Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

4. தென்னிந்திய அரசுகள்

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: 

1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

அ) இரண்டாம் நரசிம்மவர்மன்

ஆ) இரண்டாம் நந்திவர்மன்

இ) தந்திவர்மன்

ஈ) பரமேஸ்வரவர்மன்

விடை: ஆ) இரண்டாம் நந்திவர்மன்

 

 

2. கீழ்க்காண்பனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?

அ) மத்தவிலாசன்

ஆ) விசித்திரசித்தன்

இ) குணபாரன்

ஈ) இவை மூன்றும்

விடை: ஈ) இவை மூன்றும்

 

 

3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

அ) அய்கோல்

ஆ) சாரநாத்

இ) சாஞ்சி

ஈ) ஜூனாகத்

விடை: அ) அய்கோல்

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை டிக் ✓ செய்யவும்

1. கூற்று (i) : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.

கூற்று (ii) : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அ. கூற்று i தவறு

ஆ) கூற்று ii தவறு

இ. இரு கூற்றுகளும் சரி

ஈ) இரு கூற்றுகளும் தவறு

விடை: இ. இரு கூற்றுகளும் சரி

 

 

2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுக்களைச் சிந்திக்கவும்

கூற்று (i) : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.

கூற்று (ii) : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்

அ: கூற்று i மட்டும் சரி

ஆ) கூற்று ii மட்டும் சரி

இ. இரு கூற்றுகளும் சரி

ஈ) இரு கூற்றுகளும் தவறு

விடை: இ). இரு கூற்றுகளும் சரி

 

 

3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைச் சிந்தித்து அவற்றில் எவை சரியா ன கூற்றென்று கண்டறியவும்

1. இவ்வம்சத்தை நிறுவியர் தந்திதுர்கா

2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.

3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

அ) 1 மட்டும் சரி

ஆ) 2,3 சரி

இ) 1,3 சரி

ஈ) மூன்றும் சரி

விடை: ஈ) மூன்றும் சரி

 

 

4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்

அ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்

இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்

விடை: இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

 

 

5. தவறான இணையைக் கண்டறியவும்

அ) தந்தின் – தசகுமார சரிதம்

அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

இ) பாரவி – கிரதார்ஜூனியம்

ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்

விடை: அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

 

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக: 

1. …….. ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

விடை: இரண்டாம் புலிகேசி

2. …….. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்

விடை: முதலாம் நரசிம்மவர்மன்

3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ……… ஆவார்

விடை: ரவி கீர்த்தி

4. ……… முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்

விடை: பரஞ்சோதி (சிறுத்தொண்டர்)

5. ……………. ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.

விடை: குடுமியான்மலை, திருமயம்

 

 

IV. பொருத்துக: 

அ) பல்லவர்

1. கல்யாணி

ஆ) கீழைச் சாளுக்கியர் 

2. மான்யகேட்டா 

இ) மேலைச் சாளுக்கியர்

3. காஞ்சி 

ஈ) ராஷ்டிரகூடர் 

4. வெங்கி 

 

 

 

விடை: 3, 4, 1, 2. 

 

 

Join the conversation