WA – 10TH STD – INDIA LOCATION – 01
About Lesson

PART 4 ANSWER KEY

301. வங்கதேசத்தில், கங்கை ஆறு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

விடை : பத்மா

 

 

302. உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் எவை?

விடை : கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள்

 

 

இ. பிரம்மபுத்திரா ஆற்றுத்தொகுப்பு

303. பிரம்மபுத்திரா ஆறு எங்கு உற்பத்தியாகிறது?

விடை: திபெத்தில்

 

 

304. பிரம்மபுத்திரா ஆறு எந்த மலைத்தொடரில் உற்பத்தியாகிறது?

விடை: மானசரோவர் எரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில்

 

 

305. பிரம்மபுத்திரா ஆறு எந்த பனியாற்றில் இருந்து உற்பத்தியாகிறது?

விடை: செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் இருந்து

 

 

306. பிரம்மபுத்திர ஆறு எவ்வளவு உயரத்தில் இருந்து உற்பத்தியாகிறது?

விடை: 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது

 

 

307. பிரம்மபுத்திரா ஆற்றுத்தொகுப்பின் மொத்த வடிகாலமைப்பு?

விடை : 5,80,000 ச.கி.மீ

 

 

308. இந்தியாவில் பிரம்மபுத்திரா ஆறு பாயும் பரப்பு?

விடை : 1,94,413 ச.கி.மீ

 

 

309. பிரம்மபுத்திரா ஆறு திபெத் பகுதியில் எப்படி அழைக்கப்படுகிறது?

விடை : சாங்போ

 

 

310. சாங்போ என்பதன் பொருள் என்ன?

விடை: தூய்மை

 

 

311. பிரம்மபுத்திரா ஆற்றின் மொத்த நீளம்?

விடை : 2900 கி.மீ.

 

 

312. இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நீளம்?

விடை : 900 கி.மீ.

 

 

313. பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவிற்குள் எவ்வாறு நுழைகிறது?

விடை : அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக

 

 

314. பிரம்மபுத்திரா ஆற்றின் முக்கியத் துணை ஆறுகள் எவை?

விடை: திஸ்டா, மனாஸ், பராக் மற்றும் சுபன்ஸ்ரீ

 

 

315. பிரம்மபுத்திரா ஆறு வங்கதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: ஜமுனா

 

 

316. பிரம்மபுத்திரா ஆறு கங்கை ஆற்றுடன் இணைந்த போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : மேக்னா

 

 

இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள்

317. இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் எவை?

விடை:
1) நீளமானவை மற்றும் அகலமானவை
2) வற்றாத நதிகள்
3) நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
4) ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.

 

தீபகற்ப இந்திய ஆறுகள்

318. தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: தீபகற்ப ஆறுகள்

 

 

319. தீபகற்ப இந்திய ஆறுகளில் பெரும்பாலான ஆறுகள் எந்த மலையில் உற்பத்தியாகின்றன?

விடை: மேற்குத்தொடர்ச்சி மலையில்

 

 

320. தீபகற்ப இந்திய ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள்

 

 

321. நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடும் ஆறுகள்?

விடை: தீபகற்ப இந்திய ஆறுகள்

 

 

322. தீபகற்ப இந்திய ஆறுகள் எவ்வாறு பாய்கிறது?

விடை : செங்குத்து சரிவுடன் கூடிய பள்ளத்தாக்கு வழியே

 

 

323. தீபகற்ப ஆறுகளை அவை பாயும் திசையின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?

விடை: இரண்டு. அவை

1. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

 

 

324. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?

விடை: மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி

 

 

325. தீபகற்ப இந்திய ஆறுகளில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?

விடை: நர்மதை மற்றும் தபதி

 

 

அ. மகாநதி

326. மகாநதி எங்கு உற்பத்தியாகிறது?

விடை : சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகிறது.

 

 

327. மகாநதி எந்த மாநிலத்தின் வழியாக பாய்கிறது?

விடை: ஒடிஸா

 

 

328. மகாநதியின் நீளம்?

விடை: 851 கி.மீ

 

 

329. மகாநதியின் முக்கிய துணையாறுகள் எவை?

விடை: சீநாத், டெலன், சந்தூர், சித்ரட்லா, கெங்குட்டி மற்றும் நன்

 

 

330. தீபகற்ப இந்திய ஆறுகளில் பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்கும் நதி எது?

விடை: மகாநதி

 

 

331. மகாநதி எந்த கடலில் கலக்கிறது?

விடை: வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

 

 

ஆ. கோதாவரி

332. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு எது?

விடை : கோதாவரி

 

 

333. கோதாவரி ஆற்றின் நீளம்?

விடை: 1465 கி.மீ

 

 

334. கோதாவரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?

விடை: மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.

 

 

335. தீபகற்ப இந்திய ஆறுகளில் விருத்தகங்கா என்று அழைக்கப்படும் ஆறு எது?

விடை: கோதாவரி

 

 

336. கோதாவரி நதியின் மொத்த பரப்பளவு?

விடை: 3.13 இலட்சம் ச.கி.மீ

 

 

337. கோதாவரி நதி எந்த கடலில் கலக்கிறது?

விடை: வங்காள விரிகுடா

 

 

338. கோதாவரி நதி எந்த மாநிலங்கள் வழியாக கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது?

விடை: தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம்

 

 

339. கோதாவரியின் துணை ஆறுகள் எவை?

விடை: பூர்ணா, பென்கங்கா, பிரனிதா, இந்திராவதி, தால் மற்றும் சாலாமி

 

 

340. ராஜமுந்திரிக்கு அருகில் கவுதமி மற்றும் வசிஸ்தா என இரண்டு கிளைகளாகப் பிரிந்து பெரிய டெல்டாவை உருவாக்கும் நதி எது?

விடை: கோதாவரி நதி

 

 

341. கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி எது?

விடை: கொல்லேறு ஏரி

 

 

இ. கிருஷ்ணா

342. கிருஷ்ணா நதி எங்கு உருவாகிறது?

விடை: மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகா பலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகிறது.

 

 

343. கிருஷ்ணா நதியின் நீளம்?

விடை: 1400 கி.மீ நீளம்

 

 

344. கிருஷ்ணா நதி கொண்டிருக்கும் பரப்பளவு வடிநிலம்?

விடை: 2.58 இலட்சம் ச.கி.மீ

 

 

345. தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதி எது?

விடை: கிருஷ்ணா

 

 

346. கிருஷ்ணா ஆற்றின் முக்கிய துணையாறுகள் எவை?

விடை : கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு

 

 

347. கிருஷ்ணா நதி எந்த கடலில் கலக்கிறது?

விடை : வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

 

 

348. கிருஷ்ணா நதி ஆந்திர பிரதேசத்தின் வழியாக பாய்ந்து எந்த இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது?

விடை: ஹம்சலாதேவி என்ற இடத்தில்

 

 

ஈ. காவிரி

349. காவிரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?

விடை : கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது.

 

 

350. காவிரி ஆற்றின் நீளம்?

விடை: 800 கி.மீ

 

 

351. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு எது?

விடை: காவிரி

 

 

352. கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்கும் ஆறு எது?

விடை : காவிரி

 

 

353. காவிரி தமிழ்நாட்டில் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் குறுகலான மலையிடுக்குகள் வழியாக எந்த நீர்வீழ்ச்சியாக பாய்கிறது?

விடை : ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி

 

 

354. காவிரி எந்த கடலில் கலக்கிறது?

விடை : வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

 

 

355. காவிரி எந்த இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது?

விடை: திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம், மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.

 

 

அ. நர்மதை

356. நர்மதை ஆறு எங்கு உற்பத்தியாகிறது?

விடை : மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் 1057 மீ உயரத்தில் உற்பத்தியாகிறது.

 

 

357. நர்மதை ஆற்றின் நீளம்?

விடை: 1312 கிமீ

 

 

358. நர்மதை ஆற்றின் வடிநிலத்தின் பரப்பளவு?

விடை : 98796 ச.கி.மீ

 

 

359. நர்மதை ஆறு எந்த கடலில் கலக்கிறது?

விடை : அரபிக்கடலில் கலக்கிறது.

 

 

360. நர்மதை ஆறு எந்த வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது?

விடை : 27 கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.

 

 

361. மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமான ஆறு எது?

விடை: நர்மதை

 

 

362. நர்மதை ஆற்றின் முதன்மையான துணையாறுகள் எவை?

விடை: பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி, சக்கார், டவா, மற்றும் கோலர்

 

 

ஆ. தபதி

363. தபதி நதியின் நீளம்?

விடை : 72

 

 

364. தபதி நதியின்4 கிமீ வடிநிலத்தின் பரப்பளவு?

விடை : 65145 ச.கி.மீ

 

 

365. தபதி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தியாகிறது?

விடை : மத்திய பிரதேசம்

 

 

366. தபதி நதி எந்த மாவட்டத்தில் உற்பத்தியாகிறது?

விடை: பெட்டூல் மாவட்டத்தில்

 

 

367. தபதி நதி எந்த இடத்திலிருந்து உற்பத்தியாகிறது?

விடை: கடல் மட்டத்திலிருந்து 752 மீ உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.

 

 

368. தபதி நதி எந்த கடலில் கலக்கிறது?

விடை : அரபிக் கடலில் கலக்கிறது.

 

 

369. தபதி நதி எந்த வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது?

விடை : காம்பே வளைகுடா வழியாக

 

 

370. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?

விடை : நர்மதை, தபதி மற்றும் மாஹி

 

 

371. தபதி ஆற்றின் துணை ஆறுகள் எவை?

விடை: வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி

 

 

372. தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் எவை?

1. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
2. குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
3. வற்றும் ஆறுகள்.
4. நீர் (புனல்) மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
5. நீர்வழி போக்குவரத்திற்குப் பயன்படாதவை.

 

உங்களுக்கு தெரியுமா?

373. ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரம் எது?

விடை : அமராவதி நகர்

 

 

374. ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி எந்த ஆண்டு வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்?

விடை : 2024 வரை

 

 

375. இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் எது?

விடை : ஆரவல்லி மலைத்தொடர்

 

 

376. உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்களைக் காட்டிலும் அதிகமான சிகரங்களைக் கொண்டுள்ள மலைத்தொடர் எது?

விடை: இமயமலை

 

 

377. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் எத்தனை சிகரங்களை இமயமலை தன்னகத்தே கொண்டுள்ளது?

விடை: 9

 

 

378. காரகோரம் கணவாய் எங்கு அமைந்துள்ளது?

விடை : ஜம்மு-காஷ்மீர்

 

 

379. ஜொஷிலா கணவாய் மற்றும் சிப்கிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது?

விடை : இமாச்சல் பிரதேசம்

 

 

380. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கணவாய் எது?

விடை: பொமிடிலா கணவாய்

 

 

381. சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள கணவாய்கள் எவை?

விடை: நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய்

 

 

382. இமயமலையின் முக்கிய கணவாய்கள் எவை?

விடை: காரகோரம் கணவாய், ஜொஷிலா கணவாய், சிப்கிலா கணவாய், பொமிடிலா கணவாய், நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய்

 

 

383. பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் எது?

விடை: கைபர் கணவாய்

 

 

384. போலன் கணவாய் எங்கு அமைந்துள்ளது?

விடை : பாகிஸ்தான்

 

 

385. இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள முக்கியக் கணவாய்கள் எவை?

விடை: கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய்

 

 

386. எந்த ஆற்றில் ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

விடை : ஷராவதி ஆறு (கர்நாடகம்)

 

 

387. ஜெர்சப்பா நீர்வீழ்ச்சியின் வேறு பெயர்?

விடை: ஜோக் நீர்வீழ்ச்சி

 

 

பயிற்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
உ) விடை தெரியவில்லை

விடை: இ) 3214 கி.மீ

 

 

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
உ) விடை தெரியவில்லை

விடை: இ) கோசி

 

 

3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___ என அழைக்கப்படுகிறது.

அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
உ) விடை தெரியவில்லை

விடை: ஆ) தீபகற்பம்

 

4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ____ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
உ) விடை தெரியவில்லை

விடை: இ) இலங்கை

 

 

5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___.

அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
உ) விடை தெரியவில்லை

விடை: ஆ) ஆனை முடி

 

 

6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___.

அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
உ) விடை தெரியவில்லை

விடை: இ) பாங்கர்

 

 

7. பழவேற்காடு ஏரி ___ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
உ) விடை தெரியவில்லை

விடை: ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

 

 

 

8. பொருத்துக.

(a) சாங்போ                                    1) கங்கை ஆற்றின் துணை ஆறு
(b) யமுனை                                    2) இந்தியாவின் உயர்ந்த சிகரம்
(c) புதிய வண்டல் படிவுகள் 3) பிரம்மபுத்திரா
(d) காட்வின் ஆஸ்டின் (K2) 4) தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
(e) சோழ மண்டலக்கடற்கரை. 5) காதர்

அ) 3 2 4 1 5
ஆ) 2 3 4 5 1
இ) 2 4 1 5 3
ஈ) 1 2 3 4 5
உ) விடை தெரியவில்லை

விடை: இ) 2 4 1 5 3

 

 

Join the conversation