1. வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. ஆரியர்கள் முதலில் ………………… பகுதியில் குடியமர்ந்த னர்.
அ) பஞ்சாப்
ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
இ) காஷ்மீர்
ஈ) வடகிழக்கு
விடை: அ) பஞ்சாப்
2. ஆரியர்கள் ………… லிருந்து வந்தனர்.
அ) சீனா
ஆ) வடக்கு ஆசியா
இ) மத்திய ஆசியா
ஈ) ஐரோப்பா
விடை: இ) மத்திய ஆசியா
3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” …………. லிருந்து எடுக்கப்பட்டது.
அ) பிராமணா
ஆ) ஆரண்யகா
இ) வேதம்
ஈ) உபநிடதம்
விடை: ஈ) உபநிடதம்
4. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
அ) 1/3
ஆ) 1/6
இ) 1/8
ஈ) 19
விடை: ஆ) 1/6
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன. காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை: ஈ) கூற்று தவறு; காரணம் சரி
2. கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்
கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
அ) கூற்று 1 தவறானது
ஆ) கூற்று 2 தவறானது
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை.
விடை: இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
3. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அ) ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.
இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.
விடை: ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது
4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா
விடை: ஆ) குலா < கிராமா விஷ் < ஜனா < ராஸ்டிரா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வேதப்பண்பாடு ……………. இயல்பைக் கொண்டிருந்தது.
விடை: செம்புகால பண்பாடு
2. வேதகாலத்தில் மக்களிடமிருந்து ………… என்ற வரி வசூலிக்கப்பட்டது.
விடை: பாலி
3. ………… முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
விடை: குருகுலக்கல்வி
4. ஆதிச்சநல்லூர் ……………… மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விடை: தூத்துக்குடி
III. பொருத்துக.
அ) கீழடி – 1. பகடை
ஆ) பொருந்தல்
2. கொழு முனைகள்
இ) கொடுமணல்
ஈ) ஆதிச்சநல்லூர்
3. சுழல் அச்சுக்கள்
4. தங்க ஆபரணங்கள்
விடை: 1 2 3 4