Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

2. சிந்து வெளி நாகரிகம்

I. சரியான விடையை தேர்ந்தெடு: 

1. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

அ) செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

ஆ) செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

இ) செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி.

ஈ) செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

விடை: அ) செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

 

 

2. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?

அ) பழைய கற்காலம்

ஆ) இடைக்கற்காலம்

இ) புதிய கற்காலம்

ஈ) உலோக காலம்

விடை: ஈ) உலோக காலம்

 

 

3. ஆற்றங்கரைகள் நாகரிகத்தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்

அ) மண் மிகவும் வளமானதால்

ஆ) சீரான கால நிலை நிலவுவதால்

இ) போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

ஈ) பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

விடை: ஈ) பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

II. கூற்றைக்காரணத்தோடு பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கூற்று – ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். காரணம் – திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு

அ) கூற்றும் காரணமும் சரி.

ஆ) கூற்று தவறு, காரணம் சரி.

இ) கூற்று சரி, காரணம் தவறு.

ஈ) கூற்றும் காரணமும் தவறு.

விடை: அ) கூற்றும் காரணமும் சரி

 

 

2. கூற்று – ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது: காரணம் – ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.

அ) கூற்றும் காரணமும் சரி.

ஆ) கூற்று தவறானது, காரணம் சரி.

இ) கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானவை.

விடை: அ) கூற்றும் காரணமும் சரி

 

 

3. கூற்று – ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது

காரணம் – கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.

அ) கூற்றும் காரணமும் சரி.

ஆ) கூற்று தவறானது, காரணம் சரியானது.

இ) கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானவை.

விடை: அ) கூற்றும் காரணமும் சரி

 

4. கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?

அ) தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை

ஆ) வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.

இ) கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.

ஈ) பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

விடை: (ஆ மற்றும் ஈ) . வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

 

 

5. கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.

அ) நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான – தன்மை.

ஆ) ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.

இ) தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.

ஈ) அனைத்தும் சரி

மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை? 

விடை: ஈ) அனைத்தும் சரி

 

 

6. பொருந்தாததை வட்டமிடு.

காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்)

 

விடை: குதிரைகள்

7. தவறான இணையைத் தேர்ந்தெடு

1. ASI – ஜான் மார்ஷல்

2. கோட்டை – தானியக் களஞ்சியம்

3. லோத்தல் – கப்பல் கட்டும் தளம்

4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

விடை: 4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

 

 

III. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. ______ மிகப் பழமையான நாகரிகம்.

விடை: மெசபடோமியா நாகரிகம்

2. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ______ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.

விடை: அலெக்ஸாண்டர் கன்னிங்காம்

3. ______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

விடை: தானியக்களஞ்சியம்

4. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _____ யை உருவாக்குகிறார்கள்.

விடை: சமுதாயத்தை

 

 

 

 

V. பொருத்துக : 

1. மொஹஞ்ச-தாரோ – மேடான பகுதி

2. வெண்கலம் – சிவப்பு மணிக்கல்

3. கோட்டை – உலோகக் கலவை

4. கார்னிலியன் – இறந்தோர் மேடு

விடை: 

1. மொஹஞ்ச-தாரோ – இறந்தோர் மேடு

2. வெண்கலம் – உலோகக் கலவை

3. கோட்டை – மேடான பகுதி

4. கார்னிலியன் – சிவப்பு மணிக்கல்

 

 

Join the conversation