Course Content
நாள் 9 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 9 – உளவியல் தேர்வு
0/1
நாள் 9 – ஆங்கிலம் தேர்வு
0/1
SI DAY – 09 TEST
About Lesson

TEST 1/10

1.பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்தெழுதுக.

2.பிரித்தெழுதுக.
சீரிளமை

3.சேர்த்தெழுதுதல்

4.கூட்டப் பெயர் :
‘யானை’

5.சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
‘பழம்’
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
(A) பழக்குவியல்
(B) பழக்கூட்டம்
(C)பழக்குலை
(D) பழமந்தை
(E) விடை தெரியவில்லை

6.கூற்று – சரியா? தவறா?
கூற்று 1 : பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு
கூற்று 2 : முல்லைப் பாட்டைப் பாடியவர் கபிலர்

7.கீழ்க்கண்ட தொடர்களைக் கவனி.
கூற்று : தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும்
உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.
காரணம் : மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி
வீணாவதைத் தடுப்பதற்காக அணையைக் கட்டினார்.

8.அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் பயன்படுத்துக.
(மார்க்கம்)
(A) குணம் இருந்தால்_____உண்டு
(B) பணம் இருந்தால் _____உண்டு
(C)மனம் இருந்தால்_____உண்டு
(D) தனம் இருந்தால் _____உண்டு
(E) விடை தெரியவில்லை

9.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(நோயாளன்)
(A) வாளால் அறுத்த____போல்
(B)மாளாத காதல்____போல்
(C) மீளாத துயர்தரினும்____போல்
(D) ஆளா உனதருள்____போல்
(E) விடை தெரியவில்லை____போல்

10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(இனிய)
(A)_____விலங்கிடம் பழகாதே
(B)எல்லோருக்கும்_____வணக்கம்
(C) நாம்_____வாங்கவேண்டும்
(D) தமிழ்____கொண்டுள்ளது
(E) விடை தெரியவில்லை

TEST 11/20

11. பொருத்தமான காலத்தைச் சுட்டுக
“வாழ்த்தொலிகள் வந்து கொண்டே இருந்தன”

12.சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) மழை பெய்யாது         – இறந்தகாலம்
(B)மழை பெய்யும்             – எதிர்காலம்
(C) மழை பெய்தது            – நிகழ்காலம்
(D) மழை பெய்கின்றது – எதிர்காலம்
(E) விடை தெரியவில்லை

13. கீழ்கண்ட வாக்கியங்களில் இறந்த காலத்தைக் காட்டும் வாக்கியத்தைக் கண்டறிக
(A) பழம் நழுவிப் பாலில் விழுந்தது
(B) பழம் நழுவிப் பாலில் விழாது
(C) பழம் நழுவிப் பாலில் விழும்
(D) பழம் நழுவிப் பாலில் விழுகின்றது
(E) விடை தெரியவில்லை

14.விசனம் என்பதன் எதிர்ச்சொல் தருக

15. “அல்லவை” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

16. ‘மயிலை’ என வழங்கப்படும் ஊர்ப்பெயர் எதுவென கண்டறிக.

17. புதுக்கோட்டை என்பதன் மரூஉ எதுவெனக் கண்டறிக.

18.‘சிவிங்கம்’ தமிழ்ப்படுத்துக
19. Magazine-சரியான தமிழ்ச்சொல்
20. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
“செய்தக்க செய்யாமை யானும் கெடும்”

TEST 21/30

21.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
“கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்”
22.விடைக்கேற்ற வினாவைத் தெரிந்தெடுத்து எழுதுக.
“இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என தன்மையினை படர்க்கை இடத்தில் கூறுவது, இட வழுவமைதியாகும்.
23. விடைக்கேற்ற வினா அமைக்க.
முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.

24.சரியான விடையைத் தேர்க.
நான் லைட்ஹவுசுக்கு செல்கிறேன்
(A) நான் ஒளிவீட்டிற்குச் செல்கிறேன்
(B) நான் மின்சார வீட்டிற்குச் செல்கிறேன்
(C)நான் கலங்கரை விளக்கத்திற்குச் செல்கிறேன்
(D) நான் மின்விளக்குக் கடைக்குச் செல்கிறேன்
(E) விடை தெரியவில்லை

25. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) நாம கரணம் – வணக்கம்
(B)நாம கரணம் – பெயர்
(C)நாம கரணம் – நாம் காரணம்
(D) நாம கரணம் – நாமம்
(E) விடை தெரியவில்லை

26. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.
(A) மதுரவசனி – மதுரை மீனாட்சி
(B) மதுரவசனி- தேன் மொழியாள்
(C)மதுரவசனி –தேன்மொழிப்பாவை      
(D)மதுரவசனி – அறம் வளர்த்த நாயகி
(E) விடை தெரியவில்லை
27. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
பணிந்து – பணித்து

28.சரியான பொருளை அறிக.
தகளி

29.சரியான பொருளை அறிக.
‘காருகர்’
30. ‘நுழாய்’ என்பது
விடை-(C)இளம்பாக்கு

TEST 31/40

31. குறில், நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிக.
விதி – வீதி

32.குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
நசி – நாசி
33.’களை’ என்னும் சொல்லிற்கு பொருத்தமுடைய இரு பொருள்களைக் கண்டறிக.
34. சொல் – இருபொருள் தருக
(A) நில் – பதம்
(B) பதம் – கல்
(C) பதம் – தொல்
(D) நெல் – பதம்
(E) விடை தெரியவில்லை
35. சரியான இரு பொருளைத் தேர்ந்தெடு.
உறவு

36.உங்கூருக்கே வர்றேன் – என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக
37. வெரசா வந்துருவேன் – என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக
38. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் ______
39. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
வினைத்திட்டம் என்பது ______

40.சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.

இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுவர் ______

TEST 41/50

41. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) ஆ, எவ்வளவு பெரிய கரடி, கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா.
(B) ஆ! எவ்வளவு பெரிய கரடி. கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா?
(C) ஆ எவ்வளவு பெரிய கரடி கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா?
(D) ஆ! எவ்வளவு பெரிய கரடி கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா.
(E) விடை தெரியவில்லை
42. பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டத் தொடரைக் கண்டறிக.
(A) பேரறிஞர் அண்ணா, ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
(B) பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
(C) பேரறிஞர் அண்ணா “செவ்வாழை” என்னும் சிறுகதை எழுதினார்.
(D) பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்!
(E) விடை தெரியவில்லை
43. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக
(A) இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
(B) இனியன் நன்கு படித்தான், அதனால்; தேர்ச்சி பெற்றான்.
(C) இனியன் நன்கு படித்தான். அதனால் தேர்ச்சி, பெற்றான்:
(D) இனியன், நன்கு படித்தான். அதனால்; தேர்ச்சி பெற்றான்.
(E) விடை தெரியவில்லை

44. “மாணவன்” எதிர்பாலுக்குரிய பெயரை எழுதுக.
45. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) 1-க
(B) 2-உ
(C) 3-௩
(D) 4-எ
(E) விடை தெரியவில்லை
46. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.
தாவரத்தின் இளம் நிலையை குறிக்காத ஒரு சொல்.
(A) மடலி
(B) பைங்கூழ்
(C) குருத்து
(D) மட்டை
(E) விடை தெரியவில்லை

47. இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் என்னும் திருக்குறளையொட்டி.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) இன்பம்
(B) காமம்
(C) வெகுளி
(D) மயக்கம்
(E) விடை தெரியவில்லை
48. மரபுப்பிழைகள் வினைமரபு.
பால்
(A) குடி
(B) பருகு
(C) தின்
(D) உண்
(E) விடை தெரியவில்லை
49. மரபுப் பிழைகள் ஒலி மரபு.
கிளி
(A) அகவும்
(B) கூவும்
(C) பேசும்
(D) குனுகும்
(E) விடை தெரியவில்லை
50. அவிந்தன, நெகிழ்ந்தன, விண்டன, கொண்ட ஆகிய சொற்கள் தரும் பொருளைக் கண்டறிக.
(A) மலர்ந்தன
(B) கூம்பின
(C) வளர்ந்த
(D) வாடின
(E) விடை தெரியவில்லை

TEST 51/60

51. தொலி, தோல், தோடு, ஓடு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன.
(A) காய்களின் மேற்பகுதி
(B) வீடுகளின் மேற்பகுதி
(C) பழங்களின் மேற்பகுதி
(D) மரங்களின் மேற்பகுதி
(E) விடை தெரியவில்லை

52. சரியான அகர வரிசையைக் கண்டறிக.
(A) மன்னா,தளை, அணை, அண்ணா
(B) தளை, மன்னா, அணை,அண்ணா
(C) அண்ணா, அணை, தளை, மன்னா
(D) அணை, தளை, அண்ணா, மன்னா
(E) விடை தெரியவில்லை

53.அகர வரிசைப்படுத்துக.
(A)மதம், மணம், மஞ்சள், மரகதம்
(B) மரகதம், மஞ்சள், மணம், மதம்
(C) மஞ்சள், மணம், மதம், மரகதம்
(D) மணம், மரகதம், மதம், மஞ்சள்
(E) விடை தெரியவில்லை

54.அகர வரிசைப்படுத்துக.
(A) ஓராயிரம், ஓரம், ஓரிதழ், ஓருயிர்
(B) ஓரம், ஓரிதழ், ஓருயிர், ஓராயிரம்
(C) ஓருயிர், ஓரிதழ், ஓரம், ஓராயிரம்
(D) ஓரம், ஓராயிரம், ஓரிதழ், ஓருயிர்
(E) விடை தெரியவில்லை

55. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க.
இளை-இழை

56. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
‘நேமி – கோடு’

57.சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
(A)”மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்”.
(B)”ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக கூட்டம் நடைபெறும்”.
(C)”கூட்டம் ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக நடைபெறும்.
(D)”தி.ஜானகிராமன் மறைந்த கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் நினைவாக”.
(E) விடை தெரியவில்லை
58.வேர்ச்சொல்லைக் கண்டறிக – ‘நடத்தல்’
59.போட்டேன் – வேர்ச்சொல்லைக் கண்டறிக.
60. ‘ஓடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.
TEST 61/70

61.வினைமுற்று, எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எதுவென கண்டறிக.
62.படி எனும் வேர்ச்சொல்லின் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக.
63.காண் என்பதன் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

64. வழுவற்றத்தொடரைக் கண்டறிக.
(A) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
(B) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை மேய்ந்தனர்.
(C) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடிக்கினர்
(D) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
(E) விடை தெரியவில்லை

65.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லில் சரியானவற்றைக் காண்க.
1. Excavation – அகழாய்வு
2. Epigraphy – ஓலைச்சுவடி
3. Hero stone – நடுகல்
4. Inscription – செதுக்குதல்
66. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக.
(A) Thesis           – குறியீட்டியல்
(B) Intellectual – அறிவாளர்
(C) Myth              – கலைச்சொல்
(D) Patent           – ஆவணம்
(E) விடை தெரியவில்லை
67. பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) வங்கம்                  – கப்பல்
(B) நீகான்                   – நாவாய் ஓட்டுபவன்
(C) எல்                           – காற்று
(D) மாட ஒள்ளெரி -கலங்கரை விளக்கம்
(E) விடை தெரியவில்லை
68. துஞ்சுபுலி இடறிய சிதடன் போல
உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.
(A) துணிதல்
(B) அறிதல்
(C) அறியாமை
(D) ஆணவம்
(E) விடை தெரியவில்லை
69.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
பசுமரத்து ஆணி போல
70.விடை வகைகள்
‘கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, ‘இப்பக்கத்தில் உள்ளது’ எனக்கூறல்

TEST 71/80

71.விடை வகைகள் “உனக்குக் கதை எழுதத் தெரியுமா” என்ற வினாவிற்குக் “கட்டுரை
எழுதத் தெரியும்” என்று கூறுவது.

72. வினாவிற்கு விடையாக மற்றொரு வினாவைக் கேட்பது எவ்வகை விடை?
73. விடை வகைகள்:
‘நீ படிக்கவில்லையா?’ என்ற வினாவிற்கு ‘எனக்குத் தலை வலிக்கிறது’ என்று உரைப்பது
74. ஒருமைப் பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) பறவைகள் வந்து தங்கியது.
(B) பறவைகள் வந்து தங்கினார்கள்.
(C) பறவைகள் வந்து தங்குகின்றது.
(D) பறவைகள் வந்து தங்கின.
(E) விடை தெரியவில்லை

75. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
(A) மொழி வளரும் தன்மை உடையன.
(B) மொழி வளரும் தன்மை உள்ளன.
(C) மொழி வளரும் தன்மை உடையது.
(D) மொழி வளரும் தன்மை உள்ளவை.
(E) விடை தெரியவில்லை

76. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) பவளவிழியால் பரிசு உரியவள்

(B) பவளவிழிதான் பரிசு உரியது
(C) பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்
(D) பவளவிழியின் பரிசு உரியது
(E) விடை தெரியவில்லை

77.சொல் – பொருள் – பொருத்துக.
(a) திகிரி          1.கருணை
(b) அளி            2.ஆணைச்சக்ரம்
(c) அலர்           3.மகரந்தம்
(d) கொங்கு   4. மலர்தல்

78. சொல் – பொருள் – பொருத்துக.
(a) புரிசை     1. சாளரம்
(b) புழை        2. நீர்நிலை
(c) பணை     3. மதில்
(d) கயம்        4. முரசு
(E) விடை தெரியவில்லை

79. ‘வருதல்’ என்பதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.

80.’சுடச்சுடரும் பொன்போல்’ எனும் உவமை கூறும் பொருளைக் கண்டறிக.

TEST 81/90

81. சொற்களை ஒழுங்குப்படுத்துக.
“தமது கருத்தைச் சுவையோடு கவிஞர் சொல்வதற்கு உதவுவது அணி”
(A) கவிஞர் தமது கருத்தைச் சொல்வதற்கு சுவையோடு உதவுவது அணி
(B) சுவையோடு கவிஞர் தமது கருத்தைச் சொல்வதற்கு உதவுவது அணி
(C) கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி
(D) அணி தமது கருத்தைச் சுவையோடு கவிஞர் சொல்வதற்கு உதவுவது
(E) விடை தெரியவில்லை
82. பிறவினைச் சொற்றொடரைக் காண்க.
(A) மாலை அணிந்தான்
(B) மாலை அணிவித்தான்
(C) மாலை அணிந்து கொண்டான்
(D) மாலை அணிந்து வந்தான்
(E) விடை தெரியவில்லை
83. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
“நான் இந்த வீட்டைக் கட்டினேன்” என்பது
84.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்-தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
அப்துல் நேற்று வருவித்தான்.
85. ‘மயில்’ என்பதற்கு பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.
(A) அகவியது
(B) கூவியது
(C) கொஞ்சியது
(D) கரைந்தது
(E) விடை தெரியவில்லை
86.’வண்டு’ என்பதுடன் பொருந்தி வரும் ஒலிமரபுச் சொல்லைக் கண்டறிக.
87. சரியான இணைப்புச் சொல்லை நிரப்புக.
எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை.______இதுவே எமக்குத் தாயாகும்.
88. சரியான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.
நான் ஏற்கனவே சென்ற இடம்தான். ______அச்சம் ஒன்றும் இல்லை.
89.சரியான இணைப்புச் சொல் எழுதுக.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்_____துன்பப்பட வேண்டும்.
90. கலைச்சொல் அறிக.
Monolingual

TEST 91/100

91. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் கலைச்சொல்லை எழுதுக.
‘Whirlwind’

92. சரியான கலைச்சொல்லைத் தேர்க.
CONICAL STONE
93. ஒரு-ஓர் – சரியான வகையில் அமைந்த தொடரைக் கண்டறிக.
(A) ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(C) ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(D) ஓர் இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(E) விடை தெரியவில்லை

94.பிழை திருத்துதல்.
சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு.
(A) ஒரு அடர்ந்து காடு
(B) ஒன்று அடர்ந்த காடு
(C) ஓர் அடர்ந்த காடு
(D) ஒன்னு அடர்ந்த காடு
(E) விடை தெரியவில்லை

95. கீழ்காணும் தொடர்களில் [ஒரு-ஓர்] சரியாக அமைந்த தொடர் எது?
(A) ஓர் தெய்வீக காலைப்பொழுது
(B) ஓர் இனிய காலைப்பொழுது
(C) ஒரு அழகிய காலைப்பொழுது
(D) ஒரு இனிய காலைப்பொழுது
(E) விடை தெரியவில்லை

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.
தமிழர் நாகரிக வளர்ச்சியில் சிற்பம் கல்லில் வடித்த கவிதைகள் எனலாம். கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைக்கும் கலையே சிற்பக்கலை. சிற்பக்கலை பற்றி திவாகர நிகண்டு மணிமேகலை போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. பல்லவர் காலத்து தூண்களில் சிங்கம், யாளி, தாமரை மலர் போன்ற சிற்பங்கள் இருந்தன. திருச்சி மலைக்கோட்டை, மாமல்லபுரம் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் பல்லவர் கால சிற்பம் கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன. பல்லவர் கால குடைவரைக் கோவில்களில் நுழைவாயில் இரு புறங்களிலும் காவலர் நிற்பது போன்ற சிற்பங்கள் படைக்கப்பட்டன.

96. சிற்பம் கல்லில் வடித்த____எனலாம்.
97. திவாகர நிகண்டுவில் சொல்லப்பட்ட கலை எது?
98. தூண்களில் காணப்படும் சிற்பங்கள் எவை?
99.காவலர் நிற்பது போன்ற சிற்பம் எவ்வகைக் கோவில்களில் செதுக்கப்பட்டன?
100. திருச்சி மலைக் கோட்டையில் காணப்படும் சிற்பம் யாருடைய காலம் ?

Join the conversation