1. பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ______
விடை: பெருவெடிப்பு
2. இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _____ ஆகும்.
விடை: ஒளியாண்டு
3. சூரியக் குடும்பத்தின் மையம் _____
விடை: சூரியன்
4. கோள் என்ற வார்த்தையின் பொருள் _____
விடை: சுற்றி வருபவர்
5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _____
விடை: வியாழன்
6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _____
விடை: சந்திராயன் – 1
7. புவியின் சாய்வுக் கோணம் _____
விடை: 23 1/2°
8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ____ மற்றும் _____
விடை: மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _____ ல் காணப்படும்.
விடை: மிக அருகில்
10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு – என்றுபெயர்.
விடை: ஒளிர்வு வட்டம்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
அ) சுற்றுதல்
ஆ) பருவகாலங்கள்
இ) சுழல்தல்
ஈ) ஓட்டம்
விடை: இ) சுழல்தல்
2. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்.
அ) மார்ச் 21
ஆ) ஜூன் 21
இ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை: ஈ) டிசம்பர் 22
3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்.
அ) ஆண்டிரோமெடா
ஆ) மெகலனிக்கிளவுட்
இ) பால்வெளி
ஈ) ஸ்டார்பர்ஸ்ட்
விடை: இ) பால்வெளி
4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
அ) செவ்வாய்
ஆ) சந்திரன்
ஈ) வெள்ளி
விடை: ஆ) சந்திரன்
5. எந்த கோளால் தண்ணீ ரில் மிதக்க இயலும்?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெப்டியூன்
விடை: ஆ) சனி
III. பொருந்தாததை வட்டமிடுக.
1. வெள்ளி வியாழன், நெப்டியூன், சனி
விடை:
2. சிரியஸ் ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
விடை:
3. புளூட்டோ , ஏரிஸ், செரஸ், அயோ
விடை:
4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
விடை:
5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி விண்கலம்
விடை:
IV. பொருத்துக.
1. வெப்பமான கோள் – செவ்வாய்
2. வளையம் உள்ள கோள் – நெப்டியூன்
3. செந்நிறக் கோள் – வெள்ளி
4. உருளும் கோள் – சனி
5. குளிர்ந்த கோள் – யுரேனஸ்
விடை: 1 – இ; 2 – ஈ; 3 – அ ; 4 – உ; 5 – ஆ
V. (i). கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜுன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2 மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை: அ) 1 மற்றும் 2
ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை: அ) கூற்று சரி, கூற்று 2 தவறு
VI. பெயரிடுக.
1. விண்மீன்களின் தொகுப்பு ______
விடை: விண்மீன் திரள்
2. சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் _______
விடை: பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்
3. பிரகாசமான கோள் _____
விடை: வெள்ளி
4. உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் _______
விடை: உயிர்க்கோளம்
5. 366 நாட்களை உடைய ஆண்டு ______
விடை: லீப் ஆண்டு