- சந்திப் பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
தகவல்களைத் திரட்டு
தகவல்களை திரட்டு
முதியவருக்குக் கொடு
முதியவருக்கு கொடு
(A) 1 மற்றும் 3
(B) 2 மற்றும் 3
(C) 3 மற்றும் 4
(D) 1 மற்றும் 4
(E) விடை தெரியவில்லை
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
விருந்தினர் ஒருவர் வந்தால் அவரை வியந்து உரைத்தல் நன்று
(A) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், விருந்தினர், வியந்து
(B) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், வியந்து, விருந்தினர்
(C) அவரை, உரைத்தல், ஒருவர், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று
(D) அவரை, ஒருவர், உரைத்தல், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க : “நட”
(A) நடந்து
(B) நடப்பான்
(C) நடத்தல்
(D) நடந்தவன்
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லின் வினையெச்சம் கண்டறிக : “தா“
(A) தந்தான்
(B) தந்து
(C) தந்த
(D) தரல்
(E) விடை தெரியவில்லை
5.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்கல் கொடு
(A) கொடுத்தான்
(B) கொடுக்கிறான்
(C) கொடுத்து
(D) கொடுத்த
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க : “காண்”
(A) கண்டான்
(B) கண்டு
(C) கண்ட
(D) காணல்
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
வென்றார்
(A) வென்
(B) வென்று
(C) வெல்
(D) வெள்
(E) விடை தெரியவில்லை
- வந்தவர் – என்பதன் வேர்ச்சொல் எழுதுக.
(A) வரு
(B) வருதல்
(C) வா
(D) வந்த
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
வருகிறான்
(A) வரு
(B) வா
(C) வருதல்
(D) வருகி
(E) விடை தெரியவில்லை
- ஒரு பொருள் தரும் பல சொற்கள் போது, அலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) பூவின் நிலைகள்
(B) இளம் பயிர் வகைகள்
(C) பிஞ்சு வகைகள்
(D) இலை வகைகள்
(E) விடை தெரியவில்லை
- பொருள் வேறுபாடறிந்து பொருளைத் தேர்வு செய்க.
பனி – பணி
(A) குளிர்ச்சி, வேலை
(B) வேலை, குளிர்ச்சி
(C) பாறை, பாம்பு
(D) குளிர்ச்சி, வெப்பம்
(E) விடை தெரியவில்லை
12.ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க.
அலை – அழை
(A) கடலலை – அழகு
(B) கடலலை – வரவழைத்தல்
(C) வரவழைத்தல் – கடலலை
(D) சேறு – வரவழைத்தல்
(E) விடை தெரியவில்லை
13.மனம், மணம் –ஒலி வேறுபாடறிந்து பொருளைத் தேர்க
(A) மனசாட்சி, எண்ணம்
(B) எண்ணம், உள்ளம்
(C) உள்ளம், வாசனை
(D) மாற்றம், செயல்
(E) விடை தெரியவில்லை.
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Objective
(A) குறிக்கோள்
(B) ஒப்பந்தம்
(C) நம்பிக்கை
(D) பொருள்கோள்
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்.
Artifacts
(A) அழகியல்
(B) கலைப் படைப்புகள்
(C) தொன்மம்
(D) கலையியல்
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
(a) Consumer 1. பண்டம்
(b) Merchant 2. நுகர்வோர்
(c) Commodity 3. பாரம்பரியம்
(d) Heritage 4. வணிகர்
(A) 1 4 3 2
(B) 4 1 2 4
(C) 2 3 1 4
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
- சரியான வினைமரபைத் தேர்க.
வளவன் பழம் சாப்பிட்டான்
(A) உண்டான்
(B) தின்றான்
(C) பருகினான்
(D) அருந்தினான்
(E) விடை தெரியவில்லை
18.பிழை நீக்கி எழுதுக.
சிங்கக் குட்டியையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.
(A) சிங்கக் குருளையையும், யானைக்கன்றையும் பார்த்தேன்.
(B) சிங்கக் குருளையையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.
(C) சிங்கக் குருளையையும், யானைக்குருளையையும் பார்த்தேன்.
(D) சிங்கக் கன்றையும், யானைக் கன்றையும் பார்த்தேன்.
(E) விடை தெரியவில்லை
- எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின. – பிழையை நீக்குக.
(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
(B) என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.
(C) எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.
(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) ஊசல்
(B) சிற்றில்
(C) சிறுபறை
(D) சிறுதேர்
(E) விடை தெரியவில்லை
21.பொருந்தாத இணை எது?
(A) ஏறுகோள் – எருதுகட்டி
(B) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
(C) திருவாரூர் – கரிக்கையூர்
(D) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
(E) விடை தெரியவில்லை
- பால்______
சரியான மரபுச் சொல்லை எழுதுக.
(A) பால் குடி
(B) பால் உண்
(C) பால் பருகு
(D) பால் தின்னவும்
(E) விடை தெரியவில்லை
- எதிர்ச்சொல் தருக.
தொன்மை
(A) புதுமை
(B) பழமை
(C) பெருமை
(D) சீர்மை
(E) விடை தெரியவில்லை
- பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) கடும்பு – சுற்றம்
(B) ஆரி – அருமை
(C) அல்கி – தங்கி
(D) இறடி – சோறு
(E) விடை தெரியவில்லை
- ‘ஐயம்‘ என்பதன் எதிர்ச்சொல் எழுதுக.
(A) தெளிவு
(B) சந்தேகம்
(C) அச்சம்
(D) பயம்
(E) விடை தெரியவில்லை
- ‘செத்திறந்த‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) செ + திறந்த
(B) செத்து + இறந்த
(C) செத்து + திறந்த
(D) செ + இறந்த
(E) விடை தெரியவில்லை
- சேர்த்தெழுதல்
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(A) காட்டாறு
(B) காடாறு
(C) காட்டு ஆறு
(D) காடு ஆறு
(E) விடை தெரியவில்லை
- சரியான நிறுத்தற் குறிகள் அமைந்த தொடரைத் தேர்க
(A) குழந்தை நிலவைப்பார்த்து, நிலா நிலா ஓடிவா! என்று பாடியது
(B) குழந்தை நிலவைப்பார்த்து, ‘நிலா நிலா ஓடி வா!’ என்று பாடியது
(C) குழந்தை, நிலவைப்பார்த்து நிலா நிலா ஓடிவா! என்று பாடியது.
(D) குழந்தை நிலவைப்பார்த்து, “நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான நிறுத்தற் குறிகள் அமைந்த தொடரைத் தேர்க
(A) ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்
(B) ஏவல், வேண்டுதல் வாழ்த்துதல் வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(C) ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(D)ஏவல் வேண்டுதல் வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(E) விடை தெரியவில்லை
- சரியான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தேர்க.
(A) சிகாமணிதான், எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின் கருத்து
(B) “சிகாமணிதான் எடுத்திருப்பான்!” என்பது பெரும்பாலோரின் கருத்து.
(C) சிகாமணிதான் எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின் கருத்து.
(D) சிகாமணிதான்! எடுத்திருப்பான் என்பது பெரும்பாலோரின் கருத்து.
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப்பெயரின் மரூஉவை கண்டறிக
உதகமண்டலம்
(A) உதகைமண்டலம்
(B) உதகை
(C) உதகமண்டல்
(D) ஊட்டியூர்
(E) விடை தெரியவில்லை
32.ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
நாகப்பட்டினம்
(A) நாகைப்பட்டி
(B) நாகை
(C) நாகையூர்
(D) நாகைநகர்
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
கீழ்க்கண்டவற்றுள் புதுச்சேரியின் மரூஉவைத் தேர்ந்தெடுக்க.
(A) புதுகை
(B) புதுவை
(C) புதுமை
(D) புதுச்சை
(E) விடை தெரியவில்லை
- பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சந்தோஷம்
(A) துன்பம்
(B) வருத்தம்
(C) மகிழ்ச்சி
(D) அமைதி
(E) விடை தெரியவில்லை
- பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக
எக்ஸ்பெரிமெண்ட்
(A) சோதனை
(B) பரிசோதனை
(C) ஆய்தல்
(D) ஆய்வகம்
(E) விடை தெரியவில்லை
- பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் சொல்லினை எழுதுக.
தொங்கான்
(A) பேருந்து
(B) விமானம்
(C) ஏவுகணை
(D) கப்பல்
(E) விடை தெரியவில்லை
- ‘எழுது‘ எனும் வேர்ச்சொல்லின் வினைமுற்று சொல்லைக் கண்டறிக.
(A) எழுதுக
(B) எழுதுதல்
(C) எழுதினாள்
(D) எழுதிய
(E) விடை தெரியவில்லை
- “உனக்கு பாடத் தெரியுமா?” என்ற வினாவிற்கு ‘ஆடத்தெரியும்‘ என பதில் கூறுவது. எவ்வகை விடை?
(A) வினா எதிர் வினாதல் விடை
(B) உற்றது உரைத்தல் விடை
(C) உறுவது கூறல் விடை
(D) இனமொழி விடை
(E) விடை தெரியவில்லை
- விடை வகையை கண்டறிக.
‘நீ விளையாட வில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்‘ என்று கூறுவது
(A) சுட்டு விடை
(B) உற்றது உரைத்தல் விடை
(C) உறுவது கூறல் விடை
(D) ஏவல் விடை
(E) விடை தெரியவில்லை
- அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
Degree
(A) பட்டயம்
(B) சட்ட ஆணை
(C) செப்பேடு
(D) பட்டம்
(E) விடை தெரியவில்லை
- அலுவல் சார்ந்த கலைச்சொல்
Volunteer – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) சமூகப் பணியாளர்
(B) அறக்கட்டளை
(C) தன்னார்வலர்
(D) நுகர்வோர்
(E) விடை தெரியவில்லை
- அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக. பைல் (file)
(A) மை பொதி
(B) மடிப்புத் தாள்
(C) இழுவை முத்திரை
(D) கோப்பு
(E) விடை தெரியவில்லை
- கலைச்சொல்லிற்கானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது.
‘Infrared Rays’
(A) விண்வெளிக் கதிர்கள்
(B) புறசிவப்புக் கதிர்கள்
(C) புற ஊதாக் கதிர்கள்
(D) அகச்சிவப்புக் கதிர்கள்
(E) விடை தெரியவில்லை
- “உள்ளங்கை நெல்லிக்கனி போல” – உவமை கூறும் பொருள் தெளிக.
(A) தெளிவு
(B) கடினம்
(C) ஐயம்
(D) கவனம்
(E) விடை தெரியவில்லை
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் உடலும் உயிரும் போல
(A) வேற்றுமை
(B) ஒற்றுமை
(C) நம்பிக்கை
(D) உண்மை
(E) விடை தெரியவில்லை
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் ‘தாமரை இலை நீர் போல‘
(A) தாமரை இலை மேல் நீர் ஒட்டாது
(B) பாதுகாப்பின்றி அலைதல்
(C) செல்வத்துடன் வாழ்தல்
(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்
(E) விடை தெரியவில்லை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் – தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை “தன் வினைத் தொடரைக் கண்டறிக.”
(A) அவனைத் திருந்தச் செய்தான்
(B) அவன் திருந்தினான்
(C) பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்
(D) அப்பா சொன்னார்
(E) விடை தெரியவில்லை
- தன்வினைத் தொடரைக் கண்டறிக.
(A) பந்து உருட்டியது
(B) பந்து உருண்டது
(C) பந்து உருட்ட வைத்தான்
(D) உருட்டிய பந்து
(E) விடை தெரியவில்லை
- ஓவியம் குமரனால் வரையப்பட்டது. – இது எவ்வகை வாக்கியம்.
(A) செயப்பாட்டு வினை
(B) செய்வினை
(C) தன்வினை
(D) பிற வினை
(E) விடை தெரியவில்லை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் வறுமை
(A) துவ்வாமை என்னும் சொல் குறித்து எழுதுக
(B) துவ்வாமை என்பதன் பொருள் சேராமை என்பது சரியா?
(C) துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது?
(D) துவ்வாமை எதனால் வரும்?
(E) விடை தெரியவில்லை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
(A) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(B) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(C) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது ?
(D) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(E) விடை தெரியவில்லை
52.வினைகளின் பொருளை கண்டறி.
பணித்து, பணிந்து
(A) பணிந்து நடந்தால் உயர்வு வரும்
(B) ஒற்றுமையே உயர்வு
(C) மன்னன் வேலை செய்யப் பணித்ததால் மக்கள் பணிந்து வேலையைத் தொடர்ந்தனர்
(D)பணிதலும், பணித்தலும் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்
(E) விடை தெரியவில்லை
- இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக சரியான தொடரைத் தேர்ந்தெடு.
அழித்து–அழிந்து
(A) மரங்களை அழித்ததால் மனிதன் அழிந்தான்
(B) மரங்கள் அழித்ததால் மனிதன் அழிந்தான்
(C) மரங்கள் அழியாததால் மனிதன் அழிந்தான்
(D) மரங்கள் அழிந்ததால் மனிதன் அழித்தான்
(E) விடை தெரியவில்லை
- சரியான தொடரைத் தேர்ந்தெடு
பணிந்து – பணித்து
(A) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்
(B) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
(C) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்
(D) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்
(E) விடை தெரியவில்லை
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.
(A) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்
(B) மீனை சாண்டியாகோ பிடித்தார் மிகப்பெரிய
(C) சாண்டியாகோ பிடித்தார் மீனை மிகப்பெரிய
(D) பிடித்தார் சாண்டியாகோ மிகப்பெரிய மீனை
(E) விடை தெரியவில்லை
- இருவினைகளின் பொருள் வேறுபாடறிக.
சேர்த்து – சேர்ந்து
(A) சேர்ந்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்
(B) சேர்த்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
(C) சேர்ந்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்
(D) சேர்த்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்
(E) விடை தெரியவில்லை
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு. சங்க காலத் தமிழர்கள் இயற்கையைச் சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர். அவற்றுள் ஒன்று ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ஏறுதழுவுதல் பற்றி சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன. எருது கட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.
- ஏறுகோள் பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?
(A)சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவகசிந்தாமணி
(D) வளையாபதி
(E) விடை தெரியவில்லை
- ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்படும் சங்க இலக்கிய நூல் ?
(A) குறுந்தொகை
(B) கலித்தொகை
(C) அகநானூறு
(D) நற்றிணை
(E) விடை தெரியவில்லை
- புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகை நூல்?
(A) இலக்கியம்
(B) காப்பியம்
(C) இலக்கணம்
(D) சிற்றிலக்கியம்
(E) விடை தெரியவில்லை
- எருதுகட்டி என்பது _____ நிகழ்வு
(A) ஏறுகட்டு
(B) எருதுகட்டு
(C) கோள் ஏறு
(D) மாடுதழுவுதல்
(E) விடை தெரியவில்லை
- கண்ணுடையம்மன் பள்ளு நூல் எவ்வகையைச் சார்ந்தது ?
(A) சிற்றிலக்கியம்
(B) பேரிலக்கியம்
(C) காப்பியம்
(D) பக்தி இலக்கியம்
(E) விடை தெரியவில்லை
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஊண் – ஊன்
(A) மாமிசம் – சாப்பிடு
(B) உணவு– ஊட்டச்சத்து
(C) உணவு – புலால்
(D) புரதம் – உண்டி
(E) விடை தெரியவில்லை
- ஒரு –ஓர் – பயன்பாடு சரியாக அமைந்த தொடரைத் தேர்க
(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
(B) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
(C) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(D) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
(E) விடை தெரியவில்லை
- பிழை திருத்துதல் (ஒரு.ஓர்)
சரியானத் தொடரைத் தேர்க.
(A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(C) ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(D) ஓர் இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(E) விடை தெரியவில்லை
- சொல்லுக்குரிய பொருளைத் தேர்வு செய்.
(a) நேமி 1. தூவி
(b) சுவல் 2. மலை
(c) கோடு 3. தோள்
(d) தூஉய் 4. வலம்புரிச் சங்கு
(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 2 1 3 4
(D) 1 4 2 3
(E) விடை தெரியவில்லை
- பொருத்துக.
சொல் பொருள்
(a) தெளிவு 1. அகற்றுவதற்கு
(b) ஓர்தல் 2.நற்காட்சி
(c) பிணி 3. நல்லறிவு
(d) பேர்தற்கு 4. துன்பம்
(A) 2 3 4 1
(B) 4 3 2 1
(C) 1 3 4 2
(D) 3 2 4 1
(E) விடை தெரியவில்லை
- சொல்லைப் பொருளோடு பொருத்துக.
(a) ஆ 1. மலர்
(b) பா 2.வான்
(c) வீ 3.பசு
(d) மீ 4.பாடல்
(A) 4 3 2 1
(B) 1 4 3 2
(C) 3 4 1 2
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
- சொல் – பொருள் பொருத்துக.
(a) செப்பல் ஓசை 1. வஞ்சிப்பா
(b) அகவல் ஓசை 2. கலிப்பா
(c) துள்ளல் ஓசை 3. வெண்பா
(d) தூங்கல் ஓசை 4. ஆசிரியப்பா
(A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 3 2 1 4
(D) 1 3 2 4
(E) விடை தெரியவில்லை
- ஒருமை பன்மை – பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
(A) உலகில் ஒரு வகை செல்வங்கள் உள்ளன
(B) உலகில் ஒரு வகை செல்வங்கள் உள்ளது
(C) உலகில் பல வகையான செல்வங்கள் உள்ளன
(D) உலகில் பல வகை செல்வங்கள் உள்ளது
(E) விடை தெரியவில்லை
- ஒருமை – பன்மை பிழையற்றத் தொடர் எது ?
(A) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினார்
(B) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றியது
(C) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினான்.
(D) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றின
(E) விடை தெரியவில்லை
- சரியான தொடரைத் தேர்ந்தெடு
எவ்வளவு பெரிய வினாத்தாள்
(A) உணர்ச்சித் தொடர்
(B) வினாத் தொடர்
(C) செய்தித் தொடர்
(D) பெயர்ப் பயனிலைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
- சரியான தொடரைத் தேர்ந்தெடு பூக்களைப் பறிக்காதீர் – இது எவ்வகைத் தொடர்?
(A) வினாத் தொடர்
(B) உணர்ச்சித் தொடர்
(C) கட்டளைத் தொடர்
(D) செய்தித் தொடர்
(E) விடை தெரியவில்லை
- கூட்டப் பெயரைக் குறிப்பிடு.
புல்
(A) கட்டு
(B) தோகை
(C) குவியல்
(D) கூட்டம்
(E) விடை தெரியவில்லை
- கூட்டப் பெயரைத் தெரிவு செய்க.
மாடு
(A) மாடுகள்
(B) மாட்டுப் பட்டி
(C) மாட்டு மந்தை
(D) மாட்டுக் கொட்டகை
(E) விடை தெரியவில்லை
- சொற்களின் கூட்டப் பெயர்கள்
தென்னை என்பதன் கூட்டுப் பெயர் என்ன?
(A) தென்னந்தோட்டம்
(B) தென்னந்தோப்பு
(C) தென்னங்காடு
(D) தென்னஞ்சோலை
(E) விடை தெரியவில்லை
- ‘ஞாயிறு‘ என்னும் சொல் குறிக்காத பொருள்
(A) பகலவன்
(B) சூரியன்
(C) சந்திரன்
(D) கதிரவன்
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்.
சிங்கத்தின் இளமைப் பெயர்_____
(A) பறழ்
(B) குருளை
(C) குட்டி
(D) கன்று
(E) விடை தெரியவில்லை
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
காலை ஒளியினில் மலரிதழ்_____
சோலைப் பூவினில் வண்டினம்_____
(A) அவிழும் – கவிழும்
(B) தங்கும் – தங்காது
(C) செல்லும் – செல்லாது
(D) கூவும் – கத்தும்
(E) விடை தெரியவில்லை
79.சரியான கலைச்சொல் தேர்க :
Metaphor
(A) உவமை அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) சிலேடை அணி
(D) உருவக அணி
(E) விடை தெரியவில்லை
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (கல்வி வளர்ச்சி நாள்)
(A) காமராசர் வளர்ந்த நாள்____ஆகக் கொண்டாடப்படுகிறது.
(B) காமராசர் பிறந்த நாள்_____ஆகக் கொண்டாடப்படுகிறது.
(C) காமராசர் ஆட்சி நாள்_____ஆகக் கொண்டாடப்படுகிறது.
(D) காமராசர் மறைந்த நாள்____ஆகக் கொண்டாடப்படுகிறது.
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச் சொல் தேர்க :
காயிதேமில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில். மக்கள் அவரை அன்போடு ‘காயிதே மில்லத்‘ என்று அழைத்தனர்.
(A) ஏனெனில்
(B) ஆனால்
(C) இல்லையென்றால்
(D) மேலும்
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச் சொல்லினை தேர்ந்தெடு.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது____
காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
(A) ஆகையால்
(B) அது போல
(C) எனவே
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச் சொல் தருக.
தீபாளித் திருநாளில் பட்டாசு அதிகம் வெடித்தனர் ____ காற்று மாசு அடைந்தது.
(A) அதனால்
(B) மேலும்
(C) இல்லையென்றால்
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
- சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். ____ துன்பப்பட நேரிடும்.
(A) எனவே
(B) ஆகையால்
(C) இல்லையென்றால்
(D) மேலும்
(E) விடை தெரியவில்லை
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
திருக்குறளை இயற்றியவர்____
(A) எத்தனை
(B) எது
(C) யார்
(D) எப்போது
(E) விடை தெரியவில்லை
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
“தமிழழகனாரின் இயற்பெயர்____”.
(A) எப்படி
(B) என்ன
(C) எவ்வாறு
(D) எங்கு
(E) விடை தெரியவில்லை
- காலமறிந்து பொருத்துக.
(a) நான் 1. முன்னேறினான்
(b) பொன்னன் 2. கேட்பாள்
(c) அவள் 3. வருகிறார்
(d) அவர் 4.சென்றேன்
(A) 2 3 1 4
(B) 3 1 2 4
(C) 4 1 2 3
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
- தவறான வினாவைத் தேர்ந்தெடு.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றார்.
(A) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
(B) பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் எங்கு சென்றாள்?
(C) பூங்கொடி பள்ளிக்கு ஏன் சென்றாள்?
(D) திங்கள் கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்றது யார் ?
(E) விடை தெரியவில்லை
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.
பின்வரும் சொற்களில் ‘புல்‘ என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லைத் தரும் சொல்லைக் கண்டறிக.
(A) வெளி
(B) கண்
(C) கால்
(D) காள்
(E) விடை தெரியவில்லை
90.பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
இப்ப ஒசரமா வளந்துட்டான்.
(A) இப்போது ஒசரமா வளர்ந்துட்டான்
(B) இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான்
(C) இப்பொழுது ஒசரமா வளர்ந்திட்டான்
(D) இப்போது உயரமா வளந்துட்டான்
(E) விடை தெரியவில்லை
- பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
வீரப்பன் ஒரு கடுதாசி குடுத்தான்.
(A) வீரப்பன் ஒரு கஷாயம் குடித்தான்
(B) வீரப்பன் ஒரு கடிதம் குடுத்தான்
(C) வீரப்பன் ஒரு கடுதாசி கொடுத்தான்
(D) வீரப்பன் ஒரு கடிதம் கொடுத்தான்
(E) விடை தெரியவில்லை
- மாலை–என்பதன் இருபொருள் தருக.
(A) ரோஜாப்பூ, மல்லிகை
(B) பூமாலை, அந்திப்பொழுது
(C) மலையோரம், மாலை
(D) காலை, மாலை
(E) விடை தெரியவில்லை
- இரு பொருள் தருக.
சரியான இருபொருள் இணையைத் தேர்ந்தெடு-“ஓவியம்“
(A) காகிதம், வண்ணம்
(B) படம், தாள்
(C) அழகு, புலவர்
(D) சித்திரம், படம்
(E) விடை தெரியவில்லை
- குறில் நெடில் அடிப்படையில் தவறான இணையைக் கண்டறிக.
வீடு – விடு
பெறு – பேறு
கோள் – கேள்
மின் – மீன்
(A) விடு – வீடு
(B) பெறு – பேறு
(C) கோள் – கேள்
(D) மின் – மீன்
(E) விடை தெரியவில்லை
- குறில்–நெடில் வேறுபாடு உணர்த்தும் பொருந்திய இணையைத் தேர்க.
பரி – பாரி
(A) வள்ளல் – குதிரை
(B) குதிரை – வள்ளல்களில் ஒருவர்
(C) யானை – வள்ளல்களில் ஒருவர்
(D) பொன் – மழை
(E) விடை தெரியவில்லை
- குறில் நெடில் வேறுபாடு உணர்ந்து பொருள் பொருந்திய தொடரைத் தேர்க.
மடு – மாடு
(A) மது – விலங்கு
(B) மக்கள் – விலங்கு
(C) நீர்நிலை – செல்வம்
(D) விலங்கு – செல்வம்
(E) விடை தெரியவில்லை
- கூற்று : நாகை மாவட்டம் செம்பியம் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
காரணம் 1 : உலகின் பழமையான கலைகளுள் ஒன்று மட்பாண்டக் கலை.
காரணம் 2 : தமிழருக்கும், மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள்.
(A) கூற்றும் காரணம் 1 சரி 2 தவறு
(B) கூற்றும், காரணம் 1, 2ம் சரி
(C) கூற்று தவறு காரணம் 1, 2 சரி
(D) கூற்று சரி காரணம் 1 தவறு சரி
(E) விடை தெரியவில்லை
- கலைச் சொல் அறிதல்.
Media
(A) ஊடகம்
(B) ஒலியியல்
(C) மொழியியல்
(D) இதழியல்
(E) விடை தெரியவில்லை
- கலைச்சொல் தருக.
Patriotism
(A) நாட்டுப்பற்று
(B) கலைக்கூடம்
(C) இலக்கியம்
(D) மெய்யுணர்வு
(E) விடை தெரியவில்லை
- CONICAL STONE என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் யாது?
(A) கருங்கல்
(B) செங்கல்
(C) வட்டக்கல்
(D) குமிழிக்கல்
(E) விடை தெரியவில்லை