10. முகலாய பேரரசு
பாபர் மேற்கொண்ட போர்கள்
போர்கள்
வருடம்
தோல்வியுற்ற மன்னர்
குறிப்புகள்
முதல் பானிபட் போர்
1526 ஏப்ரல் 21
இப்ராஹிம் லோடி
இந்தியாவில் முகலாயர் ஆட்சி அமைய வழிவகுத்த போர்.
கன்வா போர்
1527
இராணா சங்கா
மேவார் நாட்டு இராஜபுத்திர மன்னர், பாபர். இப்போரின் வெற்றிக்குப்பிறகு “காஸி” எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
சந்தேரி போர்
1528
மேதினி ராய்
சனேரி பகுதியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட போர்.
காக்ரா போர்
1529
முகமது லோடி
• இப்ராஹிம் லோடியின் மாமனார். பாபரை இந்தியாவின்மீது படையெடுக்க அழைத்தவர்களில் இவரும் ஒருவர்.
• இடைக்கால வரலாற்றில் ஒரே சமயத்தில் நிலம் மற்றும் நீரில் நடைபெற்ற போர்.
அக்பரின் நில அளவீடுகள்
போலஜ்
ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலம்
பரவ்தி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பயிரிடப்படுவது
சச்சார்
மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பயிரிடப்படுகிறது
பஞ்சார்
ஐந்து அல்லது அதிகமான ஆண்டுகளுக்கு ஒருமுறை பயிரிடப்படுவது.
முகலாயர்கள் கால இலக்கியங்கள்
எழுத்தாளர்
நூல் மற்றும் பணி
பாபர்
துஷிக்-இ-பாபரி
அபுல் பாசல்
அயனி-இ-அக்பரி, அக்பர் நாமா
க்வாஜா நிஜாமுதீன் அகமது ஹராவி
தபாகத்-இ-அக்பரி
ஜஹாங்கீர்
துஷிக்-இ-ஜஹாங்கீரி
அப்துல் காதிர் பாதொனி
கிதாப்-உல்-அஹதீஸ், தாரிக்-இ-இல்ஃபி, முண்டாகாப்-உல்-தவாரிக்
ஹமீத்
முண்டாகாப்-இ-லபாப்
தார சுக்கோ
மஹ்-முல்-பஹ்ரெய்ன்
மிர்ஷா முகமது காசி
ஆலம்கீர் நாமா
ஈஸ்வர் தாஸ் நாகர்
பதுகத்-இ- ஆலம்ஹிரி
முகலாயர் கால கட்டடக்கலைகள்
கட்டியவர்
பங்களிப்பு
பாபர்
அயோத்தி, பானிபட் (காபூலிகார்), நோஹில்கண்ட் (சம்பல்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட மகுதிகள்
ஹாஜிபேகம் (ஹுமாயூனின் மனைவி)
ஹுமாயூன் கல்லறை
அக்பர்
ஆக்ரா கோட்டை, ஜஹாங்கிரி மஹால் (ஆக்ரா கோட்டையில்), லாகூர் மாளிகை, அலகாபாத் கோட்டை பிருந்தாவனத்திலுள்ள கோவிந்த் தேவா ஆலயம், பதேபூர் சிக்ரியிலுள்ள கட்டடங்கள், திவான்-இ-காஸ், ஜோத்பாய் அரண்மனை, ஈரானிய பாணியிலான புலந்தர்வாசா.
ஜஹாங்கீர் (இந்திய-பாரசீக பாணி)
லாகூரிலுள்ள மோத்தி மசூதி, சதாராவில் தனக்கென கட்டிய சமாதி
நூர்ஜஹான்
ஆக்ராவிலுள்ள இத்மத் உத் தௌலா மார்பிள் கல்லறை
ஷாஜகான்
• டெல்லியில் – ஜூம்மா மசூதி, செங்கோட்டை, திவான்-ஐ-காஸ், ரங்மஹால்,
• ஆக்ராவில் – தாஜ்மகால், மோதி மசூதி, கானாஸ் மஹால், ஷீஷ் மகால், முசமான் பர்ஸ் (மல்லிகை மாளிகை எனப்பட்ட இதில்தான் தனது கடைசி காலத்தைக் கழித்தார்).
• இதர இடங்களில் – லாகூரிலுள்ள ஷாலிமர்பாக், ஷாஜகானாபாத், நஹோர்-ஐ-ஃபைஸ்
ஔரங்கசீப்
டெல்லியிலுள்ள மோதி மசூதி, அவுரங்காபாத்தில் பிபிகா மக்பரா (தனது மனைவிக்காகக் கட்டியது), லாகூரில் பாட்ஷாகி மசூதி
மத்திய நிர்வாகம்
• வசீர் – பிரதம அமைச்சர்
• திவான் – நிர்வாகம், நிதி மற்றும் வரிவருவாய் ஆகிய மூன்றிலும் இவருக்கு பொறுப்பிருந்தது.
• மீர்பக்ஷி -இராணுவத்துறையின் தலைவர்.
• மீர் சாமன் (அல்லது) கான் சாமன் – அரச குடும்பத்தின் சொத்துக்கள், அரண்மனைகள், தோட்டங்கள் ஆகியவற்றிற்கான பொறுப்பாளர்.
• சதர்-அஸ்-சுதுர் – மதம் சார்ந்த விவகாரங்களுக்கான பொறுப்பாளர்.
• தலைமை காஸி – அரசரையடுத்து நீதித்துறையின் தலைவர்.
• பரீத் – ஒற்றர்.
• முஸ்தாஃபி – தணிக்கை அலுவலர்.
மாகாண நிர்வாகம்
* முகலாய சாம்ராஜ்யம் 12 மாகாணங்களாக (சுபா) பிரிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை அக்பரின் காலத்தில் 15-ஆகவும், ஜஹாங்கிர் காலத்தில் 11-ஆகவும், ஷாஜகான் காலத்தில் 22-ஆகவும், ஔரங்கசீப் காலத்தில் 21-ஆகவும் இருந்தது.
• சுபாவின் (மாகாணத்தின்) தலைவர் சுபேதார்.
• மாகாண திவான் மாகாணத்தின் நிதி சார்ந்த விவகாரங்களை கவனித்துக்கொண்டார். இவர் மத்திய திவானுக்கு நேரடியாகப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்.
மாவட்டம் (அ) சர்க்கார்
சுபாக்களானது சர்க்கார்கள் எனும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
• பௌஜ்தார் – சர்க்காரின் நிர்வாகத் தலைவர்.
• அமீல் / அமல்குஜார் – வரிவசூல் செய்பவர் மற்றும் சாலை பாதுகாப்பு பணியிலீடுபடுபவர்.
• கொத்வால் – கோட்டைகள் அல்லது நகரங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுபவர் . குற்றவழக்கு விசாரணைகள் மற்றும் விலைகளை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்பவர்.
பர்கானா
சர்க்கார்கள் பர்கானாக்கள் எனும் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
• ஷிக்தார் – பர்கானாவின் நிர்வாகத் தலைவர்,
• அமீன் / குவானுங்கோ – பர்கானாவின் வருவாய்துறை அதிகாரிகள்.
கிராமங்கள்
பர்கானாக்கள் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
• லம்பாதார் – கிராமத்தின் தலைவர்,
• பத்வாரி – கிராம கணக்குப் பதிவாளர்.
மன்சப்தாரி முறை
இதன்படி இரு வகையான தரநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
• சத் – மன்சப்தாரின் தனிப்பட்ட அந்தஸ்த்தைக் குறிப்பது.
2. சாவர் – இது மன்சப்தாரின் தரத்தைக் குறிப்பிட்டது. எத்தனை குதிரை வீரர்களை அவர் நிர்வகிக்கிறார் என்பதைக் குறித்தது.