SI DEPT, OPEN QUOTA, TNPSC DAY – 02 TEST
About Lesson

TAMIL TEST QUESTIONS

1.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :

உயிருள்ள உடல்

(A) எவை  

(B) யாவை  

(C) எது  

(D) யாது  

(E) விடை தெரியவில்லை

 

2.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

தமிழ் மொழி மரபு பாடலின் ஆசிரியர் _____

(A) என்ன  

(B) யார்    

(C) எது  

(D) எங்கு  

(E) விடை தெரியவில்லை

 

3.பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு ;

மாடு புல் மேய்ந்தது _____

(A) இறந்த காலம்     

(B) நிகழ் காலம்   

(C) எதிர் காலம்   

(D) எதுவுமில்லை            

(E) விடை தெரியவில்லை

 

4.ஆசிரியர் நாளை சிறுதேர்வு _____ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக.

(A) நடத்துவார்   

(B) நடத்தினார்    

(C) நடத்துகிறார்    

(D) நடத்துகின்றார்

(E) விடை தெரியவில்லை

 

5.பொருத்தமான காலம் கண்டறிக.

பிள்ளை

(A) அமுதன் நேற்று வீட்டிற்கு வந்தான் (இறந்தகாலம்)

(B) கண்மணி நாளை பாடம் படிப்பாள் (இறந்தகாலம்)

(C) மாடுகள் புல் மேய்கின்றன (நிகழ்காலம்)

(D) நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம் (எதிர் காலம்)

(E) விடை தெரியவில்லை

 

6.சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக

கீரி _____

(A) பிள்ளை  

(B) குஞ்சு  

(C) குட்டி  

(D) கன்று  

(E) விடை தெரியவில்லை

 

7.சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்

சாவி

(A) கற்றை 

(B) குலை  

(C) கொத்து 

(D) கூட்டம்  

(E) விடை தெரியவில்லை

 

8.பேச்சுவழக்கு, எழுத்து வழக்காக்குக.

‘நாட்கள்’

(A) நால்கள்        

(B) நான்கள்       

(C) நாள்கள்     

(D) நாண்கள்

(E) விடை தெரியவில்லை

 

9.பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு

காக்கா

(A) காக்கா          – காக்கை

(B) காக்கா          – கானகம்

(C) காக்கா          – கரையும்

(D) காக்கா          – கறையும்

(E) விடை தெரியவில்லை

 

10.நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)

(A) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.

(B) “நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்”

(C) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான்

(D) நல்லவன், வாழ்வான்: தீயவன் தாழ்வான்.

(E) விடை தெரியவில்லை

 

11.நிறுத்தற்குறிகளை அறிதல்

பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்

(A) பூக்கள், நிறைந்த இடம், சோலை ஆகும்

(B) பூக்கள், நிறைந்த இடம், சோலை ஆகும்

(C) “பூக்கள்” நிறைந்த இடம், சோலை ஆகும்

(D) பூக்கள்? நிறைந்த இடம், சோலை ஆகும்!

(E) விடை தெரியவில்லை

 

 12.பொருத்தமான நிறுத்தற்குறி அமைந்த தொடர்

(A) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

(B) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.

(C) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் ‘தலைப்பில்’ பேசுவார் என்று அறிவித்தார்.

(D) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

(E) விடை தெரியவில்லை

 

13.ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. சைதாப்பேட்டை

(A) பேட்டை   

(B) சதாப்பேட்டை   

(C) சைதை    

(D) சித்தாப்பேட்டை

(E) விடை தெரியவில்லை

 

14.ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க.

மயிலாப்பூர்

(A) மையிலாப்பூர்     

(B) மயிலை      

(C) மையிலை     

(D) மயலை

(E) விடை தெரியவில்லை

 

15.ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

கோவன்புத்தூர்

(A) கொயம்புத்தூர்    

(B) கோயம்புத்தூர்    

(C) கோடைபுத்தூர்   

(D) கோபுத்தூர்

(E) விடை தெரியவில்லை

 

16.பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.

இ.மெயில்

(A) துரித அஞ்சல்     

(B) விரைவு அஞ்சல்  

(C) மின்னஞ்சல்   

(D) இணையம்

(E) விடை தெரியவில்லை

 

17.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.

இக்காலத்திற்கு விஞ்ஞான அறிவு தேவை.

(A) அறிவியல்       

(B) மின்னணு       

(C) இணையம்       

(D) சரித்திரம்

(E) விடை தெரியவில்லை

 

18.’கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்கு ‘போகமாட்டேன்’ என்ற கூறுவது எவ்வகையான விடை?

(A) மறை விடை    

B) சுட்டு விடை

(C) நேர் விடை    

(D) ஏவல் விடை

(E) விடை தெரியவில்லை

 

19.விடை வகைகள்

“நீ விளையாடவில்லையா”? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.

(A) ஏவல் விடை   

(B) உற்றது உரைத்தல் விடை

(C) மறை விடை

(D) சுட்டு விடை

(E) விடை தெரியவில்லை

 

20.சரியான இணையைத் தேர்க

(A) ஏவல் விடை    – மதுரை எங்குள்ளது? என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்

(B) நேர் விடை      – கடைக்கு போவாயா? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல்

(C) மறை விடை    – இது செய்வாயா? என்று வினவியபோது நீயே செய் என்று ஏவிக்கூறுவது

(D) சுட்டு விடை      – கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக்கூறல்

(E) விடை தெரியவில்லை

 

21.கலைச்சொல் தருக. SUPREME COURT

(A) உச்சநீதி மன்றம்

(B) உயர்நீதி மன்றம்

(C) சட்டமன்றம்

(D) உள்ளாட்சி மன்றம்

(E) விடை தெரியவில்லை

 

22.அலுவல் சார்ந்த சொற்கள்.

Appeal

(A) கீழ் முறையீடு        

(B) மேல்முறையீடு        

(C) தீர்வு       

(D) ஆணை

(E) விடை தெரியவில்லை

 

23.கலைச் சொல் அறிக.

Bill Time

(A) புதுப்பிக்கப்பட்ட உண்டியல்

(B) கால வரையறை உண்டியல்

(C) அட்டவணை உண்டியல்

(D) முன்படிவ உண்டியல்

(E) விடை தெரியவில்லை

 

24.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது

வேலியே பயிரை மேய்ந்தது போல

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) அறியாமை

(C) கடமை தவறுதல்

(D) பற்றாக்குறை

(E) விடை தெரியவில்லை

 

25.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:

பசு மரத்து ஆணி போலை

(A) பயனற்ற செயல்

(B) தற்செயல் நிகழ்வு

(C) எளிதில் மனத்தில் பதிதல்

(D) எதிர்பாரா நிகழ்வு

(E) விடை தெரியவில்லை

 

26.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

“கிணற்றுத் தவளை போல”   உவமை கூறும் பொருள் தெளிக

(A) சுயநலம்         

(B) ஞானம்        

(C) அறிவு         

(D) அறியாமை

(E) விடை தெரியவில்லை

 

27.‘அவன் திருந்தினான்’ – இது எவ்வகைத் தொடர் என்று கண்டறிக.

(A) கட்டளைத் தொடர்

(B) வினாத்தொடர்

(C) தன்வினைத் தொடர்

(D) பிறவினைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

 

28.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

தேர்வு எழுதி ஆயிற்று

(A) செயப்பாட்டு வினை வாக்கியம்

(B) தன்வினை வாக்கியம்

(C) செய்வினை வாக்கியம்

(D) பிறவினை வாக்கியம்

(E) விடை தெரியவில்லை

 

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

போரில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை எனப்படும்

(A) பாடாண்திணை பற்றி விளக்குக

(B) பாடாண்திணை சிறுகுறிப்புத் தருக

(C) பாடாண்திணை பொருள் யாது?

(D) பாடாண்திணை என்றால் என்ன?

(E) விடை தெரியவில்லை

 

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்

(A) இயற்சொல்லின் வகை யாது?

(B) இயற்சொல் என்றால் என்ன?

(C) எளிதில் பொருள் விளங்கும் சொல்லைக் கூறுக?

(D) சொல் என்றால் என்ன?

(E) விடை தெரியவில்லை

 

31.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது

(A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

(B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

(C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

(D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

(E) விடை தெரியவில்லை

 

32.இரு வினைகளின் பொருள் வேறுபாடு

உரி                      – உறி

(A) கழற்று          – தூக்கு

(B) கழல்            – தூக்கு

(C) சுழல்            – தூக்கு

(D) களற்று          – தூக்கு

(E) விடை தெரியவில்லை

 

33.பொருள் வேறுபாடு அறிக.

அருந்து          – அறுந்து

(A) குடி           – துண்டு பட்டு

(B) குடி           – மாற்று

(C) உண்          – துண்டு பட்டு

(D) பருகு          – செல்

(E) விடை தெரியவில்லை

 

34.சொற்களை ஒழுங்குபடுத்துக.

(A) ஏடு ஒன்று எழுத கவிதை எடுத்தேன்

(B) கவிதை எடுத்தேன் ஏடு ஒன்று எழுத

(C) கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன்

(D) ஒன்று ஏடு எழுத கவிதை எடுத்தேன்

(E) விடை தெரியவில்லை

 

35.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சரியான சொற்றொடரைத் தெரிவு செய்.

(A) வழியில் நடத்தல் எனப்படுவது சான்றோர் பண்பு

(B) சான்றோர் பண்பு வழியில் நடத்தல் எனப்படுவது

(C) வழியில் நடத்தல் பண்பு எனப்படுவது சான்றோர்

(D) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்

(E) விடை தெரியவில்லை

 

36.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :

சொற்களை ஒழுங்குபடுத்துக.

(A) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்

(B) வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து

(C) வளைந்த வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் அமைந்த எழுத்து

(D) வட்டெழுத்து வளைந்த எனப்படும் அமைந்த தமிழ் எழுத்து கோடுகளால்

(E) விடை தெரியவில்லை

 

37.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

அகர வரிசையில் எழுதுக

தேனி, ஓணான், வௌவால், கிளி, ஆசிரியர்

(A) ஆசிரியர், ஓணான், வௌவால், கிளி, தேனி

(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, வௌவால்

(C) கிளி, தேனி, வௌவால், ஆசிரியர், ஓணான்

(D) ஆசிரியர், கிளி, தேனி, ஓணான், வௌவால்

(E) விடை தெரியவில்லை

 

38.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

மதில், தென்றல், தெய்வம், அங்காடி, கடல்

(A) அங்காடி, தெய்வம், தென்றல், கடல், மதில்

(B) அங்காடி, மதில், கடல், தெய்வம், தென்றல்

(C) அங்காடி, கடல், மதில், தென்றல், தெய்வம்

(D) அங்காடி, கடல், மதில், தெய்வம், தென்றல்

(E) விடை தெரியவில்லை

 

39.‘கல்’ எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச சொல்லைக் கண்டறிக.

(A) கல்வி             

(B) கற்ற            

(C) கற்று            

(D) கற்றான்

(E) விடை தெரியவில்லை

 

40.‘உரை’ எனும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்க.

(A) உரையாமை    

(B) உரைத்தோர்    

(C) உரைத்தவர்    

(D) உரைத்தவன்

(E) விடை தெரியவில்லை

 

41.தொழிற்பெயரைச் சுட்டுக.

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு.

இத்தொடரில் அமைந்த தொழிற்பெயர்

(A) உயிர்     

(B) வீடு     

(C) மது     

(D) கேடு     

(E) விடை தெரியவில்லை

 

42.‘கிளர்ந்த’ வேர்ச்சொல் அறிக

(A) கிளர்       

(B) கிளர்ச்சி       

(C) கிளர்ந்து       

(D) கிளர்க்கப் பட்டு

(E) விடை தெரியவில்லை

 

43.‘உரைத்த’ – வேர்ச்சொல்லை அறிக

(A) உரைத்து        

(B) உரைத்தது        

(C) உரை        

(D) உரைக்கப் பட்ட

(E) விடை தெரியவில்லை

 

44.பின்வரும் தொடரில் வினைச்சொல்லைக் கண்டறிந்து அதன் வேர்ச்சொல்லை எழுதுக.

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

(A) வலம்      

(B) பொறி      

(C) தடம்      

(D) மா      

(E) விடை தெரியவில்லை

 

45.ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

‘மொழி’

(A) பதம், கிளவி   

(B) சொல், எழுத்து    

(C) பதம், பொருள்    

(D) அணி, சொல்

(E) விடை தெரியவில்லை

 

46.ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

வடு, மூசு, கவ்வை, கச்சல் முதலான சொற்கள் எதனைக் குறிக்கும் ?

(A) பிஞ்சு வகை   

(B) குலை வகை   

(C) மணி வகை   

(D) இளம் பயிர் வகை

(E) விடை தெரியவில்லை

 

47.ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

சூம்பல், சிவியல், சொண்டு, அளியல்

(A) குலை வகை

(B) பிஞ்சு வகை

(C) மணி வகை

(D) கெட்டுப்போன காய்கனி வகை

(E) விடை தெரியவில்லை

 

48.ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்

மன _____ தீர்வாகாது.

(A) உலைச்சல்      

(B) உளைச்சல்      

(C) உழைச்சல்      

(D) துளைச்சல்

(E) விடை தெரியவில்லை

 

49.கலி, களி, கழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

(A) ஒலி, கோல், மகிழ்ச்சி

(B) கோல், மகிழ்ச்சி, ஒலி

(C) ஒலி, மகிழ்ச்சி, கோல்

(D) மகிழ்ச்சி, கோல், ஒலி

(E) விடை தெரியவில்லை

 

50.“செக்” இணையான தமிழ்ச் சொல்

(A) காசோலை     

(B) வரைவோலை     

(C) பணத்தாள்     

(D) கடன் அட்டை

(E) விடை தெரியவில்லை

 

51.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.

Instead of

(A) உடனடி        

(B) பதிலாக         

(C) நொடி நேரம்       

(D) தூண்டி விடு

(E) விடை தெரியவில்லை

 

52.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

சரியான இணையைத் தேர்க

(A) கரன்சி நோட்          – பணத்தாள்

(B) பேங்க்                           – காசோலை

(C) செக்                                – வங்கி

(D) டிமாண்ட் டிராஃப்ட்    –  பற்றட்டை

(E) விடை தெரியவில்லை

 

53.சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

சேவல் _____

(A) சேவல் கூவும்

(B) சேவல் கொக்கரிக்கும்

(C) சேவல் கத்தும்

(D) சேவல் கரையும்

(E) விடை தெரியவில்லை

 

54.மரபு பிழையுள்ள தொடரைத் தேர்ந்தெடு

(A) ஆநிரை கவர்ந்தனர்

(B) புறா குனுகியது

(C) கூகை அலறியது

(D) சேவல்கள் கூவின

(E) விடை தெரியவில்லை

 

55.‘யானை’ – ஒலி மரபினைச் சுட்டுக.

(A) உறுமும்          

(B) முழங்கும்          

(C) பிளிரும்          

(D) கதறும்

(E) விடை தெரியவில்லை

 

56.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

சோழர்களால் கட்டப்படாதது

(A) கங்கை கொண்ட சோழபுரம்

(B) கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்

(C) ஐராவதீசுவரர் கோவில்

(D) திரிபுவன வீரேசுவரம் கோவில்

(E) விடை தெரியவில்லை

 

57.பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) பீடு               – சிறப்பு

(B) ஊழ்              – யுகம்

(C) விசும்பு           – வானம்

(D) தண்பெயல்       – குளிர்ந்த மழை

(E) விடை தெரியவில்லை

 

58.‘தாழ்வு’ – என்பதன் எதிர்ச்சொல்.

(A) தொலைவு          

(B) தூரம்          

(C) உயர்வு          

(D) தாமதம்

(E) விடை தெரியவில்லை

 

59.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் :

‘இசை’ எதிர்ச்சொல் தருக.

(A) புகழ்       

(B) இகழ்       

(C) வசை     

(D) நசை     

(E) விடை தெரியவில்லை.

 

60.‘நீக்குதல்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

(A) போக்குதல்      

(B) தள்ளுதல்      

(C) அழித்தல்       

(D) சேர்த்தல்

(E) விடை தெரியவில்லை

 

61.சேர்த்தெழுதுதல்.

‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்

(A) கட்டியிடத்தல்

(B) கட்டியடித்தல்

(C) கட்டிஅடித்தல்

(D) கட்டுஅடித்தல்

(E) விடை தெரியவில்லை

 

62.‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(A) தேர்+எடுத்து

(B) தேர்ந்து +தெடுத்து

(C) தேர்ந்தது + அடுத்து

(D) தேர்ந்து + எடுத்து

(E) விடை தெரியவில்லை

 

63,சரியான விடையைத் தேர்க.

(A) கண் + உண்டு = கண்ணுண்டு

(B) கண் + உண்டு = கண்ணூண்டு

(C) கண் + உண்டு = கல்லுண்டு

(D) கண் + உண்டு காண்ணுண்டு

(E) விடை தெரியவில்லை

 

64.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

_____ இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.

(A) எவை   

(B) யாவை     

(C) எது    

(D) யாது   

(E) விடை தெரியவில்லை

 

பத்தியைப் படித்து விடை எழுதுக. (65-69)

நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

65.நலமான உடலுக்கு எத்தனை வேளை சிற்றுண்டி உண்ண வேண்டும்

(A) 3        

(B) 2            

(C) 1          

(D) 4            

(E) விடை தெரியவில்லை

 

66.இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்கு எவ்வகை உணவு சிறந்தது?

(A) குளிர்ச்சியான உணவு

(B) சூடான உணவு

(C) இனிப்பான உணவு

(D) கசப்பான உணவு

(E) விடை தெரியவில்லை

 

67.உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டியவைகள் யாவை?

(A) உப்பு    

(B) சர்க்கரை    

(C) மிளகு    

(D) காய்கறிகள்

(E) விடை தெரியவில்லை

 

68.தவிர்க்க வேண்டிய உணவு எது ?

(A) நீர்ம உணவு

(B) திட உணவு(C) சூடான உணவு

(D) காரமான உணவு

(E) விடை தெரியவில்லை

 

69.உடல் நலம் பேணும் வழிமுறைகளுள் ஒன்று ?

(A) நேரம் மாறி உண்ணுதல்

(B) இரவு மட்டும் உண்ணுதல்

(C) சரியான நேரத்திற்கு உண்ணுதல்

(D) பகல் நேரம் உண்ணுதல்

(E) விடை தெரியவில்லை

 

70.ஒருமை – பன்மை பிழையற்ற தொடர் எது?

(A) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினர்

(B) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினான்

(C) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினார்.

(D) சங்க காலத்திலிருந்தே அரசராயினும் முதியோராயினும் விருந்தினரை போற்றியது

(E) விடை தெரியவில்லை

 

71.ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக.

(A) மணிகளால் காவடியை அழகுப்படுத்துகின்றனர்

(B) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது

(C) பழமையை உணர கலைகள் துணை செய்கின்றன.

(D) தேவராட்டம் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது

(E) விடை தெரியவில்லை

 

72.சொல் – பொருள் – பொருத்துக.

(a) சீவன்                  1. உலகம்

(b) வையம்              2. விரும்பி

(c) சபதம்                 3. உயிர்

(d) மோகித்து          4. சூளுரை

         (a)     (b)     (c)     (d)

(A)     4        1       2        2

(B)     3        1       4        2

(C)     3        2       4        1

(D)     2        3       1        4

(E) விடை தெரியவில்லை

 

73.சொல் – பொருள் – பொருத்துக.

(a) குழி                1. நீட்டல் அளவைப்பெயர்

(b) மணி               2. புடவை

(c) சீலை               3. நில அளவைப் பெயர்

(d) சாண்               4. முற்றிய நெல்

       (a)    (b)    (c)    (d)

(A)    2       3      1       4

(B)    1       2      3       4

(C)     2       3      4       1

(D)     3       4      2       1

(E)    விடை தெரியவில்லை

 

74.சரியான பொருளை அறிக.

அலர்

(A) மலர்தல்   

(B) ஒளிர்தல்   

(C) உயர்தல்   

(D) அழித்தல்

(E) விடை தெரியவில்லை

 

75.பிழை திருத்துக.

அவன் கவிஞன் அன்று

(A) அல்லன்    

(B) அல்ல    

(C) அன்று    

(D) அல்லள்

(E) விடை தெரியவில்லை

 

76.பிழை திருத்தம் (ஒரு – ஓர்)

பிழை திருத்தம் (ஒரு – ஓர்; அது – அஃது)

அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது

(A) அது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது

(B) அஃது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது

(C) அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது

(D) அஃது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது

(E) விடை தெரியவில்லை

 

77.‘என் அண்ணன் நாளை வருவான்’ – இது எவ்வகைத் தொடர்?

(A) செய்தித் தொடர்

(B) தன்வினைத் தொடர்

(C) பிறவினைத் தொடர்

(D) கட்டளைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

 

78.பிழையைத் திருத்தி சரியாக எழுதுக.

சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(A) கோவலன் சிலம்பு விற்கப் போனாள்

(B) கோவலன் சிலம்பு விற்கப் போனான்

(C) கோவலன் சிலம்பு விற்கச் சென்றது

(D) கோவலன் சிலம்பு விற்க சென்றார்

(E) விடை தெரியவில்லை

 

79.தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

(A) வினாத் தொடர்

(B) கட்டளைத் தொடர்

(C) செய்தித் தொடர்

(D) உணர்ச்சித் தொடர்

(E) விடை தெரியவில்லை

 

 80.சொற்களின் கூட்டுப் பெயர்கள்.

(a) மூங்கில்            1. கீரை

(b) முளை              2. தழை

(c) வேப்பம்             3. கதிர்

(d) வரகு                4. இலை

         (a)    (b)    (c)    (d)

(A)     1       2      3       4

(B)     4       3      2       1

(C)     4       1      2       3

(D)     3       2      1       4

(E) விடை தெரியவில்லை

 

81.சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண்.

கல்

(A) கட்கள்    

(B) கற்கள்    

(C) கல்கள்   

(D) கட்டு

(E) விடை தெரியவில்லை.

 

82.எண்பத்தி ஒன்று (81) என்ற எண்ணுக்குரிய தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.

(A) எஉ    

(B) எரு   

(C) எச   

(D)அக   

(E) விடை தெரியவில்லை

 

83.தீவகத்தின் மற்றொரு பெயர்

(A) நெருப்பு   

(B) கனல்   

(C) அனல்     

(D) விளக்கு

(E) விடை தெரியவில்லை

 

84.தவறான இணையைச் சுட்டுக.

(A) தினை ஓலை – மான்குட்டி

(B) தென்னை ஓலை – வாழையிலை

(C) எருமைக்கன்று – பசுங்கன்று

(D) நாய்க்குட்டி – புலிக்குட்டி

(E) விடை தெரியவில்லை

 

85.கலைச் சொற்களை அறிதல்

சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

CULTURAL BOUNDARIES

(A) பண்பாட்டு விழுமியங்கள்

(B) பண்பாட்டு எல்லை

(C) பண்பாட்டு நிகழ்வுகள்

(D) பண்பாட்டு ஆதாரங்கள்

(E) விடை தெரியவில்லை

 

86.சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க.

SYMBOLISM

(A) ஆய்வேடு    

(B) அறிவாளர்    

(C) சின்னம்      

(D) குறியீட்டியல்

(E) விடை தெரியவில்லை

 

87.கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்.

Sugarcane Juice

(A) கரும்புச்சாறு  

(B) வெல்லக்கட்டி  

(C) பழச்சாறு  

(D) காய்கறிச்சாறு

(E) விடை தெரியவில்லை

 

88.Homograph சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.

(A) உயிரெழுத்து

(B) மெய்யெழுத்து

(C) ஒரு மொழி

(D) ஒப்பெழுத்து

(E) விடை தெரியவில்லை

 

89.கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று : திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம்

காரணம் : தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை

(A) கூற்று சரி, காரணம் தவறு

(B) கூற்று தவறு காரணம் சரி

(C) கூற்று, காரணம் இரண்டும் சரி

(D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

(E) விடை தெரியவில்லை

 

90.குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.

கண் – காண்

(A) விழி – பார்

(B) செவி – திரை

(C) விளி – காட்சி

(D) விலி – திரை

விடை தெரியவில்லை

 

91.சரியான இணையைக் காண்க.

(A) ஊழ் ஊழ்        – இரட்டைக்கிளவி

(B) வளர் வானம்   – வினையாலணையும் பெயர்

(C) செந்தீ            – பண்புத்தொகை

(D) பீடு               –  திரண்டு

(E) விடை தெரியவில்லை

 

92.குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.

கிரி – கீரி

(A) மலை பிளந்து

(B) மலை – விலங்கு

(C) வலை – விலங்கு

(D) மலை – வலை

(E) விடை தெரியவில்லை

 

93.இரு பொருள் தருக:

திங்கள்

(A) சந்திரன், மாதம்

(B) சூரியன், சந்திரன்

(C) அமாவாசை, பௌர்ணமி

(D) மாதம், கிழமை

(E) விடை தெரியவில்லை

 

94.இரு பொருள் தருக.

ஆறு – இரு பொருள் தருக.

(A) உலகம் – நீர்நிலை

(B) நதி – எண்

(C) அதிகம் – நீர்நிலை

(D) கடல் – எண்

(E) விடை தெரியவில்லை

 

95.சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

(இன்பம்)

(A) இயற்கையைப் போற்றுதல் _____ மரபு

(B) பட்டுப்போன மரத்தைக் காண _____ தரும்

(C) கதிர் முற்றியதும் _____ தரும்

(D) பச்சைப்பசேல் என்ற வயலைக் காண _____ தரும்.

(E) விடை தெரியவில்லை

 

96.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

(கண்ணெழுத்து)

(A) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் _____ ஆகும்.

(B) நேர்கோடு, வரைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் _____ ஆகும்.

(C) வண்ணங்கள் குழப்பும் பலகை _____ ஆகும்.

(D) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் _____ ஆகும்.

(E) விடை தெரியவில்லை

 

97.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

(வளர்பிறை)

(A) _____ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சியளிக்கிறது

(B) _____ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சி இழக்கின்றது

(C) ______ நிலவுடன் விரிவானம் அழுக்காக காட்சியளிக்கிறது

(D) _____ நிலவுடன் விரிவானம் அழுக்காக காட்சி இழக்கின்றது(E) விடை தெரியவில்லை

 

98.சரியான இணைப்புச் சொல் தேர்க .

பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் பயனில்லை _____ இரக்கம் இல்லாவிட்டால், கண்களால் என்ன பயன்?

(A) எனவே      

(B) ஆகையால்     

(C) அதுபோல     

(D) அதனால்

(E) விடை தெரியவில்லை

 

99.சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். _____ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.

(A) அதனால்       

(B) மேலும்       

(C) ஏனெனில்       

(D) ஆகையால்

(E) விடை தெரியவில்லை

 

100.சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு.

அவர் நல்லவர் _____ வல்லவரில்லை.

(A) ஆனால்       

(B) எனவே      

(C) ஏனெனில்      

(D) அதனால்

(E) விடை தெரியவில்லை

Join the conversation