1. பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை: ஆ) சேரன் செங்குட்டுவன்
2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை: இ) பல்லவர்
3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை: இ) களப்பிரர்கள்
4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை: இ) வர்
5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை: இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்:
1. கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
2. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை: ஆ. 1 மற்றும் 3 மட்டும்
3. பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை: ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
4. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
அ) சேரர்
1. மீன்
ஆ) சோழர்
2. புலி
இ) பாண்டியர்
3. வில், அம்பு
விடை: அ) 3, 2, 1
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை: கரிகால் வளவன்
2. சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை: தொல் காப்பியம்
3. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை: கரிகாலன்
4. படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன்
5. நில வரி ……. என அழைக்கப்பட்டது
விடை: இறை
V. பொருத்துக:
அ. தென்னர்
1. சேரர்
ஆ. வானவர்
2. சோழர்
இ. சென்னி
3. வேளிர்
ஈ. அதியமான்
4. பாண்டியர்
விடை: 4, 1, 2, 3