ளும் கலீபாவின் செயல்களை எதிர்த்தது.

 

• முகமது நபியே உண்மையானவர் அவரது கோட்பாடுகளே முழுமையானது என்று சூஃபி இயக்கம் கருதியது.

 

• மேலும் தியானமும், பக்தியும் மட்டுமே இறைவனை அடையும் வழிகளெனப் போதித்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சூஃபி குழு

தோற்றுவித்தவர்

புகழ்பெற்ற துறவிகள்

இதர அம்சங்கள்

சிஸ்தி (டெல்லி மற்றும் கங்கை-யமுனைக்கு இடைப்பட்ட பகுதி )

குவாஜா அப்துல் சிஸ்தி

குவாஜா மொய்னுதின் சிஸ்தி, பக்தியார்காகி, நிஜாமுதீன் அவுலியா (மெஹ்பூம்-இ-இலாஹி)

சாமா எனும் பாடல்களைப் பாடி கடவுளுக்கு நெருக்கமாகச் செல்வது போன்ற சூழ்நிலையை உருவாக்கினர்.

சுஹ்ராவார்டி (பஞ்சாப் மற்றும் சிந்து பகுதி)

ஷேக் ஷிஹாபுதீன் சுஹ்ராவாடி

ஷேக் பஹுதீன் ஜக்காரியா

துறவிகள் மிகப்பெரிய ஜாகிர்களைக் கொண்டிருந்தனர். அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருந்தனர்.

ஃபீர்தௌசி

ஷேக் பத்ருதீன்

ஷேக்சம்சுதீன் யாஹியா (பீகார்)

இவர் குவஜா நிஜாமுதீன் ஃபீர்தௌசியின் சீடராவார்.

குவாத்ரி

ஷேக் அப்துல் குவாத்ரி

ஷா நியாமதுல்லாஹ், சையது முகமது ஜிலானி

முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மூத்தமகனான தாராஷிக்கோ |இந்த குழுவைப் பின்பற்றினார். தாரா ஷிக்கோ அரியணைப் போட்டியில் ஔரங்கசீப்பினால் கொல்லப்பட்டார்.

நாக்ஸ்பந்தி

குவாஜா பீர் முகமது

குவாஜா பாகி பில்லா ஷேக் அகமது ஷீர் ஹிந்தி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Join the conversation