1. தேசியச் சின்னங்கள்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
விடை: இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
2. இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
விடை: அ) ஜன கண மன
3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை: இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
4. …………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை: அ) மகாத்மா காந்தி
5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
விடை: ஆ) கருநீலம்
6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
விடை: அ) சென்னை கோட்டை
7. தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
விடை: இ) ரவீந்திரநாத் தாகூர்
8. தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
விடை: இ) 52 வினாடிகள்
9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
விடை: ஆ) ரவீந்திரநாத் தாணர்
10. விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
விடை: அ) பிரதம அமைச்சர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை: சாரநாத்
2. இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை: மாம்பழம்
3. இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை: மயில்
4. இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை: ஆலமரம்
5. 1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை: குடியாத்தம்
6. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை: பிங்காலி வெங்கையா
7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை: கனிஷ்கர்
8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை: கங்கை
9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை: டி. உதயகுமார்
10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை: 24
III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
1. நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை: சாரநாத்
2. தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை: 1950
3. ……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை: லாக்டோபேசில்லஸ்
IV. நிரப்புக.
1. காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை: நேர்மை
2. குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை: கடின உழைப்பு
3. 1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை: குடியரசு நாள்
V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்:
1.
ரவீந்திரநாத் தாகூர்
அ) தேசியப் பாடல்
2.
பக்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) தேசியக் கொடி
3.
பிங்காலி வெங்கையா
இ) வான் இயற்பியலாளர்
4.
மேக்னாத் சாகா
ஈ) தேசிய கீதம்
விடை: 1 – ஈ; 2 – அ; 3 – ஆ ; 4 – இ.
VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?
1.
தேசிய ஊர்வன
புலி
2.
தேசிய நீர்வாழ் விலங்கு
லாக்டோ பேசில்லஸ்
3.
தேசிய பாரம்பரிய விலங்கு
ராஜநாகம்
4.
தேசிய நுண்ணுயிரி
டால்பின்
விடை: 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்:
1. அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது
இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை: இ
2. அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை: ஆ
VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை: 1