Course Content
நாள் 5 – ஆங்கிலம்
0/1
புத்தக வினாக்கள் – 6-ம் வகுப்பு – பொருளியல்
0/1
SI DAY – 05 CLASS
About Lesson

1. தேசியச் சின்னங்கள்

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: 

1. தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …

அ) பிங்காலி வெங்கையா

ஆ) ரவீந்திரநாத் தாகூர்

இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஈ) காந்திஜி

விடை: இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

 

 

2. இந்தியாவின் தேசிய கீதம். ……….

அ) ஜன கண மன

ஆ) வந்தே மாதரம்

இ) அமர் சோனார் பாங்கலே

ஈ) நீராருங் கடலுடுத்த

விடை: அ) ஜன கண மன

 

3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்

அ) அக்பர்

ஆ) ரவீந்திரநாத் தாகூர்

இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

விடை: இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

 

 

4. …………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.

அ) மகாத்மா காந்தி

ஆ) சுபாஷ் சந்திர போஸ்

இ) சர்தார் வல்லபாய் பட்டேல்

ஈ) ஜவஹர்லால் நேரு

விடை: அ) மகாத்மா காந்தி

 

 

5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………

அ) வெளிர்நீலம்

ஆ) கருநீலம்

இ) நீலம்

ஈ) பச்சை

விடை: ஆ) கருநீலம்

 

6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.

அ) சென்னை கோட்டை

ஆ) டெல்லி

இ) சாரநாத்

ஈ) கொல்கத்தா

விடை: அ) சென்னை கோட்டை

 

 

7. தேசிய கீதத்தை இயற்றியவர் …………..

அ) தேவேந்திரநாத் தாகூர்

ஆ) பாரதியார்

இ) ரவீந்திரநாத் தாகூர்

ஈ) பாலகங்காதர திலகர்

விடை: இ) ரவீந்திரநாத் தாகூர்

 

 

8. தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….

அ) 50 வினாடிகள்

ஆ) 52 நிமிடங்கள்

இ) 52 வினாடிகள்

ஈ) 20 வினாடிகள்

விடை: இ) 52 வினாடிகள்

 

 

9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….

அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஆ) ரவீந்திரநாத் தாகூர்

இ) மகாத்மா காந்தி

ஈ) சரோஜினி நாயுடு

விடை: ஆ) ரவீந்திரநாத் தாணர்

 

 

10. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……

அ) பிரதம அமைச்சர்

ஆ) குடியரசுத் தலைவர்

இ) துணைக்குடியரசுத் தலைவர்

ஈ) அரசியல் தலைவர் எவரேனும்

விடை: அ) பிரதம அமைச்சர்

 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விடை: சாரநாத்

2. இந்தியாவின் தேசியக் கனி …………….

விடை: மாம்பழம்

3. இந்தியாவின் தேசியப் பறவை …………

விடை: மயில்

4. இந்தியாவில் தேசிய மரம் ………..

விடை: ஆலமரம்

5. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.

விடை: குடியாத்தம்

6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………

விடை: பிங்காலி வெங்கையா

7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..

விடை: கனிஷ்கர்

8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..

விடை: கங்கை

9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………

விடை: டி. உதயகுமார்

10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.

விடை: 24

III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

1. நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)

விடை: சாரநாத்

2. தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)

விடை: 1950

3. ……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)

விடை: லாக்டோபேசில்லஸ்

 

IV. நிரப்புக.

1. காவி – தைரியம்; வெள்ளை – ……………

விடை: நேர்மை

2. குதிரை – ஆற்றல்; காளை – ……………….

விடை: கடின உழைப்பு

3. 1947 – விடுதலை நாள்; 1950 – ……….

விடை: குடியரசு நாள்

 

 

V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்: 

1. 

ரவீந்திரநாத் தாகூர் 

அ) தேசியப் பாடல்

2.

பக்கிம் சந்திர சட்டர்ஜி 

ஆ) தேசியக் கொடி

3.

பிங்காலி வெங்கையா

இ) வான் இயற்பியலாளர் 

4. 

மேக்னாத் சாகா 

ஈ) தேசிய கீதம் 

 

விடை: 1 – ஈ; 2 – அ; 3 – ஆ ; 4 – இ. 

 

 

VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?

1.

தேசிய ஊர்வன

புலி

2.

தேசிய நீர்வாழ் விலங்கு

லாக்டோ பேசில்லஸ் 

3.

தேசிய பாரம்பரிய விலங்கு

ராஜநாகம்

4.

தேசிய நுண்ணுயிரி 

டால்பின் 

 

 

விடை: 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

 

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்: 

1. அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.

ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது 

இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.

விடை: இ

 

 

2. அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்

ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.

இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.

விடை: ஆ

 

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.

3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

விடை: 1

Join the conversation